தேவர்தள வாசகர் கடிதம்!

தேவர்தளத்திற்கு வணக்கம்,
உங்களது தேவர் தளம் மிக தரமாக செப்பனிட்டமைக்கு நன்றி! அதில் சில வரலாற்று  விசயங்களை பதிந்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. மேலும் குற்றப்பரம்பரை மற்றும் நேதாஜி பற்றி படிக்கும்போது தேவரின்&சுபாஷ் பற்றிய தகவல்கள் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் நான் முக்குலத்தோர் இல்லை. பல நாட்கள் ஏங்கியதுண்டு அக்குலத்தில் பிறக்காததற்கு. காரணம் நான் தேவர் வீட்டு மக்களுடன் நெருங்கி பழகி இருக்கேன். ரொம்ப ரொம்ப அன்பையும் சப்போர்டையும் எந்நேரத்திலும் தரும் வல்லமையும்,விவேகத்தையும்  கொண்டவர்கள்.(மன்னார்குடி தேவர், உள்ளிக்கோட்டை தேவர்). சில அரசியல் வியாபாரிகள் தங்களது மேல் சில பிரத்தியேக குணங்களை திணித்து காட்டுவதும். அதை பத்திரிகைகள் (தினமலர்) வசைபாடுவதும் வழக்கமாக கொண்டுள்ளது எனக்கே மிகவும் வருத்தமா இருக்கும். குறிப்பா சினிமா துறையில் காவிரி மாவட்ட தேவர்களின் பின்புல உழைப்பு என்றும் பாராட்டத்தக்கவை! (பாடல் ஆசிரியர்,நடிப்பு). நான் என்றுமே உங்கள் சமூகத்துடன் மோதல் ஏற்படும்போது காரணங்களை ஆராய்வேன் அப்போது அம்மோதல்களின் ஆழம் அரசியல் லாபத்துக்காகவே என்று தெளிவுபடும். ரெண்டு தரப்பினுயும் பொறுமையாக அலசி ஆராய்ந்து செயல்படாத மக்குகள் இருக்கிறார்கள் என்று என்னும்போதுதான் கொஞ்சம் வருத்தம். 

 

சில தாழ்த்தப்பட்ட மக்கள் என்னமோ மொத்தமா மற்ற எல்லோரையும் ஒரே மாதிரிதான் கருதுகின்றனர்.அது அவர்களின் பிறவிக்குணமே? அதிலும் மாற்றம் தேவை!
எங்க தாத்தா சொல்லுவாரு,
“வாழ்ந்தா தேவனா வாழனும்டா!
சொல்லிலும்! செயலிலும்! துணிவிலும்! “ … யென்று.
நான் வேறு சமூகம் என்ற போதிலும் அரவணைப்பதில் தெளிவாக/பொறுமையா  பதில் கூறுவதில் உங்களைப்போன்ற சமூகம் இல்லை மற்றும் பழைய மன்னர்(சோழ) பரம்பரை முக்குலத்தோர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். தமிழ் ஆராய்ச்சி பல்கலையில் இருந்து புலப்படுகிறது. அதை மற்றவர்கள் மறுக்க இயலாத போதிலும் ஆறறிவு கொண்ட படித்த  மனிதன் நிச்சயம் ஏற்க வேண்டும் என்றதில் நான் 100%ஒத்து போகிறேன்.மேலும் தாங்கள் தாராளமாக என்னுடைய பதிவை வெளியிடலாம். நான் தமிழன் என்ற கட்டமைப்பையே விரும்புகிறேன். ஆகையால் நமக்குள் ஒரு முற்போக்கு சிந்தனையுள்ள ஒற்றுமை வேண்டும்.மிக கடுமையான வாசகங்களைக் கொண்ட சில தளங்களின் இணைப்பினை தங்களின் தளத்தில் இருந்து நீக்க வேண்டுகிறேன். ஏன் என்றால் நீங்கள் கொடுந்த இணைப்பின் மூலம் மட்டுமே அதுபோன்ற மிகவும் அருவெறுக்கத்தக்க தளங்கள் இருந்தமை எனக்கு தெரியவந்தது.
நீங்கள் சட்ட ரீதியாக அதனை எதிர்கொள்ளலாமே! ஒரு விஷயத்தை தவறாக பாவிக்கும் நமது சமூகத்தில் தாழ்த்தப்பட்டோர்,பார்பனரே முதல் இடத்தில் உள்ளனர் இது ஊரறிந்த உண்மை!
ஆக இம்மாதிரியான விசயங்களை களையும் போது, புதியதோர் உலகம் செய்வோம் என்றும் தமிழன் என்ற போர்வையில் பயணிப்போம்!
நன்றி
A.ரமணி
புதுக்கோட்டை-கிழக்கு பகுதி
பிழைப்புக்காக -குவைத்தில்!
This entry was posted in தேவர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *