சேது காவலர்களும் மட்டகளப்பு வன்னிபங்களும்

மறந்த வரலாறை ஞாபகம் செய்யவே இப்பதிவு.

பண்டைய தமிழ் மூவேந்தர்களுக்கு அடுத்ததாக தமிழகத்தில் நீண்ட நெடிய பாரம்பரிய ஆட்சியைப் புரிந்தவர்கள் இராமநாதபுரம் சேதுபதிகள். இராமபிரான் ராமேஸ்வரத்தில் சேதுவை நிறுவிய காலத்தில் இவர்களை அந்த சேதுவைக் காக்கும் அதிபர்களாக நியமித்ததன் காரணமாகத்தான் இவர்கள் சேதுபதி என்று அழைக்கப்பட்டார்கள். மறவர் இனம் ஏழு பிரிவுகளாக இருந்ததில், இவர்கள் அதில் ஒரு பிரிவினர். இவர்கள் மறவர் நாட்டின் அதிபதியாக பலகாலம் விளங்கி வந்தவர்கள். வீரத்துக்கும், விவேகத்துக்கும், பக்திக்கும், தமிழுக்கும், ஆன்மீகத்துக்கும் இவர்கள் ஆற்றியுள்ள பணி அற்புதமானது.

இப்படிப்பட்ட பெருமைக்குரியவர்களெல்லாம் வாழ்ந்த குலம் ‘சேதுபதிகள்’ குலம்.

 


http://www.tamilhindu.com/2010/06/truth-behind-john-de-britto-history/

நன்றி:தமிழ் ஹிந்து

Another supposition places the rise of the family in the second or third century B.C. It rests its case principally upon a state- ment in the Mahawanso, according to which the last of the three Tamil invasions of Ceylon, which took place in the second or third century B.C., was under the leadership of seven chieftains, who are supposed, owing to the silence of the Pandyan records on the subject of South Indian dealings with Ceylon, to have been neither Cheras, Cholas, or Pandyans, but mere local adventurers, whose territorial proximity and marauding ambition had tempted them to the undertaking …. Another supposition places the rise of the family in the eleventh or twelfth century A.D. There are two statements of this case, differing according to the source from which they come. According to the one, which has its source in South India, the rise of the family took place in or about 1059 A.D., when Raja Raja, the Chola king, upon his invasion of Ceylon, appointed princes whom he knew to be loyal to himself, and who, according to some, had aided him in his conquest of all Pandya, to act as guardians of the * F. Fawcett, loc, cit. f Madras Journ. Lit. Science, 1890. MARAVAN

 

சேதுகரையின் ஏழு தலைவர்கள்(மகாவம்ச உரை):

 

இது மட்டுமல்ல சேதுபதிகளின் எல்லா வரலாறுகளிலும் ஏழு தலைவர்கள் சேதுகரையில் ஆட்சியாளராக இருந்தனர். அவர்கள் யார் என இதுவரை யாரும் சொன்னதில்லை. சிலர் ஊகமாக செம்பிநாட்டுமறவர்,கொண்டயங்கோட்டை மறவர்,காரணமறவர்….. என கூறுவர் ஆனால் அது ஏற்புடையதல்ல. இந்த ஏழு தலைவர்கள் சோழ,பாண்டியர் காலத்தில் மட்டுமல்ல அதற்க்கு முன்னே மகாவம்சத்திலே எதிர்கரையின் தலைவர்கள் ஏழு பேர் இந்நாட்டின் மீது படையெடுத்தனர் என்றும் அவர்கள் சோழ,பாண்டியரல்லாது சுயாட்சி புரிந்த தலைவர்கள் எனவும். ஈழத்தின் எதிர்கரை இராமநாதபுரம் மாவட்டம் தான். இங்கு இருந்து 12 கீமி. இலங்கை எனில் இக்கரை தலைவர்கள் யாவும் மறவர்களேயாகும். எனவே இவர்கள் இப்பூர்வீக நிலத்தை சார்ந்தவர்கள.அந்த ஏழு தலைவர்கள் யாரென நாம் கட்டுரையில் காண்போம்.

சேதுபதி மன்னிரின் மூலம் குறித்த அனுமானங்கள்:

 

சேதுபதிகள் பற்றிய புரான குறிப்புகளில் இராமபிரான் ராமேஸ்வரத்தில் சேதுவை நிறுவிய காலத்தில் இந்த கரையை காக்க சேதுவில் அமர்த்த பட்ட குகன் மரபினர் என கூறுகிறார்கள். ஸ்ரீ ராமனே தனது குலப்பட்டமான இரகுநாதன் என்னும் பட்டத்தை தந்து இப்பதிக்கு காவலனாக்கினான் என ஒரு நம்பிக்கை உண்டு. இன்னோர் ஆதாரம் முதலாம் இராஜ இராஜ சோழன் இலங்கையின் மீது போர் தொடுக்க முனைந்த போது சோழநாட்டையும் பாண்டிய படையெடுப்புகளையும் பாதுகாத்த ஒரு வீரனுக்கு இப்பகுதியினை முடி சூட்டினான் என ஒரு வரலாறு கூறுகின்றது(இதை பற்றி பின்னர் பார்ப்போம்).

The head of the Maravans is the Setupati (lord of the bridge), or Raja of Ramnad. “The Sethupati line, or Marava dynasty of Ramnad,” the Rev. J. E. Tracy writes, t ” claims great antiquity. According to popular legendary accounts, it had its rise in the time of the great Rama himself, who is said to have appointed, on his victorious return from Lanka (Ceylon), seven guardians of the passage or bridge connecting Ceylon with the mainland …. 

 

இலங்கையின் அதிகாரப்பூர்வமான வலைதளம் ஒன்று கலிங்க மாகான் என்னும் கலிங்க மன்னன் படையெடுப்பின் போது. அவனது வம்சத்தவர்கள் ஆரியசக்கரவர்த்திகளின் மரபாகவும் இராமநாதபுரம் ஆட்சியாளர்களாக உள்ளதாக தெரிவிக்கின்றது.

 

Kalinga Magha (reigned 1215-1236), (Oriya: କଳିଙ୍ଗ ମଘା ,Tamil: கலிங்க மாகன்,Sinhala: කාලිංග මාඝ) also known as Magha the Tyrant, is an invader who is remembered primarily for his aggressive conquest and Hindu fanaticism. He is identified as the founder of the Jaffna kingdom and first king of the Aryacakravarti dynasty. Kalinga Magha was a prince from the Kingdom of Kalinga which was in the Orissa state of modern India. His family was connected to the rulers of Ramanathapuram in Tamil Nadu. Kalinga Magha’s relatives of Ramanathapuram administered the famous temple of Rameswaram.[1]

“http://en.wikipedia.org/w/index.php?title=Kalinga_Magha&oldid=635746238”

 

 

கலிங்க மாகானின் குறிப்புகள் சிலர்:


கலிங்க மாகான் சாவகநாட்டை சார்ந்தவன் என்றும் அவன் கலிங்க நாட்டில் இருந்து 24,000 படைவீரர்களுடன் தமிழ்நாட்டுக்கு வந்தான் இங்கு சோழ,பாண்டிய நாட்டிலிருந்தும் கேரள நாட்டிலிருந்து படைவீரர்களை சேர்த்து கொண்டு இலங்கையில் கொடுங்கோல் ஆட்சி நடத்தினான் என மகாவம்சம் கூறுகின்றது. மகாவம்சம் மாகானையும் ஜெயபாகு என்னும் அவன் தளபதியையும் தமிழ் மன்னர்கள் என கூறுகிறது மேலும் கலிங்க மாகனின் சாசனமும் கல்வெட்டும் தமிழில் தான் எழுதபட்டுள்ளது. கலிங்க மாகனின் தளபதி அல்லது துனைஅரசன் ஜெயபாகுவே ஆரியசக்கரவர்த்தி,சேதுபதியின் மூதாதயர் எனவும் அவனின் வம்சத்தில் வந்த சோழகங்கனே குளகோட்டான் என பெயர்கொண்டவன் என தெரிகின்றது.அவனே ஆரியசக்கரவர்த்திகளின் மூதாதயர் சோழகங்கன் குளக்கோட்டான் என கல்வெட்டு கூறுகின்றது.

 

 

கலிங்க மாகனின் படைபிரிவில் மறவர்களே இருந்ததாகவும் அவர்களின் போர்வன்மை சூரையாடும் போக்கினை உடையது எனவும்.மறவரின் சூறையாடல் எனவும் மறவர்படையெடுப்பாளர்களை “மறவர் பலவான்” என சிங்கள எழுத்தாளர் நெவில்லே ஜெயவர்த்தனே கூறுகின்றார். எதிர்கரையிலிருந்து வந்து சூரையாடும் கலிங்க மாகனின் மறவர்கள் பற்றி அவர்களால் உடைக்கபட்ட புத்தவிகாரங்களை பற்றியும் கூறுகின்றார்.

Marauders from Kalinga

 

Jayaweera refers to the marauding Kalinga King, Kalinga Magha, who invaded Sri Lanka and laid it waste, desecrating temples and dagabos in the Rajarata not sparing even the Ruwanvelisaya or the irrigation systems on which the ancient Sinhala civilization of Anuradhapura and Polonnaruwa was built. He displayed callous brutality in blinding and executing the incumbent ruler Parakrama Pandya. Jayaweera says the memory of such brutality is deeply ingrained in the collective subconscious of the Sinhala people and probably accounts for the prejudice they feel to the Tamils even today.

 

The brutality of the Maravar invaders has bequeathed the word “maravara balaya” to the Sinhala language to denote the power of brutality, extreme cruelty and intimidation displayed first by the Maravar warriors of Kalinga Magha. NJ cites several comparable cases from diverse cultures across the globe. Without condoning it, Jayaweera says that the brutality of the modern LTTE is only a manifestation of this historical barbarism of the Maravars.

http://www.island.lk/

Some comments on Neville Jayaweera’s autobiographical Reflections

 

 

முற்குகர்கள்:

 

இவர்கள் ஆதியில் அயோத்தியில் இருந்ததாகவும் அதற்க்கு முன்னே கையிலாயத்தில் சிவன் குகையில் வசித்ததாகவும் குகையில் வசித்ததால் குக்கையர்கள் அல்லது முற்குகையர்கள் எனவும் குகன் என முருகனுக்கு ஒரு பெயர் உண்டு. இவர்கள் ஆதிகாலத்தில் இராமனுடன் அயோத்தி பகுதிலிருந்து வந்ததாகவும் புராணநம்பிக்கை உண்டு. இது ஒரு புராண நம்பிக்கையே. ஆனால் இந்த பாண்டிய நாட்டு பகுதியே சார்ந்த முற்குகரே ஈழத்தில் வன்னிமைகளை உருவாக்கியது. இந்த முற்குகர்கள் யாரால் வன்னிமைகள் பெற்றனர் என பார்ப்போம்.

 

கலிங்க மாகானே ஈழத்தில் வன்னிபங்களை உருவாக்கியது எனினும் கலிங்க மாகானுக்கு முன்னே வன்னிபங்கள் ஈழத்தில் இருந்ததென கூறுகிறார் பதமநாபன் கலாநிதி.

 

ஈழத்தில் முற்குகரே வன்னியர்கள். குகன் என ராமனின் அடியாரான குகனை மூதாதயராக கூறும் தமிழகத்தவர்கள் யார். குகன் வன்னியர்கள்  ஐயனார் வழிபாடு உள்ளவர்கள் .


தமிழகத்தில் குகனை மூதாதயராக கூறுவது யார் இராமநாதபுரம் செம்பி நாட்டு மறவர்.

The Maravans claim descent from Guha or Kuha, 

Rama’s boatman, who rowed him across to Ceylon. 

According to the legend, Rama promised Guha that he 

would come back at a fixed time. When he failed to 

return, Guha made a fire, whereon to burn himself 

to death. Hanuman, however, prevented him from 

committing suicide, and assured him that Rama would 

shortly return. This came to pass, and Rama, on learn- 

ing what Guha had done, called him Maravan, a brave 

or reckless fellow. 

 

* F. Fawcett. Journ. Anthrop. Inst., XXXIII, 1903.

 

 

பத்மநாபன் கலாநிதியின் குழப்பம் ஏன்?

 

இவ்வாறு ஈழநாட்டு அரசியலிற் பல நு}ற்றாண்டகளாக வன்னிநாடுகள் சிறப்பிடம் பெற்றிருந்தபோதும். ஈழவரலாற்று நு}ல்களில் அவற்றைப்பற்றி விரிவான விளக்கவுரைகள் இடம்பெறவில்லை. வன்னி நாடுகளின் வரலாறுகளை முழுமையாக அறிந்து கொள்வதற்குப் போதிய, ஆதாரபூர்வமான சான்றுகளும் கிடைக்கவில்லை. சிங்கள மொழியிலுள்ள வன்னி உபட்ட மட்டக்களப்பு மான்மியம் முதலிய தமிழ் நு}ல்களும் வன்னி நாடுகள் பற்றிச் சில தகவல்களைத் தருகின்றன. இந்நு}ல்களிற் புனை கதைகளும் புராணக்கதைகளும் வரலாற்றுச் சார்புள்ள கதைகளோடு கலப்புற்றுள்ளன. எனவே இவற்றுட் பொதிந்திருக்கும் வரலாற்றுண்மைகளை இலகுவில் விளங்கிக் கொள்ளமுடியாது.மாகன் ஆட்சிசெய்த பிரதேசத்திலும் வன்னிகளிருந்தன. மாகன் தோப்பாவையைக் (பொலநறுவை) கைப்பற்றிப் படையாட்சி வன்னியருக்குக் கொடுத்தான் என்று மட்டக்களப்பு மான்மியங் கூறும். அத்தோடு மட்டக்களப்பிலுள்ள முக்குவ வன்னிமையை மாகன் அமைத்தானென்றும் அந்நு}ல் சொல்லுகின்றது. எனினும் மாகனுடைய காலத்திலேயே முதன் முதலாக ஈழத்தில் வன்னிமைகள் தோன்றினவென்று கொள்ளமுடியாது. மாகன் வன்னிமைகள் இடம்பெற்ற தொண்டை மண்டலத்திலிருந்தன்றிக் கலிங்க நாட்டிலிருந்தே வந்தான். அத்துடன் முக்குவரே முதன் முதலாக வன்னிமைகளாகியிருக்க முடியாது. சேர நாட்டிலிருந்து வந்த முக்குவர் வன்னியரிலிருந்து வேறுபட்ட ஒரு சமூகப் பிரிவினரேவன்னிமைகள் எனவழங்கிய குறுநில அரசுகளோ வன்னியரென்ற சமூகத்தவரோ சேரநாட்டிலிருந்ததற்கு எந்தவிதமான சான்றுகளுமில்லைமேலும் மாகனும் விஜயபாகுவும் ஆட்சிசெய்த பிரதேசங்களில் வன்னிமைகள் இடம்பெற்றிருந்தமையால் இவ்விரு மன்னரின் காலத்துக்கு முன்னரே ஈழத்தில் வன்னிமைகள் உருவாகியிருத்தல் வேண்டும்.

 

ஈழத்து வன்னிமைகள் இரு பகுதிகளாக இரண்டு இயல்களில் அமைந்துள்ளன. தமிழ், சிங்கள அரசுகளில் வன்னிகள், வன்னி நாடுகளின் தோற்றம், திருமலை வன்னிமைகள், முக்குவ வன்னிமைகள் என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது முதற்பகுதி. இப்பிரிவுகளில் முக்குவ வன்னிமை என்ற பிரிவு மட்டக்களப்பு வன்னிமை, புத்தளத்து வன்னிமை என்ற இரு உட்பிரிவுகளாக அமைந்துள்ளது.

 

யாழ்ப்பாண குணவீரசிங்கையாரியச் சக்கரவர்த்தி மதுரையரசனுக்குப் படைத்துணை யனுப்பிய சந்தோஷத்திற்காகப் பெருந்தொகைத் திரவியமும் கன்னடர் சிலரையும், சிவிகையார் சிலரையும், வில்லவர் சிலரையும் வேடர் சிலரையும் இத்துடன் மறவர் சிலரையும் அனுப்பிவைத்தாகவும், மறவரை மறவன்புலவிலிருத்தினரெனவும் யாழ்ப்பாணச் சரித்திரங் கூறுகிறது.

 

ஈழத்து வன்னிமைகள் முதலாம் பகுதிகளில், ‘தமிழ் சிங்கள அரசுகளில் வன்னிகள்’ என்ற பிரிவில் ஈழநாட்டு வரலாற்றில் பதின்மூன்றாம் நு}ற்றாண்டில் வன்னி நாடுகள் சிறப்பிடம் பெற்றிருந்தமையை ஆசிரியர் கூறுகிறார். பொலநறுவையைத் தலைநகராகக் கொண்டு ஈழம் முழுவதினையும் ஒரே மன்னர் ஆண்ட வரலாறு பதின்மூன்றாம் நு}ற்றாண்டில் ஏற்பட்ட கலிங்கமாகனது படையெடுப்போடு முற்றுப்பெறுகின்றது. அதன்பின் வடக்கிலே ஓர் அரசும், தெற்கிலே ஓர் அரசும் பல குறுநில அரசுகளும் தோன்றின. மாகனுக்குப் பின் வட இலங்கையிற் பாண்டியர் ஆதிக்கம் இடம்பெற்றுப் பதின்மூன்று நு}ற்றாண்டின் இறுதியில் ஆரியச்சக்கரவர்த்திகளின் ஆட்சி ஆரம்பமாகியது. அதன் விளைவாக இடம்பெற்றதே யாழ்ப்பாணப் பட்டினம் என்ற தமிழரசு. இத்தமிழரசின் காலத்திலே பல வன்னிநாடுகள் இருந்தன.

 

இதே காலத்தில், அதாவது மாகனது ஆட்சிக்குப் பின், பதின்மூன்றாம் நு}ற்றாண்டிலிருந்து சிங்கள அரசர் முதலிலே தம்பதெனியாவிலிருந்தும்@ பின் குருநாகல், கம்பளை கோட்டை முதலிய நகர்களிலிருந்தும் ஆட்சிசெய்தனர். அவ்வாட்சியிலும் வன்னி எனப்பட்ட குறுநில அரசுகள் வளர்ச்சியடைந்திருந்தன.

 

 

இவ்வாறு வளர்ச்சியுற்ற வன்னிமைகளில் ஒன்றனைப்பற்றித் ‘திருமலை வன்னிமைகள்’ என்ற பிரிவு கூறுகின்றது. கவிராசர் பாடிய கோணேசர் கல்வெட்டினையும், திருமலைக் கோட்டையின் முன்பாக இருக்கும் கற்று}ணிலுள்ள மொழித் தொடர்களையும் அக்கோட்டையிலுள்ள வடமொழிக் கல்வெட்டினையும் ஆதாரமாகக் கொண்டு குளக் கோட்டனாகிய சோழ கங்கன் காலத்திலே திருமலையில் வன்னிமை இருந்தமையை ஆசிரியர் எடுத்துக்காட்டுகின்றார். கங்குவேலிக் கல்வெட்டு, திருமலை வன்னியனாரைக் குறிப்பிடுகின்றது. வெருகல் கல்வெட்டிலிருந்து கயிலை வன்னியனார் கோட்டியாரம்பத்தை ஆண்டமை புலனாகின்றது. பதினான்காம் நு}ற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகள் திருகோணமலை வன்னியர் மேல் ஆதிக்கம் செலுத்தியமையையும் பதினைந்தாம் பதினாறாம் நு}ற்றாண்டுகளில் இம் மன்னர்கள் திருமலை வன்னியரோடு திருமணத் தொடர்பு கொண்டமையையும் ஆசிரியர் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார். யாழ்ப்பாணத்தரசரும் திருமலை வன்னியரும் போத்துக்கேயரை எதிர்ப்பதில் ஒருவருக்கொருவர் துணையாயிருந்தனர். சங்கிலி அரசனின் மரணத்துக்குப் பின் கண்டியரசரின் ஆதிக்கம் திருகோணமலை வன்னியிலே இடம்பெறலாயிற்று.

 

முக்குவ வன்னிமைகளை, மட்டக்களப்பு வன்னிமை, புத்தளத்து வன்னிமை என இரு பிரிவுகளாக ஆசிரியர் வகுத்துக் கூறுகிறார். பதின்மூன்றாம் நு}ற்றாண்டில் கலிங்க மன்னன் மாகன், முக்குவரை மட்டக்களப்புக்கு அழைத்து வந்து அவர்களின் படைத் தலைவருக்கு வன்னிபம் என்ற பட்டத்தை அளித்தானென மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது. சீதவாக்கையிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்று குடியேறிய இஸ்லாமிய குடும்பங்களின் வரலாற்றைக் கூறும் ஓரேட்டுப் பிரிதி, மட்டக்களப்பில் அதிகாரம் செலுத்திய ஏழு வன்னியர்பற்றிக் குறிப்பிடுகின்றது. தேசாதிபதி பான் கூன்ஸின் அறிக்கையையும் ஆசிரியர் ஆதாரமாகக் காட்டுகின்றார்.

 

புத்தளத்து வன்னிமை’ என்னும் பிரிவு, ஒல்லாந்த ராட்சிக்காலம்வரை புத்தளத்திலிருந்த முக்குவ வன்மைபற்றிக் கூறுகின்றது. ஆறாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக்காலந்தொட்டுப் புத்தளத்து வன்;னிமைபற்றிக் கிடைத்துள்ள குறிப்புக்களை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இவ்வரசன் (1413 – 1467) புத்தளத்து வன்னிமையைக் கைப்பற்றிய வரலாறு ‘முக்கர ஹடன’ என்ற நு}லில் விவரிக்கப்படுகின்றது. பதினாறாம் நு}ற்றாண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகளை ஆதாரமாகக் கொண்டு புத்தளத்தை ஆண்ட நவரத்தின வன்னியன்பற்றியும், நீதிமன்றத்தில் அங்கம் வகுத்த வன்னியர்பற்றியும் வன்னியர் பெற்றிருந்த சிறப்புரிமைகள் பற்றியும் விவரங்கள் தரப்பட்டுள்ளன.

 

நான்காவது இயலாக அமைந்துள்ள ஈழத்து வன்னிமை இரண்டாம் பகுதி, யாழ்ப்பாணப் பட்டினம் என வழங்கிய தமிழரசில் அடங்கிய வன்னிமைகளைப்பற்றிக் கூறுகின்றது. யாழ்ப்பாண அரசு உள்ளடக்கியிருந்த வன்னிநாடு மன்னாரிலிருந்து திருகோணமலைவரை பரந்திருந்ததென்றும், அதன் எல்லை சிலாபம்வரை இருந்ததென்றும் சான்றுகள் தரப்படுகின்றன. பனங்காமம், முள்ளியவளை, கருநாவல்பந்து, கிழக்கு மூலை என்பன யாழ்ப்பாணத்து வன்னிக்குடியேற்றங்களில் முக்கியமானவையென குவேறோஸ் கூறுகின்றார். இரு வன்னிக் குடியேற்றங்களைப்பற்றி யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இரண்டாவது வன்னிக் குடியேற்றம் பாண்டிநாட்டிலிருந்து வந்த 59 வன்னியரின் வருகையோடு ஏற்பட்டது. யாழ்ப்பாண வைபவமாலை கூறும் இக்குடியேற்றம் பற்றியே வையாபாடல் என்னுங் நு}லும் கூறுகின்றது.

 

வையாபாடல் வன்னியர் குடியேற்றம் பற்றிக் கூறுவதை மேற்கோளாகக்காட்டி அமைந்ததே ‘அடங்காப்பற்றில் வன்னியர் குடியேற்றம்’ என்னும் பிரிவு. வையாபாடல் கூறுவதை முற்றாக ஏற்காதுவிட்டாலும், வன்னியர் பலர் தென்னகத்திலிருந்து வந்து வன்னிப் பிரதேசங்கள் பலவற்றைக் கைப்பற்றி ஆண்டதை வரலாற்று நிகழ்ச்சியாக ஆசிரியர் கொள்கி;ன்றார். வையா பாடலில் வரும் நிகழ்ச்சிகள் முதலாம் ஆரியச் சக்கரவர்த்தி காலத்தினை யொட்டியவையெனக் கருதுகின்றார். இவ்வன்னியர் செயவீரசிங்கையாரியன், வரோதய சிங்கையாரியன், மார்த்தாண்டசிங்கையாரியன், சங்கிலி போன்ற பலம்வாய்ந்த யாழ்ப்பாண மன்னருக்குத் திறைகொடுத் ஆண்டனர். எனினும் வன்னியர்கள் சுயாட்சி செலுத்தி, அதிகாரிகளை நியமித்து, இறைவரிகளையும் பெற்றிருந்தனர்.


வன்னி-வன்னிபம் என்னும் பெயர் காரணமும் 

ஈழத்தின் வன்னி  பெயர் பின்னனி:

 

வன்னி என்னும் பெயருக்கும் ஈழத்துக்கும் என்ன சம்பந்தம் என கானும் முன்னர். ஈழம் என்னும் இலங்கையின் நிலப்பரப்பின்  பின்புலத்தை பார்ப்போம். ஈழம் என்றால் தென்னை,பனை என அர்த்தம் மேலும் ஈழத்தை மலையம் எனவும் காடுகள் சூழ்ந்த காண்டவம் எனவும் கூறுவர். இக்காணகத்தில் வாழும் ஆதி தமிழான ஏலூ என்னும் மொழி பேசும் இயக்கர்களை வேடாக்கள் எனவும் வேடர்கள் எனவும். இவர்களுடன் கலந்த சிங்கள மக்களான சிங்கள காடையர்களை(கானவர்) வன்னியெத்தலோ என்று அழைப்பர் காடையர் என்றால் காணவர் எனவும் வன்னியெத்தலோ என சிங்களத்தில் அழைப்பர். மேலும் இப்பகுதியில் வாழும் சிங்கள துருவர்ளான சாண்(டா)ர்களை பழம்பெரும் பனையேறும் சண்டாலர்களை நழவர் என அழைப்பார்கள். எனவே இந்த காடுகள் தென்புலத்தில் இருக்கும் வடகிழக்கு பகுதியில் உள்ள பகுதியே வவுனிய(வன்னிபிரதேசம்) என அழைப்பார்கள் அது அடர்ந்த காணகம். அதனால் வந்த பெயர் தான் வன்னி.

 


நீண்ட நெடிய ஆய்விக்கு பின்னே நாம் கூறுவது இது தான். வன்னியர் என்பது பட்டமோ சாதியோ அல்லது அரசரால் வழங்கும் விருதோ கிடையாது. இது ஒரு காடு சூழ்ந்த  பகுதியை குறிக்கும் காரண பெயராகும். எடுத்துகாட்டாக கொங்கு என எடுத்து கொள்வோம். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் கொங்கு என பெயர் இருக்கும். சோழிய என எடுத்து கொள்வோம் அது சோழநாட்டில் வாழும் சகல் பிரிவினருக்கும் ஏன் இசுலாமியருக்கும் மறாட்டியருக்கும் உள்ள பகுதி பேராகும். கொங்கு,சோழிய,பாண்டிய,நாஞ்சில்,கேரள,தொண்டை என்பது போல தான் வன்னி என்னும்  பகுதியை குறிக்கும் பெயர். அதே போலத்தான் வன்னியர் என்பது தொண்டை மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினரையும்  குறிக்கும்.


தொண்டை மண்டலத்தை கச்சி வன நாடு (அ) வன்னிய நாடு என கூறுவர். இதில் குடியிருக்கும் இறைவனை கச்சி வனராசர் இறைவியை கச்சி வனத்தில் தவமிருக்கும் காமாச்சி என கூறுவர். காமாட்சி கோவில் தொண்டை மண்டல உட்பட எல்லா இடங்களிலும் காடுகளில் தான் அமைந்திருக்கும். காமாட்சியை வனக்காமாட்சி,வனப்பேச்சி அல்லது வன்னிய பேச்சி என கூறுவர். எனவே தொண்டை மண்டலத்தை பொருத்தவரை வன்னியராஜன் மற்றும் வன்னிய பேச்சி என்பது தொண்டை மண்டலத்தை ஆளும் ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி அம்மனையே குறிக்கும். 


எனவே தொண்டை மண்டலம் மட்டுமல்ல காடுகள் எங்கல்லாம் உள்ளதோ அந்த பகுதியில் வாழும் அனைவருக்கும் உள்ள காரண பெயரே வன்னியர் (அ) காடுவாழ்னர்.



கலிங்கமாகனின் இருவகையான வன்னிபங்களை உருவாக்கினார். இதைப்பற்றி பத்மநாபன் கலாநிதி அவர்கள் வந்த வன்னிபங்களில் இருவகை. 1)பூபால கோத்திரம் வன்னிபங்கள் 2)கட்டிக்குளம் வன்னிபங்கள்

 

1)பூபால கோத்திரம்(வெள்ளாளர்) வன்னிபங்கள்:

பூபால கோத்திர வன்னிபங்கள் என்பவர்கள் கலிங்க நாட்டு  வெள்ளாளர்கள்.

நன்றி:மட்டகளப்பு மான்மியம்

2)கட்டிக்குளம்(முற்குகர்) வன்னிபங்கள்:

இவர்கள் பாண்டியநாட்டிலும் திருநெல்வேலியிலும் இராமநாதபுரத்திலும் கலிங்க மாகனால் திரட்டபட்ட படை வீரர்கள்.

இவ்விருவர்களுக்கு வன்னிபங்கள் அளித்து வன்னிபங்களை ஆளும் வன்னியர் தலைவனாக நியமித்து அதற்கான சட்டங்களை வகைப்படுத்தியவன் கலிங்க மாகன்.

 

பாண்டிய நாட்டிலிருந்து  வீரர்களை தருவித்த செகராசசேகரன்:

வன்னியர் பற்றி வையாபாடல் கூறுவனவற்றுள் சில வரலாற்றுண்மைகள் இடம்பெறுகின்றன. அடங்காப்பற்றை வன்னியர் கைப்பற்றியமையைக் குறித்து மேல் வருமாறு நு}ல் கூறுகின்றது. செயதுங்க வீரவரராஜசிங்கன் தன் மாமனது மகளைத் தான் மணம் முடிக்க விரும்புவதாக மதுரை மன்னனிடம் அறிவிக்குமாறு து}துவரை அனுப்பினான். து}துவர்கள் சொன்னவற்றைக் கேட்ட மதுரை மன்னன் அறுபது வாட்படை வீரரை அழைத்துத் தன் மகள் சமது}தியை அவர்களுடன் இலங்கைக்கு அனுப்பி வைத்தான். செயதுங்க வீரவரராஜசிங்கனும் இளவரசியை மணம்முடித்து விட்டு அவளோடு வந்த வீரர்களை அடங்கா வன்னிப்பற்றுக்குச்சென்று அதைக் கைப்பற்றி ஆளுமாறும், ஆண்டுதோறும் யாழ்ப்பாண அரசனுக்குத் திறை செலுத்த வேண்டுமென்றும் பணித்தான்.

அடங்காப் பற்றை அடைந்ததும் அதைக் கைப்பற்றுவதற்குத் தம்மிடம் போதிய படையில்லை என்பதை உணர்ந்தார்கள். எனவே, இளஞ்சிங்க மாப்பாணன், நல்லவாகுதேவன், அத்திமாப்பாணன் என்போரிடம் து}துவர்களை அனுப்பி மதுரை, மருங்கூர், காரைக்கால், காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி, துளுவை நாடு, தொண்டைமண்டலம், வடகிரிநாடு என்னுமிடங்களிலிருந்து கூட்டிவரக் கூடியவர்கள் அனைவரையும் கொண்டு வருமாறு சொல்லி அனுப்பினார்கள். இதனை அறிந்ததும் தில்லைமூவாயிரவர், திடவீரசிங்கன், குடைகாத்தான், முடிகாத்தான், நல்லவாகு மலைநாடன், சிங்கவாகு, சோதயன், அங்கசிங்கன், கட்டைக்காலிங்கன், சொக்கநாதன், கங்கைமகன், கலைக்கோடமுடியோன், வீரகச்சமணி முடியரசன், காபாலிவீரன்,

 


சேது எனும் பதியை ஆளுகின்ற வீரம் செறிந்த தலைவன், 

 

இளஞ்சிங்க மாப்பாணன் என்போரும் பெருமைமிக்க ஆரிய வம்சத்தாரும் படகுகளில் ஏறி யாழ்ப்பாணம் வந்தார்கள். இவர்களிலே திடவீரசிங்கன், கரிகட்டு மூலைப்பற்றுக்கு அதிபதியானான். இளஞ்சிங்க மாப்பாணன், இராஜசிங்க மாப்பாணன், நல்லவாக மெய்த்தேவன், கறுத்தவாகு, சிங்கமாப்பாணன் என்போர் சான்றாரையும் வலையரையும் துரத்தி விட்டு முள்ளியவளையைக் கைப்பற்றினார்கள். நீலையினார் திசையாண்டாரும் படையும் மேல் பற்றுக்கு வந்து சகரன் மகரன் என்ற வேட்டுவ தலைவர்களைக் கொன்று விட்டு நாட்டையாண்டனர்.

 

இராமநாதபுரத்திலிருந்து முற்குகரின் இராசவம்சத்திலிருந்து வன்னிபங்கள் பெற்றவர்கள் யார்?

 

இதற்க்கு மட்டகளப்பு மான்மியம் கூறும் செய்தி:


மறவர் பெண்கள் வன்னிச்சி மாரென பெயர் பெற்றது.

அமரசேனன் கலிபிறந்து மூவாயிரத்து நானூற்றறுபத்தாறாம் வருஷம் அரசுபுரியும் போது தனது உடன்பிறந்தாருக்கு இலங்கை பலதிக்கிலும் வதுவை செய்து வைத்து அரசு புரிந்து வருங்காலம் இராமநாட்டு மறவர்குலத்து இராசவம்சத்தைச்சார்ந்த ஏழுபெண்கள் தங்கள் தங்கள் மணமகனுடனும், சிறைதளங்களுடனும் வவனியர்குலத்துக் குருகக் குடும்பம் ஐந்தும் சேர்ந்து மட்டக்களப்பின் பரிசுத்தங்களை அறியும் படியும், வைதூலிய சமயத்தை மாற்றி அரிநமோ என்னும்நாமத்தைப் போதித்து வைக்கவேண்டுமென்றும் கம்பர் இயற்றிய இதிகாசப்பிரதியை எடுத்து இராமநாடுவிட்டுச் சேதுதனில் ஸ்னானம் செய்து இராமேஸ்வர தெரிசனைகண்டு ஒரு ஓடத்தில் ஏறி மண்ணால் இறங்கி திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம் தெரிசனைகண்டு கொட்;டியன் புரத்தில் வந்து மட்டக்களப்பில் அமரசேன அரசனைக்கண்டு தங்கள் வரலாற்றைக் கூறி, வன்னிச்சிமாரென விருதுபெற்று கலைவஞ்சி ஓர் ஊரிலும், மங்கி அம்மை ஒரு ஊரிலும், இராசம்மை ஒரு ஊரிலும், வீரமுத்து ஒரு ஊரிலும், பாலம்மை ஒரு ஊரிலும், தங்கள் தங்கள் மணமகனுடனிருந்து வந்த சிறைகளைக் கொண்டு கமத்தொழில் செய்து வாழ்ந்தனர்.

 

இப்படி வந்த முற்குகர் மறவரே இவர்களே வன்னிபங்களை ஆண்ட வன்னியர்கள்:

 


மட்டகளப்பு மான்மியம்-:

ஒல்லாந்தர் மட்டக்களப்பை ஆளும்போது அங்கு போடிகளாக நியமிக்கப்பட்ட இருவர் பெயர் கூறப்பட்டிருக்கிறது. இவர்களுக்குக் கொடுத்த ஆக்கொத்தின் விபரங்கூட வரையப்பட்டிருக்கிறது. அனுபந்தத்திலுள்ள ஆக்கொத்துடன் ஒப்புநோக்குக. போடிகள் கல்வெட்டும் நோக்குக.

 

பெரிய கல்வெட்டின் ஈற்றடிகள் குகன் குலத் தோர் தங்கள் குலவரிசையை எடுத்துரைப்பது போல் எழுதப்பட்டிருக்கிறது.


“மதி நுதல் ஒல்லாந்த மன்னனே கேளும்

இதுவே குகன் குகன் குலமென அறிவாய்”

என்கின்றது.


குகன் வன்னிபங்களின் பட்டதரசன்:

வெறிகமழும் காலிங்கவாசனெங்கள் திறத்தோரைப்

படைத்துணைக்குத் தலைவனாக்கி

குறியறிந்து வன்னிபங்கள் குலமே என்றும்

குகப் பட்டத்தரசு கொண்டோனானே”

 

கலிங்க மாகன் வன்னிபங்களை பிரித்த பங்கு விபரம் யார் யார்?

இது தகுதியுடையவர்களே வாங்கும் படி எங்கள் முதன்மையாகிய மகாவம்சக் கலிங்கராசன் இட்ட முறைமையென்று வன்னிபங்கன் விமலதருமனிடங்கூறி முகமனும் பெற்றனர். இது நிகழ்ந்தது கி. பி. 4738-ம் வருஷம்.

பங்கு வாங்கும் விபரம்

 

பெரிய திருவாசல் என்பது கயிலையங்கிரி.

வேதம் என்பது பிரமன். நம்பி என்பது விஷ்ணு.

திருப்பாட்டென்பது சிவன்.

சரிகைசன்னாசம் என்பது படையாட்சி, உலக குருநாதரென்பது குரு ஆதி.

பூபால கோத்திரமென்பது கலிங்க வெள்ளாளர். 

பூவசியன் என்பது வணிகன். 

புன்னாலை என்பது பணிக்கன்

வன்னிச்சி-மண்முனை என்பது உலகிப்போடிகுலம்.

மட்டக்களப்பு என்பது தனஞ்செனான்.

நாடு என்பது இராமநாட்டு வேடன்.

நகரம் என்பது வவுனிய வெள்ளாளர். கண்டி என்பது நிலைமை. கதிரை என்பது வேடப்பெண்.

கந்தளை என்பது மலையாளமுக்குவர்.

மாவலி என்பது இடையர்.

அயோத்தி என்பது மறவர். 

நன்றி:மட்டகளப்பு மான்மியம்

இதில் அயோத்தி என்பது மறவர்கள்.

இந்த வன்னிபங்கள் முற்குகர் மற்றும்  பூபால கோத்திர கலிங்க வெள்ளாளர்களை கொண்டது. ஆதாவது கலிங்க நாட்டிலிருந்தும் தமிழ் நாட்டிலிருந்தும் திரட்டிய படையினருக்கு அளித்தான் கலிங்க மாகன்.

கலிங்க வெள்ளாளர்களால் அழைக்கப்பட்ட தமிழக வெள்ளாளர்களும் வன்னிபம் பெற்றனர் 

அவை:

 

முதலிமார்கள்


முற்காலத்தில் சேரன், சோழன், பாண்டியன் இவர்களைப் பிள்ளைக்குலமென்றும், நாயர்குலமென்றும், காராளர்வம்மிசமென்றும் விருதுகொடுத்து வந்தவர்கள். இவர்கள் பசுபதி சிந்தனையுடையவர்கள். தேவருக்குத் தொண்டூழியர்@ மாசில்லாத மரபில் பிறந்தவர்கள் மாமிசதேகமெடாதவர்கள். பண்டுபண்டு பெருமையுடையவர்கள். உயர்ந்த நடையுடையவர்கள். சிவவணக்கமுடையவர்கள். உடலிலழுக்கேறாதபடி உபதேசஞானத்தில் சிறந்தவர்கள். உழுது தானியமிட்டு யாவருக்குமாதாரமான தொழில் ஊண் உண்பவர்கள். தருமதானஞ் செய்யப் பட்டவர்கள். தன்னுயிர்போல் மன்னுயிரைப் பாதுகாப்பவர்கள். இராசசேவகத்துக்குப் போகாதவர்கள். தேவாலயத்தில் ஏவல்கொண்டு செய்பவர்கள் பொறாமை உடையவர்கள். பொய், கொலை, கள், காமம், குருநிந்தனை நீக்கப்பட்டவர்கள், இவர்களுடைய கையினாலே இந்த எம்பெருமானுடைய திருவிளையாடல்களைச் செய்து யாவருஞ் சித்தி முத்தி பெறுவதற்குக் கொண்டுள்ள வரிசை முட்டியைத் தந்தால் எக்காலமும் சிவமதத்திலேயேயிருந்து குகன் குலத்து வன்னிபங்கன் சொற்படி அரசனிட்ட கட்டளை தவறாமல் தேவாலய ஊழியஞ் செய்வோமென்று பதி கூற அரசன் கேட்டு பிரம சத்திரிய வைசியரென்னும் மூன்று வருணத்தாரும் சூத்திரருடைய கையினால் வாங்கமாட்டார்கள். ஆனால் முட்டியின்மேலே பட்டுப் போட்டு எக்காலமும் வரிசைமுட்டி கூறவேண்டுமென்றும் சூத்திரசாதி முதற்குலம்- வெள்ளாளனுக்கும் உங்கள் பதினெட்டுச் சிறைகளுக்கும் பட்டுப்போடப்படாதென்றும் கட்டளையிட்டு வரிசை முட்டி கூறும்படி பண்ணி வணிகனை அவிழ்த்துவிட்டுப்பின்பு வெள்ளாளர்களை அவிழ்த்து மஞ்சள் தண்ணீர் தெளித்து வரிசை கூறும்படி செய்தனர்.

 

சிங்கையாரிய மகராசன் யாழ்ப்பாணத்தில் குடியேற்றம் செய்யக்கருதி தமிழ்நாட்டர சர்களுக்குத் திருமுகம் அனுப்பி வேளாண்குலப் பிரபுக்களையும் அவர்கீழுள்ள குடிமக்களையும் அனுப்பி வைக்குமாறு வேண்டினன். இவனது வேண்டுகோளுக்கினங்கி குடிகள் அனுப்பப்பட்டன. வந்திறங்கிய குடிகளை அரசன் பதினொரு பகுதிகளில் நிறுத்தினான். பொன்பற்றியூர் வேளாளன் பாண்டிமழவனையும், தம்பியையும் திருநெல்வேலி யிலும், காவிரிய+ர் நரசிங்கதேவனை மயிலிட்டியிலும், களவிநகர் செண்பக மாப்பாணையும் அவன் உறவினனான சந்திரசேகர மாப்பாணையும், கனகராயன் செட்டியையும் தெல்லிப் பளையிலும், கோவலூரிரிலிருந்து வந்த பேராயிரமுடையானென்னும் வேளாளனை இணுவிலிலும் (இவ்வூர் திருத்தப்படாமையால் இதனை விட்டு மேலைக்கிராமத்தில் போயிருந்தான்.) கச்சூர்வேளாளன் நீலகண்டணையும் தம்பிமார் நால்வரையும் பச்சிலைப் பள்ளியிலும், சிகரமாநகர வேளாளன் கனகமழவனையும், அவன் தம்பிமார் நால்வரையும் புலோலியிலும், கூபக நாட்டு வேளாளன் கூபகார்யேந்திரனையும், புண்ணியபூபாலனையும் தொல்புரத்திலும், புல்லூர்வேளான் தேவராயேந்திரனை கோயிலாக் கண்டியிலும், தொண்டைமண்டலத்து மண்ணாடுகண்ட முதலியை இருபாலையிலும், செய்யூர் இருமரபுந்துய்ய தனிநாயக வேளாளனை நெடுந்தீவிலும், காஞ்சிபுரத்து பல்லவன் என்னும் பிரபுவையும் இரண்டு துணைப்பிரர்க்களையும் பல்லவராயன் கட்டிலும் முறையேயிருத்தி அவ்வவ்பகுதிகளுக்கு அதிகாரிகளுமாக்கி வைத்தனர்.

கற்புக்கரசி திரௌபதி அம்மன் வழிபாடு மற்றும் அக்னி வீரபத்திரர் வடதமிழக்கத்தில் அதிகமாக உண்டு தென் தமிழகத்தில் திரௌபதி அம்மன் வழிபாடு கிடையாது.

 

திரௌபதி அம்மன் வழிபாடு மற்றும் அக்னி வீரபத்திரர்  வழிபாடு தென் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது துளுவ வெள்ளாளர்களும் ஆயிர வைசியர் செட்டியார்கள் என்ற வெள்ளாள கெட்டி செட்டியார்கள் தான்.


ஈழத்தில் திரௌபதி அம்மன் வழிபாடுகளை அறிமுகப்படுத்தியதும் ஆரியசக்கரவர்த்தியின் அமைச்சரான காராளர் குல திலக பாண்டிய மழவரான பொன்பற்றியூர் வேளாளர் முதன் முதலில் திரௌபதி அம்மன் கோவிலை ஈழத்தில் கட்டினார்.

 

வெள்ளாளரின் சேவகரான பதினென் குடிமக்கள்:1)சுத்த வெள்ளாளர்2)அகம்படி வெள்ளாளர்3)பண்டாரம்4)ஆசாரி5)கொல்லர்6)தச்சர்6)கன்னார்7)மேளகாரர்8)கோடாரிக்காரர்9)கைக்கோளர்10)திமிலர்11)சாணார்12)கருப்பட்டிக்காரர்13)சங்கூதி14)மாலைகட்டி15)வன்னார்16)பறையர்17)சுன்னார்18)மாலைகட்டி

மட்டகளப்பு பிற்கால முக்குவர்-வெள்ளாளர்

Mukkuvar vannimai:Tamil Caste and matriclan ideology

in battiacaloa Srilanka Dennis B.McGilvry

ஆதாவது முக்குவர் வன்னிமை: தமிழ் சாதியம் தாய்வழி சேரல் மட்டகளப்பு

 

 

 

 

 

என்னும் நூலில் இந்த இலங்கையின்  தமிழ் சாதியினரில் முக்குவரின் தாய்வழி மரபுகளும் இலங்கை தமிழ் சாதியினரில் ஆளுமை பெற்ற இனக்குழுக்கலான முக்குவர் மற்றும் வெள்ளாளர் ஆகியோரின் வாழ்வியலை பற்றி கூறுகின்றார்

இலங்கையில் உள்ள வன்னிமையில் பாதி வன்னிமை முற்குகர்களுக்கும் மீதி வெள்ளாளரின் ஆளுமையிலும் இருந்ததாகவும் அதில் முற்குகர் மேல்சாதியாகவும் படையாளர்களாகவும் ஆளுமை பெற்றிருந்தனர் என கூறுகின்றார் அதில் முற்குகர் சத்திரிவர்னத்திலும் வெள்ளாளர் பிராமனர்களாகவும் வாழ்ந்ததாகவும் கூறுகிறார்.


முற்குகர் தாய்வழி மரபுகள் பின்பற்றுவதாக கூறுகின்றனர். இவர்களின் குகனை மூதாதயராக கூறுவது இராமநாதபுரம் மறவர்களை உனர்த்துவதாக தெரிகின்றது என கூறுகின்றார்கள்.

மறவர்கள் தாய்வழி மரபில் திருமனத்தையும் ஆளும ஆட்சி உரிமையில் தந்தை வழியையும் பின்பற்றுவர்கள்.யாழ்ப்பாண அரசிலிருந்த நிர்வாக அதிகாரிகளில் முற்குகர் வன்னியரே முதன்மை பெற்றிருந்தனர்.

LTTE here is reproducing a fundamental structure of representing Tamilian identity. C.S.Lakshmi has examined the role of the concept of the heroic mother in the militant Dravidian movement and its strategy of mobilising women. She, however, fails to take note of the politics of Aiyangar and Bharathy and the impact of the Russo-Japanese war on them in the genesis of this concept. C.S.Lakshmi; Mother, Mother-community and Mother-politics in Tamil Nadu. Economic and Political Weekly, October 1990. Aiyangar notes that the earliest Tamil grammar – the Tholkappiyam – defines and names the poetic theme of the mother who comits suicide on hearing her son’s lack of valour in the battle field. (‘These mothers belonged to Maravar clans’, he says. The Maravar are matrilineal.)

தலைமுறை தலைமுறையாகத் தம் நாடுகளை முற்குகர் வன்னியர் ஆண்டு வந்தனர். மேலும் யாழ்ப்பாணத்தில், அரண்மனையில் வருடத்திற்கு இருமுறை வரிசைகள் கூடியபொழுது வன்னியரும் அரசனுக்கு உபகாரம் அனுப்பி வைத்தனர். எனினும் ஆண்டுக்கு ஒருமுறை தலைநகருக்குச் சென்று, யாழ்ப்பாண மன்னரிடம் சமுகமளித்துத் திறை கொடுத்தனர். அரசனின் நேரடியான ஆட்சிக்குள்ள மாகாணங்களிலே காணப்பெற்ற நிர்வாக முறையே வன்னி நாட்டிலும் காணப்பட்டது. எனினும், முற்குகர் வன்னியர் சுயமாக ஆண்டு, அவற்றிற் சேவை புரிந்த முதலியார், கண்காணி, பண்டாரப்பிள்ளை, தலையாரி அடப்பனார், மொத்தக்கர் முதலிய எல்லா அதிகாரிகளையும் நியமித்து வந்தனர். அத்துடன் வன்னி நாடுகளிலுள்ள வாரம், தீர்வை, காணிக்கடன், ஆள்வரி முதலிய எல்லா இறைவரிகளையும் வன்னியரே பெற்றனர்.

மட்டக்கிளப்பில் இருந்த மொத்த சாதிகளும்  அதன் ஏழு உட்பிரிவுகளும் தான். இவைகள் தவிர வேறு சாதி இல்லை.(சாதிகள் 14 மட்டுமே)

1.முக்குகர் குடி:(மறவர் குல குக தலைவன்)

1)வில்லவராசன்குடி2)மாளவராசன்குடி3)உலகிப்போடிகுடி4)படையாண்டகுடி5)பணிக்கன்குடி

6)காலிங்காகுடி7)தனஞ்சயங்குடி

2.மறவர் குடி:(குகனின் இன வீரர்கள்)

1)சங்குபயத்தன்குடி2)மாளவன்குடி3)தனஞ்சயன்[கோப்பி]குடி4)கச்சிலான்குடி5)முண்டன்குடி

6)முறண்டன்குடி7)சட்டிலான் குடி

3.வெள்ளாள குடி:

1)கண்டங்குடி2)சரிவிக்குடி3)அத்தியாங்குடி4)கவுத்தங்குடி5)வயுத்னதாங்குடி6)பொன்னாச்சிகுடி7)கட்டைபத்தங்குடி

 

4.சிங்களக் குடி

 

1)அரியகல மிடுமுதலி குடி 2)மீகான் கோடை குடி 3)அவுறாளை குடி 4)மேலச்சேனை குடி

5)பள்ளச்சேனை(பள்ளர் சாதி) குடி 6)பெரிய கல்மடுமுதலி குடி 7)மூவாங்கல்லு குடி

 

5.செட்டி குடி

 

1)செட்டி  2)மங்குச்செட்டி 3)மாணிக்கன் 4)சங்குச்செட்டி 5)சதாசிவன்  6)சிங்கச்செட்டி

7)சின்னவன் பங்குச்செட்டி

 

6.நாவிதர்

 

1)சாரியுறு நாவிதர் 2)மண்முனையதில் நாவிதர் 3)அறவுதங்கும் நாவிதர் 4)மகிழத்தீவு நாவிதர்

5)சவளக்கடை நாவிதர் 6)ஏரியுறு பாலைமுனை நாவிதர் 7)சம்மான் நாவிதர்

 

7.கரையார்.

 

1)கரையூரார் குடி 2)கம்பிளியா குடி 3)ராறுகாட்டி குடி 4)கருதுமுதலித்தேவன்குடி

5)வயித்திவேலன் குடி 6)தறைசெறி வங்காளம் குடி 7)வீரமாணிக்கன் குடி

 

8.சீர்பரதர்

 

1)சித்தாத்திரன் குடி 2) காலதேவன் குடி 3)காங்கேயன் குடி 4)நரையாவி குடி

5)வேளாலி குடி 6)மூடவெனென்னும் குடி 7) பொட்டப்பச்சி குடி

 

9.பண்டாரப்பிள்ளை:

1)தேசத்து குடி  2)எச்சிக்கல்லகற்றி குடி 3)பறைதூக்கி குடி 4)கொடிகட்டி குடி

5)குருத்துக்கட்டி குடி 6)வீதி அதிகாரம் குடி 7)திருவட்டி குடி

 

10.கம்மாளர்

1)சூரியவடப்பன் குடி 2)சும்மாடு குடி 3)ஆனந்தி குடி 4)தட்டாகுடி

5)குருட்டு முத்தன் குடி 6)ஆட்டுவள்ளி குடி 7)பதஞ்சலிகுடி

11.வண்ணார்:

1)முதலைக்குடி2)தாழாங்குடா குடி 3)உச்சக்கரையார் குடி 4)பாவாடை குடி

5)உவந்த சலவை குடி 7)வெள்ளை குடி 6)கன்வயல்

12.சாண்(டா)ர்(நாடார்):

1)களுவத்தைபனிக்கன் குடி 2)வேலாப்பனிக்கன் குடி 3)கருத்தகன்னி குடி 4)பத்தினாச்சிகுடி 5)கருப்பட்டிகாச்சி குடி 6)குசவக்குடி7)பாலைபனிக்கங்குடி

 

13.பறையர்

 

1)வள்ளுவம் பறையன் 2)தொட்டியர் பறையன் 3)தோட்டி பறையன் 4)சக்கிலியன் குடி

5)வெட்டியான் குடி 6)வன்னார் பறையன் 7)சிங்கள பறையன் குடி

14.அடியார்:

1)மூலுவேனு அடியார் 2)மொத்தி கால அடியார் 3)ஆனந்த கன்னு அடியார் 4)வம்மிமோட்டு அடியார்

5)வம்மிமோட்டடியார் 6)கடாப்படி அடியார் 7)மடத்தடி அடியார்

மட்டகளப்பு சாதியர் 14 மட்டுமே இந்த சாதியை தவிர வேறு சாதிகளே கிடையாது.

1)முற்குகர் 2)மறவர் 3)வெள்ளாளர் 4)கரையாளர் 5)பரதர் 6)சிங்களர் 7)பண்டாறம் 8)கம்மாளர் 9)சாணார் 10)நாவிதர்11)பறையர்12)வண்ணார்13)செட்டியார்14)அடியார்

 

இதில் முற்குகர் என்பது மறவர்களின் தலைவனான குகன் அரசன் என்னும் பட்டம் கொண்டவர்கள்.

கலிங்க மாகானால் கிடைத்த காடு சூழ் வன்னி நிலத்தின் மறவர்களின் குக பட்டம் கொண்டவன் என அர்த்தம். கிளை காத்த வன்னி எனும் கானக நிலத்தின் அரசன் குகன்.

“வெறிகமழும் காலிங்கவாசனெங்கள் திறத்தோரைப்

படைத்துணைக்குத் தலைவனாக்கி

குறியறிந்து வன்னிபங்கள் குலமே என்றும்

குகப் பட்டத்தரசு கொண்டோனானே” – ‘மட்டகளப்பு மான்மியம்’.

 

இதில் படையாட்சி என்பது முற்குகரான குக தலைவனுக்கு கலிங்க மாகனால் கலிங்கத்தில்(ஒரிசாவில்) வழங்கும் பட்நாயக்(படைதளபதி) என்னும்  படையாட்சி பட்டத்தை வழங்கினான். படையாட்சி என்பது கலிங்க மாகனால் வழங்க  பட்ட கலிங்கத்தின் பட்டமே அன்றி படையாட்சி என்னும் சாதியோ அதன் உட்பிரிவுகளோ மட்டகளப்பில் இல்லை.

தமிழ்நாட்டில் சாமந்தர் பனிக்கன் நாயன் என தளபதிகளுக்கு பட்டம் தருவர்.

மேலும் வட தமிழகத்தில் கானப்படும் மழவரையன் பல்லவன் போன்ற பெயர்கள் வெள்ளாளரின் வன்னிபங்களுடனே பொருந்தி வருகின்றது.

 

 

முற்குகர் வன்னிமைகள்:

1)வாளரசு கண்ட வன்னியன்

2)போர் வீரர் வென்ற வன்னியன்

3)தண்டவால் முண்ட வன்னியன்

4)முறண்ட வன்னியன்

5)அரசிலை வன்னியன்

6)முண்ட வன்னியன்

7)கிளை காத்த வன்னியன்

 

 

 



சாதிகளும் அவர்களின் கீர்த்திகளும்:

 

 

 

முக்குகர் வன்னிமை

 

சீர்தங்கு வில்லவரும் பணிக்கனாரும் சிறந்த சட்டிலான் தனஞ்சயன்றான்

கார்தங்கு மாளவன் சங்குபயத்தன கச்சிலாகுடி முற்குகரினமேழேகான்

வார்தங்குகுகன் வாளரசகண்டன் வளர்மாசுகரத்தவன் போர்வீர கண்டன்

பார்தங்கு தண்டவாணமுண்டன் பழமைசெறி


மறவர் குடி:

சங்குபத்தன் குடி, கோப்பிகுடி,கச்சிலாகுடி,சட்டிகுடி,மாளவண்குடி,முண்டன் குடி,முரண்டன் குடி.

மறவரில் முண்டன் குடி,முரண்டங்குடி,கச்சிலாங்குடி,மாளவன் குடி சட்டிகுடி,சங்குபயத்தங்குடி இருக்கும் முற்குகரில் முண்ட வன்னியன் முறண்ட வன்னியன், கிளைகாத்தவன்னியன் என மறவரின் தலைவர்கள் இருப்பார்கள்.

மறவரில் இருப்பது பெருங்குடி வீரர்கள்முற்குகரில் இருப்பது தலைவன், அரையன்,பெருமாண்,அரசன் என  முற்குக வன்னிமைகள் மறவரே.


1.மரிக்கார் கிளை = சங்கு பயத்தன் குடி(சோழ பாண்டியன்)

2.பிச்சையன் கிளை = சட்டி குடி(சோழ  கங்கன்)

3.தொண்டமான் கிளை = கச்சிலான் குடி(சோழ வல்லபன்)

4.கட்ரா கிளை = முண்டன் குடி(சோழ கேரளன்)

5.கற்பகத்தார் கிளை = மாளவன் குடி(சோழ கன்னங்குச்சிராயர்)(மாளவம்=குஜராத்)

6.சீற்றமன்(ஸ்ரீ ராமன்) கிளை = முறண்டன் குடி(சோழ அயோத்திராஜன்) 

7.தனிச்சன் கிளை = தனஞ்சயன்[கோப்பி] குடி(சோழ கனகராஜன்)

 

சோழர் படையில் இருந்த கத்திரியர்,கொற்றவாளர்,எறிவீரர்,முனைவீரர்,இளஞ்சிங்க வீரர்களுடன் கலிங்க மாகனால் கச்சி தொண்டையாண்ட திரையரையும் சேரர் வம்ச வில்லவரையும் கலிங்கத்தின்  காலிங்கர்களையும் ஒன்றினைந்த மறவர் சேனையே இந்த முற்குக வன்னியர்கள்.

இவர்கள் யார் என தற்போது கூற தேவையில்லை.

 

இராஜேந்திர சோழரின் 1055- ஆம் ஆண்டில் எழுதபட்ட இராஜேந்திர சோழரின் மெய்கீர்த்தியில் சோழபாண்டியன்,சோழகங்கன்,சோழகேரளன்,சோழ அயோத்திராஜன்,சோழ கனகராஜன்,சோழ கன்னங்குச்சிராஜன்,சோழ வல்லபன்

அதனாலேயே அவர்களுக்கு வன்னிபங்கள் கிடைத்துள்ளன. என தோன்றுவதால் சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றோம்.

 

 

1)சோழபாண்டியன் 2)சோழகங்கன் 3)சோழகேரளன் 4)சோழ அயோத்திராஜன்

5)சோழ கனகராஜன் 6) சோழ கன்னங்குச்சிராஜன் 7)சோழ வல்லபன்



செம்பி நாட்டு மறவர் கிளைகள்

——————————————————–

1.மரிக்கார் கிளை = சங்கு பயத்தன் குடி = சோழ பாண்டியன்

2.பிச்சையன் கிளை = சட்டி குடி= சோழ கங்கன் =  சோழ கலிங்க ராஜன்

3.தொண்டமான் கிளை = கச்சிலான் குடி= கத்திரியர்  = சோழ வல்லபன்

4.கட்ரா கிளை = முண்டன் குடி= சோழ கேரளன்  = வில்லவராயர் 

5.கருபுத்திரன் கிளை = மாளவன் குடி= சோழ கன்னங்குச்சியார்  = குச்சிராயர்(மாளவம்=குஜராத்)

6.சீற்றமன்(ஸ்ரீ ராமன்) கிளை = முறண்டன் குடி  = சோழ அயோத்திராஜன்

7.தனிச்சன் கிளை = தனஞ்சயன் குடி= கனகராயர்  = சோழ கனகராஜன்

.


மரிக்கார் கிளை (அ) உலகிப்போடி குலம் (அ) சோழ பாண்டியன்


இவர்கள் முதல் குலம் மற்றும் வன்னிச்சி மன்முனை என்னு உலகிப்போடி குலம் ஆகும்.

இவர்கள் இராஜேந்திர சோழனால் ஒரு காலத்தில்  மதுரையில் அமர்த்த பட்ட சோழ பாண்டியர்கள் ஆவர்.

இவர்கள் செம்பி நாட்டு மறவரில் வரும் மரிக்கார் கிளையினர் என்றும் ஈழத்தில் மறவரில் வரும் சங்கு பயத்தன் குடி என கூறலாம்.

 

பிச்சையன் கிளை (அ) சோழ கங்கர் (அ) காலிங்கராயர் 

 

இது சட்டிலான்  குடி என குறிக்கபெறுகின்றது.இது சோழ கங்கரான  கலிங்க மாகன் பரம்பரையின்  தாய்வழிக்குடியாகும். இந்த சோழ காலிங்கராயர் குடியே முற்குக வன்னியரிலும் மறவரில் உயர்ந்த குடியாகவும் முதன்மையான குடியாகவும் பார்க்க படுகின்றது காரனம் கலிங்கமாகன் குடி இது தான். காலிங்கராயர் என்ற சோழ கங்கர் என்னும் குடி முற்குகரில் காலிங்கா குடி என்றும் செம்பி நாட்டு மறவரில் வரும் பிச்சியயன் கிளை


தொண்டைமான் கிளை (அ) கத்திரியர்= சோழ வல்லபன்:

 

இது முற்குகரிலும் மறவரிலும் கச்சிலாகுடி என குறிக்க பெறுகின்றது.தொண்டைமான் மன்னனை பெரும்பாணாற்றுபடையில் “மறவர் மறவ தொண்டையோர் மருக” என கூறப்பட்டுள்ளது. மேலும் தொண்டைமான் மகன் என குண்டையங்கோட்டை மறவர் இருவர் கல்வெட்டு இளவேலங்காலில் உள்ளது. தொண்டைமான் பேரரையர் என்னும் பெயரில் மறவர் பற்றிய கல்வெட்டு உள்ளது. இதை விட முக்கியமாக ஆதாரப்பூர்வமான தொண்டைமான் வம்ச  மன்னன் ஒருவன் பற்றிய கல்வெட்டு உள்ளது அதை பற்றி விரைவில் ஒரு கட்டுரையுடுவோம். காரணம் மதுரை சுல்த்தானால் தாக்கபட்ட அந்த தொண்டைமான் மன்னர்கள் இடம் பெயர்ந்து உருவாக்கிய பாளையங்கள் தான் கொல்லங்கொண்டான் வாண்டாயதேவன், சேத்தூர் வணங்காமுடியர்,சிவகிரி வன்னியர்,ஏழாயிரம்பன்னை சிதம்பரனார்,அழகாபுரி இரட்டைகுடையார் இவர்களது பெயரிலும் தொண்டைமான் வம்ச பெயர் இருக்கும் இவர்கள் அனைவரும் ஒரே மன்னனின் வாரிசுகளே. அவர் பற்றி விரைவில் கட்டுரையிடுவோம்.


மேலும் வல்லபன் என்றால் அது தொண்டையோரை குறிக்கும்.

 

சிறுகுடி வெள்ளாளரின் செப்பு பட்டயம்  கூறும் தொண்டைமான் கீர்த்திகள்:

“ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்” என்றும், ” தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்” என்றும், “செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்” என்றும், “மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்” என்றும் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.

 

இதில்

1″ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்”:

இது அறந்தாங்கி தொண்டைமான் சேதுபதி மற்றும் ஆரியசக்கரவர்த்திகளுக்கு மட்டுமே உரியது

சேதுபதி செப்புபட்டயம்”

“ஈழமும் கொங்கும் யாழ்பாணமும் கஜவேட்டை கொண்டருளியவன்”

2.” தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்”

மட்டகளப்பு மறவர் குடி:

சங்குபத்தன் குடி, கோப்பிகுடி,கச்சிலாகுடி,சட்டிகுடி,மாளவண்குடி,முண்டன் குடி,முறண்டன் குடி.

இது  இலங்கை மன்னை வெட்டி சங்கனாக்கி இரட்டை சங்கு பிடித்தவன் என அத்னால் சங்குபயத்தன் குடி என பெயர் எடுத்தவர்கள்

3.”செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்”

கட்டாரிராயன் என ஈழத்தில் கத்திரியன் என வாளரசு வென்ற மறவர்களான வாள்கோட்டைராயர்களை குறிக்கிறது.இது ஈழத்தில் ஐநூற்றுவர் படையில் உள்ள கொற்றவாளர்,கத்திரியர்,முனைவீரர்,எறிவீரர் இவர்களில் பங்கெடுத்து அதற்க்கு தலைமை தாங்கிய பெருமாளான “ஐநூற்றுவ பேரரையன்”. செட்டிமார்களின் காவலன்.

காலம் 13 ஆம்நூற்றாண்டு(கி.பி.1266)

I.P.S.(346)

மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் தென்புரம் சுவரில்

நம்பி ஐநூற்றுவ பெரியான்

ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடை பன்மரான திரியுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்………………….குடுத்த பரிசாவது….. முன்னால் குலசேகர தேவருக்கு இவ்வூர் மறவன் நம்பியான் ஐநூற்றுவ பெரியான் உள்ளிட்டார் பக்கல் விலை கொண்டு உடையார்…………… இவ்வூர் மறவரில் மாலையிட்டான் மக்கள் தற்குரியும்…………………………

4.”மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்”

தொண்டைமான் தமிழ் மன்னன் என்பதிலிருந்தே சேரனும்,பாண்டியனும் யாராக இருப்பர் என யோசிக்க தேவையில்லை.


கட்றா கிளை (அ) சோழ கேரளன் (அ) வில்லவராஜன் குடி:

 

இது முற்குகரிலும் மறவரிலும் முண்டன்குடி வில்லவராஜன்குடி என  குறிக்கபெறுகின்றது. வில்லவராயர் குடி என்னும் முற்குகரில் வரும் குடி சேரரின் வில்லவர்களை குறிக்கும் தொடராகும் மேலும் இது கட்றா க் கிளையினர் என குறிக்கபடுகின்றர். மேலும் மறவர்களை சங்க இலக்கியங்களில் வில்லுடைய மறவராக “வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் வில்லிட தொலைந்தோர்” என வில்லவராக ” சிலையுடை மறவர் சினந்தோர்  புக்க” என சிலை ஏந்தியவராக குறிக்கபடுகின்றனர்.



கருப்புத்திரன் கிளை (அ) சோழ கன்னங்குச்சிராயர் (அ) மாளவர் குடி:


 இது மறவரிலும் முற்குகர் வன்னியரிலும் மாளவன்குடி செம்பிநாட்டு மறவரில் கருப்புத்திரன் கிளை என குறிக்க பெறுகின்றனர். குச்சி என்றால் அது கூர்சரம் என்னும் குஜராத்தை குறிக்கும். இதற்கு பழைய பெயர் மாளவம். குஜராத் கருமன்  பூமி அதனால் கருப்புத்திம் எனவும் சோழ  பிராதானியான குச்சிராயர் என்பது குஜராத் வேந்தர் என மாளவர் குடியாகும்



சீற்றமன்(ஸ்ரீராமன்) கிளை (அ) சோழ அயோத்திராஜன்:

 

இது மறவரில் முறண்டன் குடியாகவும் அயோத்திராஜன் குடியாக செம்பி நாட்டு மறவரிலே வரும் சீற்றமன் அது ஸ்ரீராமன் என்பதி திரிபே. எனவே.முற்குகரில் வரும் குடியாக மறவரே அயோத்தி என்னும் பிரிவில் வருவதால் சோழ அயோத்திராஜனாக ஸ்ரீராமன் கிளையாக கூறப்படுகின்றது.


தனஞ்சயன்  கிளை (அ) சோழ கனகராஜன்:

 

இது மறவரில் கோப்பி குடியாகவும் முற்குகரில் தனஞ்சயன்(அர்ஜூனன்) எனவும் அர்த்தம்.செம்பி நாட்டு மறவரில் தனிச்சன்( தனஞ்சயன்) என்றால் பொன்வென்றோன் என குறிக்கபடுகின்றது. கனகராயர் என்றால் பொன் வென்ற தனஞ்சயன் கிளையாகவும் வருகின்றனர். சோழகனகராஜன் என்பது இந்த கிளையே குறிக்கும்.

 

சேதுபதிகளும்  செம்பி நாட்டு மறவர்களின் ஏழு கிளைகள் சேது நாட்டை ஆண்டது   போல ஆரியசேகரனும் ஏழு குகன்  வன்னியர்களும் யாழ்பாணத்தையும் மட்டகிளப்பையும் ஆண்டனர். சேதுபதிகளும் ஆரிய சேகரனுக்கும் இந்த ஏழு பிரிவுகளுள் திருமனம் செய்வர். தனஞ்சயர் கிளையில் திருமனம் செய்தால் அந்த வாரிசு கனக ஆரியசக்கரவர்த்தி,கனகசூரிய சேதுபதி என்றும் பிச்சையன் கிளை என்ற சட்டிலான் குடியில் திருமனம் செய்தால் கலிங்க ஆரியசக்கரவர்த்தி,காங்கேய சேதுபதி என  பெயர் பூனுவர்.

 

ஆகவே சோழர்கள் வாரிசுகள் சோழ கங்கரின் பரம்பரையான

சேதுபதிகளும் ஆரிய சக்கரவர்த்தியுமாகும்.

 

 

இங்கு கருப்பட்டி காச்சி,குசவன்,பாலை பனிக்கன் என மட்டகளப்பில் பதியபட்ட வெள்ளாளரின் பதினென்  குடியினரில் ஒருவர்களை பாண்டியராய் ஆக்கியே தீருவேன் என கங்கனம் கட்டிய ஒரு ஹஸ்தினாபுரம் தெலுங்கு பிராமனர் மறவர்களை பற்றி வாணாதிராயர் என எழுதுவார் அப்போது அதை பார்க்க வருத்தமாய் இருக்கும் இன்று உரக்க சொல்வோம் நாங்கள் கத்திரியர் மட்டுமல்ல காலிங்கர்,கங்கர்,மாளவர்,வில்லவர்,திரையர்,கனகராயர் என சோழர் பரம்பரை தளபதிகளும் வீரர்களும் நாங்களே. அது மட்டுமல்ல சோழகோன்,சோழகங்கன் என சோழரின் வழியினரும் நாங்களே. இது சோழப் படையினர் மட்டுமே இன்னும் பாண்டிய மறவர்கள் பாக்கி உள்ளனர்…போய் வேலைய பாருங்க ஆச்சாரியரே…….




 

சிங்களக் குடி

 

அரியகல மிடுமுதலி மீகான் கோடை அவுறாளை மேலச்சேனை பள்ளச்சேனை

பெரிய கல்மடுமுதலி மூவாங்கல்லு பேர்களேழே

புத்தூரர் மருங்கூரர் வீரச்சோலைபுகழ் காரைக்காட்டாரும் கொங்கைந்தும்

வித்தகமாய் மேழிதொழில் செய்யுமென்றான்

 

 

செட்டி குடி

 

செட்டி, மங்குச்செட்டி, மாணிக்கன். சங்குச்செட்டி, சதாசிவன், சிங்கச்செட்டி

சின்னவன். பங்குச்செட்டி, பகுத்ததேழே கொச்சி வயிற்றார் முதலைக்குடி குறித்த

தாழாங்குடா ஒழுங்கு உச்சக்கரையார் ஆறுடனே பாவாடை உவந்த சலவை

ஆறுடனே அச்சமின்றி அவரவர் அறிந்து பார் நடத்துவரே.

 

நாவிதர்

 

சாரியுறு மண்முனையதில் அறவுதங்கும் மகிழத்தீவு சவளக்கடை

ஏரியுறு பாலைமுனை வழலவாயி லங்கு சம்மான் துறையென்னுமேழாய்

வாரியுறு மானிழலில் ரசுசெய்யும் மாகோனும் இவர் குடியை வகுத்து வைத்தான்

தாரணியறிந்தவர்கள் நாவிதனைப் தக்கபடி வைத்தமுறை சாரலாமே.

 

கரையார்.

 

கரையூரார் கம்பிளியா ராறுகாட்டி கருதுமுதலித்தேவன் வயித்திவேலன்

தறைசெறி வங்காளம் வீரமாணிக்கன் தான் கரையார்குடி ஏழாய்த்தரித்தான் பாரில்

 

சாண்(டா)ர்:

களுவத்தை பனிக்கன்,வேலாப்பனிக்கன்,கருத்தகன்னி,பத்தினாச்சிகுடி,கருப்பட்டிகாச்சி,குயக்குடி,பாலைபனிக்கங்குடி

 

சீர்பரதர்

 

துரைபோர்வீரகண்டன் சீர்பாதம் துடர்சித்தாத்திரன் காலதேவன் காங்கேயன்

நரையாவி வேளாலி மூடவெனென்னும் நாடதனில் பொட்டப்பறைச்சிசூடி யேழே

வரையாக இவர்களையும் வகுத்து வைத்து மானிலத்தி

லொற்றுமையாய் வாழுமென்று

திரையகல் சூழல்;புவி யரசன் வகுத்து வைத்துச்சீர்பாதம்

செட்டியென்று செப்பினாரே

 

பண்டாரப்பிள்ளைகள்

 

பண்டாரப்பிள்ளை தேசத்து எச்சிக்கல்லகற்றி

பறைதூக்கி கொடிகட்டி குருத்துக்கட்டி

விண்டரும் வீதி அதிகாரம் திருவட்டி …………..

மன்றாடும் போடியார் வீடு கூட்டி

மடத்தடியார் குளிசீலை பிழியுந்தொழில்கொண்டு

குகமரபினனுக்குச் செய்வதன்றி

வேறு குலமக்களுக்குச் செய்யொண்ணாதே.

 

 

களுவத்த பணிக்கன் வேலன் கறுத்தக்கண்ணி பத்திச்சி

கொளுங்க குப்பட்டி குசவன் பாலன்குட்டி வகைகளதாக்கி

நழுவிய நம்பிமாரை நழவரென்ற வரியிற்சேர்த்து

வழுவில்லா மதுவெடுக்கும் வருணமென்றியம்பினாரே.

 

பறையர்

 

வள்ளுவம் தொட்டி தோட்டி வாஞ்சொலி சக்கிலியன்

துள்ளும் வெட்டி யானந்தனேழாய்ச் சுகித்திடவகுத்தவாறே

பள்ளுடன் கலந்தாலுங்கள் வரன்முறை குறையுமென்று

வள்ளலார் காலிங்க மாகோனும் வகுத்திட்டாரே.

 

 

தேசம்

 

தேசமென்று வரிசை முட்டி வாங்கவந்தீருன்திறமை யென்ன

……………….. செங்கோலோச்சி

நீர்குழுமிலங்கை முற்றுமிராவணன் பின்

நிலையரசு புரிகலிங்க ராசனானே.


வன்னிமை(முற்குகன் அரச மக்கள்)

 

வன்னிபங்கன் குலவரிசை முட்டிகூற மகிழ்ச்சிகொண்டு

எழுந்திடுன் மரபும் நாடுமெந்த

மன்னருன்னை வன்னிபமாய் வகுத்ததென்றும்

மானிலத்திலுங்கள் முன்னோர் வாழ்ந்தவூரும்

துன்னுபுகழ் கோத்திரமும் தொன்று தொட்டுத்

துணையரசன் பேரூருஞ் சொன்னாலிந்த

பன்னுபுகழ் சபையோர்கள் மகிழக்கூறிப்

பங்குபெறு மறியாயானாற் பாவமாமே.

 

அறமியாதா னிச்சபைக்கு அகலநிற்பான் னெங்கள்

பரன்றோழும்பேர் பழிப்புரைப்பாரறைவே

நெறிதவறார் சுயநாடு காளிகட்டம் நீர்குலமே

படையாட்சி யுழுதூ ணுண்டோர்

வெறிகமழு மகாலிங்க வாசனெங்கள் திறத்தோரைப்

படைத்துணைக்குத் தலைவனாக்கி

குறியறிந்து வன்னிபங்கள் குலமே என்றும்

குகப்பட்டத்தரசு கொண்டோனானே.

 

குருநாதர்(கலிங்கமாகான்)

 

குருநாதர் குலகுருவின் வரிசைமுட்டி கூறுமுன்னர்

குலம்கோத்திரம் குதுகலத்தின்

………………….

பூதலத்திலுயர் கலிங்கராசனுடன்

வந்திலங்கை முதல் குருவாய்ப் புகுந்தோனானே.


பூபாலகோத்திரம்(கலிங்க வெள்ளாளர்)

 

பூபாலகோத்திரதின் புகழைக்கூறப் புவியதனில்

தூரநில்லேன் பூபாலன் சோழனல்லத் துங்கமுடி

ராமல்ல வங்கர் கெங்கர் வடுகனல்ல

தூசிமாற்றுங் கெங்கர் குலத் தரசன் றானும்

செப்பரிய காலிங்கநகரரசு செய்யுங்காலம்

நீரகழிலங்கை முற்றுஞ் சைவமோங்க

நிலையரசு புரிந்து பூபாலனென்ன நின்றெங்கள்

காரகற்றிச் சிவப்பணிக்குக் காவல்வைத்த

காரணத்தால் சிவகோத்திரக் காளை யானே

 

பூவசியன்(வனிகர்)

 

முற்குலத்து வசியரிலும் பூவசியன் முதற்குலமாய்ப்

…………………மட்டக்களப்பிலுயர்

வசியகுலக்காளை யானே.

 

புன்னாலை(பனிக்கமார்)

 

புன்னாலைப் பெருமைதனைப் புவியோர் கேட்கப்

பு…………..

ஞ் செங்கோலோச்சும்

கருத்தரிய சவுந்தரியாள் வங்கர்குலம் நானுமந்தக்

குலக்காளை யந்நாட்டுக் கடமைகேட்டேன்.

