Daily Archives: 10/01/2011

அருள்மிகு ராமநாத சுவாமி

வரலாற்று சிறப்பு மிக்க இத்திருத்தலம்  பனிரெண்டாம் நூற்றாண்டு   வரை ஒரு துறவியின்  பராமரிப்பில் இருந்து வந்ததாகவும் ,அதன் பின் கி.பி பன்னிரெண்டாம் நூற்றாண்டில்   இலங்கை அரசர் பராக்கிராமபாகு என்பவர் இத்திருகோயில் மூலஸ்தானத்தை ( கர்ப்பக்கிரகம்   ) கட்டியும் , பதினைந்தாம் நூற்றாண்டில்  ராமநாதபுரம் அரசர் உடையான் சேதுபதி மற்றும் நாகூரை சேர்ந்த … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment

மாவீரன் பூலித்தேவன்-2

முதன் முதலில் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனோ அல்ல! ஜான்சிராணி லக்குமிபாயோ அல்ல!! சிப்பாய் கலகமும் அல்ல!!! தென்னகத்து பூலித்தேவன் தான். ஏனோ வராலாறுகள் தமிழர்களை மூடிட்டு வைத்து மறைக்கின்றன.இவரை மட்டும் அல்ல முக்குலத்தோரையே அப்படித்தான் செய்கிறது. மாவீரன் பூலித்தேவன் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன். தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையில் தோன்றி தன்னிகரற்றுத் … Continue reading

Posted in பூலித்தேவன் | Tagged | Leave a comment

மருது பாண்டியர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சி

மருதிருவர் பெற்ற சாபம் சித்தபுருஷர் நாராயண யோகீஸ்வரர் சிவகங்கை அருகே உள்ள ஒர் சிற்றூர் காளையார்கோவில். பாண்டி நாட்டு சிவத்தலங்களுள் ஒன்று. மேலும் 18ம் நூற்றாண்டு ஆங்கிலேய எதிர்ப்புப் புரட்சிகளுக்கு மையமாக அமைந்த ஊர். சிவன் கோவிலில் 3 சிவலிங்கங்கள் உண்டு. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இவ்வூர் திருக்கானப்பேர் என அறியப்ப்டும் சிறப்பைத் தன்னகத்தே கொண்டிருந்தது. … Continue reading

Posted in மருது பாண்டியர்கள் | Tagged | Leave a comment

மூக்கறுப்புப் போர் -2

மனித ஜாதியில் ஆணோ, பெண்ணோ முக அழகு மூக்காலேதான். அழகி கிளியோபாட்ராவின் மூக்கழகு சரித்திர பிரசித்தி. அவளுடைய மூக்கழகுக்கு முதலில் மயங்கியவன் சீசர். அடுத்து அந்தோனி. யோசித்துப் பார்த்தால் மூக்கறுத்த கதைதான் இராமாயணம். ஆண்களில் கும்பகர்ணன் மூக்கிழந்தான். பெண்களில் சூர்ப்பனகை . இவர்கள் நிசமாகவே மூக்கிழந்தவர்கள். சீதையைத் தூக்கிக்கொண்டுபோக வந்தாள் சூர்ப்பனகை. பெண் கொலை கூடாது … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment

சேதுபதி மண்டபத்தின் பின்னணி ?

மைசூர் மன்னர் மதுரை மீது சில நூற்றாண்டுகளுக்கு முன் படையெடுத்தார். தல்லாகுளம் பகுதியில் போர் நடந்தது.  இதில் மைசூர் மன்னரின் படைவீரர்கள் பலர் பலியாகி தோற்றனர். எஞ்சிய மைசூர் நாட்டு சிப்பாய்களின் மூக்குகள் அறுக்கப்பட்டன. இதனால் அது மூக்கறுப்பு போர் என்றழைக்கப்பட்டது. இதன் வெற்றியை கொண்டாடும் வகையில் தற்போதுள்ள தமுக்கம் அருகே மண்டபம் ஒன்று கட்டப்பட்டது.

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment

வரலாற்றுப் பெருமிதம் கொண்ட திருமயம் கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பன்னூறு ஆண்டுகால வரலாற்றுச் சின்னமாகத் திகழ்கிறது, திருமயம் கோட்டை.  ராமநாதபுரம் சேதுபதி மன்னர் கிழவன் சேதுபதியின் காலத்தில் 1676-ல் இக்கோட்டை கட்டப்பட்டது. இலக்கியங்களும் கட்டடக்கலை நூல்களும் வரையறுத்த இலக்கணத்துடன் அமைந்தது இக்கோட்டை. கோட்டையைச் சுற்றி முன்னர் ஏழு சுற்று மதில்கள் இருந்தன. கோட்டை வட்டவடிவில் அமைந்துள்ளது. கோட்டையின் வெளிச் சுவற்றைச் சுற்றி முதலைகளும், … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment

சிவகங்கைச் சீமையின் வீரமங்கையர்

எழுதியவர்: கீதா ரவீந்திரன் சிவகங்கை நகரம் தனது பெயரை இழந்து உசேன் நகர் என்ற பெயர் தாங்கி, பெருமை இழந்து கிடந்தது.  இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சிவகங்கை ராணி வேலுநாச்சியாரின் வீரப்படை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு போர்முரசு கொட்டிப் புறப்பட்டது.  சுதந்திர தாகம் கொண்ட அந்தப் படையின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் கோச்சடை மல்லாரிராயன், … Continue reading

Posted in வேலு நாச்சியார் | Tagged | Leave a comment

சேதுபதியின் வீரம்

மேற்கே மலைப்பகுதிகளில் இடையறாது அடைமழை பெய்ததால் நீர்ப்பெருக்கு அதிகமாகி சிக்க தேவராயன் காவிரியின் குறுக்கே எடுத்திருந்த அணை தானே நலிந்து நகர்ந்து போய்விட்டது. அப்போதிருந்த பயங்கரமான வெள்ளப் பெருக்கில் சிக்க தேவராயன் மறுபடி காவிரியை வழிமறித்து நிறுத்தலாம் என்று நினைக்கக்கூட முடியவில்லை. காவிரி மீண்டும் தன் இஷ்டப்படி ஓடினாள். திரிசிரபுரம் தஞ்சைப் பகுதிகளில் காவிரியில் வெள்ளம் … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment

மறவர் கதைப்பாடல்கள்

ஆசிரியர்:முனைவர் மு.ஞானத்தாய் வெளியீடு:காவ்யா பதிப்பகம் காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-600 024. இனவரைவியல் ஆய்வு நூல் இது. திருநெல்வேலி மாவட்ட மறவர் இனக் கதைப்பாடல்கள் பற்றியது. முக்குலத்தோரில் கள்ளர், அகமுடையார் குறித்துப் பொதுவாகவும், மறவர் பற்றிச் சிறப்பாகவும் “மறவரின் வரலாறும் வாழ்வும்’ என்னும் முதல் இயல் பேசுகிறது. கள்ளர் சோழர் … Continue reading

Posted in மறவர் | Tagged | 1 Comment

அச்சுத களப்பாளன்

அச்சுத களப்பாளான் களப்பாளர் என்பது கள்ளர் குலத்தின் பட்டபெயர்களில் ஒன்றாகும். கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கும், ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில்தமிழகத்தின் மத்திய பகுதியில் களப்பிரர் ஆட்சி செய்தனர். அவர்களுள் ஒருவனேஅச்சுத களப்பாளன். இவன் காலம் கி.பி நூற்றாண்டின் தொடக்கம் ஆகும். வலிமை பொருந்திய இவ்வரசன், போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனதுநாட்டின் எல்லையை விரிவடையச் செய்தான். யாப்பருங்கல விருத்தி … Continue reading

Posted in சோழன் | Tagged | 2 Comments