சோழகங்க தேவன் கட்டிய பூரி ஜெகன்நாதர் கோவிலும் திருப்புல்லானி ஆதி ஜெகன்நாதர் கோவிலும்

1.கங்கை கொண்ட பேரரசர் இராஜேந்திர சோழ தேவரின் கலிங்க படையெடுப்பில் நடந்தது என்ன?

2.தஞ்சை பெரிய கோவிலுக்கும் கோனார்க் சூரியதேவர் கடவுள் கோவிலுக்கும் சம்பந்தம் உண்டா?

3.திரிகோனமலை கோனேஸ்வரர் கோவிலுக்கு  ஒரிசா கோனார்க் சூரிய  கோவிலுக்கும் சம்பந்தம் உண்டா?

4.திருப்புல்லானி ஆதி ஜெகன்நாதர் கோவிலுக்கும்  கலிங்கத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா?

5.சளுக்க சோழரின் ஆதிக்கத்தில் சோழரின் வம்சாவளிகள் என்ன ஆனார்கள்?

6.குலோத்துங்க சோழனின் கலிங்க படையெடுப்பின் முக்கிய நோக்கம் என்ன?

7.இராஜேந்திர சோழருக்கு பின் கலிங்கத்தை ஆண்ட முதலாம் இராஜ இராஜ தேவரின் புத்திர வம்சாவளியின் மீட்சி வழியினரின் வரலாறு தான் என்ன?


Mystry is solved………….

 

தஞ்சை சூழ் சோழ நாட்டில் புலிகொடி ஏத்தி எட்டு திக்கு விஜயமாய் வாழ்ந்த பெருவுடையார் இராஜ இராஜ சோழ தேவர் வித்திட்ட பேரரசுக்கு மனி மகுடமாய் தோன்றினான் அவனது செல்வனாம் மதுராந்தகன் என்னும் இயர் பெயர் கொண்ட  இராஜேந்திரன் தந்தை சிவபாதசேகரன்  வேங்கை என வாழந்தான் என்றால் அவனது மகன் தந்தைக்கும் ஒரு படி மேலே சென்று உலகின் வல்லரசாக சோழ நாட்டை புகழ் பெற செய்தான் உலகத்திம் மிகப் பெரிய கப்பற்படை தாங்கி கங்கையும் கடாரமும் கொண்டு திருமகளையும் நிலமகளையும் மனம்கொண்ட பெருமாள் என உலகலாம் ஓர் குடையில் ஆண்டான்.

இராஜேந்திரனின் படையெடுப்பில் இரட்டைப்பாடி ஏழரை இலக்கத்தின் மன்னன் மேலைச் சாளுக்கியனுடன் 100 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்ற போரில் 9,00,000 போர்வீரர்கள் போரிட்டுஇறுதியில் சோழமன்னன் வெற்றிவாகை சூடினான்..தரைப்படை,குதிரைப்படை,யானைப்படை மற்றும்கப்பற்படைமூலம் கடல்கடந்த நாடுகளையும் தாக்கி தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் சோழர்படை வென்றது.

இராசேந்திரன் கிபி.1018ல் இலங்கை முழுவதையும் வென்று சோழப்பேரரசின்கீழ் கொண்டுவந்தார். முதலாம் பராந்தகச்சோழனிடம் தோற்றோடிய வீரபாண்டியன் அன்று சிங்களத்தில் கைவிட்டோடிய பாண்டிநாட்டு மணிமுடியையும், இந்திரஆரத்தையும், இரெத்தின சிம்மாசனத்தையும், பாண்டியனின் செங்கோலையும் இராசேந்திரன் மீட்டு வந்தார்.(”தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மாப்பினவே” என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இதனை குறிப்பிடுவதை காண்க) மேலும் சிங்கள மன்னனின் மணிமுடியையும் அவன் பட்டத்தரசியின் மணிமுடியையும் பறித்தார்.

இலங்கையில் சிவனுக்கும் பெருமாளுக்கும் பல கோயில்கள் எழுப்பப்பட்டன. சேரனும் தன்அரசுரிமையையும், செங்கதிர் வீசிய மணிமாலை ஒன்றையும் இராசேந்திரனிடம் பறிகொடுத்தான். இராசேந்திரன் மதுரையில் தன் மகனைப் பிரதிநிதியாக அமர்த்தி, அப்பிரதிநிதியிடம் பாண்டிநாடு, கேரளம் ஆகியவற்றின் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தான்.(கிபி.1018-19) அப்பிரதிநிதியின் பெயர் சடாவர்மன் சுந்தரபாண்டியன்.

இவன் 23 ஆண்டுகள் அரசாண்டான். வடநாட்டு வெற்றிகளுக்குப்பிறகு நாடுதிரும்பிய இராசேந்திரன் சோழகங்கை என்னும் குளம் ஒன்றை வெட்டி அதில்கங்கையிலிருந்து கொண்டுவந்தநீரைசொரிந்து கங்கா ஜலமயம் ஜயஸ்தம்பம் என்று பெயரிட்டுத் தன் வெற்றிக்கு விழாகொண்டாடினான். தன்மருமகன் இராசராச நரேந்திரனை (வேங்கி இளவரசன் விமலாதித்தனுக்கும் இராசராச சோழன் மகள் குந்தவைக்கும் பிறந்தவனை) வேங்கிநாட்டு மன்னனாக மணிமுடிசூட்டினான். தன்மகள் அம்மங்காதேவியை இராசராச நரேந்திரனுக்கு மணம் முடித்துவைத்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே முதலாம் குலோத்துங்கசோழன் ஆவான்.

1015-இல் எழுதப்பட்ட கங்கை கொண்ட இராஜேந்திர சோழ தேவரின் மெய்கீர்திகளில் தன் மகன்களில் ஒருவனை சோழபாண்டியன் என்று பாண்டிய நாட்டிலும் சோழ இலங்கேஸ்வரன் என்று ஒருவனை இலங்கையிலும் சோழகங்கன் என்னும் ஒருவனை கலிங்க நாட்டிலும் சோழ வல்லபன்,சோழ குச்சிராயன் என கூர்சரத்திலும் அமர்த்தியதாக தெரிகின்றது.

இராஜேந்திர சோழ தேவரின் கலிங்க படையெடுப்பில் நடந்தது என்ன?

வீர ராஜேந்திர சோழ தேவருக்கு பின்  இராஜேந்திர சோழரின் மகளான அம்மங்கை மற்றும் வேங்கி இளவரசன் நரேந்திரனுக்கும் பிறந்த சளுக்க சோழன் குலோத்துங்க சளுக்கனே பிற்கால சோழனாக முடிசூடினான்.

நம் தமிழ் நாட்டு வரலாறுகள் ஓரளவு திறந்த மனப்பான்மையுடையவை ஆதாவது வீரராஜேந்திர சோழனோடு தமிழ் சோழ வம்சம் மாய்க்கப்பட்டு சளுக்க சோழ வம்சம் தமிழ் நாட்டின் ஆட்சி பொறுப்பேற்றது என நிஜத்தை எழுதி வைத்துள்ளனர்.

ஆணால் கலிங்க நாட்டு ஆய்வாளர்கள் உண்மையை இன்னும் முழுவதுமாக  அம்பலப்படுத்தாமல் கங்க-சோழ வாரிசாக  இன்னும் கூறி வருகின்றனர்.

இராஜேந்திர சோழரின் 1055- ஆம் ஆண்டில் எழுதப்பட்ட குறிப்பில் தன் மகன்களில் ஒருவனை சோழபாண்டியன் என்று பாண்டிய நாட்டிலும் சோழ இலங்கேஸ்வரன் என்று ஒருவனை இலங்கையிலும் சோழகங்கன் என்னும் ஒருவனை கலிங்க நாட்டிலும் சோழ வல்லபன்,சோழ குச்சிராயன் என கூர்சரத்திலும் அமர்த்தியதாக தெரிகின்றது.

சோழ கங்கன் என ஒரு மகனை கலிங்க மன்னை வீழ்த்தி அவன் அரியாசனத்தில் அமர்த்தினான் என உள்ளது. எனவே இராஜேந்திர சோழரின் காலத்துக்கு பின்னே கலிங்கத்தை ஆண்டது கங்கர் வம்சமல்ல அது சோழர் வம்சமே கலிங்கத்தை ஆண்டது.

சோழ கங்கனா? அல்லது கங்க சோழனா?


பொதுவாக சில அதிகாரிகளின் பெயரில் எந்த ஆட்சியில் உள்ளனரோ அவர்கள் பட்டம் முன்னே வரும்  பரம்பரை பட்டம் பின்னே வரும் எடுத்துக்காட்டாக சோழ காடவராயன் என்று வந்தால் காடவராயன் என்னும் மன்னன் சோழரின் கீழ்  கட்டுபட்டு வாழ்ந்தான் அதே போல் சோழ அதியமான் என்றால் சோழனுக்கு கட்டுபட்ட அதியமான் என்று அர்த்தம் முன்னே வருவது ஆளும் வம்சம் என்றும் பின்னே வருவது தான் குல பட்டமாகும். இங்கு அதியமான்,காடவராயன் என்பது தான்  குல பட்டமாகும்.

ஆனால் இராஜேந்திர சோழர் காலத்தில் சோழ பாண்டியன் என்றால் பாண்டியனாக அமர்த்தபட்ட சோழன் என்றும் சோழ கங்கன் என்றால் கங்கனாக அமர்தபட்ட சோழன் சோழ அயோத்தியராஜன் என்றால் அயோத்தியராஜனாக அமர்த்தபட்ட சோழன் என்று தான் பொருள் தரும்.

இதை ஒரிசாவை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் முற்றிலுமாக மறைத்து வருகின்றது.

இன்றைய கலிங்கமான ஒரிசாவில் தமிழ் கல்வெட்டுகள் அதிகமாக கிடைக்கின்றன என்றும் தமிழ் நாட்டுக்கு நிகராக அதிகமாக கல்வெட்டு கிடைக்கிறது என்றும் அதற்கான காரனம் கலிங்கத்துக்கும் சோழர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என கூறுகின்றனர்.

வர்மன் என்ற பெயர் கொண்ட கீழை கங்கரின் பட்டங்கள் தேவர் என ஏன் மாறியது?

இந்திரவர்மன்,குனவர்வம்,ஜெயவர்மன் போன்று பெயர் கொண்ட கீழை கங்கரின் வம்சத்தினர் பெயர்கள் இராஜேந்திர சோழ தேவரின் படை எடுப்புக்கு பின் தேவர் என்னும் பெயர் மாற என்ன காரணம்.

இதை கீழை கங்கர் மன்னர்களின் பட்டியலில் தெளிவாக பார்க்கலாம்.

Eastern Ganga Dynasty[edit]

Narasimhadeva I built the Konark temple

Indravarman I is earliest known king of the dynasty. He is known from the Jirjingi copper plate grant.[8][15]

Indravarman I (c. ?-537?)[8]

Samantavarman (c. 537-562)

Hastivarman (c. 562-578)

Indravarman II (c. 578-589)

Danarnava (c. 589-652)

Indravarman III (c. 589-652)

Gunarnava (c. 652-682)

Devendravarman I (c. 652-682?)

Anantavarman III (c. 808-812?)

Rajendravarman II (c. 812-840?)

Devendravarman V (c. 885-895?)

Gunamaharnava I (c. 895-939?)

Vajrahasta II (or Anangabhimadeva I) (c. 895-939?)

Gundama – (c. 939-942)

Kamarnava I (c. 942-977)

Vinayaditya (c. 977-980)

Vajrahasta IV (c .980-1015)

Kamarnava II (c. 1015-6 months after)

Gundama II (c. 1015-1038)

Vajrahasta V (c. 1038-1070)

கீழை கங்கரின் வம்சாவளிகளின் பெயர்கள் இராஜேந்திர சோழரின் படையெடுப்பிற்கு 

வர்மன் என்னும் பெயர்  முதலாம் இராஜ இராஜ தேவர், அனந்தவர்ம சோழ கங்க தேவர்,சடேஸ்வர தேவர்,மூன்றாம் இராஜ இராஜ தேவர் என பெயர் மாறினதுக்கு என்ன காரனம் என்ன என ஒரிசா காரர்களால் விளக்க முடியுமா?

சிலர் தேவர் என்றால் பொது பட்டம் தானே என நொண்டி சாக்கு கூறுவர் ஆனால் இராஜேந்திர சோழரின் ஆட்சி ஆண்டை ஒட்டி தன் மகனுக்கு தன் தந்தை பெயரான முதாலாம் இராஜ இராஜ தேவர்(1070-1077) இதே பெயரை தான் கீழை கங்கர் வைத்து கொள்வார்களா?

முழு பூசனிக்காயை சோத்தில் மறைக்க இயலாது. கிழை கங்கரின் கடைசி மன்னனான வஜ்ரஹஸ்தன் என்னும் மன்னனை கொன்று அவனுக்கு பதில் தன் மகனை சோழ கங்கன் இராஜ இராஜ தேவன் என்பவனை கலிங்க அரியானத்தில் ஏற்றினான் என்றே வரலாறு கூறுகின்றது.

 

இதிலிருந்து தெரியவில்லையா கங்கர் பரம்பரை அழிந்து சோழர் பரம்பரை கலிங்கத்தை ஆண்டது என்று.

Rajaraja I (c. 1070-1077)

Anantavarman Codaganga (c. 1077-1147)

Jatesvaradeva (c. 1147-1156)

Raghavadeva (c. 1156-1170)

Rajaraja III (c. 1170-1190)

Anangabhimadeva II (c. 1190-1198)

Rajradeva III (c. 1198-1211)

Anangabhimadeva III (c. 1211-1238)

Narasimhadeva I (1238-1264)

Bhanudeva I (1264-1278)

Narasimhadeva II (1279-1306)

Bhanudeva II (1306-1328)

Narasimhadeva III (1328-1352)

Bhanudeva III (1352-1378)

Narasimhadeva IV (1378-1414)

Bhanudeva IV (1414-1434)

தஞ்சை பெருவுடையார் கோயிலின் சாயலில் கோனார்க் சூரிய கோவில்:

சரியாக முதலாம் இராஜ இராஜனான சோழ கங்க தேவனுக்கு பின் அரசு கட்டிலில் ஏறியவன் அனந்தவர்ம சோழகங்க தேவன் இவன் சோழ கங்கன் இராஜ இராஜ தேவரின் மகனாவான். இவனே தஞ்சையில் உள்ள பெருவுடையார் கோவிலின் சாயலில் கோனார்க் சூரிய கோவிலையும் பூரி ஜெகன்நாதர் கோவிலையும் கட்டியது. இதில் சோழகங்கன் சோழ இளவரசியை மனந்ததாக கூறுகின்றனர் அது முற்றிலும் மாறு பட்ட ஒன்று சோழகங்கன் மனந்தது சளுக்க சோழரின் மகளை தமிழ் சோழர் மகள் அல்ல.

அனந்தவர்ம் சோழ கங்க தேவன் குறிப்பு:

அனந்தவர்ம சோழ கங்கனை ஒரிசாவின் ஆராய்ச்சியாளர்கள் நேரடி கங்கர் வம்சத்தில் வந்தவன் அல்ல  என்றே இன்னும் விமர்சித்து வருகின்றனர். இவரின் காலத்தில் தமிழக மக்களும் நிறையே பேர் கலிங்கத்தில் குடி பெயர்ந்தனர்.

இந்த சோழ கங்க தேவன் தான் யாழ்பாணத்தில் உள்ள கோனேசர் கோவிலை கட்டியது இது கோனார்க் சூரியேஸ்வரர் கோவிலின் சாயலை ஒட்டியது. பிற்கால சோழ கங்கரின் வம்சம் யாழ்பாணத்தில் தொடர்ந்தது.

இன்னொன்று முக்கியமான விசயம் என்னவென்றால் சோழ கங்க தேவன் குலோத்துங்க சோழனை போல் மகள் வழி சோழன் அல்ல  சோழரின் ஆன் வழி வாரிசு. இவனது வம்சத்தை சேர்ந்த பீம தேவன் என்பவனை எதிர்த்து தான் குலோத்துங்கன் கலிங்க    படையெடுப்பு ஏன் நிகழ்ந்தது என பின்னால் பார்ப்போம்.

அடிகள் என்ற மரியாதைக்குரிய கல்வெட்டு : சில கல்வெட்டுகளில் தமிழ் மன்னர்களும் மக்களும் தன வயதை பொறுத்து அடிகளார்,சிறுவன்,பெரியார் போன்று கல்வெட்டு பொறித்துள்ளனர். அம்பாசமுத்திரம் சுந்தர சோழ பாண்டியன் கல்வெட்டுகளில் பராந்தகன் மறவநடிகள் மதுராந்தகனான சோழ பாண்டிய மாராயன் ” என ஒரு கல்வெட்டு வந்துள்ளது. இதே போல் “மாதவன் மறவடிகள் மதுராந்தகனான சோழ பாண்டிய மகாராயர்” என ஒரு கல்வெட்டும் வந்துள்ளது. அதே ஊரில் வேறொரு இடத்த்தில் கிடைத்த கல்வெட்டுகளில் வீதி விடங்க வெள்ளாளன் அடிகள் தேவன் இத்தயவர்க்கு” என ஒரு கல்வெட்டு வந்துள்ளது பழுவூர் கல்வெட்டு “அடிகள் பழுவேட்டரையன் கண்டான் மறவனார் பெருந்தேவியார்” என அடிகள் என பழு வேட்டரையன் கல்வெட்டும் வந்துள்ளது பரிசை கிழான் செம்பியன் ஆற்காட்டு வேளாண் மறவன்

 

 

 

 

 

 

 

 

எனவே அடிகள்,சிறுவன்,பெரியார்,கிழவன் என்பது வயது முந்திரிச்சியும் அறிவையும் உணர்த்தும் கல்வெட்டுகளாகும் .

 

 

 

Anantavarman Chodaganga Deva (1077-1150) was the founder of the Eastern Ganga dynasty which ruled Kalinga, India. He was the son of Rajarajadeva and the Chola princess, Rajasundari, the daughter of Virarajendra Chola. The Chola king Kulothunga Chola I of the Chola dynasty was his uncle.The great temple of Jagannath in Puri was rebuilt in the 11th century atop its ruins by the progenitor of the Eastern Ganga dynasty, King Anantavarman Codaganga.[1] [2]

King Chodaganga was originally a Shaivite from Srimukhalingam who became a Vaishnava under the influence of Ramanuja when he visited Jagannath Puri. Despite Kulothunga Chola I being his maternal uncle, it did not stop the Chola sovereign from burning Anantavarman’s empire. Historians propose that it was probably because the king failed to pay his rent for two consecutive years. He was ousted by Kulothunga’s general Karunakara Thondaiman and this victory is detailed in the Tamil classic Kalingattupparani. Monarchs from this region of the subcontinent regularly assumed the title Chodaganga Deva throughout the ancient and medieval periods to allude to their Chola and Ganga heritage

From various inscriptions it is known that King Anantavarman Codaganga Deva established the present temple some time near the end of the eleventh century. A copper plate inscription made by King Rajaraja III found on the Tirumala Venkateswara Temple near the north entrance states that Jagannath temple was built by Gangesvara, i.e., Anantavarman Chodaganga Deva.

Later, King Ananga Bhima Deva II (1170-1198) did much to continue the work of Chodaganga Deva, building the walls around the temple and many of the other shrines on the temple grounds. He is thus often considered one of the builders of the temple. He also did much to establish the regulations around the service to the Deity.

A scion of this dynasty made rich donations to the Koneswaram temple, Trincomalee on Puthandu, 1223 CE in the name of King Chodaganga Deva. Shortly afterwards, the Konark temple was constructed in Orissa.

சளுக்க சோழரின் ஆதிக்கத்தில் சோழரின் வம்சாவளிகள் என்ன ஆனார்கள்:

இராஜேந்திர சோழரின் தங்கையான குந்தவை நாச்சியாரே விமலாத்தினுக்கு திருமனம் செய்வித்ததிலிருந்து வேங்கியுடன் சோழரின் உறவு உண்டானது. இந்த உறவு தான் பின்பு தலையே சொறிந்த கொள்ளிக்கட்டையாய் மாறியது. குந்தவை வம்சத்திலே வந்த அம்மங்கை தேவி நரேந்திர சளுக்கனின் புத்திரன் அனபாயன் வீரராஜேந்திரரின் இறப்புக்கு பின் சோழ தேசத்தை கைப்பற்றினான்.

மதுரை ஆண்டு கொண்டிருந்த சோழ பாண்டியன் அனபாய குலோத்துங்க சோழனுக்கு எதிரான கிளர்ச்சியை மேற்கொண்டதால் குலோத்துங்கன் “நரலோக வீரன்” என்னும் தன் தளபதியே அனுப்பி சோழ பாண்டியனை கொலை செய்தான். இது போக வேறு வேறு தேசத்தில் இருந்த சோழரின் வாரிசுகளும் கொலை செய்யப்பட்டனர்.


இறுதியில் மிஞ்சியது கலிங்கத்தை ஆண்ட சோழ கங்கன் மரபினர் மட்டுமே!!!!!!!!!!!!

குலோத்துங்க சோழனின் கலிங்க படையெடுப்பின் முக்கிய நோக்கம் என்ன?

கலிங்கத்து பரனியில் கருனாகர தொண்டைமான் மற்றும் குலோத்துங்கனின் கீர்த்தியை குறிக்கின்றது.

இதன் நோக்கம் தன்னை இகழ்ந்த கலிங்க மன்னனை சோழ தேசத்தின் மான்புக்காக படை எடுத்து வென்றதாக கூறப்படுகின்றது.

“கடல் புறா” நாவலிலும் தமிழர்களையும் தமிழ் வணிகர்களை சிறை வைத்த கலிங்க மன்னை பழிவாங்க குலோத்துங்கன் செல்வதாகவும் கடல்புறா முதல் வரியில் “காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த” என இரட்டை அர்த்தத்தில் தொடங்கியிருப்பார் செயங்கொண்டார்.

குலோத்துங்கனுக்கு தமிழர்கள் மேல் எந்தளவு அபிமாணம் என தெரியவில்லை ஆனால் நேரடி சோழ வம்சத்தினரை அழிக்க வேண்டும் என்பதிலும் ஆர்வம் இருந்திருக்கலாம்.

அதனாலேயே கலிங்கத்தின் மீது படையெடுத்திருக்கலாம். ஆனால் இதன் பின்பு சளுக்க சோழருக்கும் சோழ கங்கருக்கும் பரம்பரை பகை உண்டாகியது. ரேனாட்டு சோழர் ஆந்திர சோழர் என்னும் சிலர் சோழர் கிடையாது அவர்கள் குலோத்துங்கனின் வேங்கி உறவினர்கள். பிற்காலத்தில் அந்த அந்ததஸ்தை வழங்கினான் குலோத்துங்கன்.

குலோத்துங்கன் பரம்பரையும் முழுவதுமாக சடையவர்மன் சுந்தர பாண்டிய தேவனால் பிற்காலத்தில் கருவருக்கப்பட்டது. இந்த போரில் சுந்தர பாண்டியனுக்கு உதவி செய்த சோழ கங்கனுக்கு “மதிதுங்கன்” என்னும் பட்டம் அளித்தான் சுந்தர பாண்டியன்.

அடிகள் என்ற மரியாதைக்குரிய கல்வெட்டு : சில கல்வெட்டுகளில் தமிழ் மன்னர்களும் மக்களும் தன வயதை பொறுத்து அடிகளார்,சிறுவன்,பெரியார் போன்று கல்வெட்டு பொறித்துள்ளனர். அம்பாசமுத்திரம் சுந்தர சோழ பாண்டியன் கல்வெட்டுகளில் பராந்தகன் மறவநடிகள் மதுராந்தகனான சோழ பாண்டிய மாராயன் ” என ஒரு கல்வெட்டு வந்துள்ளது. இதே போல் “மாதவன் மறவடிகள் மதுராந்தகனான சோழ பாண்டிய மகாராயர்” என ஒரு கல்வெட்டும் வந்துள்ளது. அதே ஊரில் வேறொரு இடத்த்தில் கிடைத்த கல்வெட்டுகளில் வீதி விடங்க வெள்ளாளன் அடிகள் தேவன் இத்தயவர்க்கு” என ஒரு கல்வெட்டு வந்துள்ளது பழுவூர் கல்வெட்டு “அடிகள் பழுவேட்டரையன் கண்டான் மறவனார் பெருந்தேவியார்” என அடிகள் என பழு வேட்டரையன் கல்வெட்டும் வந்துள்ளது பரிசை கிழான் செம்பியன் ஆற்காட்டு வேளாண் மறவன்

 

 

 

 

 

 

 

 

எனவே அடிகள்,சிறுவன்,பெரியார்,கிழவன் என்பது வயது முந்திரிச்சியும் அறிவையும் உணர்த்தும் கல்வெட்டுகளாகும் .

 

 

 

சிங்களரின் பூர்வீகம் எது சர்சை??????????

சிங்களரின் பூர்வீகம் கலிங்கம் என்கின்றனர் ஆனால் மட்டக்களப்பு மான்மியத்தில் சிங்கர்,கங்கர்,வங்கர்,கலிங்கர் இலங்கையில் குடியேறியதாக கூறுகின்றனர். இதில் கலிங்கர் அல்லாது சிங்கர் என்பர்களே சிங்களர் என்பதாகும். சிங்கள் மொழியின் சாயல் வங்கத்தையோ அல்லது ஒரிசாவின் மொழியை போல் அல்லாமல் ஆப்காணிஸ்தானின் “பாஸ்தோ” வார்தைகள் வருகிறதாம் சிங்களர் அங்கிருந்து வந்தனரா அல்லது ஸ்ரீவிஜயம் என்னும் சிங்கபுரம்(சிங்கபூர்) பகுதியிலிருந்து வந்தனரா என்பது இன்னும்  சர்ச்சை தான்.

சேதுபதிகள் மகள் நீலகேசியை மணந்த வெடியரசன் விஷ்னுபுத்திரன்:

சேதுபதிகளுக்கும் நெடுந்தீவு நயினாத்தீவு முற்குக தேசத்தலைவர் விஷ்னுபுத்திர வெடியரசருக்கும் இடையே மண உறவுகள் இருந்துள்ளது. சேதுபதி மகளை மணந்த வெடியரசன் கதை பற்றிய கோட்டை கொத்தலங்கள் நெடுந்தீவில் காணலாம்.

 

 

சேதுபதி மகராஜவின் வழியில் வந்த குளக்கோட்டன்:

குளக்கோட்டன் என்னும் மகாராஜன் சேதுபதி ராசர் பரம்பரையில் வந்தவன் என வெடியரசன் கதை கூறுகிறது.

 

 

கலிங்க மாகன் வருகை:

ஏலேல சிங்கன் என்னும் தமிழ் மறவனது காலத்துக்கு பின்னே சிங்கள மக்கள் கண்ட மிகப்பெரிய பேரழிவு கலிங்க மாகன் காலத்தில் தான். கலிங்க மாகனின் வருகை ஏன் என இன்னும் பலருக்கு புரியவில்லை. காரணம் கலிங்க தேசமும் அதன் கிழக்கு தேசங்களிலும் “பௌத்தம்” மதத்துக்கே முக்கியத்துவம் இருந்துள்ளது அப்படியிருக்க கலிங்க மாகன் இடித்து தள்ளிய புத்த விகாரங்களும் மிகப்பெரிய புத்தகோவிலும் ஏராளம். சிங்களர்கள்  கலிங்க மாகனை “பௌத்தத்தை அழிக்க வந்த பேய்” என வர்னிகிக்கிறது மகாவம்சம்.

கலிங்க மாகனது காலத்தில் தான் சைவ,வைனவ கோவில்கள் நிறைய கட்டப்பட்டன திரிகோன மலை சிவன் கோவிலும்,கோனேசர் கோவிலும் இந்த காலகட்டட்திலே கட்டப்பட்டது எனலாம். கலிங்க மாகன் என்பது “கலிங்க  பேரரரசன்” என்பது ஒரு பொருளாகும். கலிங்க மாகனது கல்வெட்டும் சாசனங்களும் தமிழிலே இருந்துள்ளது. கலிங்க மாகனின் துனை அரசன் “செயபாகுதேவன்” என்பவன் “சோழ கங்கன்” என்பதே பின்ன்னலய தெளிவு. கலிங்க மாகன் காலத்திலும் இராஜேந்திர சோழனின் வம்சமான “இராஜ இராஜ சோழ கங்கன்” காலத்திலும் கலிங்கத்திலும் தமிழே வழக்கு மொழியாகவும் கல்வெட்டு மொழியாகவும் இருந்துள்ளது.

கலிங்க மாகன் 20000 கலிங்க நாட்டு படையுடனும் தமிழ் நாட்டிலே திரட்டிய பெரும்படையுடனே இலங்கையை வென்று 40 ஆண்டு காலம் ஆட்சி செய்தான். அவ்வளவு பெரிய படையுடன் வந்த் கலிங்க மாகன் தமிழகத்தின் மீது ஏன் படையெடுக்கவில்லை இலங்கை மீது ஏன் வன்மம் சைவ சமயத்தை   பரப்ப ஏன் முனைய வேண்டும் என்று பார்க்கும் போது. கலிங்க மாகனையும் ஆதி தமிழான “சோழ கங்கன்” பரம்பரை சார்ந்தவன் என கருதலாம். இதை மகாவம்சம் “கலிங்க மாகன் மற்றும் ஜெயபாகுதேவன்” இருவரையும் தமிழ் அரசர்கள் என்கிறது.

 

aruppukottai

திருக்கோவில் கல்வெட்டுக்கள்:

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலின் மூலவர் சுவாமி சன்னிதியின் மேற்கு, வடக்கு தெற்குபுற வெளி சுவர்களில் மொத்தம் பதினோரு கல்வெட்டுக்கள் உள்ளன. 1914 ஆம் ஆண்டு தொல் பொருள் துறையினர் இக்கல்வெட்டுக்களை படியெடுத்து வெளியிட்டுள்ளார்கள். இதில் ஒன்பது கல்வெட்டுக்கள் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தவைகளாகும்.

இது தவிர சூரிய புஷ்கரணி தெப்பக்குளத்தின் தண்ணீர் வந்து விழும் மடையின் இரு பக்கங்களிலும் கல்வெட்டு ஒன்று உள்ளது. இந்த கல்வெட்டு விபரங்களை தென்னிந்திய கல்வெட்டு சாசன 1914 ஆம் ஆண்டிற்கான அறிக்கை 1962-63 ல் கடித எண் 203/1463/1511 நாள் 11-4-62 ல் இக்கல்வெட்டுக்கள் வ.எ.402 முதல் 412 முடிய எண்ணிடப் பட்டதாக கூறுகிறது. தெப்பக்குள கல்வெட்டிற்கு எண்.510 என்று எண் கொடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வெட்டுக்கள் விபரங்கள் வருமாறு:

1. கல்வெட்டு எண்.402:

இது மூலவர் சுவாமி கருவறையின் தெற்கு பக்க வெளிசுவரில் உள்ளது. சோழநாடு கொண்டவன், திரிபுவன சக்கரவர்த்தி மாறவர்மன் என்ற சுந்தரபாண்டியத் தேவர் தனது ஐந்தாவது ஆட்சி ஆண்டில் அதாவது கி.பி.1221 ல் இதை பொறித்துள்ளான்.

செய்தி

“செங்காட்டிருக்கை இடத்துவளியில் உள்ள குறள் மணீஸ்வரமுடையார் கோயிலில் மூன்று நந்தா விளக்கெரிக்க கொடை கொடுத்தது. ”

2.கல்வெட்டு எண்.403:

இது மூலவர் சுவாமி கருவறையின் தெற்கு பக்க வெளிசுவரில் உள்ளது. மன்னன் சடாவர்மன் என்ற திரிபுவன சக்கரவர்த்தி குலசேகர தேவன் தனது பதினெட்டாவது(13+5) ஆட்சி ஆண்டில் அதாவது கி.பி.1208 ல் இதை பொறித்துள்ளான்.

செய்தி

“வெண்பில் நாட்டு செங்காட்டிருக்கை இடத்துவளியில் உள்ள குறள்மணீஸ்வரமுடைய நாயனார் கோயில் அர்த்த மண்டப நுழைவு வாயிலுக்கு ஒரு கல் தானமாக கொடுத்தது.”

3. கல்வெட்டு எண்.404:

இது மூலவர் சுவாமி கருவறையின் தெற்கு பக்க வெளி சுவரில் உள்ளது. திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டியத் தேவர் தனது மூன்றாவது ஆட்சியாண்டில் அதாவது கி.பி.1219ல் இதை பொறித்துள்ளான்.

செய்தி

“இது பிறந்த தின சதாபிசேக நாளன்று சொக்கநாதருக்கு வழங்கப்பட்ட கொடை பற்றி தெரிவிக்கிறது. இக் கல்வெட்டு முழுமையடையாமல் அரைகுறையாக உள்ளது”

4. கல்வெட்டு எண். 405:

இது மூலவர் சுவாமி கருவறையின் தெற்கு பக்க வெளிசுவரில் உள்ளது. காலம் எதுவும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை. மன்னன் சுந்தரபாண்டியத் தேவன் காலத்தில் பொறிக்கப்பட்டது.

செய்தி

“குறள் மணீஸ்வரமுடைய நாயனார் கோயிலுக்கு இரண்டு மாலைகள் கொடுத்து வர நிலமும் நந்தவனமும் கொடை கொடுத்த விபரத்தை இது தெரிவிக்கிறது.

5. கல்வெட்டு எண்.406:

இது மூலவர் சுவாமி கருவறையின் தெற்கு பக்க வெளிசுவரில் உள்ளது. மன்னன் சுந்தரபாண்டியத் தேவர் காலத்தில் பொறிக்கப்பட்டது. சோழ நாட்டை பகிர்ந்தளித்தவன் என்ற சிறப்பு பெயர் பெற்ற இவன் தனது எட்டாவது ஆட்சியாண்டில் அதாவது கி.பி.1224ல் பொறித்தது.

செய்தி

“தென்னிலங்கை வளஞ்சியர்களில் ஒருவரான செகல் சேவகத் தேவன் ‘அருந்தவ நாச்சியார்’ எனப்படும் ‘பார்வதி’ சிலையை பிரதிஷ்டை செய்தான்.”

6.கல்வெட்டு எண். 407:

இது மூலவர் சுவாமி கருவறையின் மேற்கு பக்க வெளி சுவரில் மன்னன் சுந்தரபாண்டியத் தேவன் தனது எட்டாவது ஆட்சி ஆண்டில் அதாவது கி.பி.1227ல் பொறித்தது.

செய்தி

“செகல் சேவகத் தேவன் ‘லிங்கபுராணத் தேவர்’ எனப்படும் ‘லிங்கோத்பவர்’ சிலையை பிரதிஷ்டை செய்தான்.”

7. கல்வெட்டு எண் 408:

இது மூலவர் சுவாமி கருவறையின் வடக்கு வெளி சுவரில் மன்னன் “முடிகொண்ட சோழபுரத்தில் சோழரை வென்றவன்” என்ற சிறப்பு பெயர் பெற்ற சுந்தரபாண்டியத் தேவர் தனது நான்காவது(3+1) ஆட்சி ஆண்டில் அதாவது கி.பி.1220ல் பொறித்தது.

செய்தி

“அழகன் அருளாள பெருமாள் என்ற உலக நாராயண சக்கரவர்த்தியால் உலக நாராயண சந்தி பூசை என்ற சிறப்பு பூசைக்கு நிலம் கொடுத்தது குறித்து தெரிவிக்கிறது. முதலாம் ஆண்டு தனுசு தேதி 3 சிரவண புதன்கிழமை என்று கல்வெட்டு பழுதுடன் உள்ளது”

8.கல்வெட்டு எண்.409:

இது மூலவர் சுவாமி கருவறையின் வடக்கு பக்க வெளி சுவரில் உள்ளது. ‘சோழநாடு கொண்ட’ சுந்தர பாண்டியத் தேவரின் பதினொன்றாவது ஆட்சி ஆண்டில் மார்கழி ஐந்தாம் நாள் இக்கல்வெட்டு பொறிக்கப் பட்டுள்ளது.

செய்தி

“சோழகங்க தேவனின் ஆணைப்படி சோழகங்கம் என்ற இடத்திலிருந்து ‘இணக்கு நல்ல பெருமாள்’ கல் சிலையையும் உற்சவர் பெண் (உலோக ) சிலையையும் கொடுத்தான்”

கல்வெட்டு எண்.410:

இது மூலவர் சுவாமி கருவறையின் வடக்கு வெளி சுவரில் உள்ளது. குலசேகர தேவன் கி.பி.1286ல் பொறித்தது.

செய்தி

“பல நாடு கொண்ட குலசேகரனின் பதினெட்டாவது ஆட்சி ஆண்டில் சோழகங்க தேவனின் ஆணைப்படி இடத்துவளி பிள்ளையார் கோயிலுக்கு நிலம் கொடுக்கப்பட்டது”

10. கல்வெட்டு எண். 411:

இது மூலவர் கருவறையின் வடக்கு பக்க வெளி சுவரில் உள்ளது. முடிகொண்ட சோழபுரத்தில் பகைவரை வென்ற திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டியன் தனது பதினைந்தாவது ஆட்சியாண்டில் அதாவது 1231ல் இக்கல்வெட்டை பொறித்துள்ளான்.

realsethupathi

செய்தி

“இது துர்க்கையார் பிரதிஷ்டை செய்யப்பட்டது குறித்த ஆவணம்”

11) கல்வெட்டு எண் 412:

இது மூலவர் சுவாமி கருவறையின் வடக்கு பக்க வெளிசுவரில் உள்ளது. சோழ நாட்டை பகிர்ந்தளித்தவன் என்ற சிறப்பு பெயர் கொண்ட திரிபுவன சக்கரவர்த்தி மாறவர்மன் சுந்தர பாண்டிய தேவன் தனது 14 வது ஆட்சி ஆண்டில் அதாவது கி.பி. 1230(மிதுனம் மாதம் அதாவது ஆனி மாதத்தில் தேதி 13 ஞாயிற்றுக்கிழமை ரோகிணி நட்சத்திர தினத்தில்) இக்கல்வெட்டை பொறித்தது.

செய்தி

“குளம் விற்பனை குறித்தும் இடத்துவளியில் உள்ள இடத்துவளி பிள்ளையார் கோயிலுக்கு நிலம் கொடை கொடுத்தது குறித்தும் கூறுகிறது”

12. கல்வெட்டு எண்.510:

இது சூரிய புஷ்கரணி தெப்பக்குளத்தின் நீர் வரத்து மடையான பிரமடை கண்மாயின் பிரமடையின் இரு பக்கங்களிலும் உள்ளது. இது(சக-7) கி.பி.1115 ஆம் ஆண்டில் செதுக்கப்பட்டுள்ளது அரசன் பெயர் இதில் இல்லை.

செய்தி

” ஊருணி நிறுவப்பட்டுள்ளது குறித்த ஆவணமிது. செங்காட்டிருக்கை இடத்துவளியில் உள்ள திருவாளராய உதயன் சோழகங்கன் மகன் அருளாரழகப் பெருமாள் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது”.

இப்படி வந்தது தான் “சோழ கங்கன்” பரம்பரை இலங்கையிலும் தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில் ஆட்சியமைத்தது.

 

பூரி ஜெகன்நாதர் கோவிலின் சாயலில் திருப்புல்லானி ஆதிஜெகன்நாதர் கோவில்:

 

நாம் ஒரு புதிய ஊருக்கு குடிபோகின்றோம் என்றால் அந்த ஊருக்கு நமது குலதெய்வத்தின் கோவிலின் மன்னை எடுத்து சென்று கோவில் உண்டாக்குவோம். அதுபோல தான் அனந்தவர்மன் சோழகங்கன் கட்டியதை போலவே பூரி ஜெகன்நாதர் கோவிலின் சாயலில் திருப்புல்லானி ஆதி ஜெகன்நாதர் கோவில் மற்றும் கோனர்க் சூரியன் கோவில் போலே கோனேஸ்வரர் கோவில். என அதே சாயலில் கட்டினர் சோழகங்கர்.

 

 

ஏன் இவ்வளவு விரிவாக கூறுகிறோம் என்றால் இந்த சோழகங்கன் என்னும் சோழ பரம்பரையில் வந்தவர்கள் தான் ஆரியசக்கரவர்த்தியும் இராமநாதபுரம் சேதுபதிகளும். இதை யாழ்பாண வைபமாலையில் ஆரிய சக்கரவர்த்தியை “சோழ இளவரசன்” என கூறுகின்றது. சேதுபதியும் தம்மை “இரவிகுல ரகுநாத சேதுபதி” எனவும் தம்மை செம்பிவளநாடன் என கூறிகொள்கிறார்.

