“பெரியதேவர்” இராசராச சோழன்

மனோகரா திரைப்படத்தில் கடைசி காட்சியில் இளவரசன் மனோகரன்(சிவாஜி கணேசன்) கைகள் இரண்டும் இரண்டு இரும்புச்சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு அத்தாணி மண்டபத்தில் இணைத்து பூட்டப்பட்டிருக்கும். அவ்போது மனோகரனின் தாய்(அந்நாட்டின் அரசி கண்ணம்மா) வீரவசனம்
பேசி முக்குலத்தோரைபெருமை படுத்துவார். அவ்வசனம் வருமாறு:

“மனோகரா! பொறுத்தது போதும். பொங்கி எழு!! உன் உடலில் ஓடுவது வீர மறவர் குல ரெத்தம் என்பது உண்மையானால்.
. . . மறவர்குல பெண்கள் மாசுமருவற்ற கற்புக்கரசிகள் என்பது உண்மையானால். . . . அக்கற்புக்கரசிகள் கடவுளுக்குச்சமமானவர்கள் என்பது உண்மையானால். . . . உன் கைகளைப் பிணைத்திருக்கும் இரும்புச்சங்கிலி அறுந்து தூள் தூளாகட்டும். . . . இந்த அத்தாணி
மண்டபம் இடிந்து தூள் தூளாகட்டும். . . . இப்படி வசனம் எழுதியவர் நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள். இப்படி மறவர்களை வசனத்தால் பெருமைபடுத்தியவரின் அரசு. . . . வீர
மறவர்களைப்பற்றிய வரலாற்றுச் செய்திகளை மறைத்து இருட்டடிப்பு செய்வது ஏன்?

தஞ்சை பெரியகோயிலுக்கு ஆயிரமாவது ஆண்டு நிறைவுவிழா கொண்டாடினார். அதற்கு முக்குலத்துமக்களின். . . . உலகத்தமிழர்கள் அனைவரின் சார்பிலும் அவருக்கு கோடானகோடி
நன்றி! நன்றி!!.

ஆனால் அக்கோயிலைக்கட்டிய பேரரசன் இராசராச சோழன் தேவர் குலத்தில் பிறந்தவர் என்பதை வரலாறுகள் மிகச்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. உலகம் முழுவதும்
தமிழர்களின் வீரம், பண்பாடு, நாகரிகத்தை பரப்பிய தமிழ் மாமன்னர்
இராசராசசோழன்,உலகத்தமிழர்கள் அனைவருக்கும் உரிமையுடையவர் என்பது மறுக்கமுடியாத, மறுக்கக்கூடாத உண்மை. ஆனால், அவர்” போர்த் தொழில் உரிமையி லெய்தி யரசு
வீற்றிருந்து. . . “ என்று வீர்ராசேந்திர சோழதேவரின் கல்வெட்டுக்கூறுவதும், கொடும்பாளூர் இருக்குவேளிர் என்னும் கள்ளர் அரசர்குடியிலிருந்து பிறந்ததே சோழர்குடியென்று, மூன்றாம் குலோத்துங்க சோழனின் முதல் அமைச்சர் சேக்கிழார்
பெருமானும், மூவர் பாடிய தேவார திருமுறைகளை தொகுத்து பேரரசன் இராசராசசோழனுக்கு தொண்டுசெய்த திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அடிகளும் சோழர் காலத்திலேயே பாடி அரங்கேற்றம் செய்து — இராசராச சோழன் கள்ளரே என்பதை உறுதிபடுத்தியுள்ளனர்.

(ஆதாரம்:முப்பது கல்வெட்டுக்கள் என்ற நூலின் பக்கம் 203,
முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு ER.140/1928 கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் கள்ளர்களே என எழுதியுள்ள கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய சோழர்கள் புத்தகம் 1 பக்கங்கள் 184, 146, 224, 225, திருத்தொண்டர் புராணம்(பெரியபுராணம் பக்கம் 491)
& திருத்தொண்டர் திருவந்தாதி). இந்நிலையில் இராசராச சோழன் பிறந்தது கள்ளர் குலமே என்ற வரலாற்றுச்செய்தியை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

அவ்வாறு செய்துவது முக்குலத்து மக்களையே புறக்கணிக்கும் செயலாகும்..இராசராச சோழனையே அவமதிக்கும் செயலாகும். அரசு அதிகாரிகளே உண்மை வரலாற்றை மறைத்ததின் விளைவாகத்தான்
சிவநேசச்செல்வனை, சிவபாதசேகரனை(சிவனின் பாதங்களை தலையில் தாங்கியவன் என்ற விருதுகொண்டவனை) “வாங்கக் குடம் நிறைக்கும் பால்தரும் பசு”(எ) காமதேனுவை “நந்திகேசுவரராக” தஞ்சை பெருவுடையார்(சிவபெருமான்) முன் பிரதிஸ்டை செய்து,குடம் குடமாக பாலாபிசேகம், பன்னீர் அபிசேகம், மஞ்சள்அபிசேகம் செய்து, பூவிட்டு
பொட்டுவைத்து தேங்காய் உடைத்து சூடக்கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்ட

அந்த இராசராசசோழனை— “பசுவை வெட்டிக்கொன்று அதன் ஊன் உண்டவனா?” என்று பொதுமக்கள் கேட்கின்றனர். இதற்கு யார் காரணம்?அதுமட்டுமல்ல. “இராசராசனின் சிலையை பெரிய
கோயிலுக்குள் வைக்காமல் கலைஞர் வெளியில் வைத்து திறந்ததற்குக்காரணம், இராஜராஜசோழன் தீண்டத்தகாகவன்” என்று அவர்களே ஒரு காரணமும் சொல்கின்றனர். இதை என்னிடமே
கேட்டார்கள்? “தீண்lடத்தகாதவன், எப்படி பெரியகோயிலை கட்டி அதனுள்ளே சென்று கும்பாபிஸேகம் செய்தான்? இராசராசன் என்ற பெயரை தில்லைவாழ் அந்தணர்களதான், தில்லை
நடராசர் கோயில் வைத்து பெயர் சூட்டினார்கள். அவர்தீண்டத்தகாதவர் என்றால் எப்படி தில்லை நடராசர் கோயிலுக்குள் வைத்து இந்தப்பெயரை சூட்டியிருக்கமுடியும்.

இன்றும் கள்ளர்களுக்கு ஈராயிரத்துக்கும் மேற்பட்ட பட்டப்பெயர்கள் உள்ளன. அதில் ஏதாவது ஒரு பெயராவது உங்களுக்கு உண்டா? இருந்தால், உங்கள் வீட்டு திருமண அழைப்பிதழ் ஏதாவது இருந்தால் காட்டுங்கள் பார்ப்போம். கிராமங்களில் இருக்கும்வரை நீங்கள்
பள்ளர் என்று கூறிக்கொள்கிறீர்கள். நீங்கள் சென்னை போன்ற பகுதிக்குச்சென்றவுடன் உங்களை தேவர் என்று கூறிக்கொண்டு சென்னைவாசிகளை நம்ப வைத்து பொய்மையை அரங்கேற்றம்
செய்கிறீர்கள்..எடுத்துக்காட்டிற்கு ஒரு உண்மையை இங்கு குறிப்பிடுகிறேன். என் நண்பன் ஒருவன் சேரியைச்சேர்ந்தவன் மகாலிங்கங்கம் என்று பெயர் என்னுடன் பள்ளியில் படித்தவன். அவன் அசோக் லைலாண்டு நிறுவனத்தில் வேலைகிடைத்து சென்னை சென்றுவிட்டான்.

அவன் எங்கள் கிராமத்திற்கு வந்தவுடன், சென்னையில் நீ இருக்கும் விலாசம் கொடு என்று கேட்டேன். தன்னை மகாலிங்கம் தேவர் என்று கேட்டால், என் தெருவாசிகள் என் வீட்டிற்கு வழி சொல்வார்கள். என்றான். என்னப்பா? நீ? நம் சொந்த ஊரில் உள்ள உண்மையான பேரை
மறைத்து, சென்னையில் போய் ஏன் பொய்யாக தேவர் என்று முக்குலத்துமக்களின் பட்டப்பெயரை கூறுகிறாய்? சென்னையில் எல்லாம் தேவர் என்று சொன்னால்தான் மதிப்பு மரியாதை தருவார்கள். அதனால்தான், என்னை அங்கே தேவர் என்று கூறிக்கொள்கின்றேன். என்றான். அவன் மட்டும்தான் பொய்கூறுகிறானா? நாங்கள் இராசராச்சோழனின் குலத்தில் பிறந்தவர்கள் என்று அவர்களின் இனத்தவர் முழுவதும் கூறிகொண்டு சுவரொட்டிமூலம் விளம்பரமும் செய்கின்றனரே!” உள்ளத்தால் பொய்யாது ஒழுகின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம்
உளன்”(குறள் 294) என்ற திருவள்ளுவரின் வாக்கை மறந்தே அவர்கள் நடந்துகொள்கின்றனர்.
பின் எப்படி அவர்களுக்கு மதிப்பு மரியாதை ஏற்படும். மதிப்பு மரியாதை எல்லாம் தானாகவே பிறக்கவேண்டுமே அல்லாமல், பொய் கூறுவதாலும், பொய் வேடம் போடுவதாலும் கிடைக்காது. மல்லர்கள் என்போர் மல்யுத்தம் தெரிந்த வீர்ர்களைக் குறிக்கும் அம்மல்யுத்தம் தெரிந்த வீர்ர்கள் எல்லா சாதியிலும் இருந்துள்ளனர் என்று வரலாறு தெளிவாக கூறுகிறது. எடுத்துக்காட்டாக

காஞ்சிப்பல்லவன் முதலாம் நரசிம்மவர்மன்(கி.பி.630-668) சிறந்த சிவபக்தன். மாமல்லபுரத்துச் சிற்பங்களை படைத்துத் தமிழகத்து வரலாற்றில் அழியாத புகழிடத்தைப்பெற்றான். இவனுக்கு மாமல்லன்
என்ற சிறப்புப் பெயருண்டு. இவன் மல்யுத்த வீரன். இவன் என்ன பள்ளரா? பொய்மை கூடாது. அது நல்லொழுக்திற்கு விரோதி. சமூகத்தில் யாரும் அவனை மதிக்க மாட்டார்கள். பொய்மையை
அவர்கள் சொற்பகாலத்திற்கு மட்டுமே அரங்கேற்றலாம். பின் சாயம் வெளுத்துவிடும்.


இராசராசசோழனின் பெரிய பாட்டியார் மழவராயர் மகள்
செம்பியன் மாதேவியார் பலசிவாலயங்களை கற்றளியாக எடுப்பித்து அதற்கு நாள் வழிபாட்டிற்கும் விழாக்களுக்கும் நிவந்தமாக இறையிலி நிலங்கள் அளித்துள்ளாரே.அதுமட்டுமல்ல தஞ்சாவூர் ஜில்லாவில் கோனேரிராசபுரம் (எ) திருநல்லம் என்னும் ஊரிலுள்ள சிவாலயத்திற்கு தன் கணவன் பெயரான ஸ்ரீ கண்டராதித்தன் என்று தன் கணவன் பெயரையே வைத்து மக்கள் நாள்தோறும் வழிவட்டுவந்தனரே. அம்மழவராயர் மகள் என்ன தீண்டத்தகாதவரா? அதுமட்டுமல்ல. அக்கோயிலினுள் தன்கணவர் கண்டராதித்த தேவர் சிவலிங்கத்தை வழிபடுவதாக படிமம் வைத்துள்ளதை இன்று காணலாம்.

கண்டராதித்த தேவர் தீணடத்தகாதவர் என்றால் எப்படி கோயிலினுள் படிமம் வைத்து நாள்தோறும் பூசைசெய்தார்கள்.(ஆதாரம்: “SII. Vol.III No.146). மேலும் நாகப்பட்டிணம் தாலுக்காவிலுள்ள செம்பியன்மாதேவி கோயிலில் தற்போதும் ஆண்டுதோறும் செம்பியன்மாதேவி படிமத்தை ஊர் முழுவதும் வீதிஉலா செய்து அதற்கு கற்பூர ஆரத்தி எடுத்து அனைவரும் பிராமணர்கள் உட்பட அனைவரும் வணங்கி வருகின்றனர்.

(சதாசிவப்பண்டாரத்தார் அவர்களின் பிற்காலச்சோழர் வரலாறு பக்கம் 69) தீண்டத்தகாதவருக்கு எப்படி கற்பூர ஆரத்தி எடுக்கிறார்கள்? இந்த மழவர் அரசி செம்பின் மாதேவியார் கற்றளியாக அமைத்த பிற கோயில்கள் :”விருத்தாசலம், திருகோடிகா,தென்குரங்காடுதுறை,செம்பியன் மாதேவி, திருவாரூர் அரநெறி, திருத்துருத்தி, ஆநாங்கூர், திருமணஞ்சேரி, திருவக்கரை என்னும் ஊர்களிலுள்ள சிவாலயங்களாம். முதல் இராசராச்சோழன் மகனாகிய கங்கைகொண்டசோன், செம்பியன் மாதேவியிலுள்ள திருக்கயிலாயமுடையார் கோயிலில் கி.பி.1019இல் இவ்வம்மையின் படிம்ம் எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ளான். எனவே, இவ்வம்மை இறைவன திருவடியையடைந்த அண்மையிலேயே தெய்வமாக்க் கருதி கோயியலில் படிம்ம் வைந்து முடிமன்னனால் வணங்கப்பெற்றுள்ளமை அறியத்தக்கது(எழுதியவர் வரலாற்றுப்பேரறிஞர் அமரர் தி.வை.சதாசிவப்பண்டாரத்தார்.

பிற்காலச்சோழர் வரலாறு பக்கம்.72 கல்வெட்டுக்கள் Ins
47 of 1918, Ins.36 of 1931, SII.Vol.III No.144, Ins.485 of 1925, Ins.571 of
1904, Ins.103 of 1926 துருத்தி—குற்றாலம்.I:ns.75 of 1926, Ins.9 of 1914. Ins.200
of 1904 & Ins.481 of 1925)

தெய்வமாக் கருதி மன்னன் உட்பட அனைத்துபொதுமக்களாலும் அந்தணர் உட்பட அனைவராலும் வணங்கப்பட்ட செம்பியன் மாதேவியார் தீண்டத்தகாதவரா? இவர்கள் சிவனின் வாகனமான ஆ இனத்தை உண்டவர்களா? . சோழர் காலத்தில்
“ஆ உரித்துத்தின்போர்” சமூகத்தில் தாழ்ந்தவராவார்(ஆதாரம்: டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய மக்களும் பண்பாடும் பக்கம்.332) செம்பியன் மாதேவியார் அந்த இனத்தில் பிறந்திருந்தால், அவருக்கு எப்படி கற்பூர ஆரத்தி எடுத்து வணங்குவர். இன்றும் அவரை
வணங்கிவருகின்றனரே? அது எப்படி? தீண்டத்தகாதவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்ட காலம் கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளுக்குள்தான். இராசராசன் காலத்தில்தான்
தீண்டத்தகாத கொள்கை மிகவும் உச்சக்கட்டத்தில் இருந்தது என்று பாகூரிலுள்ள திருமூலநாதர் கோயில் கல்வெட்டு கூறுகிறது. அவர்கள் தீண்டாச்சேரியில் வாழவேண்டும் என்றும் பள்ளப்பகுதியில்தான் வாழவேண்டும் என்று அக்கல்வெட்டில் ஆணைபிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கும் கிராமங்களில் சேரிகள் 1 கி.மீ. தள்ளி ஊருக்கு வெளியில்தானே இருக்கிறது. இந்த நிலை உங்களுக்கு ஏன் ஏற்பட்டது. இதற்கு இந்த ஆணையும் ஒரு காரணம் என்பதை நீங்கள் அறிவீர்களா? அந்த ஆணைபிறப்பித்த இராசராச சோழன் தீண்டத்தகாதவர் என்றால், இந்த ஆணையை அவர் வெளியிட்டு கோயில் கல்வெட்டிலும் எப்படி
பொறித்துவைத்திருக்கமுடியும்?. நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப்போல், உங்கள் நடவடிக்கையால் உங்களைப்பற்றிய பழைய கதைகளையெல்லாம் கிளறி ஏன் நீங்களே உங்களை
தாழ்வுபடுத்திக்கொள்கின்றீர்கள்
..

மாட்டுப்பொங்கல் அன்று பசுவிற்கு மாலை மரியாதையெல்லாம் செய்கின்றீர்கள். நீங்கள் இந்துக்கள்தானே? காமதேனு (எ) பசுவும்
அதன் இனமும் சிவனின் வாகனமல்லவா? இன்னும் ஏன் அவற்றை வெட்டி உண்ணுகின்றீர்கள். குறைந்தபட்சம் இனிமேலாவது ஆ வினை வெட்டிக்கொல்லாமல் இருங்கள். பார்ப்போம். அப்பொழுதாவது உங்களுக்கு சமூகத்தில் மதிப்பு மரியாதை ஏற்படலாம். என்று அறிவுரைசெய்தபின் பதிலேதும் சொல்லமுடியாமல் சென்றுவிட்டனர்.. அதுமட்டுமல்ல
தீண்டத்தகாதவன் எப்படி கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்திருக்கமுடியுமா? என்றுகூட அவர்களுக்கு யோசிக்கத்தெரியவில்லை. யாரோ சென்னதை அப்படியே வந்து ஒப்பிக்கின்றனர்.இராசராசன் சிலையை வெளியேவைத்ததற்கு இராசராச சோழன் காலத்தில் கொண்டுவந்த ஆகமவிதிதான் காரணம் என்றும், ஆகமவிதிப்படி மனிதனின் சிலையை கோயிலுக்குள் வைக்கக்கூடாது என்று ஆகமவிதிகளை விதித்து சட்டம் இயற்றி அதை அமுல்படுத்தியவனே இராசராசன்தான் என்றும்—அவ்விதிகளைக்காட்டி முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி
அம்மையார் அவர்களின் மத்திய அரசு, இராசராசனின் சிலையை பெரியகோயிலுக்குள் வைக்கவேண்டும் என்று கலைஞரின் தமிழக அரசு அனுமதி கேட்டபோது மறுத்துவிட்டது என்று 12-06-2006 திங்கள் கிழமை மாலை

தஞ்சை திலகர் திடலில் நடந்த பொதுக்கூட்டத்திலேயே
கலைஞர் அவர்கள் விளக்கமாக குறிப்பிட்டு பேசியுள்ளார்.தமிழக அரசு அம்மன்னனின் இயற்பெயர் அருண்மொழிச் சோழன் என்று கல்வெட்டில் தவறாக வெட்டிவைத்திருப்பதை அழித்துவிட்டு அம்மன்னனின் இயற்பெயர் அருண்மொழித் தேவன் என்று இப்போதாவது தவறைத்திருத்தி அக்கல்வெட்டில் பொறித்துவைக்கவேண்டும்
.

இல்லையேல் அவர்களின்
பொய்விளம்பரமும் தவறான நடவடிக்கையும் தொடர்ந்து சட்டம் ஒழுங்குப்பிரச்சினை ஏற்பட காரணமாகக்கூடும்.. இராசராச தேவேந்திர சோழதேவர் என்று அவர்கள் பொய்விளம்பரம்
செய்கின்றனர். தேவேந்திர சோழதேவர் என்று எந்த கல்வெட்டில் இருக்கிறது? அவர்கள் ஆதாரம் காட்டமுடியுமா? இராசராச தேவர் என்றுதான் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. “உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து அலகையாய் வைக்கப்படும்” (குறள்-850) அவர்கள் அவ்வாறு விளம்பரம் செய்வது மட்டுமேல்ல. இராசராசன் பிறந்த சதயத்திருநாள் அன்று தஞ்சை பெருவுடையார் கோயில் முன் உள்ள அப்பேரரசனின் திருஉருவச்சிலையின் இரண்டு கைகளிலும் அவர்களின் கட்சிக்கொடியை கட்டிவரம்புமீறிசெயல்பட்டுவருகின்றனர். (கடந்த சதயத்திருநாள் அன்று இப்படி சிலையியன்மீது கொடியைகட்டி முக்குலத்து மக்களின் கோபத்தை தூண்டிவிட்டார்கள்.) போலீசார் இதனை கண்டுகொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. .
இதற்கு காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் துணைபோகின்றனர். இதனால், சட்டம் ஒழுங்குப்பிரச்சினைகள் ஏற்படுகின்றன.. அவ்வினத்தோர் இவ்வாறு செய்வதற்கு காரணம்,
அவர்கள மேல் சமுதாயத்தில் வலுக்கட்டாயமாக கலப்புத்திருமணம் செய்யவேண்டும் என்று பொதுமக்களின்முன் அநாகரீகமாகவும் கீழ்த்தரமாகவும் மேடைபோட்டு பேசியும் வருகின்றனர்.

அதுமட்டுமல்ல.. நீங்கள் இந்து நாளிதழில் Matrimonial Colum
பார்க்கவும். அதில் அவர்களுடைய மகன், மகள்கள் நல்ல அரசுப்பணியில் இருக்கிறார்கள் என்றும் அவர்களைத்திருமணம் செய்துகொள்ள சாதி எதுவும் தடைஇல்லை என்று விளம்பரம் செய்கின்றனர். இப்போதாவது அவர்களின் உள்நோக்கம் புரிகிறதல்லவா? சமத்துவமும்,
சமதர்மமும் தானாகவே மலரவேண்டுமே அல்லாது வலுக்கட்டாயமாகத் திணித்தால், தமிழகத்தின் அமைதிக்கு ஊறு ஏற்படக்கூடுமல்லவா? இதற்கு அரசு அதிகாரிகளே துணை போகலாமா?

இராசராசசோழனின் சிலையில் இயற்பெயரான அருண்மொழித் தேவன் என்ற பெயர் மறைக்கப்பட்டுள்ளது.ஏன்? .உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலுக்கு எதிரில் இராசராச சோழனின் சிலையை தமிழக முதல்வர் திறந்துவைத்துள்ளார்கள். தமிழக முதல்வர் அவர்களின்
பெயருக்கு அருகிலேயே இராசராச சோழனின் இயற்பெயர்: அருண்மொழிச் சோழன் எனறு கல்வெட்டில் தவறாக வெட்டிவைத்துள்- ளார்கள். அருண்மொழிச்சோழன் என்று எந்த வரலாற்றுப்பதிவிலும் இல்லை. இருட்டடிப்பு செய்து வரலாறு மறைக்கப்பட்டுள்ளது
இராசராசசோழனின் இயற்பெயர்:

அருண்மொழித் தேவன் என்பதே சரியானது:. இதைப்பற்றி ஆராய்ச்சிப் பேரறிஞர் அமரர் திரு.தி.வை.சதாசிவப்பண்டாரத்தார் அவர்கள் பிற்காலச்சோழர் வரலாறு பக்கம் 74 மற்றும் 92ல் எழுதியுள்ளது வருமாறு.:”இவனுடைய பெற்றோர்கள் இவனுக்கு இட்டு வழங்கிய பெயர் அருண்மொழிவர்மன் என்பது.(SII. Vol.V Verse 61) அவ்வேந்தற்கு வழங்கிய சிறப்புப் பெயர்களுள் இராசராசன் என்பது யாண்டும் பரவி இயற்பெயர்போல் வழங்கி வந்தமையின் இவனது இயற்பெயராகிய அருண்மொழித்தேவன் என்பது வழக்கற்றுப்போயிற்று. முடிசூட்டிக்கொள்ளும் முன் இயற்பெயர் அருண்மொழித் தேவன் என்பதை டாக்டர் மு.வ.இராச மாணிக்கனார் அவர்களும் அவருடைய சோழர் வரலாறு என்னும் நூலில் பக்கம்144ல் குறிப்பிட்டுள்ளது வருமாறு: “சோணாட்டுக்குடிகள் அருள் மொழித்தேவனை .. பட்டம் ஏற்குமாறு தூண்டினர். ஆயினும் இராசராசன் அதற்கு இணங்கவில்லை.

தன் சிற்றப்பனான மதுராந்தகனுக்கு (உத்தமசோழனுக்கு)நாடாள விருப்பம் இருந்ததை அறிந்தான். அவனை அரசனாக்கினான். தான் அவனுக்கு அடங்கிய இளவரசனாக இருந்து நாட்டைக் கவனித்து வந்தான். முடிசூட்டிக்கொள்ளும் முன் இளவரசன் அருண்மொழித்தேவன் என்றே
குறிப்பிடப்பட்டார் என்பதை முனைவர் சி.கோ.தெய்வநாயகம் அவர்களும் அவருடைய சோழர் வரலாறு என்னும் நூலில் பக்கம் 53ல் எழுதியுள்ளது வருமாறு: “சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், பரமேசுவரனான இருமுடிச்சோழபிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்ற நான்கு பிராமணச்சகோதரர்களால் இரண்டாம் பராந்தக சோழனான சுந்தரசோழனின் மூத்த மகனும் போரில் வீரபாண்டியனின் தலையை கொய்த பெரும்வீரனான
ஆதித்தகரிகாலன் சதிச்செயல்மூலம் வஞ்சகமாக கொலைசெய்யப்பட்டான்.(ஆதாரம்: காட்டுமன்னார் கோயிலுக்கணித்தாகவுள்ள உடையார் குடிகல்வெட்டு எண். Ep.Ind.Vol. XXI No.27). எனவே, ஆதித்தகரிகாலனின் தம்பி

அருண்மொழித் தேவன் என்ற இளமைப்பெயருடைய
இராசராசனே முடிபுனைந்து அரசப்பொறுப்பினை ஏற்கவேண்டும் என்றே மக்களும் அறிஞர்களும் சோழ அரசியல் அதிகாரிகளும் விரும்பி வேண்டி நின்றனர். அந்நிலையில் இரண்டாம்
பராந்தகன் இராசகேசரி சுந்தரசோழனின் பெரிய தந்தை கண்டராதித்த தேவரின் மனைவியும் மழவர் குலத்தில்
பிறந்தவளும் சைவத் திருக்கோயில் வழிபாடு மற்றும் திருப்பணிகளில் மிகுந்த ஈடுபாடு காட்டியவளும் அரசியல் திருக்கோயில் பணியாளரிடையே
பெரும் செல்வாக்குப்பெற்றவளுமாகிய செம்பியன் மாதேவி தம் திருவயிறு உதித்த மதுராந்தக உத்தமசோழன் சோழ அரியணை ஏறி ஆட்சிசெய்ய பெருவிருப்பம் கொண்டவனாக இருந்துள்ளான.

எனவே, சிறிய தகப்பன் முறையிலான உத்தமசோழனது விருப்பத்தை மதித்து தமக்குரிய அரியணை ஏற்றத்தை விட்டுக்கொடுத்து உத்தமசோழனை(மதுராந்தகனை) கி.பி.970 முதல் கி.பி.985 வரை
சோழ நாட்டை ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஆட்சிசெய்ய அனுமதித்த பேருள்ளம் படைத்தவனாக …. இராசராசனை குறித்து திருவாலங்காட்டுச் செப்பேடுகள் பெருமிதம் அடைகின்றன.” “கோப்பரகேசரிவர்மரான ஸ்ரீ உத்தமசோழ தேவர்” என்று திருவிடைமருதூர் கல்வெட்டு கூறுகின்றது (Ibid.Nos.128,131 and 150) மேலும் முனைவா சி.கோ.தெய்வநாயகம் பக்கம்
47ல் எழுதியுள்ளது வருமாறு:”உத்தமசோழனுடைய கல்வெட்டு ஒன்று அருண்மொழித்தேவ கைக்கோளர் படை ஒன்றை சுட்டுகிறது. எனவே, வாலிப வயதில் அருண்மொழித்தேவன், உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தில் சோழர்களின் ஒரு குறும்படைப் பிரிவிற்கு தலைவனாகவும் பாட்டியார் செம்பியன் மாதேவியின் திருக்கோயில் திருப்பணிகளுக்கு அன்போடு உதவியுமுள்ளான் என அறியமுடிகிறது. சோழநாட்டின் தலைநகரான தஞ்சாவூர் அரண்மனையில்
அருண்மொழி தேவத் தெரிந்த திருப்பரிகலத்தார் என்ற வேளம் இருந்தது. இந்த அரண்மணைப்பகுதிக்கும் அருண்மொழித்தேவன் என்ற பெயரே சூட்டப்பட்டிருந்தது(பக்கம் 56). இராசராசசோழன் பிறந்தவுடன் பெற்றோர்கள் சூட்டிய அருண்மொழி வர்மன் என்ற பெயர் வழங்கப்படவில்லை.

அவர் தேவர் குடும்பத்தில் பிறந்ததால், அருண்மொழித்தேவன் என்றே
அனவரும் அழைத்ததால், சுமார் 42 வயதுவரை அருண்மொழித் தேவன் என்ற பெயரே இயற்பெயராகவும் இளமைகாலப் பெயராகவும் அமைந்தது. தமிழகம் ஊரும் பேரும் எழுதிய ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் அந்நூலின் பக்கம் 120 & 161ல் கறிப்பிட்டுள்ளதாவது: “இம்மன்னனது இயற்பெயர் அருண்மொழித்தேவன் என்பதாகும்.
தஞ்சை (தற்போது நாகை) மாவட்ட மாயவர வட்டத்தில் அருமொழித் தேவன் என்ற பெயருடைய இரண்டு ஊர்களும், நாகப்பட்டின வட்டத்தில் ஒர் அருமொழித்தேவனும் உள்ளன. தென் ஆர்க்காட்டுச் சிதம்பர வட்டத்திலும் அருமொழித்தேவன் என்னும் ஊர் உண்டு.. பாண்டி
மண்டலத்தைச்சேர்ந்த அருண்மொழித்தேவபுரம் என்றொரு ஊரும் உண்டு.இவ்வூர்கள் யாவும் அருண்மொழித் தேவன் நினைவாக ஏற்பட்ட ஊர்களாகும்.

உத்தமசோழன் கி.பி.985ல் இறந்தான். பக்கம் 53ல் முனைவர் சி.கோ. தொடர்ந்து எழுதியுள்ளது வருமாறு: “15 ஆண்டுகள் உத்தமசோழன் ஆட்சியில் போர்கள் ஏதுமின்றி, தாய்செம்பியன் மாதேவியின் சைவத்
திருக்கோயில் பணிகளுக்கு உதவிய அமைதியான சூழலில் அமைந்தது. அந்நிலையில் முதல் பராந்தகனாலும், சுந்தரசோழனாலும், ஆதித்த கரிகாலனாலும் வெற்றிகொள்ளப்பட்டு அடக்கி வைக்கப்பட்டு இருந்த சேரர்களும் பாண்டியர்களும், வேங்கிநாட்டவரும் எழுச்சிபெற்று
சோழப்பேரரசை எதிர்க்கலாயினர். அந்நிலையில் சோழநாட்டின் எல்லைப்பகுதிகளில் அமைதி குலைந்து கலக்கம் ஏற்படுவது இயற்கை. இச்சூழலில்தான், மக்களின் பெருவிருப்பத்தைத் தவிர்க்க இயலாதவனாக இளவரசன் அருண்மொழித்தேவன் இராசராசன் என்ற ஆட்சிச்பெயருடன்
கி.பி. 985ஆம் ஆண்டு ஜுலை மாதம், 18ஆம் நாளுக்கு இணையான ஆடிமாதம் புனர்பூச நட்சத்திரம் கூடிய சனிக்கிழமையில் முடிசூட்டப்பட்டு சோழப்பேரரசின் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுள்ளான். இதனை திருவாலங்காடு, கரந்தை செப்பேடுகள் எடுத்துரைக்கின்றன. (Mysore Gazetteer Vol. II. Part II, page 943) அப்போது ஏறத்தாழ 42 வயது.(பக்கம் 102) இராசராச சோழனின் மகன் இராசேந்திரசோழனும், தன்தந்தையின்
இயற்பெயரால் அருமொழி தேவனிற்க் கோயில். . எனக்குறிப்பிட்டு கி.பி.1016ஆம் ஆண்டு கல்வெட்டு வெளியிட்டார்.,இக்கல்வெட்டைக்காண்க:”. . . யாண்டு நாலாவது நடுவிருக்கும் கொட்டையூர் வூவத்தபட்ட ஸொமாஜியார் . . சொளெந்திரசிங்க ஈஸ்வரமுடையார் கோயிலின்
வடபக்கத்து சாலை அருமொழிதேவனிற்க். கோயில் கருமமாராயாவிருந்து. . .
.(ஆதாரம்:முனைவர் சி.கோ.தெய்வநாயகம் எழுதிய சோழர் வரலாறு பக்கம் 62) . இக்கல்வெட்டில் இராசராசன் கட்டிய கோயில் என்று இராசேந்திரசோழன் குறிப்பிடவில்லை. தன் தந்தையின் இயற்பெயராகிய அருண்மொழித் தேவன் கட்டிய கோயில் என்றே குறிப்பிட்டுள்ளதிலிருந்தே, அம்மன்னர்கள் தாங்கள் பிறந்த தேவர் குலத்தில் எவ்வளவு ஈடுபாடும் மனச்சார்பும் உடையோராய் இருந்தனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக தெரிகிறதல்லவா?இக்கோயில் பற்றிய வரலாற்றுச் செய்தியை உங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

இக்கோயில், இராசராச சோழன் முடிசூட்டிக்கொண்டபிறகு, அவரது 14வது
ஆட்சி ஆண்டில் இராச ராசசோழனால் கட்டப்பட்டது. எனவே, “இராசராச சோழனிற்க் கோயில்” என்றுதானே இராசேந்திரசோழனின் கி.பி.1016ஆம் ஆண்டில் வெட்டப்பட்ட அக்கல்வெட்டுக் குறிப்பிடவேண்டும். ஆனால், அவ்வாறு குறிப்பிடாமல், இராச ராசசோழனின் இயற்பெயராகிய
அருண்மொழி தேவனிற்கோயில் என்று கல்வெட்டில்
வெட்டிவைக்கப்பட்டதிலிருந்து,முடிசூட்டிக்கொண்டபிறகும் இராசராசனின் இயற்பெயரிலேயே அக்கோயில் அனைவராலும் அழைக்கப்பட்டிருந்தது என்பது தெள்ளிதின் தெளிவாக தெரிகிறது அன்றோ?.அதுமட்டுமல்ல. இளவரசன் அருண்மொழித்தேவன் முடிசூட்டிக்கொண்டபிறகும், அவரை “பெரிய தேவர்” என்றுதான் அனைவரும் அழைத்துள்ளனர்.

எனவே, பெரிய தேவர் என்ற விருதுபெயர் பெற்றார் (ஆதாரம்..முனைவர் தெய்வநாகம் எழுதிய சோழர் வரலாறு பக்கம் 49) இராசராசசோழன் பெரியதேவர் என்றால், இராசேந்திரசோழனை அனைவரும் சிறியதேவர் என்று அழைத்திருக்கவேண்டும் என்பது உய்த்துணரக் கூடியதாகும்.. இராசராச சோழன் முடிசூட்டிக்கொண்ட பிறகு “திரு.இராஜ ராஜ தேவன்” என்ற பெயர் தாங்கிய வெள்ளிக்காசை வெளியிட்டார்(ஆதாரம்..ஹுல்ஸ் EA.XXV பக்கம்317 கே.ஏ.நீலகண்டசாஸ்திரிகளின் சோழர்கள் புத்.1 பக்கம்.23) அருண்மொழித் தேவ வளநாடு, அருண்மொழித்தேவ பெருந்தெரு, அருண்மொழித்தேவ மரக்கால், அருண்மொழிதேவ சாலை, அருண்மொழித்தேவ வாய்க்கால் என்று இராசராச சோழனின் ஆட்சியின்போது வழங்கிவந்த பெயர்கள் யாவும், அவருடைய இயற்பெயரான அருண்மொழித் தேவன் என்பதை உறுதிபடுத்துகின்றன.

(ஆதாரம்: TAS VPP 29-30. 186 OF 1925, 227 OF 1921, 401 OF 1921, SII III 1908)
குறிப்பு: பிரிட்டிசு அரசு குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவந்ததற்கு ஒரு
காரணம், முக்குலத்து மக்கள் நாடாண்ட அரசர் குலம் என்பதை மறைத்துதான் கொண்டுவந்தது. அதுபோல்தான், தற்போது சில அரசு அதிகாரிகள் நம் வரலாற்றை மறைக்க முயல்வதையும்,
அதற்கு ஒரு இனத்தாரை தூண்டிவிடுவதையும் கண்டித்தே இக்கட்டுரையை இந்த தலைப்பிலேயே எழுதியுள்ளேன். முக்குலத்து மக்களுக்காக மட்டுமல்ல. மற்ற இனத்தவர்களுக்காகவும் சிலரின் பொய்மையையும், பொய்வேடங்களையும் தோலுரித்துக்காட்டியுள்ளேன்.
இவர்களிடமிருந்து உங்களுடைய திருமணம் ஆகவேண்டிய பெண் ஆண்களைக் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய நேரம் இது. வாய்மையே வெல்லும்.!

நன்றி : செம்பியன் மறவன்

 

This entry was posted in சோழன் and tagged , , . Bookmark the permalink.

One Response to “பெரியதேவர்” இராசராச சோழன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *