Monthly Archives: January 2011

ஊற்றுமலை ஜமீன் வரலாறு

எழுதியவர்:உ.வே.சாமிநாதய்யர் ஊற்றுமலையென்பது திருநெல்வேலி ஜில்லாவில் இருந்து வரும் ஒரு பழைய ஜமீன். அதில் ஜமீன்தார்களாக இருந்தவர்கள் வீரத்திலும் கல்வியிலும் சிறந்தவர்கள். வடகரையென்னும் சொக்கம்பட்டியில் பெரியசாமிச் சின்னணைஞ்சாத் தேவர் தலைமை வகித்து வந்த காலத்தில் ஊற்றுமலையில் இருந்த ஜமீன்தார் தென்மலையென்னும் சிவகிரியிலிருந்து ஜமீன்தாருக்கு உதவி புரிந்து வந்தனர். வடகரையாருக்கு நண்பராகிய சேற்றூர் ஜமீன்தாருக்குப் பல இடையூறுகளை விளைவித்தனர் … Continue reading

Posted in ஊற்றுமலை ஜமீன் | Tagged | Leave a comment

ஜமீன் சிங்கம்பட்டி-2

திருநெல்வேலிப் பகுதியில் தவறு செய்தவர்களைப் பார்த்து “முதுகுத் தோலை உரிச்சிப் போடுவேன் படுவா’ என்பார்கள். முதுகுத் தோலை உரிக்க முடியுமா என்ன? இன்றைக்கு “சும்மாக்காச்சும்’ இப்படி வெத்து மிரட்டல் விட்டாலும் தவறு செய்தவரின் முதுகுத் தோலை நிஜமாகவே உரிக்கும் தண்டனையும் ஒரு காலத்தில் வழக்கத்தில் இருந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா? திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிங்கம்பட்டி ஜமீனில்தான் … Continue reading

Posted in சிங்கம்பட்டி ஜமீன் | Tagged | 3 Comments

வீரத்திலகம் வேலுநாச்சியார் (1780-1789)

இராமநாதபுரம் மன்னர் (1749-62) செல்லமுத்து சேதுபதி, சிவகங்கைக்கு அருகிலுள்ள ‘சக்கந்தி” என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் அக்குழந்தைக்கு வேலு நாச்சியார் எனப் பெயரிட்டார்கள். செல்லமுத்து சேதுபதி தனது மகள் வேலு நாச்சியாரைக் கல்வி – கேள்விகளில் சிறந்தவராக வளர்த்து … Continue reading

Posted in வேலு நாச்சியார் | Tagged | Leave a comment

கொல்லியும் – அறப்பள்ளியும் வரலாறு

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் அறப்பள்ளி ஈச்வரம் உள்ளது. கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 4500 அடி உயரத்தில் உள்ளது. சேலம், நாமக்கல் நகரங்களிலிருந்து பேருந்துகள் உண்டு. மலையின் மேற்குப்பக்கம் அமைந்துள்ள காரவள்ளியிலிருந்து 45 கி.மீ. தொலைவில் அறப்பள்ளி அமைந்துள்ளது.

Posted in வரலாறு | Tagged | Leave a comment

ஸ்ரீவில்லிபுத்தூர் – வரலாறு

ஸ்ரீவில்லிபுத்தூர், வில்லி என்ற மன்னன் ஆண்டதால் வில்லிபுத்தூர் என்றும், ஆண்டாள் பிறந்த ஊராதலால், ‘ஸ்ரீ’ என்னும் திருநாமத்தோடு ஸ்ரீவில்லிபுத்தூர் என்றும் அழைக்கப்படுவதாக, பள்ளி நாட்களில் படித்திருக்கிறேன். ஆனால் எனக்குத் தெரியாத விஷயங்களை சமீபத்தில் நாளிதழில் படித்தேன். மதுரையைக் கைப்பற்றிய கான்சாகிப் என்ற மருதநாயகம், ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்த ‘நெற்கட்டுச் செவ்வல்’ பாளையக்காரர் பூலித்தேவரை வெல்ல, … Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

தென்னாட்டுப்புலி சிங்கம்பட்டி ஜமீன்

கி.பி. 1100-ம் ஆண்டு சிங்கம்பட்டி ஜமீன் உதயம் ஆனது. சிற்றரசேயாயினும் தமிழ் வித்வான்கள், கவிஞர்களையும் போற்றிப் பரந்த பெருமை கொண்ட ஜமீன். ராமநாதபுரம் மாவட்டத்தில் திருஉத்திரகோசமங்கையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கலைகள் செழித்தோங்கிய காலம் அது. மதுரை நகரில் அப்போது பாண்டியர் மன்னராட்சி புரிந்தனர். அரசக் குடும்பத்தில் சிற்றப்பனுக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட பூசலால் மகன் குலசேகரபாண்டியன் … Continue reading

Posted in சிங்கம்பட்டி ஜமீன் | Tagged | 4 Comments

ஏன் பாளையக்காரர் தோற்றனர்?

சிவகங்கைச்சீமை வரலாறு பற்றி என்னுடைய பழைய குறிப்புகளைத் தோண்டிக்கொண்டிருக்கும்போது சில விஷயங்கள் தென்பட்டன. அவற்றைப் பார்த்தபோது ரொம்பவும் வியப்பாக இருந்தது. 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனி(கும்பினி) தமிழ்நாட்டில் தன்னுடைய போர் நடவடிக்கைகளை அதிகரித்திருக்கிறது. அப்போதுதான் பாளையக்காரர்களை அடக்கும் போர்கள் ஆரம்பித்தன.

Posted in பூலித்தேவன் | Tagged | Leave a comment

பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

அரியலூர்:அரியலூர் அருகே பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுக்கப் பட்டுள்ளது.அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி அருகே பொய்யூர் கிராமத்தில் சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை திருப்பணி செய்யும் முயற்சியில், ஊர் மக்கள் ஈடுபட்டபோது, கருங்கல் பலகையில் எழுதப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் இருப்பது தெரியவந்தது. அரியலூர் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் மற்றும் கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

சிங்களவர்களை வென்ற பாண்டிய மன்னன்!

மெக்கன்ஸி சேகரித்த ஒரு வரலாற்று ஆவணம் மெக்கன்ஸி காலத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த வரலாறு (கி.பி.1594-1572-ல் நடந்தவை) ஒரு ஏட்டில் எழுதப்பட்டிருந்தது. அந்த விவரங்களை மெக்கன்ஸி தருகிறார்: அந்த நாளில் பரமக்குடியில் ஒரு பாளையக் காரர் இருந்தார். அவர் பெயர் தும்பிச்சி நாயக்கர். பரமக்குடி பாளையத்திற்கு எதிராக வந்த பல யுத்தங்களில் அவர் வெற்றி … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

நீதி காத்த பாண்டிய மன்னர்கள்

இந்திய உபகண்டத்தின் தென் பகுதியில் மூன்று தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்களில் பாண்டிய மன்னர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை வளர்க்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமுடையவர்களாக விளங்கினர். சங்கம் அமைத்துப் புலவர்களுடன் தாங்களும் உடனிருந்து ஆராய்ந்து இவர்கள் தமிழ் வளர்த்தனர் என்பதைத் தமிழ் உலகம் நன்கறியும்.

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment