Category Archives: பாண்டியன்

பாண்டியர் நாட்டினில் கரையார் என்று அழைக்கபட்டவர்கள் யார்?

பிற்க்கால பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட நாடுகள் தென்கரை வடகரை என்றழைக்கபட்டது இந் நாடுகளை மா மறவ மாறன் வம்சத்தினர்களே பாண்டியர்களாக ஆட்சிசெய்தனர். (கரிவலம்சூழ்ந்தநல்லூர் கருவை பாண்டியத்தின் வடகரை நாடுகளை ஆட்சிசெய்த வலங்கைபுலி மாறன் சின்னணஞ்சித்தேவன் வலங்கை புலி மாறன் வெள்ளையத்தேவன் வம்சத்தவர்களான கொண்டையன் கோட்டை மறவர்கள் வட கரையார் என்றும்

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

வெட்டும் பெருமாள் பாண்டிய மறவனின் தளபதிகளான கொண்டையங்கோட்டை மறவர்கள்

(கயத்தாறு இளவேலங்கால் நடுகல் கல்வெட்டு) பதிற்றுபத்து: “ஓடாப்பூட்கை ஒண்பொறிக் கழற்கால் பெருஞ் சமம் ததைந்த செருப்புகல் மறவர் உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்து. பெருஞ்சோறு உகந்தற்கு, எறியும் கடுஞ் சினவேந்தே! நின் தழங்கு குரல் முரசே, பொருள்: பகைவர்க்குப் புறங்கொடுத்து ஒடாத கொள்கையினை தாங்கள் செய்த அரிய வீரச் செயல்கள் பொறிக்கப்பட்ட வீரக் … Continue reading

Posted in தேவர், தேவர்கள், பாண்டியன், மறவர் | Tagged | Leave a comment

தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்திய மறமாணிக்கர் பெருவஞ்சி

பகை வேந்தருக்கு உரிமையான நாட்டகத்தே புகுந்து மண்ணினைக் கைக்கொள்ள முயல் கின்ற செயல் வஞ்சி படலம் எண்கினறது.பிறரது நாட்டை அடிமைப்படுத்த தம் நாட்டை காக்க உறுதிமிக்க மறவர்கள் ஆற்றும் செயலே வஞ்சியாகும்.இதில் பெருவஞ்சி,கொற்றவள்ளை,மாராயவஞ்சி,மழபுழவஞ்சி,கொடிவஞ்சி,..என பல வஞ்சிகள் உள்ளன.  பெருவஞ்சி: “முன் அடையார் வளநாட்டை பின்னருமுடன்று எரிகொளீ இயன்று”(புறப்பொருள் வென்பாமாலை:21) பகை மன்னரது வலிகுறைந்த போயின நிலையிலும்,தன் … Continue reading

Posted in தேவர், தேவர்கள், பாண்டியன், மறவர் | Tagged , , | Leave a comment

திருவாடானை பாண்டியர்கள்

                                      (அஞ்சுகொத்து மறவர்கள்) உ.மீனாட்ச்சி துனை “காரார் குழலி பவள செவ்வாய்ச்சி கயல்விழிச்சி,மாறாத காலம் தானை சாய்தவள் திரிசூலி மீனாள் பாரேழ் பலசேர் மறமன்னர் போற்றும் பைரவி யாழ்”-கொற்றவை மீனாட்சி “மறப்போர் … Continue reading

Posted in தேவர், தேவர்கள், பாண்டியன், மறவர் | Tagged | 1 Comment

மதுரையை ஆண்ட பாண்டியர்கள் எங்கிருந்து வந்தனர்?

மதுரையை ஏன் தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தனர் என்பதை பார்ப்போம். பாண்டியர்கள் முதலில் ஆட்சி செய்த இடம் கொற்கை. லெமூரியா கண்டத்தின் நடுவே பழம் பாண்டியர்களின் கொற்கை அமைந்திருந்தது. அவர்களின் வாழ்விற்கும், செழிப்புக்கும் காரணமாக கொற்கை துறைமுகம் இருந்தது. கடல் வாணிபத்தால் இத்துறைமுகம் புகழ் பெற்றது. கடல் த…ங்களை வாழவைக்கும் கடவுளாக பாண்டியர்கள் கருதியதால், சின்னமாக … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

வழுதி (பாண்டியர்)

வழுதி என்பது பாண்டியரின் குடிப்பெயர்களில் ஒன்று. இயல்தேர் வழுதி என்று வடபுல மன்னர் வாடப் போருக்கு எழுந்த பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியும்  தகைமாண் வழுதி என்று பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனும்  போற்றப்படுகின்றனர். கூடல் , மருங்கை , கொற்கை ஆகிய இடங்களில் இருந்துகொண்டு வழுதி அரசர்கள் ஆண்டுவந்தனர். வழுதி பல கோட்டைகளை … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

பஞ்சவர்

பஞ்சவர் என்னும் சொல் பாண்டியரை உணர்த்தும். இப்பெயரில் இலங்கையை பொதுக்காலத்திற்கு சற்று முன்னர் ஆண்ட ஐந்து பாண்டியர்களும் குறிக்கப்படுகின்றனர். சங்ககாலத்திலும் பிற்காலத்திலும் பாண்டியரை பஞ்சவர் என்னும் பெயருடன் அழைப்பது மரபாகவே ஆனது. சங்ககாலக் குறிப்புகள் : சிலப்பதிகாரத்தில் வரும் நெடுஞ்செழியனை வாயில்காவலன் ‘பழியொடு படராப் பஞ்சவ வாழி’ என்று வாழ்த்தி விளிக்கிறான். பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

கவுரியர்

கவுரியர் என்னும் சொல் பாண்டியரைக் குறிக்கும். கவவு என்னும் உரிச்சொல்லுக்கு அகத்திடுதல் என்பது பொருள். இந்த உரிச்சொல் கவர் என்னும் வினைச்சொல்லாக மாறி, கடல்கோளுக்குப் பின்னர் புதிய நிலப்பகுதியைக் கவவு செய்துகொண்ட (தனதாக்கிக்கொண்ட) அரசர்குடி கவுரியர் எனப்பட்டது. இராமன் இலங்கை வெற்றிக்குப் பின் ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு மறை ஓதி வழிபட்ட கோடி (தனுஷ்கோடி) கவுரியர் எனப் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

தென்னவன்

தென்னர், தென்னன், தென்னவர், தென்னவன், தென்னம் பொருப்பன், தென்னவன் மறவன், தென்பரதவர் போன்ற தொடர்கள் சங்கத்தொகை நூல்களில் தென்னாடு எனப்பட்ட பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டியரைக் குறிப்பனவாகவும், அவரோடு தொடர்புடைய மக்களைக் குறிப்பனவாகவும் அமைந்துள்ளன. பாண்டிய மன்னர்கள் செழியன், சேய், பஞ்சவன், மாறன், வழுதி என்னும் பெயர்களாலும் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். ‘தென்’ என்னும் சொல் தென்-திசையைக் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பாண்டிய மன்னர் நாணயம் கண்டுபிடிப்பு

சங்க காலப் பாண்டிய மன்னன் “செழியன்’ நாணயத்தை தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின் தலைவரும், “தினமலர்’ நாளிதழின் ஆசிரியருமான இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடித்துள்ளார். அந்த நாணயத்தைக் கண்டறிந்தது தொடர்பாகவும், அதன் சிறப்பு குறித்தும் கிருஷ்ணமூர்த்தி கூறியது: திருநெல்வேலி கீழ ரத வீதியில் உள்ள பாத்திரக் கடையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பழைய நாணயங்கள் வாங்கினேன். அந்த நாணயங்களை ஆய்வு … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | 1 Comment