பொய்யான PCR வழக்குகளால் சூறையாடப்படும் பெண்கள்!

மாணவிகளின் கல்வியை அழித்து ஒழிக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் பாலியல் அராஜகங்கள்:
 – பிரபாகரன் (அச்சமில்லை இதழ்)
பெண்கல்வியை வலியுறுத்தி எழுதாத எழுத்தாளர்கள் இல்லை. பெண்கல்வியைப் போற்றிப்பாடாத கவிஞர்கள் இல்லை. பெண்கல்வியில் அக்கறை கொள்ளாத தேசத்தலைவர்கள் இல்லை. 
‘தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை சிலை போல ஏன் அங்கு நின்றாய் நீயும் சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்’ தன் புதல்விக்கு சொல்வது போல பெண்குழந்தைகளுக்குக் கல்வி எவ்வளவுமுக்கியம் என்பதைப் போதிக்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.
இப்படி எல்லோராலும் வலியுறுத்தி சொல்லப்படும் பெண்களின் கல்வி முன்னேற்றத்தை அழித்து ஒழிக்கும் எமனாகிக் கொண்டிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகளால் வளர்த்துவிடப்பட்ட ஒரு அநாகரீகக் கும்பல். 
பெண்கல்வி முன்னேற்றத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் எப்படி தடையாக இருக்கிறார்கள்? பள்ளிக்கு செல்லும் பணக்கார மாணவிகளைத் தேடித் தேர்ந்தெடுத்து தலித் மாணவர்கள் பின்தொடர வேண்டும். அந்த மாணவிகள் திட்டினாலும்; காரித்துப்பினாலும்; செருப்பால் அடித்தாலும்; அதுபற்றிக் கவலைப்படாமல் அவளைத தொடர்ந்து காதல் மொழி பேசி தொல்லை கொடுத்தால் அவள் மனம்மாறி அவன் வலையில் விழலாம். விழும்வரை தொடர வேண்டும். 
அப்படி சிக்குபவர்களைக் கடத்திக் கொண்டு போய்விட்டால் அதன்பிறகு அந்த மாணவனுக்கு நாங்கள் பாதுகாப்பு கொடுக்கிறோம். பண உதவியும் செய்கிறோம் எனச் சொல்லி விடுதலைச் சிறுத்தை அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அக்கட்சியின் அறிவு ஜீவிகளும்; அக்கட்சியின் நிர்வாகிகளாகவே செயல்படும் காவல்துறை தலித் அதிகாரிகளும் பயிற்சி மையங்களே நடத்துகிறார்கள்.
இதன் காரணமாக- கிராமப்புறங்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை வழிமறித்து வம்புக்கு இழுப்பது; கையை; சடையைப் பிடித்து இழுப்பது; கெட்ட கெட்ட வார்த்தைகளைப் பேசி பாலியல் தொல்லைகள் கொடுப்பது; அப்படியும் மசியாத பெண்களின் பெற்றோர் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ்ப் பொய்ப் புகார் கொடுத்து தொல்லை தருவது போன்ற அநாகரீகச் செயல்களைச் செய்வதற்கு என்றே ஒரு கும்பலை வளர்த்துக் கொண்டிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு.
இதன் காரணமாக- வயதுக்கு வந்த தங்கள் பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் ஒவ்வொரு கிராமத்துப் பெற்றோரும் இந்த மிருகங்களினால் தங்கள் பெண்ணுக்கு என்ன நேருமோ; ஏது நேருமோ என்ற அச்சத்தோடு ஒவ்வொரு நாளும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பதைப் போல பதைத்துக் கிடக்கிறார்கள். பள்ளிக்குப் புறப்படும் போதே எந்த வெறிநாய்கள் எங்கே வந்து எப்படி வழிமறித்து விரட்டுமோ என்ற மிரட்சியோடும் பீதியோடும்தான் கிராமப்புறங்களில் மாணவிகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். இந்தப் பொறுக்கிக் கும்பலின் தொல்லை தாங்காமல் மனச்சிதைவுக்கு ஆளாகித் தற்கொலை செய்துகொண்ட மாணவிகளும் இருக்கிறார்கள்.
பெரிய பாதுகாப்பு பின்னணி இல்லாத வசதி வாய்ப்புள்ள சில மாணவிகளை வலுக் கட்டாயமாகக் கடத்திக் கொண்டு போய் ஒருவாரம் இருவாரமென தலைமறைவாக வைத்திருந்தபின்; பெற்றோருக்கு தொலைபேசி மூலம் ஒரு லட்சம் கொடு; ரெண்டு லட்சம் கொடு உன் பெண்ணை விட்டுவிடுகிறேன் என பிளாக் மெயில் செய்கிறார்கள். வசதி வாய்ப்புள்ளவர்கள் கடனோ உடனோ வாங்கி தங்கள் குழந்தைகளை மீட்கிறார்கள். முடியாதவர்கள் மனமொடிந்து கொஞ்சம் கொஞ்சமாக சாகிறார்கள்.
இந்த செய்திகளைக் கேட்டு ஆறாவதோ ஏழவதோ படிக்கும் தங்கள் பெண்பிள்ளைகளைப் படித்தது போதும் என படிப்பை பாதியில் நிறுத்திவிடும் பெற்றோர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வேறுசில பெற்றோர்களோ எதற்கு இந்த தொல்லைகள். வளர்த்து ஆளாக்கி படிக்கவைத்து; படிப்பை பாதியில் நிறுத்தி கஷ்டப்படுவானேன் என்று பெண்குழந்தை பிறந்தவுடன் சிசுக் கொலை செய்கிற கோர முடிவுக்கும் வந்து விடுகிறார்கள்.
எந்த அரசியல்வாதிகளும் விடுதலைச் சிறுத்தைகளின் அராஜகங்களைக் கண்டிக்க முன்வராததற்கு என்ன காரணம்? இந்த அராஜகங்களைத் தட்டிக்கேட்க எந்த அரசியல்வாதியும் முன்வருவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. 
தன் பெண்பிள்ளைகளையும்; தன்வீட்டு பெண்களையும் இந்த பொறுக்கிக் கும்பல் நெருங்கமுடியாத பாதுகாப்பில் வைத்திருப்பதால் – இதுபற்றி கண்டுகொள்வது இல்லை என்பது முதல் காரணம்.

நாளை தேர்தல் வரும்போது இந்தக் கும்பலோடு கூட்டணி வைத்தாக வேண்டும் என்பதும்; இவர்களிடம் போய் ஓட்டுக் கேட்டாக வேண்டுமே என்பது இரண்டாவது காரணமாகும்.
அரசியல்வாதிகள்தான் இப்படி என்றால் இந்த அராஜகங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறை என்ன செய்கிறது? வேலியே பயிரை மேயும் கதையாக – இவர்களுக்கு பயிற்சி மையங்கள் நடத்தி இந்த அராஜகங்களுக்குப் பண உதவியும் செய்து ஊட்டி வளர்ப்பவர்களாக இருக்கிறார்கள் தலித் அதிகாரிகள்.
பிறசாதி காவல்துறை அதிகாரிகள் இந்தப் பொறுக்கித் தனங்களுக்கு எதிராக – நடவடிக்கை எடுக்க முன்வந்தால் அந்த அதிகாரிகள் மீதே தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பொய்ப்புகார் கொடுத்து மிரட்டுகிறார்கள். இதற்குப் பயந்து நேர்மையான அதிகாரிகள் கூட தலித், அம்பேத்கார் என்ற பெயர்களைக் கேட்டவுடன் சுருண்டு படுத்துக்கொள்கிறார்கள்.
இப்படியும் நடக்குமா என சந்தேகப் படுபவர்கள் தெளிவு பெறுவதற்காக- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவூரில் நடந்த அராஜகங்கள் அதைத் தொடர்ந்து நடத்திய கொலைகளையும்; கம்பைநல்லூரில் நடந்த பொறுக்கித் தனங்களையும்; அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட கொலைவிபரத்தையும், சுருக்கமாகப் பட்டியலிடுகிறோம்.
திருவூரில் நடத்தப்பட்ட பாலியல் அராஜகங்களும் கொலைகளும்:
சென்னை அரக்கோணம் ரயில் பாதையில் செவ்வாய்ப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து தெற்கே 2 கி.மீ தொலைவில் இருக்கிறது திருவூர். இந்த ஊர் காலனியில் 1500 தலித் குடும்பங்களும்; ஊரில் வன்னியர் 150 குடும்பங்களும்; கோனார்; செட்டியார்; ஐயர்; நாயுடு குடும்பங்கள் என சுமார் 50ம் உள்ளன.
திருவூரில் தலித்துக்கள் அதிகம் உள்ளதால் சுவர் விளம்பரங்கள் செய்யும் உரிமை தங்களுக்கே என்றும்; அம்பேத்காருக்கு மட்டுமே சிலை என்றும்; கள்ளச்சாராயம் விற்கும் உரிமையும்; கூவம் ஆற்றில் திருட்டு மணல் அள்ளும் உரிமையும் தங்களுக்கு மட்டுமே உண்டு என்றும்; பிற சாதியினர் எல்லாம் தங்கள் அடிமைகள் என்றும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். எப்படியோ ஒழியட்டும் என்று தலித் அல்லாத பிற சாதியினர் பொறுத்துக்கொண்டு ஒதுங்கியே இருந்தனர். 
ஆனால், பள்ளிக்கு செல்லும் மாணவிகளை வழிமறிப்பது; கையைப் பிடித்து இழுத்து சட்டைக்குள் மணலைப் போடுவது; சடைçய் உடையைப் பிடித்து இழுப்பது; கெட்ட கெட்ட வார்த்தைகளைச் சொல்லி சேஷ்டைகளைச் செய்வது;- வேலைக்குச் செல்லும் பெண்களிடம் பாலியல் தொல்லைகள் தருவது; தூக்கிக் கொண்டுபோய் விடுவோம் என மிரட்டுவது என – தன்மானத்தைக் குத்திக்கிளறும் அராஜகங்கள் வளர்ந்தபோது அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் எதிர்க்கத்தொடங்கினார்கள்.
இந்த எதிர்ப்புகளுக்குத் தூண்டுகோலாக இருந்த வன்னியரான முன்னாள் ராணுவ வீரர் பொன்னுசாமியை வீடுபுகுந்து வெட்டி; மாடியிலிருந்து கீழே தூக்கி வீசி; கீழே விழுந்து துடித்துக்கொண்டிருந்தவரை, கீழே நின்ற கும்பல் உயிர்போகும்வரை வெட்டிசாய்த்துவிட்டு; சுற்றி நின்று டான்ஸ் ஆடினார்கள் – விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் புரட்சி பாரதம் கட்சிகளைச் சேர்ந்த அரக்கர்கள். மேற்கண்ட அதே திருவூரில் – பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த சுகுமார்; ரமேஷ் என்ற 20 வயது கூட நிரம்பாத இரண்டு வன்னிய இளைஞர்களை 1.2.2003 அன்று வெட்டிச் சாய்த்தது இந்தக் கொலைகாரக் கும்பல்.
இந்தப் பொறுக்கிக் கும்பலோடு சண்டைபோட்டு வாழமுடியாது என அஞ்சிய அனைத்து சமூகத்தவரும் தங்கள் பெண் குழந்தைகளை 5ஆம் வகுப்புக்குமேல் பள்ளிக்கு அனுப்புவதையே நிறுத்திவிட்டார்கள். இந்த அக்கிரமங்கள் குறித்து -2003 மே திங்கள் அச்சமில்லை இதழில் விரிவான செய்திகளை வெளியிட்டு திருவூரில் பெரும்பான்மையாக இருப்பதை வைத்து தலித்துகள் 3 வன்னியர்களை வெட்டிக் கொல்லலாம் என்றால் – மற்ற சாதிகள் பெரும்பான்மையாக உள்ள ஊர்களில் தலித்துகளை வெட்டிக்கொல்வது நியாயம் என்று ஆகிவிடாதா? என்று கேட்டிருந்தோம்.
இன்றுவரை அந்த மூன்று வன்னியர்களை வெட்டிக்கொன்ற கொலைகாரன் எவனையும் – காவல் நிலையமோ நீதிமன்றமோ தண்டிக்கவில்லை. 
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பொறுக்கித்தனங்களும் கொலையும் கம்பைநல்லூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பொறுக்கிக்கும்பலின் அராஜகங்கள் குறித்து 11.11.2009 நாளிட்ட நக்கீரன் இதழ் வெளியிட்ட செய்தியைப் படிக்கிற மான ரோசமுள்ள யாருக்கும் ரத்தம் கொதிக்கும். இந்த வெறிநாய்களை ஊரில் எப்படி நடமாட அனுமதிக்கலாம் என்று கோபம் கொப்புளிக்கும். மாணவிகளின் பள்ளிப்படிப்பை எப்படி எல்லாம் அழித்து ஒழிக்கிறது இந்தக் கும்பல் என்பதை அறிகிற எந்த நாகரீக சமூகமும் இந்தப் பொறுக்கிகளின் முகத்தில் காரித் துப்பும். நக்கீரன் இதழ் வெளியிட்ட சம்பவங்களை பட்டியலிடுகிறோம் படியுங்கள்.
சம்பவம் 1.
+2 படிக்கும் மாணவி ஒருவர் தன் பள்ளி ஆசிரியரோடும்; ஊராட்சி மன்றத் தலைவரோடும்; சக மாணவ மாணவிகளோடும் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். கோழி முட்டைகள் இரண்டை இரண்டு கைகளிலும் வைத்தக் கொண்டு எதிரேவந்துகொண்டிருந்த வாலிபன் ஒருவன் – அந்த +2 மாணவியை வழிமறித்து உசந்த சாதி உசந்தசாதி என்கிறார்களே இதை உடைத்தால் உடையுமா பார்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டே அந்த மாணவியின் மார்பில் அழுத்தி முட்டைகளை உடைக்கிறான்.
திகைத்துப் பதறிய அந்த மாணவி அடநாயே என்றபடி செருப்பைக் கழட்டி அடிக்கிறார்.
அதைத் தடுத்துவிட்டு அவர் சடையைப் பிடித்து இழுத்து குனியவைத்து உதைத்துவிட்டு ஓடுகிறான். இதற்காக அந்த இளைஞனைக் கண்டித்தால – பி.சி.ஆர் சட்டத்தின் கீழ் பொய் வழக்குத் தொடுத்துவிடுவார்கள் என்று மனம் புழுங்கினார்கள் ஊராட்சித் தலைவரும் ஆசிரியரும்.
சம்பவம் 2.
ஜெ.பாளையம் பி.ஆர் சாதி (பறையர் சாதி) இளைஞர்களால் பாதிக்கப்பட்ட மாணவி விஜயாவைச் சந்தித்தோம். ஈவ் டீசிங்கிலிருந்து இன்னமும் மீளாத விஜயா முன்னாடி பின்னாடி உரசினான், காலை மிதிச்சான், ஜடையைப் பிடித்து இழுத்தான், அசிங்கம் அசிங்கமா பேசினான், இத்தனையும் பஸ்சுக்குள்ளேதான் நடந்தது, பஸ்சுல எல்லாரும் தலையைக் குனிஞ்சிக்கிட்டாங்க. தினமும் இதேமாதிரி. பொறுக்கமுடியாமல் வீட்டிலே அண்ணனுங்ககிட்டே சொன்னேன். அடுத்தநாள் (20.10.2009) என் அண்ணனுங்க வந்தாங்க. அப்பவும் இப்படியே செய்தான். அவன அடிச்சி போலீஸ் ஸ்டேசனுல ஒப்படைச்சாங்க.
அந்த பஸ் ஜே.பாளையம் போனதும் அவங்க சாதிக்காரங்க பஸ்சை வழிமறிச்சு கண்ணாடிகளை உடைச்சாங்க. என்னாடி பன்னிட்டான் எங்க பையன்? அவனை ஏன்டி போலீசுல புடிச்சுக் கொடுத்தேன்னு என்னையும் அடிச்சு.. கேவலமா பேசி.. தொடர்ந்து சொல்ல முடியாமல் முகத்தை மூடித் தேம்பினார் விஜயா.
இந்த சம்பவத்திற்கு காரணமான மணி என்பவனை விட்டுவிட்டு அவனைக் கண்டித்த காரணத்திற்காக 14 பேர்மேல தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்திலே வழக்கு போட்டுட்டாங்க… கண்டிச்ச மாதையன் என்பவரின் பிணம் மறுநாள் கிணற்றில் கிடந்தது. இதுக்கு காரணமானவர் சுதாகர் என்ற தலித் எஸ்.பி.தான். மாதையன் சாவு பற்றி சரியான விசாரணை கூட இல்ல.. இதுதான் நீதியா… விஜயாவின் உறவினர் ஒருவர் நம்மிடம் குமுறினார்.
சம்பவம் 3.
அவனுங்க நடந்துகிட்டதை பேசுனதை இப்ப நெனைச்சாலும் ஒடம்பு கூசுதுங்க அண்ணா… அவ்வளவு அருவெறுப்பு என்று சொல்லும் கலா தன் 10ஆம் வகுப்பு படிப்பை பாதியில் விட்டுவிட்டார்.
சம்பவம் 4.
கம்பைநல்லூர் பழநியையும் அவரது மகள் ரஞ்சிதாவையும் அவர்கள் வீட்டில் சந்தித்தோம். காலை 7 மணி இருக்கும். மிளகா வாங்கிக்கிட்டு கடையிலிருந்து வரும்போது சுப்பிரமணிங்கிறவன் அசிங்கமா வார்த்தையைச் சொல்லிக்கிட்டே என் தலைமுடியைப் பிடிச்சு இழுத்து என் தாடையில் கடிச்சுப்புட்டான். ஊர் சனங்கதான் அவனை அடிச்சு விரட்டினாங்க என்றார் ரஞ்சிதா. புகார் கொடுத்ததற்காக, எங்கமேலயே தீண்டாமை கேசு போட்டு வதைக்கிறாங்க என்றார் பழநி.
சம்பவம் 5.
இருட்டினபிறகு எந்த பொண்ணும் வெளியில நடக்க முடியாது. தெருமுனையில நின்னுகிட்டு லவ் பாட்டு பாடிக்கிட்டே பேண்ட்டைக் கழட்டிடுவானுங்க. பிரண்ட்ஸ்கிட்ட கூட சொல்ல முடியாத அளவுக்கு நடந்துக்குவானுங்க அண்ணா.. +2 மாணவி காமாட்சியின் கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது.
சம்பவம் 6.
கம்மைநல்லூர் ஸ்டேசன் ஏட்டு சாகுல் செரீப். அவரது மகளையும் விட்டு வைக்கவில்லை. இதை தடுக்க அந்த ஊர் ஸ்டேசன் ஏட்டாலகூட ஒண்ணும் செய்ய முடியல. ஜின்னா தெருவிலிருந்து தங்கவேல் தெருவுக்கு வீடுமாற்றி தன் பெண்ணைக் காத்துக்கொண்டார் என்கிறார் கம்யூனிஸ்ட் தோழர் மாது.
சம்பவம் 7.
கம்மைநல்லூர் பேரூராட்சிக்கு தலித் சமூகத்தைச சேர்ந்த கிருஷ்ணன் தான் தலைவர். அவரிடம் இந்த ஈவ் டீசிங் பற்றிக் கேட்டோம். ஏதோ 10 பொறுக்கிப் பசங்க செய்யுறானுங்க அதுக்காக இங்கே இருக்குற 2500 தலித் குடும்பங்களையும் குறைசொல்லக் கூடாது என்றார். காவல்துறை மாணவிகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்கணும் இல்லேன்னா சட்டத்தை நாங்கள் கையில் எடுப்போம் காவல்துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறதோ இல்லையோ… மாணவிகளுக்கு பாதுகாப்புக் கொடுக்கனுணும். இல்லேன்னா சட்டத்தை நாங்கள் கையில் எடுப்போம் என தலித் அல்லாத சமூகங்களைச் சேர்ந்த மக்களின் மனநிலையை வெளிப்படுத்தினார் வகுராப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் மாரியப்பன்.
விடுதலைச்சிறுத்தைகளால் ஊருக்கு ஊர் வளர்த்துவிடப்பட்டுள்ள இந்தப் பொறுக்கிக் கும்பலுக்கு எதிராக – சட்டத்தை கையில் எடுக்கும் மனோநிலைக்கு மற்ற சமூகங்கள் வந்து கொண்டிருக்கின்றன என நக்கீரன் பத்திரிகை எழுதி இருப்பது தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் கொடுத்திருக்கும் எச்சரிக்கை. இந்த எச்சரிக்கைக்குப் பிறகும் கூட- மாணவிகளுக்கு எதிராக அந்தப் பொறுக்கிக் கும்பலால் அரங்கேற்றப்படும் பாலியல அராஜகஙகளைத் தடுக்கவோ; அந்தப் பொறுக்கிக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்வோ; மாதையன் கொலையாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவோ அப்போதைய கருணாநிதி அரசும் அவர் கையில் இருந்த காவல் துறையும் முன்வரவில்லை என்பது – கருணாநிதி அரசே ஒரு பொறுக்கி கும்பலின் அரசாக இருந்தது என்பதற்கான அடையாளமாகும்.
இதனால் தருமபுரி பகுதியில் விடுதலைச் சிறுத்தைப் பொறுக்கிக் கும்பலின் அராஜகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த அராஜகங்களுக்கு எதிராகப் புகார் கொடுத்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்காது என்பதாலும்; வீணாக தங்கள் பெண்ணின் வாழ்வும் தங்கள் குடும்ப மானமும் போவதுதான் மிஞ்சும் என்பதாலும் – பாதிப்புக்கு உள்ளானவர்களே இத்தகைய செய்திகளை வெளியே சொல்லாமல் மறைத்துவிடுகின்றனர். செய்தி தெரிந்து நேரில் சென்று விசாரித்தாலும் தங்கள் பெண்ணின் பெயரோ தங்கள் பெயரோ வெளியே தெரியக்கூடாது என நிபந்தனை விதித்தே பேசுகிறார்கள். இதுவே இந்தப் பொறுக்கிகளுக்கு கவசமாகி விடுகிறது.
பழைய தருமபுரியில் தருமபுரிக்கு அருகில் உள்ள பழைய தருமபுரியைச் சேர்ந்த ஒரு மாணவி – அந்த ஊர் விடுதலைச் சிறுத்தை இளைஞனின் தொல்லையைத் தாங்கமுடியாமல் பள்ளிக்குப் போவதையே நிறுத்திவிட்டார். இதற்குப் பிறகும் வீடுதேடிவந்து அவன் கொடுத்த தொல்லையைத் தாங்க முடியாமல் பூச்சிமருந்தைக் குடித்துவிட்டார். இதுதெரிந்த பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச சென்று காப்பாற்றியிருக்கிறார்கள். செய்தி தெரிந்து ஆறுதல் கூறியபின்; அவன்மீது புகார் கொடுங்கள் எனச் சொன்னவுடன்; எங்கள் மானம்தான் போகும்; வேறு ஒன்றும் நடக்காது; எங்களை விட்டுவிடுங்கள் பட்டதெல்லாம் போதும் என கையயடுத்துக் கும்பிட்டத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
கெங்கணாபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் அராஜகத்தால் தற்கொலை செய்து கொண்ட பெண் நல்லாம்பள்ளியிலிருந்து சேலம் செல்லும் வழியில் 3வது கிலோமீட்டரில் இருக்கிறது கெங்கனாபுரம் என்ற ஊர். அங்கு வருவாய்த்துறையில் அரசுப்பணியில் இருக்கும் ஒருவரின் மகளைத் தொல்லை கொடுத்து இழுத்துக்கொண்டுபோய் தாலி கட்டிக் குடும்பம் நடத்தியபின் – உன் அப்பனிடம் போய் 3லட்சம் பணம் வாங்கியாடி என விரட்டியிருக்கிறான். அது சிறுபான்மைச் சமூகமான செட்டியார் குடும்பம். அந்தப் பொறுக்கியைத் தட்டிக்கேட்கும் பின்னணி இல்லாத நிலை.
நடைபிணமாக வீட்டுக்கு வந்த பெண்ணைப்பார்க்க வந்த உறவினர்கள் கேவலமாகப் பேசிக் கண்டித்ததைத் தாங்க முடியாமலும்; தன்னால் தன் பெற்றோர் படும் அவமானத்தைச் சகிக்க முடியாமலும் – பத்து பதினைந்து நாட்கள் சாப்பிடாமலேயே கிடந்து செத்துப்போனாள் அந்தப் பெண். அந்தப் பெண்ணை அரசு அதிகாரியாக இருக்கும் அவரது அப்பாவே கொன்றுவிட்டார். அவர்மீது  கொலைவழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என- மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல?
நல்லாம்பள்ளிப் பகுதியிலேயே இதே நல்லாம்பள்ளிப் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஒரு மாணவியைக் கடத்திக் கொண்டுபோய் வைத்துக்கொண்டு அந்தப் பெண்ணிடம் பேரம் பேசியது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல். அந்தப் பெண்ணின் பெற்றோர் ஆட்கொணர்வு சட்டத்தின்கீழ் வழக்குப்போட்டு தங்கள் பெண்ணை மீட்டிருக்கிறார்கள்.
இது குறித்து காவல்துறை முறையாக விசாரணை நடத்தி இந்தப் பொறுக்கி கும்பலைத் தண்டிக்குமானால் – ஊருக்கு ஊர் இவர்களால் பாதிக்கப்பட்டபெற்றோர்களிடமிருந்து புகார்கள் குவியும். வெறும் பேச்சாக இல்லாமல் – உண்மையிலேயே பெண்கல்வி முன்னேற்றத்தில் இந்த அரசுக்கு அக்கறை இருக்குமானால் இவர்களைத் தண்டிக்க வேண்டியதுதான் அரசின் முதல் கடமையாக இருக்கும்.
இப்படி எல்லாம் அராஜகங்கள் செய்தால்தான் சாதிகளை ஒழிக்கமுடியுமென தன் தொண்டர்களுக்கு மேடைக்குமேடை பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார் புதிய பெரியாராக அவதாரம் எடுத்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவரான திருமாவளவன். 
இந்த சாதி ஒழிப்பு சூரப்புலிகள் – அருந்ததிய மக்கள் மீது எத்தகைய தீண்டாமை வன்கொடுமையைக் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும்; எத்தகைய சாதிமேலாதிக்கம் செய்கிறார்கள் என்பதற்கும் – ஆதாரமாகச் சில செய்திகளைத் தருகிறேன்.
அருந்ததியருக்கு எதிராக மூன்றாவது குவளையைக் கொண்டுவந்த பறையர்கள் அருந்ததிய மக்களின் பிரச்சனைகளைப் பதிவு செய்வதற்காக வெள்ளைக்குதிரை என்ற இருமாத இதழ் ஒன்று வெளிவருகிறது. மேட்டூரில் 20.2.2011 அன்று முதல் இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. பெரியார் தி க தலைவர் கொளத்தூர் மணி அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய பேச்சின் ஒரு பகுதி; 
“பெரியார் திராவிடர் கழகம் சார்பாக எங்கள் தோழர்கள் கோவையைச் சுற்றியுள்ள கிராமங்களின் தேனீர்க்கடைகளில் கையாளப்படும் இரட்டைக்குவளை முறையை ஒழிக்க இயக்கம் நடத்திக்கொண்டிருந்தபோது – மருதமலை செல்லும் வழியில் உள்ள தேனீர்க் கடைகளில் 3 குவளைகள் இருப்பதைக் கண்டனர். அருந்ததியர் தேனீர் குடிக்கும் குவளையில் நாங்கள் தேனீர் குடிக்கமாட்டோம் என்று பிற தலித் சாதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் – அருந்ததியர் தேனீர் அருந்துவதற்கு என்று மூன்றாவது குவளை நடைமுறைக்கு வந்ததென கடைக்காரர்கள் கூறினார்களாம்”
இந்த சாதி ஒழிப்பு சூரப்புலிகள்தான் சாதியை ஒழிக்க – மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்களாம். எனக்குத் தெரிந்து நிறைய தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பிராமணப் பெண்களை மணந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் சாதி ஒழிந்துவிட்டதா? தலித் சமூகத்தைச் சேர்ந்த சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் காணாமல் போனதுதான் மிச்சம்.
பறையர் சமூகப் பெண் ஒருவர் அருந்ததிய ஆணுடன் திருமணம் செய்து கொண்டதற்காக அருந்ததியப் பெண்களை பறையர்கள் கற்பழித்துச் செய்த கொடூரம் சாதி ஒழிப்பு பேசும் திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் விழுப்புரம் மாவட்டம் கரடிசித்தூர் கிராமத்தில் ஒரு அருந்ததியப் பையன் – ஒரு பறையர் பெண்ணோடு ஓடிப்போனதற்காக அருந்ததிய மக்கள் மீது எத்தகைய வன்கொடுமை ஊழிக் கூத்தாடினார்கள் என்ற விபரத்தைத் தருகிறேன்.
இரா.அதியமான்; எழில்.இளங்கோவன்; பேராசிரியர் கல்யாணி; தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன்; கவிதாசரண் இதழாசிரியர் கவிதாசரண்; பேராசிரியர் அ.மார்க்ஸ் போன்றோர் அடங்கிய உண்மையறியும் குழு கள ஆய்வு செய்து தந்த அறிக்கையின் சில பகுதிகள்:
கரடிசித்தூரில் பறையர் குடியிருப்பில் 1500பேர்கள் இருக்கிறார்கள். ஆதிதிராவிடர் குடியிருப்பை ஒட்டி உள்ள ஊர் கோடியில் நான்கு அருந்ததியர் குடும்பங்கள் உள்ளன. 
2004ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6ஆம் தேதி – வீரன் என்ற அருந்ததியர் இளைஞன் பரிமளா என்ற பறையர் பெண்ணோடு திருமணம் செய்யும் நோக்கோடு ஓடிவிட்டார். ஆகஸ்டு 9ஆம் தேதி – பரிமளா குடும்பத்தினர் இன்னும் 3 நாட்களுக்குள் இருவரையும் ஒப்படைக்கா விட்டால் அருந்ததியர் வீடுகளை ஏலம் விட்டு ஊர்ப்பொதுவுக்கு எடுத்துக்கொள்வோம்; உங்களை ஊரை விட்டே துரத்தி விடுவோம் என மிரட்டியிருக்கிறார்கள்.
ஆகஸ்டு 10ஆம் தேதி அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவர்களான கோவிந்தராசு; வீரனின் அப்பா பெரியசாமி; சித்தப்பா சின்னையன் ஆகியோர் சென்னைக்குத் தேடப் புறப்பட்டுவிட்டனர். நீங்கள் வருவதற்குள் உங்கள் பெண்களை நாசம் பண்ணிவிடுவோம் என மிரட்டியும் இருக்கிறார்கள்…
சொன்னபடியே 12ஆம் தேதி இரவில் பறையர் சமூகத்தைச் சேர்ந்த பாக்கியராஜ்; செந்தில் முனுசாமி; மாரி; கோபி; மாரியாபிள்ளை ஆகிய ஆறு பறையர் இளைஞர்கள் நன்கு குடித்துவிட்டு அருந்ததிய வீட்டுமுன் போய் ஆபாசமாகத் திட்டியுள்ளனர். கதவு திறக்காததைக் கண்டு அருகிலிருந்த வண்டி நுகத்தடியைக் கழட்டி – வீட்டுக்கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து நுகத்தடியால் பெண்களைத் தாக்கி இருக்கிறார்கள். மாயவன் மகள் நதியா (17) என்பவரை, இவதான்டா அழகா இருக்கா முதலில் இவளைப் புடிங்க என்று சொல்லிக்கொண்டே அவரைக் கீழே தள்ளி அவர் மீது பாய்ந்து ; ஆடைகளைக் கிழித்து ; பாலியல் உறுப்புகளைக் கடித்து; கசக்கி நாசப்படுத்தியுள்ளனர். சில நிமிடங்களுக்குள்ளேயேஅந்தப் பெண் மயக்கமடைந்துள்ளார்.
அங்கிருந்த வீரனின் தங்கை கோவிந்தம்மாளை (16) நிர்வாணப்படுத்தி மார்பகங்களைக் கடித்துள்ளனர். வீரனின் தம்பி மனைவியான கர்ப்பிணிப் பெண் கலா (19)வையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். சமீபமாக குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டவரும் பறையராகிய பாலமுருகனைத் திருமணம் செய்துகொண்ட அருந்ததியப் பெண்ணான வெள்ளையம்மாளை (29) அந்தப் பெண்ணின் கணவரைத் தூணில் கட்டிப்போட்டுவிட்டு அந்தப் பெண்ணின் பெற்றோர் முன்னிலையில் – நுகத்தடியால் வயிற்றிலும் இடுப்பிலும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். சிகிச்சை பலனின்றி; படுத்த படுக்கையாகி; கண்பார்வை இழந்து ஒருமாத காலத்திற்குள் வெள்ளையம்மாள் இறந்து போயிருக்கிறார். 
பள்ளர்; பறையர் முதலான தலித் பிரிவினர் அருந்ததியர் மீது தீண்டாமைக் கொடுமையை இழைத்து வருகின்றனர். பரமக்குடியில் பள்ளர்களால அருந்ததியப் பெண்ணான கருப்பி கொல்லப்பட்டதும்; சூலூரில் கொல்லப்பட்ட இந்திராணியும் சில உதாரணங்கள். 
பண்ருட்டிப் பகுதியில் இதேபோல் பறையர்களின் வன்முறைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர் அருந்ததியர்.
இதர ஆதிக்க சாதியினர் பறையர்களிடம் எவ்வாறு நடந்துகொள்வார்களோ – அவ்வாறே பறையர்கள் அருந்ததியினரிடம் நடந்துகொள்வதை நாங்கள் கவனித்தோம் (இந்த அறிக்கையை ஏப்ரல் – 2004 அச்சமில்லை இதழில் வெளியிட்டுள்ளோம்) 
மானப்பிரச்சனை என்பது பறையருக்கு மட்டும் தானா? மற்ற சாதியினருக்குக் கிடையாதா?
பறையர் பெண்ணை அருந்ததியர் ஒருவர் இழுத்துக்கொண்டு ஓடினால் அது பறையர்களுக்கு இழிவு – மானப்பிரச்சனை. பறையர்கள் மற்ற சாதிப் பெண்களை இழுத்துக்கொண்டு ஓடினால் அது மற்ற சாதிகளுக்கு இழிவு இல்லையா? மானப்பிரச்சனை இல்லையா? 
மற்றசாதிப் பெண்களை பறையர்கள் இழுத்துக்கொண்டு ஓடினால் அதற்கு பெயர் முற்போக்கு, புரட்சி; சாதி ஒழிப்பு எனப் போலி வேசம் போடும் தலித் தலைவர்களே- கரடிசித்தூர் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த நதியாவுக்கும்; கோவிந்தம்மாளுக்கும் நீங்கள் செய்த பாலியல் கொடுமைகளையும்; வெள்ளையம்மாளைக் கொன்ற கொடூரத்தையும் – மற்றசாதிப் பெண்களைப் பறையர்கள் இழுத்துக்கொண்டு ஓடும்போது மற்ற சாதியினர் தலித் பெண்கள் மீது நிகழ்த்தினால் -நதியாவை; கோவிந்தம்மாளைப் போல் கெடுக்கப்படாத தலித் பெண்கள் எந்த ஊரிலாவது இருக்க முடியுமா? 
வெள்ளையம்மாளைப் போல ஒரு பாவமும் செய்யாத பறையர் பெண்களின் கொலைகள் ஊருக்கு ஊர் நடக்காதா? எங்களுக்கு மட்டும்தானே தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் இருக்கிறது? வன்னியனுக்கு ஏது? செட்டியாருக்கு ஏது? சாகுல் செரீப்புக்கு ஏது? முதலியாருக்கு ஏது? என்ற தைரியமா? தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் தலித்துகளுக்குக் கிடைத்த வரம்! அதைச் சாபமாக மாற்றிக் கொண்டு அழிந்து போகாதீர்கள்… தீண்டாமையை ஒழிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு தீண்டாமையை மேலும் கெட்டியாக வளர்த்துவிடாதீர்கள்.
ஒரு கட்டம் வரைக்கும்தான் இந்த தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் உங்களுக்குப் பாதுகாப்புக் கேடையம்! உங்கள் அராஜகங்கள் எல்லைமீறிப் போகிறபோது- பாதிக்கப்பட்ட எல்லா சமூகங்களும் ஒருங்கிணைந்து நக்கீரன் இதழ் எழுதியிருப்பது போல் சட்டத்தைக் கையில் எடுத்தால்தான் தங்கள் மானம் மரியாதையைக் காத்துக்கொள்ள முடியும் என்ற முடிவுக்கு வந்தபின்பு “மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமையைக் கொளுத்துவோம்” என்ற பாரதி வழியில் துணிவு கொள்ள ஆரம்பித்தால் வரமாக வந்த வன்கொடுமைச் சட்டமே உங்களுக்கு சாபமாகிவிடும் என்பதைப் புரிந்துகொண்டு திருந்துங்கள்… அப்போது உங்கள் மீதான இழிவைத் துடைக்க எங்கள் நேசக்கரங்களும் நீளும்.
# நன்றி:   திரு. பிரபாகரன் – அச்சமில்லை இதழ்
This entry was posted in தேவர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *