மறக்குல மன்னர்களின் பூணூல்.

மறக்குல மன்னர்களின் பூணூல்.

மற மன்னர்கட்கு தங்கப் பூணூல் என்பது வழக்கத்தில் உண்டு. மேலும் மறக்குல மன்னர்கள் வெறும் பருத்தி நூலில் பூணூல் போடுவதில்லை என்பதால்.. அறியாத சிலர் மறக்குல மன்னர்களுக்கு பூணூல் இல்லை என்று எழுதினர். ஆனால்.. தங்கத்திலும், தங்க இழைகளில் கோர்த்த முத்துக்களிலும் மன்னர்கள் பூணூல் அணிந்திருந்தனர். {ஏற்கனவே வடகரை மன்னர்கள் இருவர் முத்துப் பூணூல் கோலத்துடன் குற்றாலம் கோயிலில் உள்ள படங்கள் பதியப்பட்டுள்ளது}

ஏன் இம் மன்னர்கள் தங்கத்திலும், முத்துச் சரங்களிலும் பூணூல் பூண்டனர்? -எனும் கேள்விக்குப் பதில் இதுதான்…

Continue reading
Posted in தேவர் | Tagged | Leave a comment

சின்னவன்னியனார் எனும் சேந்தன்குடி மறவர்.

வன்னி -வன்னியன் – வன்னியனார் எனும் பெயர்ச்சொல், சாசனங்கள் – இலக்கியங்கள் – பத்திரங்கள் ஆகியவற்றில் பயின்று வந்துவிட்டாலே சிற்றறிவு உள்ள மூடர்களில் இருந்து கற்றறிந்த சில பேரறிஞர் வரை சட்டென்று உடனடியாக தற்கால வன்னியர் சாதியைக் குறித்துதான் அது என்று கையைக் காட்டுகின்றனர். எதையும் சரியாக ஆராயாமல் முடிவெடுக்கும் இவர்களால்தான் சரியான சமூக வரலாறு மக்களுக்கு கிடைப்பதில் பெருந் தடை ஏற்படுகிறது.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மறவரின் அடிமடியிலேயே கை வைக்கும் போக்குகள்தான் தற்காலத்தில் இணையதள வரலாறு பேசும் முட்டாள்களின் கை வண்ணமாக திகழ்ந்து வருகிறது.

•சேந்தன்குடி சின்ன வன்னியனார்•

“சின்ன வன்னியனார் பணவிடு தூது” என்று ஒரு சிற்றிலக்கியம். இது தூது நூல்கள் வரிசையில், பணத்தைத் தூதாக விடும் பணவிடு தூது எனும் வகையைச் சேர்ந்தது. இந்த வகை தூது இலக்கியங்கள் பல கடவுள்கள், சிற்றரசுகள், செல்வந்தர்கள் மீது பாடப்பட்டவை. அந்த வகையில் மேற்கண்ட தூது நூலில் சேந்தன்குடி வழுவாட்டித் தேவரவர்கள் வம்சாவளியைச் சேர்ந்த பெத்த பெருமாள் எனும் கலங்காப் புலியின் வழியில் வந்த சிவந்த பெருமாள் மீது பாடப்பட்டதுதான் சின்ன வன்னியனார் பணவிடு தூது.

Continue reading
Posted in தேவர் | Tagged , | Leave a comment

சின்னனேந்திர பாண்டியன் செப்பேடு

No photo description available.

வாசக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! பாண்டிய வம்சத்தவர் யார் என்பதை உரைக்கும் வண்ணம் இந்த செப்பேட்டில் தகவல்கள் அடங்கியுள்ளன. இந்த செப்பேட்டின் காலம் சாலிவாகன சகாப்தம் 1171 -என குறிக்கப்பட்டுள்ளது அதன்படி ஆங்கில ஆண்டு 1246 ஆகும். கொல்லம் ஆண்டு 421 என்று கணித்தாலும் சரியாக பொருந்திவருகிறது. ஆயினும் செப்பேடு காட்டும் செய்தியில் “ஸ்ரீபெருமாள் அழகம் இருந்தகாலம்” என வருவதால் இதனை 16ம் நூற்றாண்டாகவே கணிக்க இயலுகிறது. செப்பேடு தமிழிலும் கிரந்தத்திலும் அமைந்துள்ளது. பராக்கிரம பாண்டியன் பெயருக்கு முன்னுள்ள வாக்கியங்கள் முழுவதும் கிரந்தத்தில் உள்ளன. செப்பேடு~•~•~•~•~

Continue reading
Posted in சொக்கம்பட்டி ஜமீன், பாண்டியன், மறவர் | Leave a comment

இரகுநாதசேதுபதி ஒருதுறைக்கோவை-பொன்னாங்கால் அமிர்தகவிராயரவர்

16 ஆம் நூற்றாண்டிலே எழுதப்பட்ட இரகுநாதசேதுபதி ஒருதுறைக்கோவை என முதலாம் இரகுநாத சேதுபதி என்ற திருமலைரகுநாத சேதுபதி மீது பாடிய பொன்னாங்கால் அமிர்தகவிராயரவர் சேதுபதியை செம்பியர் தோன்றல் செம்பியர் கோன் என பாடியுள்ளபல கண்ணிகளில் சேதிபதிகள் 16 ஆம் நூற்றாண்டு முதல் செம்பியன் என அழைக்கபட்டார் என்ற செய்தி உறுதியாகிறது.
சேதுபதிகள் சோழன் மறவராவர்.இவரை செம்பிநாட்டு மறவர் என வழங்குவர்.பாண்டியநாடு பாண்டி நாடு என கூறுவர். செம்பியன் நாடு செம்பிநாடு என ஆனது. ஒருதுறைக்கோவையிலும் ரகுநாத சேதுபதையை செம்பிநாடன்(60,82) செம்பியர் கோன்(203) செம்பி நாட்டிறை(208) செம்பியர் தோன்றல்(218) என வழங்குதல் காண்க.இச்சேதுபதிகளை இரவிகுலத்தவரெனகூறுதலும் அச் சேதுபதி சாசனங்களில் உள்ள விருதாவளிகளில் முதற்கட் “சோழ மண்டல பிரதிஸ்டாபகன்” ‘அகளங்கன்’ எனவரும் விருதுகளும் இவர் சோழர்மறவராகியவர்கள் சோழநாட்டை விட்டு சேது தீரத்திற் குடியேறிகாலம் இது திரிபுவனதேவன் எனும் பெயர் கொண்டது காரணமாகிறது.இவர்களின் பழைய சாசணங்களிற் பெரும்பாலும் “குலோத்துங்க சோழ நல்லூர்கீழ்பால் விரையாதகண்டனிலிருக்கும் வங்கிசாதிபர்” என சோணாடு ஈண்டுபோந்துகண்ட தலை நகர் குலோத்துங்கசோழநல்லூர் என்பது இங்கு உற்றுனோக்குவதாக.

Continue reading
Posted in சேதுபதிகள் | Leave a comment

மறவர் ஜாதிவர்ணம் ஓலை(போலி செய்திகள்)

மெக்கன்சி தொகுத்த பல தொண்டை மண்டல வேளாளர்களின் ஒலை மறவர் ஜாதி வர்னம் என்ற சுவடிகளில் ஒன்று.இது வில்லியம் டெய்லர் என்பரால் சேகரிக்கபட்டுள்ளது. இதில் மறவரின் ஜமீந்தார்களின் நிகழ்கால பெயர்களுடன் சில இல்லாத போலியான தகவல்களும் கோர்க்கபட்டுள்ளது. 
அதாவது சேதுபதி திருமலை நாயக்கரின் மகன்போலவும் அவரின் தட்டில் சாப்பிடும் பழக்கம் உள்ளது போன்றும் திருமலை நாயக்கரின் முதல் தொண்டன் எனவும் வந்துள்ளது. 

Continue reading
Posted in சேதுபதிகள், மறவர் | Leave a comment

K.K Pillai or Kanagasabai pillai’s Fake Naga Race claims and Vellalization

 Maravar,Parathavar are Wrongly cosider and Written by KK Pillai A vellanist

Fake “The Tamils Eighteen Hundred Years Ago-1956″ Book

is inspired by Pallars community ashirvatham,gurusamy and Nadars community telugu brahmin

S.Ramachandran,Ganeshan,Nedumaran is truly written by a fellow vellala name Kanakasabai pillai.V

Caldwell and his followers who wrote and spoke about Tamil culture and history endeavoured to show that Tamils were essentially a peaceful people who had achieved a high level of civilization independent of and prior to the arrival of the ‘Aryans’ in the Indian subcontinent. This was the unique Dravidian civilization. The theory of Dravidian linguistic and hence cultural independence also contained in it the idea that the Tamils were originally a class of peaceful farmers. The politics of Caldwell’s teleology compelled him [to] introduce this idea into his writings. (It was seen earlier that it arose from the attitude he shared with the English rulers towards the Maravar.) The views of Bishop Caldwell were found to be extremely useful by the newly arisen Vellala elite which was contending for higher status in the Varna hierarchy of caste. Therefore the ‘histories’ which were written by the Dravidian school of Tamil studies at the turn of the [20th] century were underpinned by,
(a) The political and religious concerns of Caldwell and other missionaries like Henry Martyn Scudder and G.U.Pope
(b) The caste politics of Vellala upward mobility.

The interests of both were intertwined. Their express political interest was to show that Tamil culture in essence was pre-Aryan-Brahmin and non-martial. The first non-Brahmin Tamils to take up the Dravidian theory to examine theTamil past belonged to the Vellala elite and were supported and encouraged by Protestant missionaries (and sometimes by English administrators).

Continue reading
Posted in மறவர், வரலாறு | Leave a comment

Imperial Images of Colonial British about Raja of Ramnad Sethupathi,Sivagangai Raja


1895 ஆம் ஆண்டு ராமலிங்க விலாஸ் ராமநாதபுரம் அரண்மனை அரிய படம்.

Continue reading
Posted in தேவர் | Tagged , , | Leave a comment

காலின் மெக்கன்சி பிரபுவும் ஒலைகளும்

ஒரு விசுவாசமற்ற போலி ஓலைகள் பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர்களால்உண்மை என நம்பபட்ட வரலாறு.                      
                    அரசினர் கீழ்த்திசைச்சுவடிகள் நூலகம் (சென்னை)
தொண்டை மண்டல வரலாறுகள் Tondai                   Mandala Varalarukal


 இந்த கட்டுரை தொடங்கும் முன் “தென் இந்திய குலங்களும் குடிகளும்” என்ற  தலைப்பில் எட்கர் தர்ஸ்டன் “வெள்ளாளர்” என்ற தலைப்பில் சொன்ன சிலசெய்திகளும் பழமொழிகளும் உங்கள் பார்வைக்கு,தஞ்சாவூர் மாவட்ட கையேடுல்,வெள்ளாளர் பல அரசு பணிகளில் இருக்கின்றனர்.கிராம கனக்கர்களாக பலர்பணிபுரிகின்றனர்.கணக்கர் தொழிலில் இவர்களை போல் சிறந்தவர்களை பார்ப்பது அரிது.கடந்த காலங்களில் பனையோலையில் இரும்பு எழுத்தானி கொண்டு கணக்கெழுதி வைக்கும் இவர்கள் கேட்கபடும் விவரங்களை பனையோலைகளில் சுவடிகளிலிருந்தும் விளக்கு வெளிச்சத்தில் புடுத்தி படிப்பவர்கள். தாசில்தார் பல்லாக்கின் அருகே ஒடியபடி அவர்கள்சொல்வதை கேட்டு ஒலைகளில் கனக்குகளை பிழையற எழுதுபவர்கள்.

Continue reading
Posted in தேவர் | Leave a comment

ஊத்துமலை மன்னர் கண்ணப்பநாயனார் வம்சமா ?

ஊத்துமலை ஜமீனை இப்போது பலரும்  இன்னும் எத்தனையோ சாதிகளும் கிண்டலடிக்கும் ஊத்துமலை ஜமீன் தன்னை “கண்ணப்பர் குலத்தில் வந்த மருதப்ப தேவன்” என குறிப்பிட்டுள்ளாரா இல்லை கண்ணப்பர் குலத்தில் தோன்றிய முனையதரையர் முத்தரையர் என்ற பட்டம் கொண்ட திருமங்கை ஆழ்வார் குலத்தில் தோன்றியவரா என பார்ப்போம். 

எங்கள் ஊத்துமலை மன்னர் “மறவர் குல மாணிக்கம்” அவரை போலியாக வகையாடி உள்ளனர்.

Continue reading
Posted in ஊற்றுமலை ஜமீன், மறவர் | Leave a comment

மதிப்பனூர் மறவர் நடுகற்கள்

மதிப்பனூர் மறவர் நடுகற்கள்.மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்தில் உள்ள மதிப்பனூர் எனும் ஊரில் பெருமாள் கோயில் அருகில் ஆறு நடுகற்களில் ஒன்றாக இந் நடுகல்லும் உள்ளது. இவர்கள் அறுவரில் ஐவர் ஒரே ஊரினர் என்பதும், ஒருவர் பூங்கா நாட்டின் கடக்குறிச்சி எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதும் செய்தியில் தெரிகிறது. 1. ஸ்ரீ குடி 2.காட்டு நா-3.ட்டு இ-4.டை ஆற்-5.றூர் பால்7. வழுதி கு-8. ளத்து ம-9.றவன் பெற்-10. றானுக்கு.‌ என ஆவணம் 31, 2020 – பக்: 51 ல் பதிவிடப்பட்டுள்ளது. பதிவிட்ட நடுகல் படியைப் படத்தில் உள்ளது படி வாசிக்க ‘மறவன் பேரயன் பெற்றானுக்கு’ என்றுள்ளது. ( திருத்தம் மேற் கொள்ள வேண்டும்) – ஸ்ரீ குடிகாட்டு நாட்டின் இடையாற்றூரிலுள்ள வழுதிகுளத்தைச் சேர்ந்த ‘மறவன் பேரரையன் பெற்றான்’ என்பவனுக்கு மேற்கண்ட நடுகல் எழுப்பப்பெற்றுள்ளது. மீதமுள்ள ஐந்து நடுகற்களில், நாகன்நம்பி என்பவனுக்கு உடையான் பூதம் என்பவன் கல் எடுப்பித்துள்ளான், கொற்றன் ஆச்சனன் பொய்கையரையன் என்பவனுக்கு யார் கல் எழுப்பியது என்பது தெரியவில்லை. கலங்கன் காரி என்பவனுக்கு தகடனும், அரமான பெற்றான் என்பானுக்கு அப்பன் காரியும் நடுகல் எடுப்பித்துள்ளதை அறிய முடிகிறது. இவை தவிர, பூங்கா நாட்டின் கடக்குறிச்சி ஊரைச் சேர்ந்த நம்பன் உடையச்சி என்பவள் ‘சிதைக் கடன்’ ( சிதை கடன்- உடன்கட்டை ஏறுதல்) ஆற்றியதையும் கூறுகிறது.-மேற்கண்ட ஐந்து நடுகற்கள் மற்றும் சதிக்கல் 13-14 ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையாகும்.

கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.







Continue reading
Posted in தேவர் | Tagged , | Leave a comment