மூன்று யுகம் கண்ட அம்மன்.

நெல்லை: பிற்கால பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலம் ஐவர் ராஜாக்கள் என்ற பெயரில் பல இடங்களில் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் வள்ளியூரை தலைமையிடமாக கொண்டு குலசேகர பாண்டியன் ஆட்சி புரிந்துள்ளான். இவனது படை பலம் குன்றிய போதும் ஆன்மிகம் நாட்டம் மட்டும் குறையவில்லை.
வள்ளியூரில் நீராவி என்னும் மண்டபம் கட்டி அதனுள் வாழ்ந்து வந்த அந்தப் பாண்டிய மன்னன், தினமும் வணங்கி வந்த தெய்வம்தான் மூன்று யுகம் கண்ட அம்மன். இந்தக் கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. அவையனைத்தும் பாண்டியர்களின் வாழ்க்கை முறையை பற்றி விளக்குகின்றன.

 ஆனால், இந்த அம்மனுக்கு, மூன்று யுகம் கண்ட அம்மன் என்று ஏன் பெயர் வந்தது என்று மட்டும் யாருக்கும் தெரியவில்லை. என்றாலும் அப்படியே இன்றும் அழைக்கிறார்கள்.

thanks : dinakaran…

….

This entry was posted in பாண்டியன் and tagged . Bookmark the permalink.

One Response to மூன்று யுகம் கண்ட அம்மன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *