Monthly Archives: February 2011

13ம் நூற்றாண்டு கொங்குசோழர் கல்வெட்டு:பழநி கோவில் தூணில் கண்டுபிடிப்பு

பழநி:கடந்த 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குசோழ கல்வெட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோவில் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:பழநி பெரியநாயகியம்மன் கோவில் அருகே உள்ள விநாயகர் கோவிலில், தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோவில் முன் மண்டப தென்புறத் தூணின் வட பகுதியில், வழக்கில் உள்ள தமிழ்மொழியின் முன்னோடி வடிவத்தில் 20 வரிகளைக் கொண்ட கல்வெட்டு … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

கீழமங்கலம் கல்வெட்டு

இடம்: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டத்திலுள்ள ஓசனூத்திலிருந்து பசுவந்தனை செல்லும் சாலையிலுள்ள கீழமங்கலத்தின் வடபுறத்தில், தொடக்கப் பள்ளிக்கு அருகிலுள்ள கிணற்றங்கரையில் உள்ள கல்வெட்டுத் தூண். காலம்: கி.பி. 1162 முதல் கி.பி. 1177 வரை திருநெல்வேலி, கன்னியாகுமரிப் பகுதிகளை ஆண்ட சடையவர்மன் குலசேகர பாண்டியராகலாம். செய்தி: முதுகுடி நாட்டு மங்கலமான உத்தமபாண்டியநல்லூரில் முதுகுடி நாட்டீச்சுவரமுடைய நாயனார் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

ராஜராஜ சோழனின் பாட்டி வீடு திருக்கோவிலூர் :கல்வெட்டு ஆதாரம் கண்டுபிடிப்பு

ராஜராஜ சோழனின் பாட்டி ஊரான, திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் கருவறையில், ராஜராஜன் இக்கோவிலுக்கு தானமாக வழங்கிய பொருட்கள், அவரது தாயின் வீரம் குறித்த அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவில் இக்கல்வெட்டு இடம்பெற உள்ளது. ஆன்மிகம், கலை, இலக்கியம், வீரம் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியவன் … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

மூன்றாம் இராசேந்திர சோழன் கல்வெட்டு

இக்கல்வெட்டுக் கிரந்தஎழுத்தில் உள்ளது. எனவே இதன்பொருள்மட்டும் இங்கே கொடுக்கப்படுகின்றது. “எல்லா உலகத்திற்கும் ஒப்பற்ற வீரனும், வாட் போரில் வன்மை மிக்கவனும், வீர ராக்ஷஸன் எனப் போற்றப்படுபவனும், லங்காராம என்னும் பெயருடையானும், மநுகுலத்தை உயர்த்தியவனும், அஞ்சத்தக்கப் போர்க்களத்தில் பகைவர்க்குச் சூறாவளியும், சோழர் குடிக்கு நேரும் தாழ்வினைத் தவிர்க்கும் தனி வீரனும், மூன்று ஆண்டுகள்… தரித்த முடிகளை யுடையவனும், … Continue reading

Posted in சோழன் | Tagged | 1 Comment

சோழர் கால வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது

கரூர்  அருகே, சோழர் கால வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் கழக உறுப்பினர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:உத்தம சோழன் ஆட்சி, 975 யுவ ஆண்டு, 31ம் தேதி எழுதப்பட்ட வட்டெழுந்து கல்வெட்டு, கரூர் அருகே சணப்பிரட்டியில் கண்டெடுக்கப்பட்டது.

Posted in சோழன் | Tagged | Leave a comment

உடையார்குடிக் கல்வெட்டு

தமிழக வரலாற்றில் குறிப்பாக சோழர் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக விளங்குவது உடையார்குடி கல்வெட்டாகும். தற்போதைய கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியின் ஒரு பகுதியாக விளங்கும் உடையார்குடி அனந்தீசுவரம் சிவாலயத்தில் கருவறையின் மேற்குப்புற அதிட்டானத்தில் இச்சாசனம் இடம்பெற்றுத் திகழ்கின்றது. கோஇராஜகேசரிவர்மரின் (முதலாம் இராஜராஜ சோழனின்) இரண்டாம் ஆட்சியாண்டு குறிக்கப் பெற்றுள்ள இச்சாசனத்தினை எபிக்கிராபிகா இண்டிகா தொகுதி 21இல் … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

திருவண்ணாமலை கல்வெட்டு

பதிவுசெய்யப்பெற்ற மொத்தக் கல்வெட்டுக்கள் 119. இவைகளில் பெரும்பாலன சோழர்காலத்தன. திருவிளக்கேற்றல், திருமஞ்சனம், திருநந்தனவனம், திருவமுது, திருவெழுச்சி, அடியார்க்கு அமுதளித்தல் முதலிய பல அறங்களுக்காக நிலம், பொன், கால்நடை முதலியனவற்றை அளித்தமையை அறிவிக்கின்றன. பாண்டியர், பல்லவர், ஹொய்சளமன்னரான வீரவல்லாளதேவர், விஜயநகரத்து ராயர், தஞ்சாவூர் நாயக்கர் மற்றும் வணிகர், வேளாளர் முதலியவர்கள் கல்வெட்டுக்களும் காணக்கிடக்கின்றன.

Posted in சோழன் | Tagged | Leave a comment

கல்வெட்டு : கங்கைகொண்ட சோழேச்சரம்

பிற்காலச் சோழர்களில் விசயாலயன் காலம் முதல், முதலாம் இராஜராஜன் காலம் முடிய (கி.பி. 846 – 1014) பத்துத் தலைமுறகைளாகத் தஞ்சாவூர் சோழமன்னர்களின் தலைநகரமாய்த் திகழ்ந்திருந்தது. இத்தஞ்சாவூர் பாண்டி நாட்டின் எல்லகைகு அருகில் இருந்தமையால், தலைநகரம் பாண்டியர்களால் அடிக்கடித் தாக்கப்படும் என்ற காரணம் பற்றியும், அக்காலம் மாதம் மும்மாரிபெய்து கொள்ளிடப்பேராறு வெள்ளப்பெருக்கெடுத்து ஓடினமையால் முதலாம் இராஜேந்திர … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

பாண்டியன் சபையில் கண்ணகி

கண்ணகி தனது காற்சிலம்பில் உள்ளது மாணிக்கப் பரல்கள் என்றும் அதையே பாண்டியன் சபையில் ஆதாரமாகவும் காட்டுகிறாள். அரசியின் சிலம்பில் முத்துப் பரல்கள்தான் இருக்கிறது மாணிக்கப் பரல்கள் இருக்காது என்று, எந்த நம்பிக்கையில் கண்ணகி வாதாடினாள்?

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

தமிழ்ச் சங்கங்களின் வரலாறு

நான்கு தமிழ்ச் சங்கங்கள்: பாண்டிய மன்னர்கள் தமிழ் மொழியின் மீது கொண்ட அன்பின் மிகுதியாலும், ஆழ்ந்த பற்றுதலாலும் தங்கள் தலைநகரங்களில் சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்தார்கள் என்று பல இலக்கியச் சான்றுகளின் வாயிலாகவும், செப்பேடுகளின் வாயிலாகவும், மன்னர்களின் கல்வெட்டுகள் வாயிலாகவும் நாம் அறிகின்றோம். முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகிய முப்பெரும் தமிழ்ச்சங்கங்கள் அழிந்து போன … Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment