சேரமான் பெருமாள் சுருதிமான் குலசேகரர் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்.

சேரமான் பெருமாள் சுருதிமான் குலசேகரர் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்.

 

சேரர்களின் வம்சமான மலையமான்களின் பார்க்கவ வம்சத்தில் மலையமான்,நத்தமான்,சுருதிமான் என்று மூன்று பகுப்புகள் உள்ளது.குல முதல்வராக தெய்வீகனின் புராணம் கூறப்படுகிறது.பாரி மகளிரை தெய்வீகன் மணந்ததாக கூறப்படுவதற்கு ஆதாரங்கள் அநேகம் இருந்தாலும் அதே தெய்வீகனது மக்களாக கூறப்படும் நரசிங்க முனையரையர்,மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமான் குலசேகரன் இவர்களின் காலம் கி.பி ஏழு முதல் எட்டாம் நூற்றாண்டுகளுக்குள் உள்ளது.

மேலும் இம்மூவரும் சகோதரர் என்று புராண கதைகள் புனையப்பட்டுள்ளது.சகோதரர் என்னும் போது மூவரும் ஒரே சேர வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் என்பதே உண்மையாகும்.தெய்வீக ராஜனின் காலமும் இவர்களின் காலமும் வேறுபட்டாலும்  தெய்வீகன் மலையமான்  நரசிம்ம உடையானின் பார்க்கவ வம்சத்தின் வம்சாவழியில் வந்தவர்கள் தான் இவர்கள் மூவரும் என்ற தகவலை பனிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தெய்வீக ராஜன் பற்றிய செப்பேடு உறுதி செய்கிறது.

மேலும் நாயன்மார் இருவர் சேதிநாட்டில் ஒரே கால கட்டத்தில் ஆண்டதனாலும் சைவ சமயம் சிறந்து விளங்கிய கால கட்டத்தில் மெய்ப்பொருள் மன்னர்,நரசிங்க முனையரையர் இருவரது பெருமையும் கொண்டாடப்பட்டது.சுருதிமான் குலசேகரர் பற்றிய தகவல்கள் ஓரளவு  காணப்படும்.அதில் அவர் சுருதிகள்(வேதங்கள்)பல கற்றவர்,பாண்டியன் மகளை மணந்தவர், எல்லா வித்தைகளிலும் சிறந்தவர்.பக்தியின் பாற்பட்டு நாட்டைத் துறந்து தேசாந்திரம் சென்றவர்.என்பன போன்ற குறிப்புகள் காணப்படும்.

சுருதி என்பது வேதத்தை மட்டுமல்லாது ஆதி,பண்டைய,மூலம்   என்ற பொருளும் உடையது.ஆகவே தான் சுருதிமான்கள்  இக்குலத்தின் ஆதி மூலமான முதன்மையானவர் என்ற பொருளுடைய மூப்பனார் என்ற பட்டம் உடையோர் ஆனார்கள்.

மெய்ப்பொருளார் மற்றும் நரசிங்க முனையரையர் பற்றிய குறிப்புகள் பெரிய புராணம் வாயிலாக கிடைத்துள்ள நமக்கு குலசேகரர் பற்றி ஏதும் குறிப்புகள் இல்லாமல் போகவில்லை.சைவ மதப்பற்றால் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.சைவம் ஓங்கியிருந்த அக்காலத்தே வைணவ ஆழ்வாரான குலசேகரர் அடையாளம் காட்டப்படாமல் பொதுவாக சுருதிமான் குலசேகரர் என குறிக்கப்பட்டுள்ளார்.

கருவூர் கொல்லி மாநகரை தலைநகராக கொண்ட சேர மன்னனான குலசேகரர் கொங்கர் கோமான் என்று அழைக்கப்பட்டார்.சேர வம்சத்து

பார்க்கவ அரசர்களும் கொங்கராயர் என்ற பட்டம் உடையோர்.

சுருதிமான் என்பதன் முழுமையான அர்த்தம் எல்லாவற்றிலும் சிறந்தவர் என்பதே.சுருதிகளில்,போர் பயிற்சிகளில் தேர்ந்தவர்.

 

அதே போல் குலசேகர ஆழ்வாரும் சுருதிகளில் தேர்ந்தவராயும்,போர் செய்வதில் வல்லமை உடையவராயும் காணப்படுகிறார்.

ராம காதையால் ஈர்க்கப்பட்டு திருவாய் திருமொழி என்ற பாடல்களை ஆழ்வார் பாடியுள்ளார்.இவரின் வீரத்தை கண்டு பாண்டியன் தன் மகளை இவர்க்கு மணம் செய்வித்ததாக அறிய முடிகிறது.ஆழ்வாரது பாடல்கள் பெருமாள் திருமொழி என்று அழைக்கப்படும்.

சுருதிமான் குலசேகரரும் பாண்டியன் மகளை மணந்ததாக உள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக குலசேகர ஆழ்வார் பக்தி காரணமாக

“ஆனான செல்வத்துஅரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்” என்று கூறி நாடு துறந்து துறவு பூண்டு திருவரங்கம் சென்றார்.

சுருதிமான் குலசேகரரும் பக்தி காரணமாக நாடு துறந்து துறவறம் பூண்டு திருக்கோவில்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அநேக ஒற்றுமை உள்ள இருவரது வரலாறும் இருவரும் ஒருவரே என்பதை  தெளிவாக உணர்த்தும்.

பார்க்கவ வம்சத்தில் சைவ மதம் வலிமை பெற்று விளங்கிய காரணத்தாலும் அனைவரும் தீவிர சைவர்கள் ஆக இருந்ததாலும் சுருதிமான் குலசேகரனே  குலசேகர ஆழ்வார் என்ற தகவல் வெளிப்படுத்தப் படவில்லை.குலசேகரர் என்றால் குலத்தின் சிகரமானவர் என்று பொருள் உண்டு.குலத்தின் சிகரமான ஆழ்வாரை,நம்  மலையமான்கள் அருமை உணராது உரிமைகோராது இருக்க,குல சேகர ஆழ்வாரை சத்திரிய பெருமை வேண்டி வேறு மொழி பல பேசும் இனத்தாரும்,எங்கிருந்தோ வந்தாரும் கூட உரிமை கொள்ளும்படியாயிற்று.

இற்றை காலத்தே சைவ,வைணவ பேதமும் போயிற்று.

ஆனால் நம் இன வரலாற்றை தமதாக உரிமை கோரி,யாராரோ சத்திரிய பட்டம் வாங்க உதவி செய்யவும்,மாற்றானின் அவப்பெயர் மறைக்கவும், என இன்னும் எவ்வளவு காலத்திற்கு பார்க்கவ குல வள்ளல்கள் வள்ளல்குடியின் வள்ளண்மையோடு குல முதல்வனை விட்டுக்கொடுத்து உதவுகின்றார் என பார்ப்போம்.

 

சேர வம்சம் என்று கூறுபவர்கள் அனைவரும் எங்கிருந்தோ  இங்கே கொண்டு  வரப்பட்ட இனத்தவரும்,சேரனுக்கு துளியும் சம்பந்தமே இல்லாத பல்லவ குடிமக்களுமே ஆவார்.ஆனால் அவர்கள் அனைவருக்கும் குலசேகர ஆழ்வார் நம் இனத்தவர் என்று நன்றாகவே தெரியும்.

பல்லவ குடிகள் அரச குடியாக கூறிக் கொள்வதும்,ஆதாரம் கொடுத்து சத்திரிய பட்டம் வாங்கி விட்டோம் என்று கூறிக் கொள்தல் எப்படி சாத்தியம்?

நம் இன அரசர்களை உரிமை கோரினால் மட்டுமே சத்திரியர் என்று பட்டம் பெறவும் முடியும்.அவர்கள் கீழ் தளத்திலிருந்து வரலாற்றில் மேலே வரவும் முடியும்.

இவர்கள் காட்டும் ஜாதி நூல்கள் எல்லாம் பொதுவில் சமர்ப்பிக்க ஆதாரம் வேண்டி தந்திரமாக புனைவாக  பிற்காலத்தில் எழுதிக்கொண்டவையே. இவர்கள் சத்திரியர் என கூறிக்கொள்ள மன்றம் வரை செல்லும் அவசியம் ஏற்பட இவர்களின் பூர்வ கதையும் ஓர் முக்கிய காரணம். இவர்கள் உண்மையில்  யார் என்பதை மறைக்கவும்,தம் மூதாதையரில் இருந்து தங்களை வேறுபடுத்தி காட்ட வேண்டிய நிர்பந்தம் காரணமாகவும் சத்திரியராக கூறிக்கொள்ளும் அவசியம் இவர்களுக்கு உண்டாயிற்று.

 

இவர்கள் காட்டிய பாதையில் போய் சத்திரியர் என்று கூறிக்கொள்ள தந்திரம் பல செய்தனர் பார்த்தாலே தீட்டு என்று ஒடுக்கப்பட்ட மற்றொரு பிரிவினர்.கடந்த இருநூறு வருடங்களாக இவர்கள் எல்லாம் வறுமையில் வாடிய காலத்திலும் கூட சாதிய உயர்வு பெற தமிழ் புலவர்களை வைத்து நம் இன அரசர்களின் பெருமைகளை தமதாகக் கூறி  அவர் இனமாக ஆதாரமற்ற கட்டுக்கதைகள் புனைந்து கொண்டனர்.போலியான ஜாதிய நூல் பல இயற்றிக் கொண்டனர்.அவைகள் ஆதாரமற்றவை என்பதால் செல்லாமல் போயிற்று.தற்போது பொருளாதார உயர்வு பெற்ற இவர்களில் அநேகரும் சேர்ந்து ஜாதிக்கு கதை எழுத காசு கொடுத்து அறிஞர்கள் சிலரை வளர்க்கின்றனர்.வரலாற்றின் அடிப்படை விசயங்களை மாற்றி எழுதிக்கொண்டு மாற்றார் இன அரசரை தம் இனமாக கூறுதல் அசிங்கமானது என்று தெரிந்தே துணிந்து இக்கருமத்தை செய்கின்றனர், ஏன் என்றால் அவர்களின் சாதியின் பின்புலம் ஏதென்றே யாரும் அறிய ஏலாது.அவ்வளவு ஏன் அவர்களுக்கே தெரியாது.ஆயினும் இன ஒற்றுமை பாசம் என்பது இம்மக்களுக்கு உள்ளது போன்று அனைவருக்கும் இருக்க வேண்டும்.மக்களின் வாழ்க்கையில் ஒற்றுமை ஓங்கி நாட்டிலும் செழிப்பு உண்டாகும்.நல்ல முன்னேற்றம் காரணமாகவும்,ஜாதிய உயர்வு வேண்டியும்  இவர்கள் செய்வதெல்லாம் வரலாற்றுப் பிழையானதாயிருந்தாலும் அதற்கு ஒரே காரணம்…யாதொரு பிழையுமின்றி உழைத்து வாழ்ந்த முன்னாளிலேயே  பார்த்தால் தீட்டு என்று ஒடுக்கப்பட்ட கொடும் சதியான வரலாற்றை பின்னாளில் யாராவது இவர்கள் சமூக நிலைப்பாடு இதுவென   சுட்டிகாட்டி இழிவுண்டாக்கி குத்திக் காட்டினால்  அப்போது உள்ள இவர்களின்  சந்ததிகள் மனம் உட்கி வருந்த நேரிடுமே  என்ற வருத்தத்தாலும்,அக்கறையாலும் இவர்கள் இவ்வாறு போலி கதைகள் பல செய்கின்றனர் என்பதே வெட்டவெளிச்சம்.இதனால் இதை ஒரு  குறையாகக் கருத வேண்டியதில்லை.


“பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின்”‘..

 

 

சேரமான் பெருமாள் மேலோர் கீழோர் அனைவருக்கும் பொதுவானவரே.

ஆனால் சுருதிமான் குல சேகர ஆழ்வாரே  நம் குல முதல்வர் என்பதை சேரமான் மலையமானின் பார்க்கவ குல செல்வங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

 

 

இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்

சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள்

குலசே கரனென்றே கூறு.

 

ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே

வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை

வீரங் கெடுத்தசெங் கோல் கொல்லி காவலன் வில்லவர்கோன்
சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே.

THANKS:CHERAMAAN MALAYAMAAN

 

This entry was posted in பாரிவேந்தன் and tagged , , . Bookmark the permalink.

3 Responses to சேரமான் பெருமாள் சுருதிமான் குலசேகரர் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *