முதுகுளத்தூர் கலவரம் (1957) – 1

முதுகுளத்தூர் தாலுகாவில், 1957-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பல்வேறு கிராமங்களில் காங்கிரஸ் கட்சிக்கும், பார்வர்ட் பிளாக் கட்சிக்கும் பகைமை உணர்ச்சி காரணமாக, பல வேண்டாத செயல்கள் நடைபெற்றன. கலவர சூழ்நிலை ஏற்பட போகும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதைக் கட்டுபடுத்தி, சுமுக நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று, அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டி.எஸ். சசிவர்ணத் தேவர் ஜில்லா அதிகாரிகளிடம் முறையிட்டார்.

அதையொட்டி இருதரப்பினரிடையே ஒரு சுமூக நிலையை ஏற்படுத்தி, வேண்டாத விளைவுகளைத் தடுக்கும் நோக்கத்தில், ஜில்லா கலெக்டர் இ.வி.ஆர்.பணிக்கர் ஒரு சமாதான மாநாட்டுக்கு ஏற்பா செய்தார். அந்த மாநாடு 1957 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி முதுகுளத்துhர் தாலுகா ஆபிசில் நடைபெற்றது.அந்த மாநாட்டில் தென் மண்டல போலிஸ் ஐ.ஜி. ராமநாதபுரம் ஜில்லா எஸ்.பி., டி. எஸ்.பி., ட்யூட்டி சூப்ரெண்ட், ஆ.டிஒ. ஆகியோர் அதிகாரிகள் தரப்பிலும், ஸ்ரீவில்லிபுத்துhர் பார்லிமெண்ட் உறுப்பினர் உ. முத்துராமலிங்கத்தேவர், சட்டசபை உறுப்பினர்கள் டி. எஸ். சசிவர்ணத் தேவர், சிவகங்கை டி. சுப்பிரமணிய ராஜா, அருப்புக்கோட்டை எம்.டி.ராமாசாமி, திருவாடனை கே.ஆர். எம். கரியமாணிக்கம், ஜில்லா போர்டு உறுப்பினர்கள் பா.ரா. நவசக்தி, டி. முத்துசாமித் தேவர் ஆகியோர் பார்வர்ட் பிளாக் கட்சி தரப்பிலும் -கமுதி பஞ்சாயத் போர்டு தலைவர் சௌந்திரபாண்டி நாடார், பேரையூர் வி.எம்.எஸ். வேலுசாமி நாடார், முதுகுளத்தூர் அருணகிரி, இராமநாதபுரம் சேதுபதி சகோதரர்கள் காசிநாத துரை, சிதம்பர நாத துரை ஆகியோர் காங்கிரஸ் கட்சி தரப்பிலும்,சாத்தையா, பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த இமானுவேல், பேரையூர் பீட்டர் ஆகியோர் அரிஜனத் தரப்பிலும் கலந்து கொண்டனர்.கம்யூனிஸ்ட் கட்சி அனுமதி கேட்டும் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.

கலெக்டர் தலைமை வகித்தார். முதலில் பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர்களைத் தனி அறைக்கு அழைத்து, அவர்கள் கூறிய விளக்கங்களைக் கேட்டுக் கொண்டார். பிறகு காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளையும், அரிஜனப் பிரதிநிதிகளையும் அழைத்து விவரங்களைக் கேட்டார்.பின்னர் பொதுவான நிலையில் எல்லாத் தரப்பினர் முன்னிலையிலும் விவாதிக்கப்பட்டது.

மாநாட்டை ஆரம்பித்து வைக்க கலெக்டர் இ.வி.ஆர்.பணிக்கர் பேசியதாவது :” இந்தத் தாலுகாவில் இருதரப்பினரின் வேறுபாட்டால் நடந்து வரும் நிகழ்ச்சிகளை எல்லோரும் அறிவீர்கள்.
மறவர்கள், நாடார்கள், அரிஜனங்கள் இதர வகுப்பினர் அனைவரும் கடந்த கால சம்பவங்களை மறந்து, எல்லோரும் ஓரினம் என்ற மனோபாவங்கொண்டு ஐக்கியமாக வாழ வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.”
“இந்த ஜில்லாவின் தலைமை அதிகாரி என்ற முறையில் இவ்வட்டாரத்தில் அமைதி நிலவச் செய்யவும், எல்லோரையும் வேறுபடின்றி வாழ்விக்கச் செய்யவும். எனக்குள்ள கடமையை உங்கள் முன் எடுத்துக் காட்டுகிறேன்.” “எந்த வகுப்பாரும் சட்டத்திற்குப் புறம்பில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பதோடு, தங்கள் குறைகளைச் சட்டபர்வமான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும். அனைவரும் சட்டத்தையும் ஒழுங்கையும், மதித்துச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று ஜில்லா கலெக்டர் பேசி முடித்தார்.

பின்னர், உ. முத்துராமலிங்கத்தேவர் எம்.பி. பேசியதாவது : “இத்தாலுகாவின் மறவர்களுக்குச் சொந்தமான ஆடு, மாடு போன்ற உடைமைகள் ஆயிதங்களால் பயமுறுத்தி அபகரிக்கப்படுவதற்கு அரிஜனங்களைத் தூண்டி விட்டு உற்சாக மூட்டுவதற்கான முழுப்பொறுப்பும் காங்கிரசையே சேரும். மறவர்கள், யாதவர்கள், சேர்வைக்காரர்கள், நாயுடு இனத்தார் ஆகியோரை காங்கிரஸ்காரர்களால் தூண்டி விடப்பட்ட அரிஜனங்கள் பலவந்தமான முறையில் பெண்களை அலைகழிப்பது போன்ற பல இன்னல்களுக்கு இலக்காகி வருகிறார்கள். இச் செயல்களால் அச்சமும் அதிர்ச்சியும் கொண்ட மேற்குறித்த இன மக்கள், தங்கள் பூர்வீக கிராமங்களிலிருந்து பாதுகாப்பிற்காக, பக்கத்துக் கிராமங்களுக்கு, வீடு, வாசல், உடமைகளையெல்லாம் அப்படி அப்படியே விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள். இதனால் அவர்களது விவசாயமும் கெட்டு, வாழ்க்கை நிலையும் சீரழிந்து விட்டது. இது போன்ற சட்டவிரோத செயல்களால், இதுவரை கிட்டதட்ட நுhறு குடும்பங்களுக்கு மேல் மிகவும் படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கொடுமைகளுக்கு இலக்கானவர்கள் போலிசில் புகார் செய்தும் புண்ணியம் இல்லை. இதுவரை எத்தனையோ புகார்கள் செய்யப்பட்டதில் போலிஸ் தரப்பிலிருந்து எவ்விதப் பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை”.
“அதற்குப் பதிலாக, காங்கிரசைச் சேர்ந்த அரிஜனங்கள், நாடார்கள் பக்கமே சாதகமாக இருந்து வருவதாகத் தெரிகிறது. இந்தக் கட்டத்தில் மற்றொரு சம்பவத்தை இக்கூட்டத்தில் கலெக்டர் அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.” சமீபத்தில் பேரையூர் என்ற கிராமத்தில் வெடி விபத்துச் சம்பவம் ஒன்று நடைபெற்து. அதில் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த மூக்க நாடார் என்பவர் எதிர்பாராத விதமாக இறந்து விட்டதாகக் கூறி, அதன் உண்மை அப்படியே அமுக்கப்பட்டுவிட்டது. பயங்கரமான அந்த வெடி விபத்தில் செத்தது மூக்க நாடார் மட்டுமல்ல, மேலும் சிலர் செத்திருப்பதாகத் தெரிகிறது. அப்பயங்கர வெடிகள், அரசாங்க லைசென்ஸ் இன்றி தயாரிக்கப்பட்டவை. அத்தனையும் மூடி மறைக்கப்பட்டு விட்டது.” ஆனால், இம்மாதிரி சம்பவத்தில் மறவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால், நடவடிக்கைகளை வேறு வழியில் திருப்பி, கடுமையாக்கி, பிரமாதமாக பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கும். கை வெடிகுண்டுகள் செய்வதில் தேர்ச்சி பெற்ற மூக்க நாடாரை, அருப்புக் கோட்டையில் இருந்து பேரையூருக்குக் கூட்டி வந்து, காங்கிரஸ் தரப்பினர் வெடிகள் தயாரிக்கச் செய்ததன் நோக்கம் பட்டவர்த்தனமானதாகும். இதோடு காங்கிரஸ் தரப்பினர்களில், ஒரு பாவமும் அறியாத அரிஜனங்கள் கலவரங்களுக்குத் தயார் செய்யப்படுகிறார்கள். இது தவிர, ராமநாதபுரம் ஜில்லா போலிசுக்குச் சொந்தமான மோட்டார் லாரி ஒன்றின் மூலம் மூங்கில் கம்புகளும் தடிகளும் கடலாடிக்கு அருகே உள்ள காவக்குளம் கிராமத்தில் உள்ள அரிஜனங்களுக்கும் காங்கிரஸ் தரப்பினர்களுக்கம் விநியேகிக்கப்பட்டு இருப்பதை கலெக்டர் அவர்களின் கவனத்திற்கும் போலிஸ் அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன். மேலும் பலவித ஆயுதங்களும் வேறு ஊர்களில் இருந்து விநியோகிக்கப்படுகின்றன. உணவுப் பொருள்கள் அரிஜனங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதெல்லாம் அரசாங்க விநியோகம் என்று பகிரங்கமாகவே கூறுகிறார்களாம் இதனால், அரிஜனங்கள், காரணமின்றி மறவர்களை இழுத்துத் தாக்க வசதிப்படுகிறது. அதே சமயம் அரிஜனங்களுக்கு மட்டும் பாதுகாப்பு அளிக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது என்ற தெம்பு ஒரு தரப்பில் ஏற்படுகிறது.” “காங்கிரஸ் தரப்பினர்களும், போலிஸ் தரப்பினரில் சிலரும் அரிஜன வாலிபர்களை ஏவி விட்டு, தாழ்த்தப்பட்டோருக்குச் சம உரிமை என்ற அடிப்படையில், கிராமப் பொது கிணறுகளில் தண்ணீர் மொள்ளச் செல்லும் மறவர் குலப் பெண்கள் அவமானப்படும்படியான முறையில் செய்ய வைப்பதால், இந்தப் பிராந்தியத்தில் உள்ள மறவர்கள் மிக மிக மனம் நொந்து சட்டத்திற்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள்” என்று தேவர் கூறி முடித்தார்.

காங்கிரஸ் தரப்பு நாடார்கள் சார்பில், பேரையூர் வி.எம்.எஸ். வேலுக்காமி நாடார், “மறவர்கள், நாடார்களுக்கு எதிராகப் பொது நிதி திரட்டி வருகிறார்கள். நாடார் கடைக்ளில் சாமான்கள் வாங்க விடாமல், மறவர்களை மறியல் செயயச் சொல்லி வற்புறுத்துகிறார்கள் என்று கூறினார். இதை மறுத்து தேவர், “இந்தப் புகார் உண்மை அல்ல, குறிப்பிட்ட கிராம மக்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு இருக்கிறது. அவ்வழக்கை நடத்துவதற்காக அக்கிராம மக்கள் தங்களுக்குள் பொதுநிதி வசூலித்தார்கள். இது தவிர, நாடார் கடைகளில் சாமான் வாங்கக் கூடாது என்று மறவர்களால் கட்டுப்பாடு செய்யப்பட்டதாகவோ, மறியல் செய்யப்பட்டதாகவோ ஏதேனும் புகார் இருந்தால், உடனே அதை மாற்றுவதற்கான ஏற்பாட்டை நானே செய்து, அந்த மறியலைத் தடுக்கிறேன். ஏதேனும் அம்மாதிர் புகார் உண்டா? என்று கலெக்டர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். என்று கூறினார்.

“அம்மாதிரி மறவர்கள் மீது எவ்விதப் புகாரும் இல்லை. நாடார்கள் தரப்பு புகாருக்கு ஆதரவான வகையில் ஒன்றும் பதிவாகவுமில்லை என்று கலெக்டர் கூறினார்.

பிறகு அரிஜன தரப்பில் கலந்து கொண்ட பேரையூர் பீட்டரும், பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த இமானுவேலுவும் பேசியதாவது :”அரிஜனங்களின் முன்னேற்றத்திற்கு எதிராக மறவர்கள் இயங்கி வருகிறர். இதர ஜாதி இந்துக்கள் மாதிரி அரிஜனங்கள் புது உடை தரித்து, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை மறவர்கள் விரும்புவதில்லை என்று கூறினார்.

அவர்களின் கூற்றுக்குப் பதில் அளிக்கும் முறையில் தேவர் கூறியதாவது : அரிஜன முன்னேற்றத்தில் எல்லோரையும் விட அதிக அக்கறை கொண்டவன் நான். ஜாதி பேதத்தை ஒழித்துக் கட்ட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்ட சிலரில் நான் முதன்மையானவன். ஜாதி, பேதத்தை ஒழிப்பதற்காக 1932-ஆம் ஆண்டில் ஒரு அரிஜனது வீட்டில் போய்ச் சாப்பிட்டேன். திரு. வேலுச்சாமி நாடார் வீட்டிலும் சாப்பிட்டிருக்கிறேன். அதற்கு முன் நாடார்களின் வீடுகளில் மறவர்கள் சாப்பிடுவதில்லை. என்னைத் தொடர்ந்து இந்த ஜாதி வேற்றுமை வேரற்றுப் போகட்டும் என்பதற்காகவே, நான் முதன் முதலில் நாடார் வீட்டிலும் அரிஜன் வீட்டிலும் சாப்பிட்டு வழிகாட்டினேன். மேலும், வித்தியாசம் மிகுந்திருந்த கமுதி போன்ற இடங்களில் உள்ள கோவில்களை, அரிஜனங்களுக்குத் திறந்து விடுவதில் நான் முன்னின்று பாடுபட்டவன் என்பது எல்லோருக்கும் தெரியும். இது தவிர, காங்கிரஸ் மாதிரி பார்வர்ட் பிளாக் அரிஜன உயர்வுக்கத் தன்னை அர்பணித்துக் கொண்ட கட்சியாகும். உதாரணமாக, பார்வர்ட் பிளாக் சார்பில் நின்ற அரிஜன அபேட்சர்கருக்கு தான் அரிஜனங்களும் மறவர்களும் இதர இனத்தார்களும் பெருமளவு ஓட்டு போட்டு வெற்றி பெறச் செய்து வருகிறார்கள். சமீபத்தில் தேர்தல்களில் இது நிதர்சனமாகி இருக்கிறது. இந்நிலையில் அரிஜன உயர்வுக்கு மறவர்கள் எதிர்ப்புப் புரிகிறார்கள் என்று குறை கூறுவது அழகல்ல” “மேலும், அரிஜன உயர்வு என்பது ஒரே இரவில் சாத்தியமானதல்ல. இருதரப்பிலும் நாளடைவில் பரஸ்பரம் மனமாற்றம் அடைய வேண்டும். தாழ்த்தப்பட்டோர் உயர்வு என்றால், மறவர், யாதவர், நாயுடு போன்ற ஜாதி இந்துக்களின் இளம் பெண்களிடம் விஷமம் புரிவதும் அல்ல. அம்மாதிரி எல்லாம் அரிஜனங்கள் மோசமான முறையில் தூண்டி விடப்படுவதால் தான் இந்த முறைகேடுகள் சம்பவிக்கப்படுகின்றன என்று கூறி முடித்தார் தேவர்.

கடைசியாக மாவட்ட கலெக்டர், கடந்த கால ஐக்கிய பேத உணர்ச்சிகளையும் நிகழ்ச்சிகளையும் எல்லா தரப்பினருமே மறந்து, பொது விவகாரங்களில் ஒழுங்கையும் மதித்துக் கடைபிடித்து, இத்தாலுகாவில் அமைதியை நிலை நாட்டி, எல்லோரும் சுமூகமாக இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் வாழ வசதி செய்ய ஆவன செய்யப்படும் என்று கலெக்டர் கூறினார்.

(அரிஜன வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.ஆறுமுகமும், பார்வர்ட் பிளாக் சட்ட மன்ற உறுப்பினர் எ.பெருமாளும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை.)

பின்னர் கலெக்டர், எல்லாத் தரப்பு தலைவர்களும் ஒன்றுபட்டு, இந்தப் பிராந்தியத்தின் முக்கியமான கிராமங்களுக்குப் போய் பொதுக் கூட்டம் போட்டு, ஒரே மேடையில் பேசினால், இந்தத் தாலுகாவின் சுமுக நிலைமைக்கு மிகமிகப் பயன் உள்ளதாக இருக்கும். சமாதான மாநாடு வெற்றி பெற்றதாகவும் அமையும் என்று கூறினார். இந்த யோசனைக்கு தேவர் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார். ஆனால், நாடார்கள் மறுத்து விட்டனர். முடிவில், இப்பிராந்தியத்தில் வாழும் எல்லா இன மக்களிடையே சமதானத்தையும், அமைதியையும் நிலைநாட்ட ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்க முயற்சி எடுத்த கலெப்டருக்கு நன்றி கூறினார். எல்லாரிடமும் ஐக்கியத்தை உண்டாக்கும் வகையில் அதிகாரிகளுடன் முழுமனதுடன் ஒத்துழைப்பதாய் தேவர் உறுதி கூறினார்.மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் கலெக்டர். அனால், மாநாடு முடிந்த மறுநாளில் …..

கீழத்தூவல் படுகாலை சமாதான மாநாடு முடிந்த மறுநாள் கொடிய செய்தி ஒன்று காட்டுத் தீ போலப் பரவி வந்து மக்களின் நெஞ்சங்களில் பேரிடியாக விழுந்தது. அப்படியென்ன செய்தி, சமாதான மாநாடு முடிந்த மற்றநாள் 1957 செப்டம்பர் 11 -ம் நாள் இரவு, பரமக்குடியில் காங்கிரஸ்காரரான இமானுவேல் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி தான் அது. செப்டம்பர் 13 -ம் நாள் அருங்குளம் என்ற கிராமத்தில் நாடகம் பார்ப்பதில் கலகம் மூண்டது. இந்த இரு சம்பவங்களும் முதுகுளத்தூர் தொகுதிக்கு வெளியில் நடந்தவை. இந்தச் சம்பவங்களின் தொடர்ச்சியாக பெரும் கலவரம் முதுகுளத்தூர் தொகுதியில் ஏற்படும் என்று காங்கிரஸ்காரர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்கள் எதிர்பர்த்தபடி எதுவும் நடக்கவில்லை. அதனால் ஏமாற்றம். இந்நிலையில் 1957 செப்டம்பர் 14 -ம் நாள், தமிழக முதல்வர் காமராஜர் மதுரைக்கு வந்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் மதுரையில் தங்கியிருந்தார். மதுரைக்கு வந்த முதல் நாளே, ஐ.ஜீ மற்றும் மாவட்ட போஸ் உட்பட பெரிய போலிஸ் அதிகாரிகளைக் கலந்து பேசினார்.

தானாக ஏற்படாத கலகத்தை சதி ஆலோசனை செய்ய. அதன் விளைவு, ஈவிரக்கமற்ற கொலை பாதகன், கல்நெஞ்சன், ரத்த வெறி பிடித்த இன்ஸ்பெக்டர் ரே என்பவனையும், போலிஸ் பட்டாளத்தையும் கீழ்த்தூவல் கிராமத்துக்கு அனுப்பி வைத்தனர்.

கீழ்த்தூவலுக்குப் போன இன்ஸ்பெக்டர் ரே அமைதியாக இருந்த கீழ்த்தூவல் கிராமத்து மக்களை அடித்துத் துன்புறுத்தி, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டான். வயது வந்தவர்களைத் துன்புறுத்தி, அவர்களைப் பிடித்து ஒரு பள்ளிக் கூடத்தில் அடைத்து வைத்தான். முதுகுளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் அய்யர், குறிப்பிட்ட ஐந்து இளைஞர்களை மட்டும் வெளியே இழுத்து வந்தார். அவர்களை கொடும்பாவி இன்ஸ்பெக்டர் ரே தன் பரிவாரங்களோடு கிராமத்தை ஒட்டி உள்ள கண்மாய் கரைக்குக் கூட்டிச் சென்றான். அங்கே! கண்மாய்க் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த ஐந்து வாலிபர்களின் கைகளையும் கால்களையும் பின்பு கண்களையும் கட்டினார்கள். என்ன நடக்கப்போகிறதோ ? என்று அறியாமல் கைகளும் கால்களும் கண்களும் கட்டப்பட்டிருந்த கட்டிளம் காளையர்கள் ஐவரும் அச்சத்தோடு திகைத்து நின்ற வேளையில் …..துப்பாக்கியின் டுமீல் டுமீல் கத்தம் கேட்டு, பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் பதறித்துடித்துக் கோவெனக் கதறி அழுதனர்.என்ன நடந்த அங்கே?இன்ஸ்பெக்டர் ரே, அந்த இளைஞர்களின் நெஞ்சில் துப்பாக்கியால் டுமீல் டுமீல் என்று சுட்டு, அந்த ஐந்து பேருடைய உயிரைப் பலிவாங்கினான்.சுட்டப்பட்ட இந்த வீரத்தியாகிகள் பிணமாக, ரத்த வெள்ளதிதில் விழுந்த பின்னும் வெறி பிடித்த மிருகம் இன்ஸ்பெக்டர் ரே, யின் துப்பாக்கி வெடிச்சத்தம் முழங்கிக் கொண்டு இருந்தது. கீழத்தூவல் கண்மாய் இரத்தத் தடாகமாக மாறியது.

அந்த ஐந்து இனைஞர்கள் செய்த குற்றம் என்ன? எதற்கு இவ்வளவு கொடிய தண்டனை ? தேவரைத் தலைவராக, இதய தெய்வமாக, ஏற்றுக் கொண்டு, பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஓட்டு அளித்தது தான் அவர்கள் செய்த குற்றம். இந்த குற்றத்க்காகத் தான், அந்த ஐந்து இளைஞர்களையும் சுட்டுப் பொசுக்கினார்கள்.இறந்த இளைஞர்களின் உடல்களை அவர்களது மனைவிமார்களும் குழந்தைகளும் கூடப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.இறந்த ஐந்து இனைஞர்களின் உடவ்களை உடனே பரமக்குடிக்குக் கொண்டு போய், பிரேத சோதனை நடத்தி போலிசாரே எரித்து விட்டனர், இதுதான் என்றைக்கும் அனைவரும், குறிப்பாக தேவர் குல மக்கள் மறக்க முடியாத கீழத்தூவல் படுகொலையாகும்.

கீழத்தூவல் படுகொலையோடு நின்று விட்டதா, நிலைமை? இல்லை. காங்கிரஸ் வெறியாட்டமும் போலிசின் காடடுமிராண்டித்தனமும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. கீரந்தை என்ற கிராமத்திற்குள் போலிஸ் வெறிப்பட்டாளம் நுழைந்தது. அக்கிராம மக்களில் சிலர் ஒரு சடங்கு வீட்டிலே விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். திடிரெனப் போலிஸ் பட்டாளம் அந்த வீட்டினுள் நுழைந்தது. விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஏழு பேர்களை விட்டுவிட்டு வெளியே இழுத்துக் கொண்டு வந்தனர்.அவர்களின் குழம்பு பிசைந்த கரங்கள், அதில் ஒட்டியிருந்த பருப்பு உலராத நிலையில், அவர்களைச் சுட்டுக் கொன்றனர். அந்தப் பிணங்களை பக்கத்தில் இருந்த வைக்கோல் போரில் தீ வைத்து, அதில் தூக்கிப் போட்டு எரித்தனர். அந்த ஏழு பேரில் ஒருவர் கிழவக் குடும்பன் என்ற அரிஜன். அவர் மறவர்களுக்கு தரவாக இருந்ததால் அவரும் கொல்லப்பட்டார். மேலும் நரிக்குடிப் பக்கம் உள்ள பனைக்குடி, சிறுவார் என்ற கிராமங்களில் இருந்தவர்களை மலஜலம் கூடக் கழிக்க விடாமல், போலிஸ் லாரியிலேயே வைத்திருந்தனர். மறுநாள் அவர்களை உளுத்திமடை என்ற கிராமத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போனதும், லாரியில் இருந்தவர்களில் நான்கு பேர்களைக் குறிப்பிட்டு, ” உங்களை விடுதலை செய்து விட்டோம்; போகலாம்” என்று அவர்களிடம் போலிசார் கூறினர். அந்த அப்பாவிகள் நான்கு பேரும் போலிசார் சொன்னதை நம்பி, லாரியில் இருந்து இறங்கினர். தங்கள் ஊரை நோக்கி நடை போடத் தொடங்கினர்.

போலிஸ் வெறியர்கள் பின்னால் இருந்து அவர்களது முதுகுப்புறமாக அந்த நான்கு பேரையும் சுட்டுக் கொன்றனர். இத்தோடு நின்று விட்டதா, போலிஸ் அட்டூழியம்? மழவராயனேந்தலில் ஒருவரைச் சுட்டுக் கொன்றனர். கீழத்தூவல், கீரந்தை உளுத்தி மடை, மழவராயனேந்தல் ஆகிய ஊர்கள் மொத்தம் பதினேழு பேர்களைச் சுட்டுக் கொன்றனர். அதில் ஒருவர் அரிஜன், இருவர் அகம்படியர்.

இப்படியாக பதினேழு பேரைப் பலி வாங்கியதோடு காங்கிரஸ் அரசின் வெறித்தனம் நின்று விட்டதா? இல்லை. ஐயாயிரம் பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 836 பொய் வழக்குகள் போனர். இத்தனைக்கும் மேலாக, உத்தமத் தலைவராம் தேவர் மீது கொலை வழக்குப் போட்டனர். தேவரின் செல்வாக்கைக் குறைக்கக் காங்கிரஸ் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாயின. தேவரின் மீது குற்றப்பட்டியல் 1952 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, தேவரின் வளர்ந்து வந்த செல்வாக்கும் பர்வர்ட் பிளாக் குறித்த வெற்றிகளும் காங்கிரஸ் வட்டாரத்தில் தேவரின் மீது ஒரு பகைமை தோன்றக் காரணமாக அமைந்ன. தேவரின் செல்வாக்கு, அவரது கட்சியின் வளர்ச்சி, வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ், தேவருக்கு எதிராக குறுக்கு வழிகளில் இறங்கத் தொடங்கியது. தேவரின் நடவடிக்கைகள், அவரது மேடைப் பேச்சுக்கள் கண்காணிக்கப் பட்டன. இந்நிலையில் 1957 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் நாள் மதுரையில் தமுக்கம் திடலில், காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சியை, இந்த தேசிய ஜனநாயக காங்கிரஸ் கட்சியாக, அமைப்பு ரீதியாக உருவாக்க, மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டைத் திறந்து வைத்து தேவர் மூன்று மணி நேரம் பேசினார். இந்திய மக்களின் தொன்மை மிக்க பண்பாட்டுப் பாரம்பரியம், வீரம், விவேகம் போன்றவை பற்றியும், வாணிபம் செய்ய வந்த வெள்ளையன் தனது பிரித்தாளும் சூழ்ச்சியால் இந்தியாவை வளைத்துப் போட்டதைப் பற்றியும் விரிவாக தேவர் தனது உரையில் எடுத்துரைத்தார். காங்கிரஸ் ஆட்சியின் அராஜக அலங்கோல ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்தார். அவரது பேச்சு ஒரு சரித்திர நிகழ்ச்சியாக அமைந்தது. மறுநாளும் மாநாடு நடைபெற்றது. தேவர் முதல் நாள் மாநாட்டைத் திறந்து வைத்துப் பேசிவிட்டு அன்று இரவு 10 மணி அளவில் காரில், தனது இருப்பிடமாகிய நேதாஜி ஆபிசிற்குச் சென்று கொண்டிருந்தார். வைகை ஆற்றுப் பாலத்தில் தேவரது கார் வந்த போது போலிசார் காரை நிறுத்தி தேவரை கைது செய்தனர்.

தேவர் சிறிதும் பதற்றப்படாமல், தான் அணிந்திருந்த ருத்ரதட்ச மாலையை, உடனிருந்த ஜனநாயக காங்கிரஸ் தலைவர் டி.ஜி. கிருஸ்ணமூர்த்தியிடம் கொடுத்து விட்டு, “மக்களை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள். அஞ்ச வேண்டாம். சத்தியம் வெல்லும்” என்று கூறிவிட்டு, போலிஸ் வேனில் ஏறிக்கொண்டார். போலிஸ் வேன் பலத்த பாதுகாப்புடன் பறந்தது.
_

This entry was posted in கலவரம் and tagged . Bookmark the permalink.

2 Responses to முதுகுளத்தூர் கலவரம் (1957) – 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *