பாரதத்தின் பதினென் நரபதி மகிபதிகளில் ஒரு இனம் மறவர்

பழனி ஸ்தலபுரானம் கொண்ட பழனி செப்பேடாகட்டும்.நீலகண்டர் மடத்து செப்பேடாகட்டும் திருமலைநாயக்கன் தளபதி இராமப்ய்யன் செப்பேடாகட்டும் ஏன் பழனி பள்ளர் செப்பேடாகட்டும் பல செப்பேடுகளில் வரும் செய்தி இது தான்.

“வங்காளர்,சிங்களர்,சீனகர் ஆரியர்,பப்பரர்,ஒட்டியர்,மதங்கர்,மாளுவர்,மறவர்,மலையாளர்,கொங்கர்,கலிங்கர்,கருநாடர்,துளுக்கர்,துளுவர்,மறாட்டியர்,சூதர்,குச்ச்லியர்,குறவர் இப்படி படிகொத்த  பேர்களும்,பதினென் பூமியும் ஏழு தீவும்,நரலோகம்,பூலோகம்,உத்திரமும் என அனைத்து பட்டயங்களிலும் வருகிறது.

பாரதத்தின் பல பூமிகளில் ஒருவரது பூமி மறவர்பூமி இவர்களெல்லாம் பாரதத்தின் நரபதி(அரசர்கள்) ஆவர்,

பிற்கால போலி கல்வெட்டாய்வாளர்கள் பலரால் இந்த வாசகத்தில் மறவர் என்னும் வாசகத்தை நீக்கிவிட்டனர் போலும்.

 

 

கோனாட்டு தேவமார் பட்டயம் பழனி

===================================

இந்த பட்டயம் கோனாட்டு மறவர்களான விரையாச்சிலை தேவமார்கள் பழனியில் தங்கள் ஊருக்கு ஒரு  மடம் கட்ட ஒரு வீட்டு மனையை விற்று கிரயம் செய்த பத்திர ஓலை.07.01.1620 இல் எழுதுப்பட்டது. இதில் பழனி புலிப்பானி உடயார் நாயக்கர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இது திருமயம் அருகே உள்ள மேலைப்பனையூர் ராஜேந்திரனிடம் பெறப்பட்டுள்ளது.

 

 

ஆதாரம்:பழனி வரலாற்று ஆவணங்கள் செ.இராசு

This entry was posted in மறவர், வரலாறு. Bookmark the permalink.

2 Responses to பாரதத்தின் பதினென் நரபதி மகிபதிகளில் ஒரு இனம் மறவர்

Leave a Reply to sreedhar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *