தமிழகத்திற்கு கொத்தடிமையாக வந்தவர்களே பள்ளர்கள் _ ஒரு வரலாற்று ஆய்வு

பள்ளர்கள் மற்றும் அவர்களின் ஒரு பிரிவினரான பிற்ப்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் “காலடி” போன்ற அனைவரும் கொத்தடிமைகளாக இருந்து காலம் காலமாக விவசாயம் மட்டும் பார்த்தவர்களே. இவர்கள் அரசாண்ட வம்சம் என்பது வெறும் கட்டுக்கதைகளே. இவர்கள் பூர்வீக தமிழர்களே இல்லை. இவர்கள் பல மலைகளை தாண்டி வந்திருக்கலாமே தவிர எதையும் இங்கே ஆண்டதில்லை . ஆதாரங்கள் பின்வருமாறு :

இதுவரை இலக்கியத்திலோ பிறவற்றிலோ இடம்பெறாத `பள்ளர்’ என்ற
வகுப்பாரைப் பற்றிப் பள்ளு இலக்கியங்கள் பேசுகின்றன. பள்ளு இலக்கியங்கள் கி.பி.பதினேழாம் நூற்றாண்டுக்குப் பிறகு வந்தவைகள் .இவைகளில் காலத்தால் முந்தைய முக்கூடற்பள்ளு என்பது , இப்பள்ளு இலக்கியங்களில் பேசப்படும் பள்ளர்கள் விவசாயத்
தொழிலாளர்கள்; கடைநிலை மக்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. இவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை காணும் முன் பள்ளு இலக்கியம் காட்டும் உற்பத்தி உறவுமுறை பற்றிக் காணலாம்.

முக்கூடற்பள்ளு இரண்டு வர்க்கங்களை முதன்மைப்படுத்துகிறது. முதல் வர்க்கம் உருவமற்ற நிலப்பிரபுவான இறைவனின் பிரதிநிதியாய் இருந்து நிலத்தைக் கண்காணிக்கும் பண்ணை விசாரிப்பான் என்பதாகும் . இரண்டாம் வர்க்கம் விவசாய உற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் பள்ளர்கள் என்ற வர்க்கத்தினர். நிலம் முக்கூடலில் கோயில் கொண்டுள்ள அழகர் ஆகிய திருமாலுக்குச் சொந்தமானது.”முக்கூடல் அழகர் பண்ணை” (பா:36) “கத்தர் திருமுக்கூடல் கண்ணர் பண்ணை”(பா.91) “முக்கூடல்பரமனார் அழகர் தம் பண்ணை”(பா.113) “அடிக்குள் அடங்கும் படிக்கு முதல்வர் அழகர் முக்கூடல் வயலுள்ளே.” (பா.129)ஆகிய வரிகள் இதை மெய்ப்பிக்கும் .

இடைக்காலங்களில் தேவதானம் முதலான பெயர்களில் மன்னர்களால் கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலவகையாக இதுவும் இருக்கலாம். இந்நிலங்களைப் பள்ளருக்குப் பிரித்துக் கொடுத்து, உற்பத்தியை மேற்பார்வையிடுபவனே பண்ணை விசாரிப்பான். இவன் கோயிலின் பிரதிநிதியாகவோ ,விசயநகரப் பேரரசுக் காலத்தில் மன்னனால் நியமிக்கப்பட்ட பாருபட்டயக்காரனாகவோ இருக்கலாம்.பண்ணைகளில் நேரடியான உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள் பள்ளர்கள். இவர்கள் கோயில் என்னும் உருவமற்ற ஆனால் நிறுவன வடிவமான நிலப்பிரபுவுக்குச் சொந்தமான பண்ணையோடு பிணைக்கப்பட்ட பரம்பரைக் கொத்தடிமைகள் . “பண்ணைஏவலறும் பள்ளியர்”(பா.5) “முத்தமிழ் நாட்டழகர் கொத்தடியான்”(பா.13) என்று இவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதே இதற்குச் சான்று. இந்தக் கொத்தடிமைகளை தலைமை தாங்கி வழி நடத்துபவன் தான் முக்கூடல் பள்ளுவில் வரும் வடிவழகக் குடும்பன. இவன் பண்ணை விசாரிப்பானால தலைவனாக நியமிக்கப்படுவதாகத் தெரிகிறது.

பள்ளர்களுக்கெல்லாம் தலைமையைப் பள்ளனாக இருக்கும் வடிவழகக்குடும்பன், கோயில் நிலத்தை எல்லாம் சேரிப் பள்ளர்களுக்குப் பிரித்துக் கொடுத்து சாகுபடி செய்கிறான் , பிறகு அறுவடையில் அவரவர் செலுத்த வேண்டிய பங்கை வசூலித்துப் பண்ணைக்காரனிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பும் இவனுடையதே . முக்கூடல் பள்ளுவில் தினச்சக்கரம், பெரிய நம்பி திருமாளிகை, ஏழு திருப்பதிக் கட்டளைகள், வடமேலந்திரன் மடம், ஆகியவற்றுக்குக் குறிப்பிட்ட நெல் அளக்கப்பட்ட செய்தியும், ஆடித்திருநாள் விழாவிற்கு 6000 கோட்டை நெல்லும், பங்குனித் திருநாள் விழாவிற்கு 6000 கோட்டை நெல்லும்,மண்டகப்படி சார்த்தும் செலவிற்கு 1000 கோட்டை நெல்லும், உள்ளூர் அந்தணர்க்கு 4000 கோட்டை நெல்லும்,நாள் வழிபாட்டிற்கு 8000 கோட்டை நெல்லும் வடிவழகக்குடும்பனால் அளந்து கொடுக்கப்பட்ட செய்தி இதில் தெரிகிறது . ஆனால் விளைச்சலில் பள்ளர் பெறும் பங்கு எவ்வளவு என்பதற்கான சான்று இல்லை, எனினும் அவர்களுக்கு மிகக்
குறைந்த அளவே கொடுக்கப்பட்டு மீதியனைத்தும் பறிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அடுத்து “முப்பழமும் சோறும் உண்ணவே நடத்திக்கொண்டீர்” என இளையபள்ளி பண்ணை விசாரிப்பானை எதிர்த்துப் பேசுவது இந்த யூகத்துக்கு இடமளிக்கிறது.

பள்ளர்கள் தங்களை அடிமை என்றும் , பண்ணை விசாரிப்பானை ஆண்டை என்றும் அழைக்கின்றனர். இச்சொல்லாட்சி ஆண்டான்அடிமை என்னும் நிலப்பிரபுத்துவ உறவுமுறையின் கொடுமையை வெளிப்படுத்துகிறது. ”பக்கமே தூரப் போயும் தக்க சோறென வெள்ளாண்மை பள்ளா பள்ளா என்பார் மெய்கொள்ளாதவர்” என்ற குடும்பன் கூற்று பள்ளர்கள் நீண்ட காலமாக தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட சமூக நடைமுறையைப் புலப்படுத்தும். குடும்பனை “சவுக்கினில் வைத்திடீர் ஆண்டே” என மூத்தபள்ளி பண்ணை விசாரிப்பானிடம் முறையிடுவது அடிமைகளைப் பண்ணைவிசாரிப்பான் சவுக்கால் அடிக்கும் வழிமுறை நிலவியதை மெய்ப்பிக்கும். அடிமையின் காலில் மரக்கட்டையை மாட்டி எந்த பக்கமும் நகர முடியாதபடி விலங்கிடுவது மற்றொரு வகைத் தண்டனை. “கண்சிவந்து பண்ணைக்காரணங்கே வந்த பள்ளன்தன் காலில் மரக்குட்டை சேர்த்தானே ” என்பது தான் இதற்க்கு ஆதாரம் .
மேலும் முக்கூடல் பள்ளுவில் வடிவழகக்குடும்பன், பண்ணை விசாரிப்பானால் இவ்வாறு தண்டிக்கப்படுகிறான். இவ்வுறவு முறையின் கோரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆவணங்களில் இன்னும் தெளிவாக வெளிப்படுகிறது.அதற்குமுன் வரலாற்றில் இதுவரை இலக்கியத்திலோ கல்வெட்டுக்களிலோ செப்பேடுகளிலோ காட்டப்படாத இப்பள்ளர் யார் என்ற கேள்விக்கு விடை காணலாம். இது குறித்து வரலாற்று அறிஞர்களிடையே பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அவை குறித்து வரலாற்று ஆய்வாளர் திரு கேசவன் விரிவாக ஆய்கிறார்.

நிலஉடைமையாளர்களான வேளாளர்கள் தம் பண்ணைகளில் பள்ளர்களையே கூலிக்கு அமர்த்தியிருந்தனர் என்றும் இவர்களை பாண்டிய மண்டலத்திற்கு வேளாளர்களே கொண்டு வந்து குடியமர்த்தினர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதைக் கூறுபவர் எட்கார்தர்ஸ்டன் வேளாளர்களுக்குள்ளே இழிநிலை அடைந்த ஒரு பிரிவினர் பள்ளர் என்னும் நிலைக்குத் தாழ்ந்தனர் என்பது மற்றொரு கருத்து. இக்கருத்தை வரலாற்று ஆய்வாளர் திரு. தங்கராஜ் பின்வருமாறு விளக்குகிறார்.

“உத்தேசமாக 14,15 ஆம் நூற்றாண்டு காலத்தில் பண்ணை விவசாய முறையும் பண்ணையாள் (வேலைக்காரர்) அமர்த்திச் செயல்பட்ட விவசாய முறையும் வளர்ந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பெருமளவு நிலவுடைமையும் பண்ணைமுதலாளிகள் உருவானதும் இக்காலத்திற்குப் பின்னரே எனக்கொள்ளலாம் . நிலஅபகரிப்பு, நிலம் வாங்கள் விற்றல் குத்தகை வாரம்-கடன் போன்ற நிலம் சம்பந்தப்பட்ட வழக்கங்கள் இக்காலத்திற்குப் பின்னரே உருவாகியிருக்க வேண்டும்.
இதனால் அதிக அளவு நிலம் சேர்த்த வேளாளர்கள் தங்களுக்குத் துணை வேலையும் பண்ணை வேலையும் செய்ய, அவர்களுக்குள்ளேயே நிலம் சேர்க்க முடியாது போனவர், நிலத்தைப் பறிகொடுத்தவர், நிலத்தை அடமானம் வைத்துவிட்டுத் திருப்ப முடியாது போனவர், நிலமே
இல்லாது இருந்தவர், ஏழையாயிருந்தவர் ஆகியவர்களைக் கூலிக்கு அமர்த்தியிருந்தனர். நிலவுடைமை வாழ்க்கையில் அபலையாகிவிட்ட வேளாளர், நிலவுடைமையில் வெற்றி பெற்ற வேளாளர்களிடமே குத்தகை-வாரம் முதலிய 77 முறையில் நிலம்பெற்று பயிர்த்தொழில் செய்திருக்கின்றனர். இவ்வகை வேளாளரே காலப் போக்கில் தனிக்குலத் தினராக அதாவது ஜாதியினராக உருவாகியுள்ளனர். இவ்விரு கருத்தையும் கேசவன் மறுக்கிறார். ”பள்ளர்கள் ஒரு குடியேற்றம் பிரிவினர் என்று கூறும் தர்ஸ்டன் எந்தக் காலத்தில் இக்குடியேற்றம் நடந்தது என்றும், எந்த இடத்திலிருந்து இவர்கள் குடியேற்றப்பட்டனர். என்றும் விளக்கவில்லை. மேலும் தமிழகத்தில் குறிப்பாகத் தஞ்சை மதுரை நெல்லை மண்டலங்களில் பல்வேறு ஜாதியினரின் குடியேற்றங்கள் நடந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றனவே தவிர பள்ளர் சாதியினரின் குடியேற்றத்திற்கு வரலாற்று ஆதாரம் இல்லை.

தங்கராஜ் கூறுவதைப் போல கி.பி.14,15 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்தான் தமிழகத்தில் வாங்கள் ,விற்றல், குத்தகை வாரம்,கடன்
போன்ற நிலம் தொடர்பான வழக்கங்கள் உருவானவை என்றில்லை. அதற்கும் முந்தைய காலங்களிலேயே நாம் இவற்றைக் காண்கிறோம். வாரம், காட்டுக்குத்தகை, மேல்வாரம், கீழ்வாரம் எனும் சொற்கள் குத்தகையைத் தெரிவிக்ககின்றன. நிலம் விற்பனைக்கும் வாங்கலுக்கும் கல்வெட்டுச் செய்திகள் ஆதாரமாக உள்ளன. எனவே கி.பி. 14,15 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே இத்தகைய வழக்கங்கள் நடந்தேறின .மேலும் அக்காலத்தில் பள்ளர்கள் குத்தகை பெறும் உழவர்களாக இருந்ததே இல்லை.

பள்ளுப் பாடல்களில் வரும் பள்ளர்கள் குத்தகை பெறுபவர்கள் அல்லர் பண்ணை அடிமைகளே. கி.பி. 1843 க்கு முன் பள்ளர்கள் மேல்ஜாதி நிலவுடைமை மக்களுக்குப் பண்ணை அடிமைகளாகவே இருந்தனர். ”பள்ளர்கள் எவ்வித விதிவிலக்கும் இன்றி விவசாயத்
தொழிலிலேயே ஈடுபட்டுள்ளனர். அதிலும் மற்றவர்கள் நிலங்களிலையே வேலை செய்துள்ளனர் . இதற்கு முந்திய காலங்களில் எவ்வித ஐயத்துக்கும் இடமின்றி இவர்கள் நிலமற்ற கட்டுண்ட அடிமைகளாகவே இருந்தனர். எனினும் இன்று அவர்களின்
22 சதவீதம் பேர் பண்ணையாட்ளாக உள்ளனர். 38 சதவீதம் பேர் கடந்த 10 ஆண்டுகளாகத்தான் குத்தகையாளர்களாக உள்ளனர். இது அரசாங்கத்தின் அதிக சலுகைகளால் தலித் பிரிவில் இருந்ததால் கிடைத்த முன்னேற்றம்

39 சதவீதத்தினர் நாட்கூலியாக உள்ளனர். ஒரே ஒரு நபர் மட்டுமே மிகச் சிறிய நிலத்தை உடைமையாக்கி விவசாயம் செய்கிறார்” என்கிறார் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை கிராமத்தை ஆய்வு செய்த சமூகவியலறிஞர் கத்லீன் கஃப். இது தஞ்சைக்கு மட்டுமின்றித் தமிழகத்திற்கே பொருந்தும் எனலாம். எனவே அண்மைக் காலத்திய சமூக வரலாற்று நிகழ்வுகளை 3,4 நூற்றாண்டுகளுக்கு முந்தைய சமூக நிகழ்வுகளோடு அப்படியே பொருத்த முடியாது. எனவே, குத்தகைதாரர்களான வேளாளர்கள் இழிநிலை அடைந்து பள்ளர்களாக உருவாகியிருக்க வாய்ப்பில்லை, பள்ளர்கள் நிச்சயம் இன்றைய அயல் மாநிலத்தில் இருந்து வந்த கொத்தடிமைகளே என்கிறார் கேசவன்.

கி.பி. 1500 வரை வரலாற்று ரீதியாகத் தீண்டாமை குறித்து ஆராய்ந்த டாக்டர் அனுமந்தன் பள்ளர்களின் தோற்றம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கிறார்: கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொண்டை மண்டலத்தை வேளாளர்கள் தாக்கி அங்கே குடியமர்ந்த போது பல்லவர்களை ஒடுக்கினர். அந்நேரத்தில் வேளாளர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட உயர்வகுப்புப் பல்லவர்கள் சோழர் படையில் சேர்ந்து படையாச்சி என்றழைக்கப்பட்டனர் என்றும், தாழ்நிலைப் பல்லவர்கள் அடிமையாக மாறிப் பள்ளர்களாக உருமாறினர் என்றும் இவர் கருத்துத் தெரிவிக்கிறார்.

ஆனால் பிற்காலச் சோழர் காலத்தில் எழுந்த மெய்க்கீர்த்திகள், கல்வெட்டுகள் ஆகியவற்றில் பள்ளர் என்ற சமூகப் பிரிவினர்
காணப்படவில்லை. ஜாதி முறைகளைச் சொல்லும் கல்வெட்டுகூட அந்தணரிலிருந்து புல்லுப்பறிக்கிற பறமன்வரை என்றுதான் கூறுகிறதே தவிர பள்ளர் இனத்தைக் குறிப்பிடவில்லை. நிகண்டுகளிலும் இலக்கியங்களிலும்கூட குறிப்புக்கள் இல்லை. எனவே டாக்டர்
அனுமந்தன் கருத்தை ஏற்றுக் கொள்வதற்கில்லை என மறுக்கும் கேசவன் முடிவில் தமது கருத்தை முன்வைக்கிறார்.

கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் விசயநகரப் நகரப் பேரரசின் ஒரு பகுதியாக மாறிய தமிழகத்திற்குள் ஏராளமான குடியேற்றங்கள் நடந்தேறின. கம்மவார்களும், நாயக்கர்களும் ரெட்டியார்களும் , நிலஉரிமை பெற்றுச் சிற்ச்சில பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். இவர்களில் சிலர் ஆயக்கார அமைப்பின் அதிகாரிகளாகவும் ஆனார்கள். இவர்கள் மட்டுமின்றி கைவினைஞர்களும் ,பணியாளர்களும் குடியமர்த்தப்பட்டனர் . கைவினைஞர்களாகவும், பணியாளர்களாகவும் இருந்த சேணியர், சாலியர், வண்ணார்,ஒட்டர் தொம்பரவர், சக்கிலியர் ஆகியோரின் குடியேற்றத்தினால் ஏற்கனவே இவர்களது தொழில்களைச் செய்து வந்த மக்கள் மத்தியில் ஒருவித வேலைப்பிரிவினை தொடங்கியிருக்கலாம்.

முந்தைய குடிமக்கள் தம் தொழிலை முழுவதும் கைவிட்டு, வேறு தொழிலைச் செய்திருக்கலாம். அல்லது தம் தொழில்களில் ஏதாவது ஒன்றை மட்டும் குறிப்பாக எடுத்துக்கொண்டு ஏனைய தொழில்களை
விட்டிருக்கலாம்.அன்றைய தமிழகத்தில் தோல்தொழில், சங்கு ஊதுதல் மாடு , அறுத்தல், பண்ணை அடிமை வேலை செய்தல் போன்றவற்றைப் பறையரே செய்தனர். குடியேற்றப்பட்ட தெலுங்குச் சக்கிலியர்கள் பிணம்
எடுத்தல், மாடு அறுத்தல் தோல், செருப்பு தைத்தல் போன்ற தொழில்களைச் செய்தனர். சக்கிலியர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டதற்கான சான்று இல்லை. ஆயினும் சக்கிலியர் தொழில்களுக்கும் பறையர் தொழில்களுக்கும் சில ஒற்றுமைத் தன்மைகள் உண்டு. மாடறுத்தல், தோல்தொழில் போன்றன இவ்விரு ஜாதியினருக்கும் பொதுவான தொழில்களாக இருந்தன.

இத்தன்மை பறையர்களுக்குள்ளே ஒருவித வேலைப் பிரிவினையை உண்டுபண்ணியிருக்கலாம்.அதாவது சக்கிலியர் குடியேற்றத்திற்குப் பின்னால் பறையரில் ஒரு பிரிவினர், இருவருக்கும் இடையே இருந்த பொதுவான தொழிலைக் கைவிட்டு, இருவரையும் வேறுபடுத்தும் தொழிலான பண்ணை அடிமைத்தொழிலில் மட்டுமே ஈடுபட்டிருக்கலாம். காலம் செல்லச் செல்லப் பண்ணை அடிமைத்தனத்திலேயே இருந்து, பண்ணைத் தொழிலை மட்டுமே கவனிக்கக்கூடிய சாதியினராக உருவெடுக்கக் காரணமாயிருந்தது எனலாம். வேறு தொழில்களையும் விட்டு விடாது செய்து கொண்டிருந்தவர்கள் பறையர்களாகவே இருந்தனர். வயல்களில் பள்ளஙகளில் மட்டுமே தொழில் செய்த வேலைப் பிரிவினர் பள்ளர் எனப்பட்டனர் எனலாம் என்கிறார் கேசவன்.

ஆக பள்ளர்கள் கி.பி. 14,15 ஆம் நூற்றாண்டு கால அளவில் தமிழகத்தில் அன்றிருந்த பறையர் இனத்தில் இருந்து பிரிந்த ஜாதியினர் என்ற
முடிவை ஒப்புக்கொண்டால், இடைக்காலத்திலும், பண்டைக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தின் கடைநிலையிலிருந்த ,இழிநிலையிலிருந்த, மக்கட்பிரிவினரான கடைசியர், இழிசினர், புலையர் பறையர் ஆகியோரின் வாரிசுகளே இவர்களும் என்பது தெளிவாகிறது.பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலத்திலிருந்து மக்கள் தொகை அறிக்கைகள் தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்குகின்றன. இவைகள் பள்ளர்-பறையர் ஜாதியர் பற்றிய பல தெளிவான செய்திகளைத் தருகின்றன.

அப்போதைய தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் பள்ளர் பறையர் வகுப்பார் 16 சதவீதத்தினர்; இவர்களில் 64 சதவீதத்தினர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். மற்றவர்கள் மற்ற பண்ணை வேலைகளை செய்துள்ளனர் .தமிழகத்தில் பள்ளர் பறையர் ஜாதியார் பெற்றிருந்த இடத்தை மலையாள நாட்டில் செருமர்களும் கன்னட நாட்டில் கோலேயாஸ்களும் தெலுங்கு நாட்டில் மலாஸ்களும் வகித்து வந்தனர். செருமர்களில் 93.5 சதவீதத்தினரும்,கோலேயாஸ்களில் 65.7 சதவீதத்தினரும் மலாஸ்களில் 75.5 சதவீதத்தினரும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இப்புள்ளி விவரங்களில் இருந்து சில உண்மைகளை அறியலாம்.

i.தமிழகத்தின் மொத்த மக்கட் தொகையில் பள்ளர் பறையர் வகுப்பார் ஒரு கணிசமான அளவில் இருந்துவந்துள்ளனர்.
ii. விவசாய உற்பத்தியில் நேரடி உடல் உழைப்பில் ஈடுபட்டவர்கள் இத்தாழ்த்தப்பட்ட மக்களே,
iii. தமிழகத்தில் மட்டுமின்றித் தென்னிந்தியா முழுவதிலுமே தாழ்த்தப்பட்ட மக்களே விவசாய உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளனர்
iv. ஜாதிக்கும் தொழிலுக்கும் இடையே ஒரு பிரிக்கமுடியாத பிணைப்பு
இருந்து வந்துள்ளது என்பன போன்ற உண்மைகள் இப்புள்ளி விபரங்களிலிருந்து பெறப்படுகின்றன. இதனாலேயே பள்ளர்-பறையர் வகுப்பார் `விவசாயத் தொழிற் சாதியினர் என்று சமூகவியலாளர்களால் அழைக்கப்படுகின்றனர்.பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூக அமைப்பின் உற்பத்தி உறவில் இவர்களுடைய இடம் என்ன? `பண்ணையாள்’ என்று அழைக்கப்பட்ட இவர்கள் சமூகமாகவோ தனிப்பட்ட நிலையிலோ நிலத்தோடு பிணைக்கப்பட்டிருந்தனர். நிலவுடைமையாளரின் குடும்பம் முழுவதும் அழிந்தால் ஒழிய இவர்களுக்கு விடுதலை கிடையாது. அப்போதும் ஏழ்மையை விரட்ட ஓரிடத்திலிருந்து விடுபட்டு மற்றோர் இடத்தில் கொத்தடிமையாயினர்.அப்படியானவர்கள் நிலவுடையயாளிரின் தனிச்சொத்தாகக் கருதப்பட்டனர். இவர்களை விற்கவோ அடகுவைக்கவோ வாடகைக்கு விடவோ நிலவுடையமையாளருக்கு உரிமை உண்டு. நிலத்தோடு சேர்த்தும் தனியாகவும் இவர்கள் விற்கப்பட்டனர். ஒரு அடிமை 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை பகுதிக்கு ஏற்ப விலை போனதாகத் தெரிகிறது.

நிலவரி ஒன்றே அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக அமைந்திருந்த
ஆரம்ப காலக்கட்டங்களில் பண்ணைகளை விட்டுத் தப்பியோடிய கொத்தடிமைகளை பண்ணையார்களுக்கு மீட்டுத்தரும் முயற்சியில் மாவட்டக் கலெக்டர்களே ஈடுபட்டனர். 1830 இல் திருச்சி மாவட்டக் கலெக்டர் சேலம் மாவட்டக் கலெக்டருக்கு நிலத்திலிருந்து தப்பியோடிய பத்துப் பள்ளர்களை மீட்டுத்தரக் கோரி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது “பள்ளர்கள் நிலத்தின் அடிமைகள் எனவே நிலத்தைவிட்டு வெளியேறும் உரிமை அவர்களுக்கு கிடையாது நிலவுடைமையாளரான பிராமணர் அவர்களுடைய உதவியின்றி
நிலத்தைச் சாகுபடி செய்ய இயலாது.எனவே அவருக்கு அடிமைகளை மீட்டுத் தராவிடில் நிலமும் பாழாகும். அரசாங்கமும் நட்டமடையும்” என்று குறிப்பிட்டுள்ளார். நீதி மன்றங்களும்கூட, அடிமைமுறை மரபுவழிப்பட்ட நடைமுறை என்று பண்ணையாட்களை விற்கும் அடகுவைக்கும் பண்ணையார் உரிமைக்குச் சாதகமாகவே ஆரம்பக்காலங்களில் தீப்பளித்தன.அடிமைகள் அவர்கள் செய்த
சிறுசிறு தவறுகளுக்குக் கூடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

தாமஸ்பாபர் என்பவர் 1823 இல் சென்னையிலிருந்த கம்பெனியின் தலைமை நீதி மன்றத்திற்குச் சமர்ப்பித்த அறிக்கையில் “83 அடிமைகள் அவர்கள் செய்த சிறு தவறுகளுக்குத் தண்டனையாக மூக்கறுக்கப்படுவது வழக்கமாக இருந்தது “எனக் குறிப்பிடுகிறார். தவறு செய்த, தப்பியோட முயன்ற அடிமைகள் கட்டி வைத்துச் சவுக்கால் அடிக்கப்பட்டனர். விலங்கிடப்பட்டனர். விலங்கு பூட்டப்பட்ட நிலையிலேயே வேலையும் வாங்கப்பட்டனர். சில இடங்களில் மாட்டுச்சாணத்தையும் மாட்டு மூத்திரத்தையும் குடிக்கச் செய்தனர்.இத்தண்டனை முறைகள் இவர்கள் கால்நடைகளுக்கு
நிகராக்க கருதப்பட்ட உண்மையைப் புலப்படுத்தும். தீண்டத்தகாத இம்மக்கள் கொடுமையான சமூக இழிவுகளுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தனர். இவர்கள் உயர்சாதியாரைத் தொடக்கூடாது, உயர்சாதியார் தெருவழியே நடக்கக்கூடாது,மண்பாத்திரங்களையன்றிப் பிற பாத்திரங்களை உபயோகிக்கக்கூடாது, காலில் செருப்பணியக்கூடாது: ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் கூட தங்கள் மார்புப் பகுதியை மறைக்கும் வண்ணம் ஆடை எதுவும் அணியக்கூடாது என்பன போன்ற சமூகக் கட்டுப்பாடுகள் சாதியின் பெயரால் இவர்கள் மேல் திணிக்கப்பட்டிருந்தன.பள்ளர் பறையர் இங்கு எந்த அளவுக்குக் கொடுமையாக இழிவாக நடத்தப்பட்டனர் என்பதற்கு 32 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்து இந்துக்களின் நடைமுறை,வழக்கம் மற்றும் சடங்குகள் குறித்து ஆராய்ந்துள்ள `டூபோய்ஸ்’ என்ற ஆங்கிலேயரின் கூற்றை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்; பறையர்கள் எங்கும் சொந்தச் சாகுபடி செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை. பிற சாதியாருக்குத் தங்கள் உழைப்பை விற்பதே அவர்களுக்கு தொழிலாக இருந்தது . தங்கள் கடுமையான
உழைப்புக்குப்பதிலாக மிகச்சிறிய அளவு கூலியையே அவர்கள் பெற்றனர். இவர்களின் 84 முதலாளிகள் தங்கள் சந்தோசத்திற்காகக்கூட இவர்களை அடிக்கலாம்; அல்லது வேறு வகைத்துன்பங்களை அளிக்கலாம். இந்த அப்பிராணிகளுக்கு அதை எதிர்த்து முறையிடவோ பரிகாரம் தேடவோ உரிமை கிடையாது. பள்ளர்கள் ,பறையர்கள் இந்தியாவின் பிறவி அடிமைகள், எனவே “நம் காலனி நாடுகள் ஒன்றில் அடிமையாக இருப்பதா அல்லது இங்கு பள்ளன் , பறையனாக இருப்பதா என்ற இரு சோகமான நிலைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டால் நான் தயக்கமின்றி முந்தியதைய நிலையை தேர்ந்தெடுப்பேன்” என்கிறார் அவர்.

பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இந்த நிலைமைகள் சிதையத் துவங்குகின்றன. 1843 இல் `அடிமை ஒழிப்புச் சட்டம்’வந்தது. இச்சட்டத்தின் மூலம் `சுதந்திரம்’ அடைந்த அடிமைகள் மலேசியா, இலங்கை என்று ரப்பர்த்தோட்டங்களிலும், தேயிலைத்தோட்டங்களிலும் மாற்று வேலை பெற்றுச் சென்றனர். அங்குஓரளவு சேமித்த பணத்துடன் சொந்த ஊர் திரும்பியவர்கள் சிறு நிலத்தை உடைமையாக்கிச் சொந்த விவசாயம் செய்தனர்.பொருளாதாரநிலையை போலவே, சமூக நிலையிலும் பல மாற்றப் போக்குகள் நிகழ்ந்தன. `தீண்டமை ஒழிப்புச் சட்டம்’ வந்தது .கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
முன்னுரிமை அளிக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டன. பழைய புதிய சமூக அமைப்புச் சிதைந்து, அச்சிதைவிலிருந்து உருவாகி வந்த சமூக அமைப்பில் இவர்களும், சமூக விழிப்புணர்வும் எழுச்சியும் கொண்ட புதிய சக்தியாக உருவாகி வந்தனர். இதன் உச்சக்கட்ட வெளிப்பாடுகளாக தமிழ்நாட்டில் தஞ்சாவூரிலும் (1948), ஆந்திர நாட்டில் தெலிங்கானாவிலும் போராட்டங்கள் வெடித்தன. சமூக நிலையிலும் பொருளாதாரர நிலையிலும் தங்களை அடிமைப்படுத்திய உயர்சாதி நில உடைமையாளர்களை எதிர்த்துத் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் இவை. நில உடைமையாளர்களை நிலத்திலிருந்து விரட்டியடித்துவிட்டு, அநேக கிராமங்களை இவர்கள் கைப்பற்றி “பொதுவுடைமை ” அடிப்படையிலான நிர்வாகம் செய்தனர். இப்போராட்டங்களில் பங்கேற்றவர்களில், தலைமையேற்று
நடத்தியவர்களில் பெரும்பாலோர் அரிசனங்களே. கிராமப்புற மக்கட்தொகையிலும், கிராம விவசாய உற்பத்தியிலும் இன்றளவும் பிரதான அங்கம் வகிப்பவர்கள் இப்பள்ளர்- பறையர் சாதியினரே.

வரலாறு நெடுக அரக்கத்தனமான சமூக இழிவுகளுக்கும் பொருளாதாரச் சுரண்டலுக்கும் ஆளாகி வந்துள்ள இம்மக்களே கிராமப்புற பாட்டாளி வர்க்க சக்தியின் ஆணி வேராக இருக்கமுடியும் . எனவே இவர்களை
புறக்கணித்துவிட்டு ,இங்கு எந்தவொரு சமூக மாற்றத்தையும் நிகழ்த்திவிட முடியாது என்பதும் அனைவராலும் ஏற்க கூடிய கருத்துதான். ஆனால் இந்த பள்ளர்கள் தற்போது அடுத்தவர்கள் அப்பன் பாட்டனை உரிமை கொண்டாடி புது பொய் வரலாறு எழுதி தங்களை ஆண்ட வர்க்கமாக காட்டுவது நகைப்புக்குரியது. வடிவேலு வழக்கத்தில் சொல்லப்போனால் ” கோவம் வருவது மாதிரி காமடி பண்ணாதிங்கப்பா “

This entry was posted in இணையம் and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *