பல்வேறு சமூகத்தவரும் தங்களை மூவேந்தர் பரம்பரை என்றும் பாண்டியர் பரம்பரை என தங்களுக்கு ஜாதிய தற்பெருமை இல்லை என்று கூறி நடுநிலைவியாதிகள் என்ற ஊடக
நாரவாயர்களையும் விட்டு ஜாதிய தற்பெருமை,ஆண்டஜாதி பீற்றல் என்று தங்கள் ஜாதிய தலைவனை பற்றி ஒரு சுவர் இல்லாமல் அச்சு பதித்து வரும் கூட்டதற்கு நாங்கள் ஜாதிய தற்பெருமை பேசவில்லை
எங்கள் இனத்தின் ஆவணங்களை தான் சேகரித்து வைக்கிறோம்.
#அம்பொன்நாட்டு_தேவர்கள்#அம்பனேரி_மறவர்கள் மதுரை கோச்சடை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வில்லாயுதமுடைய அய்யனார் , முத்தையா சுவாமி திருக்கோயில். இருளாண்டி தேவர் மகன் கட்டமுத்துத்தேவர் சக்கரவர்த்தி ஜாதி என்று அம்பனேரி மறவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர் .கோச்சடை முத்தையா கோயில் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில் கோயில் 10 தேவர் வகையறா குலதெய்வம் கோயில் . 1 :- கருப்பையாத் தேவர் வகையறா 2 :- கட்டமுத்துத் தேவர் வகையறா 3 :- இருளாண்டித் தேவர் வகையறா 4 :- மாயாண்டித் தேவர் வகையறா 5 :- காசித் தேவர் வகையறா 6:- சுப்பையாத் தேவர் வகையறா 7 :- துரைசாமித் தேவர் வகையறா8 :- குருநாதத் தேவர் வகையறா9 :- சாமிநாதத் தேவர் வகையறா 10 :- முத்துத் தேவர் வகையறா .
மறவர் இனத்தில் பல பிரிவுகள் உள்ளன அவற்றில் ஒன்று காரணமறவர். காரணர் என்றால் தலைவன் என அர்த்தம். இவர்களை படைகாரணவர்கள் என்றும் காரண ஆபத்துதவிகள் என்றும் கூறுவர். இவர்கள் பற்றி சில குறிப்புகளில் இராமநாதபுரம் உத்திரகோசமங்கையை அரசியல் காரணமாக காலி செய்து தூத்துகுடி பகுதியில் குடியேறி யுள்ளனர். இவர்களை பற்றிய புத்தகம் அதில் புராண கதைகள் உள்ளது. அதை பதிவேற்றியுள்ளோம்.
சிவகங்கை மாவட்டம் பிரான்மலைக்குத் தெற்கே ‘இளமக்கள்’ என்ற இளம் மறவர்கள் சமூகத்தவர்கள் வாழ்கின்றனர்.இவர்கள் வாழும் பகுதி ஐந்து நிலைநாடு என அழைக்கபடுகிறது . திருமய நாட்டிற்கே மேற்கில் சேருங்குடி நாட்டிற்கு வடக்கே துவரங்குறிச்சி நாட்டிற்கு கிழக்கே பிரான்மலை பாதைக்கும், ஐந்துமுக நாட்டிற்கும் தெற்கே அமைந்துள்ள் பகுதி ஐந்துனிலைநாடு எனப்படுகின்றது. இந்நாடு சதுர்வேதிமங்கலம்,கன்னமங்கலம், சீர்சேந்தமங்கலம்,வேழமங்கலம் என ஐந்து மங்கலளாகப் பிரிக்கபட்டுள்ளன. ஒவ்வொறு மங்கலத்துக்கும் பல கிராமங்கள் உள்ளன.
Inscription at Orakam Mala Dr Suvarna Nalapat Trust https://www.youtube.com/watch?v=WJj4HSqYC7Q An enthusiast in history send me a few photographs of the ancient temple and a inscription on it asking me to decipher it. (Manoj Chakkiar Perinthalmanna).
பூலாங்குறிச்சி ஊரவர்கள் 5 பேர் தங்கள் நிலத்தை செவலூரில் இருக்கும் 16 மறவர்களுக்கு 450 மதுரை சக்கரம்(பனம்)த்துக்கு விற்ற செய்தி இது நாயக்கர் ஆட்சி 1700க்கு பிந்தியது என கருதலாம்
மாது உறை அதுவே மதுரை.தமிழின் முந்தைய பெயர் மதுரம் என சிலர் கூறுகின்றனர். அதுபோலே பாண்டியநாடு தமிழுடைத்து.
தமிழின் தோற்றுவாயாய் இருக்கும் மதுரை.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் முழுமையான ஆய்வு நிறைவுபெற்றுள்ள நிலையில், அந்த ஆய்வின் வழியாக பல புதிய உண்மைகள் வெளியாகியுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகள் இதுவரை முழுமையாக ஆய்வு செய்யப்படாமலேயே இருந்தது. மத்திய அரசு 60 கல்வெட்டுக்களை ஆங்கில குறிப்புகளாக மட்டும் வெளியிட்டிருந்தது.தற்போது இந்துசமய அறநிலையத்துறை ஏற்பாட்டில் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் தலைமையிலான குழுவினர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மீனாட்சி அம்மன் கோயிலில் மொத்தமுள்ள 450 கல்வெட்டுக்களையும் ஆய்வு செய்து படியெடுத்து தொல்லியல் துறை வசம் ஒப்படைத்துள்ளனர்.
கல்வெட்டுகளின் நிலை :
கோயிலில் கண்டறியப்பட்ட 450 கல்வெட்டுக்களில் 78 முழுமையாக இருந்தன. இதில், 77 முழு தமிழிலும், 1 முழு சமஸ்கிருதத்திலும், தேவநாகரி மொழியில் எழுதப்பட்ட 1 வரி கல்வெட்டும் உள்ளன.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கல்வெட்டை ஆராய்ச்சி செய்கின்றனர்
இவை தவிர, 23 துண்டு கல்வெட்டுக்களும், 351 சிறிய சிறிய துண்டு கல்வெட்டுக்களும் உள்ளன. இந்த துண்டுக் கல்வெட்டுக்கள், கோயில் பெரிய அழிவுக்கு உள்ளாகியுள்ளதை குறிக்கிறது. அதனால் தான் கல்வெட்டுக்கள் சரியான அமைப்பில் இல்லாமல் சிதறி உள்ளன.
கோயில் கட்டுமான தகவல்கள் :
2000 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் ஒரு சிவன் கோயில் இருந்ததாக மதுரை காஞ்சி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 7ம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர், “அங்கயற்கண்ணி தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல்” என பாடியுள்ளார்.
கிபி 1200-ல் கோவில் கட்டப்பட்டுள்ளதும், கிபி 1250-ல் இயற்கை பேரிடரால் கோயிலின் கருவறை, ஆடவல்லான் சந்நிதி, எழுநிலை கோபுரம் ஆகியவை அப்போது சிதைந்ததும் தெரியவருகிறது. அதன்பின் கோவில் சீரமைக்கப்பட்டு 1250-ல் கோயிலுக்கு முதன்முறையாக திருத்தேர் செய்யப்பட்டுள்ளது.