 

 

ஆதிஜெகன்நாதர் கோவிலின் எல்லா முனையிலும் சேதுபதிகளின் திருப்பனிக்கான சாண்று இருக்கும் அந்த கோவிலின் கோபுரம் முதல் பல பிரகாரங்கள் கட்டியது சேதுபதி தான். இது போக இராமேஸ்வரம் கோவிலின் திருப்பனிகளுக்காக சேதுபதி தன்னை “இராமநாத காரியநாதன்” என கூறிகொள்கின்றார்.

 

திருக்கோனமலையில் உள்ள கோனேசர் கோவிலையும் நல்லூர் கந்தசாமி கோவிலையும் கட்டியது ஜெகராசசேகரனே.

 

சேதுபதியின் நாடுகளில் “கீழ் செம்பிநாடு” “வடதலை செம்பிநாடு” ஊர்களின் பெயர் “வீரசோழன்” “மதுராந்தகனூர்” “அரியமான்” போன்ற பெயர்களும் சேதுபதிகளின் வம்சத்திலே “உடையான்”  “மதுரந்தகி நாச்சியார்” “உலகமுதுடயாள்” “ராஜராஜேஸ்வரன்” “திருவுடையத் தேவர்” “இராசேந்திரன்” “தடாதகை நாட்டில் செம்பிவள கரதளபன்” “உடையார் தேவர்”  போன்ற பெயர்கள் சோழரை நினைவு படுத்தும்

செம்பி நாட்டு மறவர் கிளைகள்

——————————————————–

1.மரிக்கார் கிளை = சங்கு பயத்தன் குடி(சோழ பாண்டியன்)

2.பிச்சையன் கிளை = சட்டி குடி(சோழ  கங்கன்)

3.தொண்டமான் கிளை = கச்சிலான் குடி(சோழ வல்லபன்)

4.கட்ரா கிளை = முண்டன் குடி(சோழ கேரளன்)

5.கற்பகத்தார் கிளை = மாளவன் குடி(சோழ கன்னங்குச்சிராயர்)(மாளவம்=குஜராத்)

6.சீற்றமன்(ஸ்ரீ ராமன்) கிளை = முறண்டன் குடி(சோழ அயோத்திராஜன்) 

7.தனிச்சன் கிளை = தனஞ்சயன்[கோப்பி] குடி(சோழ கனகராஜன்)

 

சோழர் படையில் இருந்த கத்திரியர்,கொற்றவாளர்,எறிவீரர்,முனைவீரர்,இளஞ்சிங்க வீரர்களுடன் கலிங்க மாகனால் கச்சி தொண்டையாண்ட திரையரையும் சேரர் வம்ச வில்லவரையும் கலிங்கத்தின்  காலிங்கர்களையும் ஒன்றினைந்த மறவர் சேனையே இந்த முற்குக வன்னியர்கள்.

இவர்கள் யார் என தற்போது கூற தேவையில்லை.

 இராஜேந்திர சோழரின் 1055- ஆம் ஆண்டில் எழுதபட்ட இராஜேந்திர சோழரின் மெய்கீர்த்தியில் சோழபாண்டியன்,சோழகங்கன்,சோழகேரளன்,சோழ அயோத்திராஜன்,சோழ கனகராஜன்,சோழ கன்னங்குச்சிராஜன்,சோழ வல்லபன்

 அதனாலேயே அவர்களுக்கு வன்னிபங்கள் கிடைத்துள்ளன. என தோன்றுவதால் சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றோம்.

 

1)சோழபாண்டியன் 2)சோழகங்கன் 3)சோழகேரளன் 4)சோழ அயோத்திராஜன்

5)சோழ கனகராஜன் 6) சோழ கன்னங்குச்சிராஜன் 7)சோழ வல்லபன்

 1.மரிக்கார் கிளை = சங்கு பயத்தன் குடி = சோழ பாண்டியன்

2.பிச்சையன் கிளை = சட்டி குடி= சோழ கங்கன் =  சோழ கலிங்க ராஜன்

3.தொண்டமான் கிளை = கச்சிலான் குடி= கத்திரியர்  = சோழ வல்லபன்

4.கட்ரா கிளை = முண்டன் குடி= சோழ கேரளன்  = வில்லவராயர் 

5.கருபுத்திரன் கிளை = மாளவன் குடி= சோழ கன்னங்குச்சியார்  = குச்சிராயர்(மாளவம்=குஜராத்)

6.சீற்றமன்(ஸ்ரீ ராமன்) கிளை = முறண்டன் குடி  = சோழ அயோத்திராஜன்

7.தனிச்சன் கிளை = தனஞ்சயன் குடி= கனகராயர்  = சோழ கனகராஜன்

எனவே ஆதியில் இராஜேந்திர சோழனால் கலிங்கத்தில் “சோழ கங்கன்” ஆக முடிசூட்டப்பட்டு பின்பு கலிங்க மாகனால் இலங்கையில் அழைத்துவரப்பட்டு பாண்டியருக்கு துனைவராகி சுய ஆட்சி புரிந்து  “நமச்சிவாய” “இராம நமோ” போன்று இந்து மதத்தின் தர்மத்தை காத்து தமிழ் வளர்த்த பரம்பரையினரே சேதுபதிகள் மற்றும் ஆரியசக்கரவர்த்தி எனலாம்.

 

நன்றி:

விக்கிபீடியா   கையிலாய வைபமாலை

Bibliography[edit]

Sastri, K. A. Nilakanta (2000) [1935]. The Cōlas. Madras: University of Madras. pp. 322-323.

Jump up ^ Cesarone, Bernard (2012). “Bernard Cesarone: Pata-chitras of Orissa”. asianart.com. Retrieved 2 July 2012. This temple was built between approximately 1135-1150 by Codaganga

Jump up ^ “Chodaganga Deva”. indiadivine.org. 2012. Retrieved 2 July 2012. Chodaganga Deva (1078-1150), the greatest of the Ganga kings, built a new temple on the ruins of the old one

 

This entry was posted in சேதுபதிகள், சோழன், தேவர் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *