Category Archives: கலவரம்

“தேவர் சாதி வெறி” என்ற சொல்லாடலை பரப்பிய பத்திரிக்கைகளும் மனிதர்களும்

“நெரிக்கபட்ட குரல்வளைகள் ஓலமிடுவதில்லை” நான் கேள்விபட்ட ஒரு வாசகம்.  நெரிக்கபடாத குரல்வளைகள் தான் தான் நெரிக்கபட்டதாக பொய் ஊளையிடும். 

Posted in கலவரம், தலித், தேவர், பள்ளர், வினவு | Leave a comment

தருமபுரி கலவரம்: கட்டுக்கதைகளும் உண்மையும்

தருமபுரி கலவரம் தொடர்பில் பல கட்டுக்கதைகள் உலவுகின்றன.  1. வன்னியர்களே கலவரம் செய்தனர், 2. பாமகவினர் மட்டுமே கலவரம் செய்தனர், 3. காதல் திருமணம் ஒரு சட்டப்படியான திருமணம்தான், 4. தற்கொலை செய்துகொண்ட நாகராஜன் ஒரு குடிகாரர், அவர் கொலை செய்யப்பட்டார், – இப்படி பலக் கட்டுக்கதைகள் உலவுகின்றன. அவை உண்மையாகவும் காட்டப்படுகின்றன. இதற்கெல்லாம் பதில் … Continue reading

Posted in கலவரம் | Tagged | Leave a comment

வரலாறு வேண்டுவது சார்பற்ற தன்மையையே – முதுகுளத்தூ​ர் பயங்கரம்

எதிர்வினை மு. பழனி இராகுலதாசன், தேவகோட்டை மதிப்புரைப் பகுதியில் பழ. அதியமான் முன்னுரைச் செய்தியாகத் தந்துள்ள தகவல்கள் பொருத்தமானவை அல்ல. 1957 செப்டம்பர், 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் கூட்டிய கூட்டத்தில் தேவர் “மறவர்” சார்பாகக் கலந்துகொள்ளவில்லை. இது ஒரு சாதிக் கலவரம் என்று காட்டுவதற்காக, காங்கிரசும் காங்கிரஸ் தலைவர்களும் பெருந்தலைவர் காமராசரின் அரசாங்கமும் செய்த … Continue reading

Posted in கலவரம் | 3 Comments

பரமக்குடி கலவரம் – சாவு பற்றி…

அடிப்படை ஞானம் இல்லாமல் புலம்புவதற்கு என்றுமே முடிவில்லை தான். நமது நாட்டின் விடுதலைக்கு முன் நிலப்பிரபுத்துவ அடிப்படையில் இருந்த போது ஆண்டான் அடிமை முறை இருந்ததை யாரும் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இன்று ஜனநாயக அடிப்படையில் எல்லா மக்களுக்குமான் கல்வி, பொருளாதார, வேலைவாய்ப்புக்கள் அளிக்கப்பட்டு வருகிறது. மக்களாட்சி முறை இருக்கும் நாட்டில் இன்று யாரும் … Continue reading

Posted in கலவரம் | Tagged | 6 Comments

தமிழக அரசிற்கு வேண்டுகோள்- தமிழ்நாடு தேவரிஸ்ட்

தமிழக அரசிற்கு வேண்டுகோள்: உலகில் தேவர் திருமகனாரைப் பற்றி அறிந்த  பல்வேறு மதத்தினரும், இனத்தினரும் அவர் பெருமையை உலகெங்கும் பரப்பி பெருமை சேர்த்து வருகின்றனர். குறிப்பாக தமிழக மக்களால் போற்றிப்பாடக் கூடியவரும் , முக்குலத்து மக்களால் தெய்வமாக வணங்கக் கூடியவருமான பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பெயரை களங்கப் படுத்தும் விதமாக இணையதளங்களில் சில … Continue reading

Posted in கலவரம் | Tagged | Leave a comment

பண்டுக் கலவரம்

உசிலம்பட்டி கவணம்பட்டி பண்டுக் கலவரம் : இந்தப்பகுதியில் வாழும் பிரமலைக் கள்ளர்களின் சமூக வரலாற்றைப் பார்க்கும் பொழுது எட்டுநாடு, இருபத்தியெட்டு உபகிராமம் என்ற கள்ள நாட்டுப் பகுதியில் கள்ளர்களுக்கும் தலித்துக்களுக்கும் இடையில் ஒரு மேம்பட்ட சமூக உறவு இருந்துள்ளதற்கான அடையாளங்களை நம்மால் பார்க்க முடிகிறது. கள்ள நாட்டுப்பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் கள்ளர்கள் மற்றும் தலித்துக்களுக்கு இடையிலான … Continue reading

Posted in கலவரம் | Tagged | 2 Comments

முதுகுளத்தூர் கலவரம் (1957) – 1

முதுகுளத்தூர் தாலுகாவில், 1957-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பல்வேறு கிராமங்களில் காங்கிரஸ் கட்சிக்கும், பார்வர்ட் பிளாக் கட்சிக்கும் பகைமை உணர்ச்சி காரணமாக, பல வேண்டாத செயல்கள் நடைபெற்றன. கலவர சூழ்நிலை ஏற்பட போகும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதைக் கட்டுபடுத்தி, சுமுக நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று, அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டி.எஸ். சசிவர்ணத் … Continue reading

Posted in கலவரம் | Tagged | 2 Comments

முதுகுளத்தூர் கலவரம் (1957) – 2

மதுரை சிறையில் அடைக்கப்பட்ட தேவர் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்கள் பின்வருமாறு : – உ . முத்துராமலிங்கத் தேவர் எம்.பி. கடந்த பல வருடங்களாக ஆட்சேபகரமான பிரசங்கங்கள் மூலமும் வகுப்பு உணர்ச்சியை கிளறி வருவதோடு, மக்களைப் பலாத்கார சம்பவங்களுக்குத் துண்டி விட்டு வந்திருக்கிறார். கீழே கண்ட சம்பவங்கள் அதற்கான ஆதாரங்களாகும் 1. 12-5-1956-ல் மதுரையில் … Continue reading

Posted in கலவரம் | Tagged | 2 Comments

முதுகுளத்தூர் கலவரம் (1957) – 3

சி.எம்.பணிக்கர், அடிசனல் ஜில்லா மாஜிஸ்திரேட், இராமநாதபுரம் ஜில்லா; தேவர் மீது சர்க்கார் சாட்டிய மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு தேவர், சென்னை சர்க்கார் நியமித்த அட்வைசரி போர்டு முன் அளித்த பதிலைப் பின்வரும் பக்கங்களில் விரிவாகக் காண்போம். நான் எனது பகிரங்க சொற்பொழிவுகளாலும், என்னைப் பின்பற்றுவோர் மூலம் இரகசிய ஏற்பாடுகளாலும் வகுப்புணர்ச்சியைத் தூண்டி விட்டு, பலாத்காரச் செயல்களுக்கு வழி … Continue reading

Posted in கலவரம் | Tagged | Comments Off on முதுகுளத்தூர் கலவரம் (1957) – 3

முதுகுளத்தூர் கலவரம் (1957) – 4

(4) பின்னர் இமானுவேல் கொலை வழக்கில் முதல் எதிரியாகத் தேவரைச் சேர்த்து, சென்னைச் சிறையிலிருந்து புதுக்கோட்டை சிறைக்கு மாற்றிக் காவலில் வைத்தனர். இமானுவேல் கொலை வழக்கு விசாரணைக்கு கீழ்க்கோட்டும் மேல் கோர்ட்டும் விசேஷக் கோர்ட்டுகளாக அமைக்கப்பட்டு புதுக்கோட்டையிலேயே விசாரணை நடைபெற்று வந்தது. தமிழ்நாடெங்கும், தேவரை விடுதலை செய்யக்கோரி ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடந்தன. மக்களிடையே வெகுஜன எழுச்சி … Continue reading

Posted in கலவரம் | Tagged | Leave a comment