 

வன்னிச்சி மண்முனை

 

மண்முனை மாநிலத்தில் மருங்கூரென்றும் மகிழ்ந்து

……………

பரிதிகுலன் பதிகாவல்புரிந்தோனானே.

 

நாடு(மட்டகளப்பு)

 

நாடதிகம் புவிதனிலே புகழிலங்கை

நன்னாட்டின் பெருமைதனை நாடிக்கூற

தேடரியதிருச்சபைக்கு முன்னேவந்து வரிசைமுட்டி

தீண்டமுன்னுன் பேரூருஞ் சிறந்தநாடும்

மாடமுயர் மண்டபமும் மரபும் நீங்கள்

வந்தவரலாறு முற்றும் வழுத்துவீராய்

ஏடலரும் வரிசைமுட்டி எடுப்பீரல்லாலிச்

சபையை விட்டகன்றே குவீரே.

 

சபையோரே மானிலத்திலதிகம் நாடுசங்கை

பெறுமெண்ணாட்டுள்ராமனோடு

எவையோரில் மறவர்குலத் தேழுமாதரிலங்கை

செல்ல மணமகனுஞ்சிறைகள் சூழ

அவையமென வெங்கள் குலத்தைந்துகுடி

யனைவருக்கும் பூசகரா யழைத்துமட்டச்

சுவைகளப்பில் குடியேற்றி யாவருக்கும்

குருக்களெனத் தோன்றும் நானே.


நகரம்(வெள்ளாளர்)

 

நகரமென்று திருச்சபையோர் வரிசைகூற

……………..தஞ்சை நகரெங்கள் குலந்

திருச்சோழகண்டபிள்ளை விழாக்கடமைத்

தொழில்புரிந்து ழுதுண்டு கண்டநெல்லுழவரென

தோன்றும் நானே

 

கண்டி(மறாட்டியர்)

 

ஈழமுறுங்கண்டி யதன் பெருமை கூற வெழுந்துவந்தீர்

……………………………………………

அரியென்னுங் கொடி யுயர்த்தி யரசுசெய்த

வன்னவன்றன் குலம்குலமாய் நிலைமைபூண்டு

வரிசைமுட்டி பெறுவதற்குத் தடையேதுமுண்டோ

வங்கர் குலக்கோத்திரத்தான் சிங்கன் நானே.

 

கதிரை

 

கதிரைநகர்ப் பெருமைதனைப் புவியோர்கேட்கக்

க…………………….

குலமிந்தக் கடமைகேட்டேன்.

 

கந்தளை(மலையாளமுக்குகர்)

………………………..

இன்பமொடு மணந்த மங்கை வங்கர்குலம்

நானுமக்குலத்தான் வரிசைகேட்டேன்.

 

மாவலி(இடையர்)

 

மாவலியின் புகழ்தனை யுலகோர் வாழ்த்த

…………

வாடாத அக்குலத்து மரபன் நானும்

வரிசைபெற வினியேதுந்தடையதாமோ.

 

அயோத்தி(மறவர்)

 

அயோத்தி நகரதற்குப் புகழேயோங்க

வரிய திருச்சபையோர்கள் வரிசைகூற

மெய்செழிக்க விச்சபையில் வந்திருங்கள் விருதுடனே

குலங்கோத்திர மரசுரிமைவேந்தர் பேரும்

வையத்தில் வந்தவாறுடனே

யந்தமன்னனிருவரன் முறையும் வழுத்துவீராய்

பொய்யுரைகள் கூறாமல் வரிசை பெறும் பொருள்

தெரியாதாகிலிந்தச் சபையின் பின் போவீரே

 

வீரனென்னும் பரதிகுல யிரகுமுன்னாள்

வேட்டை சென்றெங்கள் குலமெல்லிதன்னை

மாரனென்றணைத்தீன்ற சவலையர்க்கு

வருஇரகு நாடனென நாமமிட்டு

பூருவத்தி லயோத்தி யுரிமையீந்து

போன பின்னர் சிறிராமர் துணைவராகி

தீரரென்னுமரக்கர்குலம் வேரறுத்த

சிவமறவர்குலம் நானும் வரிசைகேட்டேன்

 


சேதுக்கரையின் ஏழு மறவர் தலைவர்களும் இந்த ஏழு முற்குகர் வன்னியரே:


முற்குகர் வேறு மீன் சுமக்கும் முக்கியர் வேறு இனம் என கூறுகின்றனர்



இந்த இலங்கை வன்னிபங்களை ஆண்டதால் இம்மறவர் வன்னியர் எனபட்டனர். யாழ்பாண மன்னர் தம்மை இராமன் ஆரியசக்கரவர்த்தி என கூறி கொள்வார் எனவே “சிறிராமர் துணைவராகி தீரரென்னு மரக்கர்குலம் வேரறுத்த சிவமறவர்குலம்” என இராமனான ஆரிய சக்கரவர்த்தியுடன் துனைக்கு சென்றதால் இவர்கள் முற்குக வன்னியர் எனப்பட்டனர். ஆரியசக்கரவர்த்தி மட்டும் இராமன் என பெயர் பெறவில்லை. சேதுபதியும் மனு இரகுநாதன் என்னும் பெயர் பெற்று இருந்தார். “மனு இரகுநாதன்” மற்றும் “இராமன் ஆரியசக்கரவர்த்தி” ஆகிய இரு பெயர்களும் திருப்புல்லானி பெருமாள் ஸ்ரீ ராமனின்  பெயர் தான்.

ஏழு மறவர் தலைவர்களின் பெயர் விளக்கங்களும் அவர்களின் வன்னிபங்கள்:

இதன் விளக்கங்கள் பலருக்கும் தெரியாது.

 

1)வாளரசு கண்ட வன்னியன்(வாள்கோட்டைராயர்):

இது சேதுபதியின் பட்டமான வாள்கோட்டைராயர் என்ற பட்டத்தை பின்பற்றியது தான் வாள்கோட்டைராயர்.நிலக்கொடயின் பொருட்டு கார்காத்த வெளாளருக்கு மறவர் வழங்கிய செப்பேடுகளில் பனையூர் குலமங்களத்து கரை மறவர்களை குறிக்கும் பொழுது “சேது காவல் பேரரையன் மற மன்னர் வாள்கோட்டை ராயர் சிறுகரை 18க் கும் 9 பெருங்கரைக்கும்” என்ற குறிப்புக்களும் மற்றோரு செப்பேட்டின்ல் “பனையூர் குளமங்கலம் ஊராயமந்த ஊரவர் அனைவர் உள்ளிட்டாரும் கூடி கரப்பிரியல் பட்டயம் வகையாவது வாள்கோட்டைராயன் சேது காவலப் பேரரையர் மறமன்னர் கலங்காத கண்டன………….இது போக இராமப்பையன் அம்மானையிலும் சேதுபதியை வாள்கோட்டை ராயர் என கூறுகின்றது.

 

2)போர் வீரர் வென்ற வன்னியன்(செருவென்றார்)

போர் வீரர்களான திமிலர்,சிங்களர்,வங்கர் போன்றவர்களரை வென்றதால் இந்த பெயர் வந்துள்ளது.

3)தண்டவால்(தனுஷ்க்கோடி) முண்ட வன்னியன்

தண்டம்-வில் தனுஷ்கோடி பகுதியை தண்டவால் என அழைப்பர் அந்த பகுதியின் மறவர்களை தண்டவால முண்ட (வீரர்)வன்னியர் என

4)முறண்ட(அடங்காபற்று) வன்னியன்:

இப்பகுதி மறவர்கள் யாராலும் அடக்க முடியாதவர்கள் ஆதலால் முறண்ட வன்னியர் எனப்பட்டனர்.

5)அரசிலை காத்த வன்னியன்(பிரதிஸ்டாபகன்):

கமுதி பகுதியை ஆண்ட சிறைமீட்டான் ஆதி அரசுத்தேவர் இலங்கையின் ஆட்சியாளராக இருந்ததாக கூறுகின்றார் அவரே இந்த அரசிலை காத்தவனாக இருக்கலாம் அல்லது அரசுநிலையிட்டான் அரசு காத்தான்,சேது காத்த தேவர்,அடைக்கலம் காத்தான் போன்ற பெயர்களில் வரும் பட்டம் தான் இது.

6)முண்ட வன்னியன்: 

முண்டன் என்றால் வீரன் என அர்த்தம் .சேதுபதிக்கு “கால் வாய்த்த கரந்தையர் கோன்” விரையாத கண்டனிலிருக்கும் “வீரையர் கோன்” என வீரர்களுக்கு அரசன் என பொருள் படும்.

7)கிளை(வம்சம்) காத்த வன்னியன்:

இது மிகவும் முக்கியமானதாகும். கிளை மறவரிடம் மட்டுமே உண்டு. அதிலும் இந்த மறவர் செம்மநாட்டு மறவர். இதில் வரும் தனிச்சா கிளை தான் மட்டகிளப்பில் வரும் தனஞ்சயன் என்னும் மன்னனை குறிக்கும்.

எனவே முற்குகர் வன்னியர் மறவரே

 

வன்னி நாட்டை அரசு புரிந்த வனிதையர்(மறவர் குல நாச்சியார்) – பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை

 

          (தாய்வழி சமூகத்தில் செம்பி நாட்டு மறக்குல  பென்கள் தீப்பாய்ந்த வரலாறு)

யாழ்ப்பாணத்தில் நடைமுறையிலிருந்துவரும் வழிபாடுகளுள் நாய்ச்சிமார் வழிபாடுமொன்று. அங்கு பலப்பல ஊர்களிலும் நாய்ச்சிமார் கோயில் உண்டு. அக்கோயில்களில் மங்கலமான நாட்களில் மக்கள் பொங்கல் பொங்கியும் விளக்கு வைத்தும் வழிபாடாற்றுவார்கள். இவ்வழிபாடு யாழ்ப்பாணத்திற்கு எந்தக்காலம் வந்தது என்பது ஆராயத்தக்கது. அதனோடு நாய்ச்சிமார் என்ற கடவுள் வைதிக சைவ சமயத்தில் இல்லை. ஆகவே, இது தமிழ் மக்களுக்குள் வைதிக சமயத்திற்குப் புறம்பே எழுந்த வழிபாடாகும்.

 

எனவே, இவ்வழிபாட்டுமுறையை ஆராயுமுன்னர் நாய்ச்சிமார் என்னும் சொல்லைச் சிறிது ஆராய்வோம். நாச்சி என்னும் பெயர்ச் சொல்லுக்கு மார் என்னும் உயர்திணைப் பன்மை விகுதியைச் சேர்த்து வந்ததே நாய்ச்சிமார் என்னும் சொல்லாகும். நாச்சி என்னும் சொல்லை எடுத்துக்கொள்வோம். நாச்சி என்னும் சொல் எட்டாவது நூற்றாண்டுவரையில் தமிழ் மக்கள் வழக்கிலிருந்தது. பெரியாழ்வாருடைய மகள் ஆண்டாளைச் சூடிக்கொடுத்த நாச்சியார் என்று அழைத்தல் இதற்கு எடுத்துக்காட்டாகும்.

 

நாச்சி என்னும் சொல் “நீ” என்னும் சங்கத (சமஸ்கிருதம்) வினையடியாகப் பிறந்த உயர்திணைப் பெயர். “நீ” என்பதற்கு வழிகாட்டுதல் என்பது பொருள். எனவே, நாச்சி என்பதற்கு வழிகாட்டுபவள் அல்லது தலைவி என்பது பொருள். நாச்சி என்பதற்கு ஆண்பால் நாயன்.(1) ஆனால், இலங்கை வன்னி நாட்டிலே வன்னியர் ஆதிக்கஞ் செறிந்திருந்தபோது, வன்னியர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை நாச்சிமார் என அழைத்தல் மரபுபோலத் தோன்றுகின்றது.

 

வன்னிநாட்டிற் கண்டெடுக்கப்பட்ட பழைய ஏட்டுப் பிரதியொன்றில் பின்வரும் வரலாறு

காணப்படுகின்றது:-

 

“அறுபது வன்னியமார் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து ‘அரசு’ புரிந்துகொண்டிருந்தனர். அவர்கள் இங்கு வரும்போது தம்முடைய மனைவிமாரை மதுரையில் விட்டுவிட்டு வந்தனர். அக்காலத்திலே வட இலங்கையின் பல பாகங்களைப் பறங்கிக்காரர் கைப்பற்றத் தொடங்கினர். அப்பொழுது அந்த வன்னியமார் அறுபது பேரும் பறங்கிக்காரரோடு போர் புரிந்தனர். அவருள் 54 பேர் போரில் மாண்டனர்.” (மேல் வரும் பகுதி நேரடியாக ஏட்டுப் பிரதியிலிருந்து எடுக்கப்பட்டதாகும்). “ஆனால், அக்கூட்டத்தில் ஐவர் பறங்கிக்காரரோடு பெரும் போர் நிகழ்த்தி தாம் இருக்கும் வன்னி நாட்டைக் கைப்பற்ற விடாது அவரை முறியடித்து, முள்ளியவளை முனையாக அந்த நாடுகளையும் அரசு பண்ணினர். ஒருவன் கண்டி இராசனுக்குத் திசை (திசாவா) (2) யாகப் போய்விட்டான். அதன்பின்னர் எஞ்சிய ஐந்து வன்னியமார்கள் மதுராபுரிக்குப் போய்த் தமது மனைவிமாரை இட்டு வரும்படிஓடமேறிச் சென்றனர். அவர் போகும்போது அவர் போன ஓடம் கடலில் ஆழ்ந்துவிட்டது. அதனால், அவர் மாண்டனர்.”

 

“இது இவ்வாறிருக்க அந்த வன்னியமார் அறுபது பேருடைய பெண்சாதிமார் மதுரையிலே இருக்கும்போது ஒரு நாள் அந்த நாட்டரசன் அவர்களிருக்கும் தெருவீதியிலே குதிரை மீதேறி, பெண்கள் இருக்கும் தெரு என்றும் கவனம் பாராது தன் குதிரையை ஓட்டி வந்தான். அவ்வாறு அவன் வந்தபடியினால் அவர், ‘இனிமேல் நாங்கள் இங்கிருந்தால் எங்களுடைய மானம் கெட்டுப் போகும். எங்கள் முதலாளிமார் இலங்கை நாட்டிற்குப் போய் இராசாக்களாக இருப்பதால் நாங்களும் அவ்விடம் போக வேண்டும்’ என எண்ணினர். தமது பயணத்திற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்துகொண்டு தங்கள் பணியாட்களுடன் ஓடமேறி வட இலங்கைக்கு வந்தார்கள். பின்னர் வன்னிய நாட்டுக்கு வரும்போது வன்னியமார் இறந்த சேதிகொண்டு தூதன் பின்வருமாறு சொல்லுவான்: “எங்கள் முதலாளிமார்கள் 60 பேரிலே 54 பேர் பறங்கிக்காரருடன் பொருதுபட்டுப் போனார்கள். ஒருவர் கண்டியில் இராசாவுக்குத் திசையாக நிற்கின்றார். மற்ற 5 பேரும் பறங்கிக்காரரையும் வென்று வன்னியை ஐந்து பற்றாகப் பிரித்து அரசு பண்ணினார்கள். அப்படி அரசு பண்ணிவிட்டு அந்தந்தப் பற்றுக்கு அந்தந்த வேளாளரை முதன்மையாக்கிப் போட்டு முள்ளியவளையிலே இளஞ்சிங்க மாப்பாணனை(இளஞ்சிங்க வீரன் என்னும் மறவன்) [சேதுபதி செப்பு பட்டயத்திலே அவரின் பட்டங்களாக இளஞ்சிங்கம்,தளசிங்கம்,சொரி முத்து வன்னியன் என அவரது விருதுகள் வருகின்றது] முதன்மையாக்கிப் போட்டு மதுரைக்கு வந்தார். அதன் பின்பு அவர் கதை யாதொன்றுந் தெரியாது” என்றனர்.

 

“இவ்வாறு தூதன் சொல்ல அது கேட்டு முன்னமே இறந்த 54 வன்னியமார்களுடைய பெண்சாதிமார்களும் தெல்லிச்சி வாய்க்காலிலே (3) தீயிலே வீழ்ந்து மரணமடைந்து போனார்கள். அப்போது அவர்களுக்கு நாச்சிமார் என்று பெயராயிற்று. அவர்களுக்குக் குதிரை விட்டுவந்த சேவகரும்(மறவர்களின் குதிரை சேவகரான பள்ளர்) அறுபது பேரும் வீரக் குடும்பன்(குதிரை சேவகர் தலைவர்) முதல் ஆரிய குடும்பன் முதலாகத் தீயில் விழுந்துவிட்டார்கள். அன்றுமுதல் அவர்களுக்கு (மறவர் பென்கள் குடும்ப மக்களை தன் அண்ணன் என அழைப்பது வழக்கம்) அண்ணமாரென்னும்பெயராயிற்று. ஒரு வன்னிச்சிமாரும் வன்னி ஐந்து பற்றிலுமிருந்து அரசு புரிந்தார்கள்  அதன் காரணத்தால் பெண்களுக்கு வன்னிமை என்றும் ஆண் பிள்ளைகளுக்கு ‘ஐதாந்தி’ என்றும் பெயராயிற்று.”

 

இவ்வன்னிநாட்டு வரலாறு ஒருபுறமிருக்க யாழ்ப்பாணத்தில் நாச்சிமார் வழிபாடிருக்கும் சில பகுதிகளில் வழங்கும் வரலாற்றை இங்கு தருவாம். அது பின்வருமாறு:

 

ஆறு வன்னிமைப் பெண்கள் வன்னி நாட்டிலிருந்து ஆட்சி புரிந்து வந்தனர். பறங்கிக்காரர் வட இலங்கையின் ஒரு பகுதியை கைப்பற்றிய பின்னர் வன்னியையும் கைப்பற்ற முயன்றனர். ஒவ்வொரு முறையும் அவர் முயற்சி பலிக்காமல் போரில் தோல்வியுற்று வன்னிநாட்டினின்றும் திரும்பவேண்டியவரானார். ஏதோ ஒரு வகையாகத் தாம் வெற்றி பெறவேண்டுமெனப் பெரும் ஊக்கத்துடன் தமது படையை அணிவகுத்துப் பின்னரும் சென்றனர்.

 

அங்கு போய் வன்னிநாட்டுப் படைகளுடன் பெரும் போராற்றினர். இம்முறை வன்னிநாட்டவர் படை சிறிது தளர்வுற்றனர். அதைக் கண்ட அந்த நாட்டினை ஆளும் வன்னிமைப் பெண்கள் அறுவரும் அவரது பணிப்பெண் ஒருத்தியும் ஆண்களைப்போல், அம்பு, வில்லு, வாள், சதங்கை முதலிய படைதாங்கித் தமது சேனையை நடாத்திப் பறங்கியர் முன்னர் வந்தனர். இருபடையினர்க்கிடையிலும் இதுகாறும் நடந்த போர்களைக் காட்டிலும் பெரியதோர் போர் மூண்டது. இப்பெண்கள் பறங்கியர் படை எதிரில் நின்று மிகுந்த வீரத்தோடு போர் செய்தனர். அதனால், பறங்கியர் முதுகுகாட்டி ஓடவேண்டிய நிலையும் வந்தது. எனினும் ஏதோ சூழ்ச்சியால் பறங்கியர் தலைவன் போரை வென்றனன். அதனால், வன்னிப்படையினர் மனமுடைந்தனர். அப்பெண்கள் ஏழுபேரும் பறங்கியரின் கைகளில் அகப்பட்டால் மானபங்கம் அடைய நேரிடும் என உள்ளம் பதைத்தனர். மானமிழந்து வாழ்வதைக் காட்டிலும் உயிர் நீத்தலே சாலச்சிறப்புடைத்து என உறுதி கொண்டனர். உடனே அப்பெண்கள் எழுவரும் நஞ்சுண்டிறந்தனர். அதைக்கண்ட வன்னிநாட்டவர் அவரைத் தெய்வமாக்கினர். கற்பினிற் சிறந்து விளங்கிய கண்ணகியைக் கடவுளாக்கி வழிபடும் தமிழ் மக்களாகிய வன்னிநாட்டவரிடை வீரத்திற் சிறந்து திகழ்ந்த இவ்வெழுபெண்களையும் வழிபடும் வழக்கம் எளிதிற் பரவியது, நாளடைவில் இவ்வழிபாடு வன்னிநாட்டில் மட்டுமின்றி ஏனைய இடங்களுக்கும் பரவியது. யாழ்ப்பாணத்திலே வடமராட்சி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த நாகர்கோயில் என்னும் ஊரிலும் பருத்தித்துறை, சாளம்பை(4) வட்டாரத்திலும், காங்கேசன்துறை வன்னியனார் வளவிலும் அராலியிலும் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியிலும் இவ்வழிபாடு இன்றும் நடைபெறுகிறது.

 

இக்கோயில்களில் நடக்கும் வழிபாட்டு முறைகளை எடுத்துக் கொள்வோம். பொதுவாக ஏனைய கோயில்களில் நடக்கும் வழிபாடு போலவே இங்கும் வழிபாடு நடக்கும். ஆனால், இக்கோயில்களில் ஒரு தனிச்சிறப்பான வழிபாட்டு முறையுண்டு. எடுத்துக்காட்டாக, பருத்தித்துறைச் சாளம்பை வட்டாரத்து நாச்சிமார் கோயிலில் பறைமுழங்கும்போது விட்டுவிட்டு, வேறு வேறு தாளத்துடன் ஏழு முறை முழங்குதல் மரபு. இது பண்டை நாள் தொட்டு வந்த வழக்கம் என்பர். தைப்பொங்கல், சித்திரைப் புத்தாண்டு முதலிய பெருநாட்களில் அங்கு மக்கள் போய்ப் பொங்குவர்.

Recent gender-oriented critique of the LTTE fails to take note of the fact that the Moothinmullai Mother is a leitmotif in the structuring and representation of the Tamil nationalist project. Hence in the BBC documentary on the Tigers – Suicide Killers – the Black Tiger Miller’s mother is presented to the TV crew as a woman who feels proud of her son’s heroic martyrdom in the suicide attack on the Nelliady, Sri Lankan army camp in 1987. The LTTE here is reproducing a fundamental structure of representing Tamilian identity. C.S.Lakshmi has examined the role of the concept of the heroic mother in the militant Dravidian movement and its strategy of mobilising women. She, however, fails to take note of the politics of Aiyangar and Bharathy and the impact of the Russo-Japanese war on them in the genesis of this concept. C.S.Lakshmi; Mother, Mother-community and Mother-politics in Tamil Nadu. Economic and Political Weekly, October 1990. Aiyangar notes that the earliest Tamil grammar – the Tholkappiyam – defines and names the poetic theme of the mother who comits suicide on hearing her son’s lack of valour in the battle field. (‘These mothers belonged to Maravar clans’, he says. The Maravar are matrilineal.) He says that the warriors brought forth by these mothers made Tamil Nadu glorious in the Sangam era, in which “one does not hear of north Indian kings invading Tamil Nadu, but only the victories of Tamil kings who fought the northerners. This was so because of the greatness of Tamil martial might.” He concludes that the decline of the Tamils was the results of the decline of what he calls Thamil Veeram (Tamil martial prowess).

காங்கேயன் துறை வன்னியனார் வளவுக் கோயிலிலும் உள்ள வழிபாட்டு முறையும் கவனிக்கத்தக்கது. இங்கும், தைப்பொங்கல் முதலிய பெருநாட்களில் மக்கள் பொங்கிப் படைப்பர். இதைவிட ஆண்டுக் கொருமுறை அங்குச் சிறப்பான வழிபாடொன்று நடைபெறும். அவ்வழிபாட்டுநாளன்று பருவமாகாத பெண்களுள்ள ஏழு வீட்டிலிருந்து ஏழு தாம்பாளம் நிறையப் பொருட்கள் வைத்து தூய வெண்சீலையினால் மூடி அவ்வீடுகளிலுள்ள ஏழு பருவமாகாத சிறுமிகள் அக்கோயிலுக்கு எடுத்துச் செல்வர். இத்தாம்பாளங்களுக்குள்ளே மிளகு, இஞ்சி, மஞ்சள், எள்ளு, சீரகம், பனங்கட்டி, செங்கல்லு, குன்றிமணி ஆகியவற்றைச் சேர்த்து இடித்த பாகு, அம்பு, வில்லு, சதங்கை ஆகிய பொருட்களை வைப்பர். இத்தாம்பாளங்களைக் கோயிலுக்குக் கொண்டு சென்றதும் அங்கு நிற்கும் கோயில் மரங்களுக்குக் கீழ் ஒவ்வொன்றாக வைப்பர். ஆறு மரங்களும் கிட்டக்கிட்ட உள்ளன. ஆனால், ஏழாவது மரம் அவற்றிற்குச் சிறிது தூரத்தேயுள்ளது. கிட்டக்கிட்ட உள்ள ஆறு மரங்களுக்கும் கீழ் ஒவ்வொன்றாக வைக்கப்படும் ஆறு தாம்பாளங்களும் ஆறு கன்னிமைப் பெண்களுக்கும் தூரத்தேயுள்ள மரத்தின் கீழ் வைக்கப்படும் ஒரு தாம்பாளம் பணிப்பெண்ணுக்கும் ஆகும். அம்பு, வில்லு அவர் போர் செய்ததையும், குன்றிமணி செங்கல்லு அவர் நஞ்சுண்டிறந்ததையும் குறிக்கும்.

 

மறவரின் ஏழு கிளைகளும் பென்னை சார்ந்தது:

 

Sketch of the Dynasties of South India, t Numismata Orient. Ancient Coins and Measures of Ceylon. Among the Sembanattus (or Sembanadus), the following septs or khilais have been recorded : Marikka. Piccha. Tondaman. Sitrama. Thanicha. Karuputhra. Katra(15) Edgard Thurstan, K.Rangachari: Castes and Tribes of South India, vol.V, 1909, Govt.Press, Madras, 

தாம் கொண்டுசென்ற தாம்பாளங்களை வைத்த பின்னர் ஏழு சிறுமியரும் ஏழு வளந்துப்பானையை(5) அடுப்பிலேற்றுவர். இதன் பின்னரேயே அங்கு வழிபாடாற்ற வந்திருக்கும் ஏனைய மக்கள் பொங்கல் செய்யத் தொடங்குவர். பொங்கி முடித்த பின்னர் யாவரும் தாம் பொங்கிய பானைகளிலிருந்து பொங்கற் சோற்றை எடுத்து ஏழு மரத்தின் கீழும் வாழையிலையிற் படைப்பர். வயதில் முதிர்ந்த ஒருவர் இளநீர் உடைத்துச் சாம்பிராணி, கற்ப+ரம் கொளுத்துவர். யாவரும் கும்பிட்டு வழிபட்ட பின்னர் இச்சிறுமியர் எழுவரும் தாம் கொண்டு வந்த தட்டங்களைக் கையில் ஏந்தி நிற்பர். அப்பொழுது அங்கே பொங்கியுள்ளோர் ஒவ்வொருவரும் தமது பானைகளிலிருந்து சிறிது சிறிது சோற்றை எடுத்து அத் தாம்பாளங்களிற் போடுவர். அதன் பின்னர் அச்சிறுமியர் அக்கோயிலுக்குப்பக்கத்தேயுள்ள கேணிக்குள் ஏழு குண்டுக்குள் தாம் கொண்டு வந்த தாம்பாளத்திலுள்ள பொருட்களைக் கொட்டுவர். இத்துடன் வழிபாடு முடிவடையும். தீராத வருத்தமுள்ளோர் யாரும் அங்கிருப்பின் அவருக்கு அச்சிறுமியர் பொங்கிய பானைகளிலிருந்து பொங்கற் சோற்றை எடுத்துக் கொடுப்பர். இது அவர் நோய்க்கு மருந்தாகும் என்பது இவர் நம்பிக்கை.

 

நாடு(மட்டகளப்பு)

 

 

 

நாடதிகம் புவிதனிலே புகழிலங்கை

 

நன்னாட்டின் பெருமைதனை நாடிக்கூற

 

தேடரியதிருச்சபைக்கு முன்னேவந்து வரிசைமுட்டி

 

தீண்டமுன்னுன் பேரூருஞ் சிறந்தநாடும்

 

மாடமுயர் மண்டபமும் மரபும் நீங்கள்

 

வந்தவரலாறு முற்றும் வழுத்துவீராய்

 

ஏடலரும் வரிசைமுட்டி எடுப்பீரல்லாலிச்

 

சபையை விட்டகன்றே குவீரே.

 

சபையோரே மானிலத்திலதிகம் நாடுசங்கை

 

பெறுமெண்ணாட்டுள்ராமனோடு

 

எவையோரில் மறவர்குலத் தேழுமாதரிலங்கை

 

செல்ல மணமகனுஞ்சிறைகள் சூழ

 

அவையமென வெங்கள் குலத்தைந்துகுடி

 

யனைவருக்கும் பூசகரா யழைத்துமட்டச்

 

சுவைகளப்பில் குடியேற்றி யாவருக்கும்

 

குருக்களெனத் தோன்றும் நானே.

 

நன்றி:மட்டகளப்பு மான்மியம்

 

அமரசேனன் கலிபிறந்து மூவாயிரத்து நானூற்றறுபத்தாறாம் வருஷம் அரசுபுரியும் போது தனது உடன்பிறந்தாருக்கு இலங்கை பலதிக்கிலும் வதுவை செய்து வைத்து அரசு புரிந்து வருங்காலம் இராமநாட்டு மறவர்குலத்து இராசவம்சத்தைச்சார்ந்த ஏழுபெண்கள் தங்கள் தங்கள் மணமகனுடனும், சிறைதளங்களுடனும் வவனியர்குலத்துக் குருகக் குடும்பம் ஐந்தும் சேர்ந்து மட்டக்களப்பின் பரிசுத்தங்களை அறியும் படியும், வைதூலிய சமயத்தை மாற்றி அரிநமோ என்னும்நாமத்தைப் போதித்து வைக்கவேண்டுமென்றும் கம்பர் இயற்றிய இதிகாசப்பிரதியை எடுத்து இராமநாடுவிட்டுச் சேதுதனில் ஸ்னானம் செய்து இராமேஸ்வர தெரிசனைகண்டு ஒரு ஓடத்தில் ஏறி மண்ணால் இறங்கி திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம் தெரிசனைகண்டு கொட்;டியன் புரத்தில் வந்து மட்டக்களப்பில் அமரசேன அரசனைக்கண்டு தங்கள் வரலாற்றைக் கூறி,வன்னிச்சிமாரென விருதுபெற்று கலைவஞ்சி ஓர் ஊரிலும், மங்கி அம்மை ஒரு ஊரிலும், இராசம்மை ஒரு ஊரிலும், வீரமுத்து ஒரு ஊரிலும், பாலம்மை ஒரு ஊரிலும், தங்கள் தங்கள் மணமகனுடனிருந்து வந்த சிறைகளைக் கொண்டு கமத்தொழில் செய்து வாழ்ந்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

மறவர் இனத்தில் செம்பி நாட்டு பெண்கள் மறுமனம் செய்வதில்லை என்றும். சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம் கொண்டவர்கள் என்பதும் வெள்ளையரின் ஆவனமே.

 

செம்பி நாட்டு மறவரின் ஏழு கிளை நாச்சியார்கள்:

 

இங்கு முதலாவதாகக் கூறிய வன்னிநாட்டு வரலாற்றிற்கும் இரண்டாவதாகக் கூறிய யாழ்ப்பாண வரலாற்றிற்கும் சிறிது வேறுபாடிருப்பதைக் காணலாம். வன்னிநாட்டுக் கதையில் வன்னிமைப் பெண்கள் ஐவர் தமது கணவன்மார் இருந்து ஆட்சிசெய்த இடத்திலிருந்து ஆட்சிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், காங்கேயன்துறை வரலாற்றுப்படி ஆறு வன்னிமைப் பெண்களும் அவரின் பணிப்பெண் ஒருத்தியும் பறங்கிக்காரருடன் போராற்றித் தோல்வியடைந்த பின்னர் நஞ்சுண்டு மாண்டனர் எனத் தெரியக்கிடக்கின்றது. அன்றியும் பருத்தித்துறைக் கோயில் வரலாற்றின்படி நாச்சியர் எழுவர் என்பது வெளிப்படை அன்றியும் வன்னிநாட்டு வரலாற்றின்படி பாண்டி நாட்டிலிருந்து வன்னிமைப் பெண்கள் வந்தனர். அவருள் 54 பேர்கள் தமது கணவன்மார் போரில் மாண்டதைக் கேட்டுத் தீயில் வீழ்ந்திறந்தனர். ஒரு வன்னிமைப் பெண் தனது திசாவைக் கணவரிடம் சென்றார். மற்ற ஐவரும் வன்னியில் ஆட்சி புரிந்து வநதனர். ஆனால், காங்கேயன்துறைக் கோயில் வழிபாட்டு வரலாற்று முறைப்படி ஆறு வன்னிமைப் பெண்கள் ஆண்டதாகவும் அவ்வாறு பெண்களும் அவருடைய பணிப்பெண் ஒருத்தியும் பறங்கியருடன் போர் புரிந்து தோல்வியடைந்தமையால் நஞ்சுண்டிறந்ததாகவும் தெரியவருகின்றது. இக்காரணம் பற்றியே காங்கேயன்துறை விழாவில் எடுக்கும் ஏழு தாம்பாளத்தில் வில்லு, அம்பு, சதங்கை ஆகியவற்றை வைப்பர். அவர்கள் நஞ்சுண்டிறந்ததகை; குறிப்பதற்காகச் செங்கல்லையும் குன்றிமணியையும் பாகிற் சேர்த்துக்கொள்வர்.

 

(## சதி என்னும் உடன்கட்டை ஏறுதல் பழக்கம் செம்பி நாட்டு மறவரிடம் மட்டுமே உண்டு- “தென் இந்தி சாதிகளும் குலங்களும்-

எட்கர் தர்ஸ்டன்)

[*# கிழவன் சேதுபதி இறந்தவுடன் 47 பென்கள் தீப்பாய்ந்தனர் என்றும். ரிபல் முத்துராமலிங்க சேதுபதி காலம் வரை தீப்பாய்தல் செம்பி நாட்டு மறவரிடம் இருந்துள்ளது பின்பு ஆங்கிலேயரால் மறுக்கப்பட்டது]

 

போரில் இறந்த வீரரை வழிபடும் வழக்கம் பண்டைக் காலம் தொடக்கம் தமிழ் மக்களிடையே நிலவி வருகின்றது. இப்பண்டைய முறையைப் பின்பற்றியே எழுந்தது நாய்ச்சிமார் வழிபாடு. ஒவ்வோரிடமும் இவ்வழிபாடு மரங்களுக்குக் கீழேயே நடைபெறுகின்றது. வடமராட்சி கிழக்கிலுள்ள நாகர்கோயிலில் தாழை மரத்தினடியிலும் பருத்தித்துறையில் சாளம்பை மரத்தினடியிலும் காங்கேயன்துறையில் வேம்பு, அரசு முதலிய மரத்தினடியிலும் அராலியில் ஆலமரத்தினடியிலும் இவ்வழிபாடு நடைபெறும். இவ்வழிபாட்டு முறையும் மொகஞ்சதாரோக் காலம் தொடக்கம் திராவிடருக்குள்ளிருந்து வந்த மரவழிபாட்டு முறையாகுமெனக் கூறலாம்.

 

பண்டைத் திராவிட வழிபாட்டு முறை இங்ஙனமிருக்க, வைதிக சமயக் கூட்டத்தார் இக்கோயில்களை எல்லாம் மாற்றி மரவழிபாடிருந்த இடங்களிற் கட்டடங்களை எழுப்பி அதற்குள்ளே உருவச்சிலைகளைத் திணித்து, இல்லாத பத்ததி முறைகளையெல்லாம் கொண்டுவந்து சேர்த்தனர். அதுமட்டுமன்றிப் பார்ப்பனரைக்கொண்டு இல்லாத முறைகளைச் சங்கதத்தில் சுலோகங்களாக ஆற்றி இக் கோயில்களில் ப+சைகள், விழாக்கள் நடத்திவருகின்றனர். இவர் செய்கை, பண்டைக்காலத் தமிழர் வழக்குக்கும் அவர் வழிபாட்டு முறைக்கும் மாறானது.

 

நாச்சிமார் வழிபாட்டின் வரலாற்றையும், அவ்வழிபாட்டு முறையையும் ஓராற்றான் எடுத்துரைத்தனம். இதன் உண்மை முழுவதும் சரியாகக் கிடைக்கவில்லை. வன்னிநாட்டிலும் யாழ்ப்பாணத்து வேறு பகுதிகளிலும் இவ்வழிபாடு நடைமுறையிலிருத்தல் கூடும். அவற்றைத் திரட்டமுடியாமலிருக்கிறது. அவற்றைத் திரட்டிச் சரித்திர முறைப்படி ஆராய்தல் அறிஞர் கடன்.

 

நிலைப்பாட்டின் அடிக்குறிப்புகள்:

1: நாய்ச்சி,தாய், ஞாய், நாய், ஆய் ஆகியவை பழந்தமிழில் சமசொற்கள். எனவே நாய்ச்சி என்ற சொல் சங்கத மொழி அடியாகப் பிறந்தது அல்ல, தாய் என்ற பொருள்கொண்ட தமிழ்ச்சொல். தாய்வழி மரபு இருந்த காலத்தில் இச்சொல்லின் ஆண்பால் நாயன் ஆக இருந்தது என்ற கருத்தும் உண்டு. தாய்வழி மரபைக் கடைப்பிடிக்கும் சேர நாட்டு மலையாள தேசத்தர் என்ற குலப்பெயர் இவ்வாறாகவே வந்ததென்பர். பேராசிரியர் சங்கதம் என்று குறிப்பிட்டிருப்பது சமஸ்கிருத மொழி. தமிழ்மரபில், சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளை முறையே சங்கதம் என்றும் பாகதம் என்றும் எழுதுவதுண்டு.

 

2: திசை, திசாவ, திசாவை: ஈழத்தில் சிங்கள மரபிலும் தமிழ் மரபிலும் ஒரு திசையை ஆள்பவர் என்ற பொருள் கொண்டது.

 

3: தெல்லிச்சி வாய்க்கால்: சிவிகை தூக்குபவர்கள் குடியிருப்பை (தெல்லி) சேர்ந்த ஒரு பெண்ணின் பெயரால் வந்த வாய்க்கால். இன்று தெல்லி வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது.

 

4: சாளம்பை: ஈழத்துக் காடுகளில் பரவலாகக் காணப்படும் ஒரு மரவகை. சிங்களத்தில் ஸல் அல்லது ஹல் என்று அழைக்கப்படுவது (Vateria acuminata or Vateria indica).

 

5: வளந்துப்பானை: ஒருவகைப் பானை.

http://www.addthis.com/bookmark.php?v=250&pub=penniyam

சேதுபதிகள் மகள் நீலகேசியை மணந்த வெடியரசன் விஷ்னுபுத்திரன்:

 

சேதுபதிகளுக்கும் நெடுந்தீவு நயினாத்தீவு முற்குக தேசத்தலைவர் விஷ்னுபுத்திர வெடியரசருக்கும் இடையே மண உறவுகள் இருந்துள்ளது. சேதுபதி மகளை மணந்த வெடியரசன் கதை பற்றிய கோட்டை கொத்தலங்கள் நெடுந்தீவில் காணலாம்.

 

 

 

 

 

 

சேதுபதி மகராஜவின் வழியில் வந்த குளக்கோட்டன்:

 

குளக்கோட்டன் என்னும் மகாராஜன் சேதுபதி ராசர் பரம்பரையில் வந்தவன் என வெடியரசன் கதை கூறுகிறது.

 

 

 

 

 

 

 

இந்த ஆரிசக்கரவர்த்தி யார்?

இதற்கு பதிலாக சிங்கள வரலாற்று ஆய்வாளர்கள் கலிங்க மாகன் வம்சத்தினரே குலாங்கை ஆரிய சக்கரவர்த்தி என்னும் குளகோட்டான் பரம்பரை என கூறுகின்றார்கள். இல்லை கலிங்க மாகன் பரம்பரை ஆரிய சக்கரவர்த்தி அல்ல கலிங்க மாகனின் தளபதி செயபாகுத்தேவனே பாண்டியர் ஆட்சியில் சோழகங்கன் என்னும் பெயரில் குளகோட்டன் பரம்பரையை ஸ்தாபித்தவன் என கூறுகின்றனர். இந்த


ஆரியசக்கரவர்த்தியின் பூர்வீகம் எது?

 

ஆரிய சக்கரவர்த்தியின் சிதம்பரம் செப்பு பட்டயத்திலும் திருப்புல்லானி கல்வெட்டிலும்.

பாண்டி நாட்டின் தென்முனையில் ‘சேது’ வை அடுத்துள்ளதும் சேது கரையினை எல்லையாகக் கொண்டதுமான செவ்விருக்கை நாடு என்னும் பதியிலிருந்து வந்து யாழ்ப்பாண நாட்டைக் கைப்பற்றி நல்லு}ரில் அரசிருக்கையை அமைத்த சிங்கையாரியன் எனப்படும் பெருந்திறல் படைத்த பாண்டிய சேனாதிபதியான ஆரியச்சக்கரவர்த்தியின் மரபில் வந்தோரே பதினேழாம் பதினேழாம் நு}ற்றாண்டின் முற்பகுதி வரைக்கும் வடஇலங்கையை ஆண்;டனர். அம் மன்னர்கள் தாம் முடி சூடிய பொழுது ‘பரராசசேகரன், செகராசசேகரன்’ என மாறி வரும் பட்டப் பெயர்களைப் பெற்றனர்.

நமது இலங்கையின் வடபகுதியில் பொ.பி 09 ஆம் நூற்றாண்டு தொடக்கம் பொ.பி 17 ஆம்நூற்றாண்டு வரை ஒரு தமிழரசு நிலவியிருக்கிறது. யாழ்ப்பாணத்தரசு என்று அழைக்கப்பட்ட இவ்வரசு யாழ்ப்பாணத்து நல்லூரைத்தலைநகராக கொண்ட தமிழ்ஹிந்து அரசாகும்.


சிவபெருமானின் வாகனமான ரிஷபத்தை தமது முத்திரையாகவும், கொடியாகவும் கொண்ட இவ்வரசர்களை ஆரியச்சக்கரவர்த்திகள் என்ற பட்டப்பெயரால் அழைப்பர்.. சிலஇடங்களில் சிங்கையாரியச் சக்கரவர்த்திகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இவர்கள் யாழ்ப்பாணத்தில் தமிழ்ச்சங்கம் நிறுவி தமிழ் வளர்த்ததுடன், பல சைவாலயங்களையும் ஸ்தாபித்தும் திருப்பணி செய்தும் சைவம் வளர்த்திருக்கிறார்கள்.


சேதுபதிகளும் மதுரையில் தமிழ் சங்கம் நிறுவி தமிழ் வளர்த்ததுடன், பல சைவாலயங்களையும் ஸ்தாபித்தும் திருப்பணி செய்தும் சைவம்,வைனவம் இரண்டும் வளர ஆவணம் செய்துள்ளனர்.


அது மட்டுமன்றி தமிழ்நாட்டின் இராமேஸ்வரம், திருமறைக்காடு(வேதாரண்யம்) போன்ற ஸ்தலங்களிலும் இவர்கள் திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். இதற்கான கல்வெட்டுக்களைஇன்றும் இத்தலங்களில் காணலாம்..


இந்த அரசர்கள் சேதுபதிகளின் வம்சத்துடன் நெருக்கமான தொடர்பையும்-உறவையும் பேணியிருக்கிறார்கள் என்பது மிகத்தெளிவு..


ஆக,இவர்களும் சேதுபதிகளின் வம்சத்தில் பிறந்தவர்கள் தானோ, என்பது ஆய்விற்குரியதாகிறது.


பர்வதவர்த்தனி உடனாய ஸ்ரீராமநாதக்கடவுளை தங்களின் ஆத்மநாயகராக கொண்டிருந்த இவர்கள் எதனை எழுதும் போதும் பிள்ளையார்சுழி போடுவதுபோல, சேது என்ற மங்கலவாசகத்தை முன்னிறுத்தி எழுதுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.


இந்த அரசர்களில் பரராஜசேகரன், செகராஜசேகரன், சங்கிலியன், கனகசூரியன் போன்றவர்கள் பிரபலமானவர்கள்.


இந்த மரபின் கடைசி மன்னன் சங்கிலியன்.. அவன் பரராஜசேகரனின் புதல்வன். இவன் காலத்தில் போர்த்துக்கேயர் மதமாற்றத்தை முன்னிறுத்தி நாட்டுக்குள் நுழைந்தார்கள். கிழவன்சேதுபதி போல இந்த சங்கிலியனும் தன் ஆட்சிக்கு உட்பட்ட மன்னாரில் மக்களை கூண்டோடு மதமாற்றம் செய்தமைக்காக செபஸ்தியார் என்கிற கத்தோலிக்க பாதிரியாரை(புனிதரை) சிரசேதம் செய்தான்..


இதனால் மிகவும் கோபமடைந்தவர்களாகவும், படைபலம்மிக்கவர்களாகவும் ,முதலிலேயே தென்னிலங்கையை கைப்பற்றி ஆட்சி செய்து வந்தவர்களும் ஆன போர்த்துக்கேயர் இவன் மீது திடீரென ஒரு விஜயதசமியன்று போராடத்துணிந்தனர்..


அந்தப்போரிலும் சங்கிலியனே வெற்றி பெற்றான். அதன் பிறகு, இவர்கள் சூழ்ச்சியோடு காக்கைவன்னியன் என்ற உள்நாட்டுக்காரனை துணைக்கழைத்துக் கொண்டு சென்றுகளவாக சங்கிலியனைச் சிறைப்பிடித்துக் கொன்றார்கள்.. அதன்பிறகு, போர்த்துக்கேயர் செய்தவை தனிச்சரித்திரம்..


இவர்களும் சேதுபதிகளும் ஒன்றே எனவும் தோன்றுகின்றது.


இந்த அரசர்கள் தொடர்பிலும், வரலாறு பெரியளவில் பரவலாகவில்லை.. 



நன்றி: தமிழ் ஹிந்து


எனவே வேறு எந்த பகுதியினையும் குறிக்காது இலங்கையின் எதிர்கரையான இராமநாதபுரத்தை குறிக்கிறதே தவிர கலிங்கத்தையோ அல்லது சோழநாட்டையோ குறிக்கவில்லை. ஆகவே இவர்கள் இராமநாதபுரத்தை சார்ந்தவர்கள் என நிறுபனமாகின்றது.

 


ஆரியசக்கரவர்த்தி பிராமணரா:

 

15-ஆம் நூற்றாண்டு கைலாயமாலை,வையாபாடல் சிங்கை ஆரியன்ஆரியசக்கரவர்த்தி என அழைப்பதால் அவனை  பிராமனன் என கருதும் என்னம் இன்றைய வரலாற்று ஆசிரியர்களுக்கு உள்ளது. இன்றைய இலங்கை தமிழர்கள் முற்றிலும் கலந்த நிலையில் அவரை பற்றிய யாழ் ஆசிரியர்கள் இதை கருதி இவ்வாறு எழுதியுள்ளனர்.

As to the first king of Jaffna who assumed this title, opinions differ. The views alternately held are that one of the kings of Jaffna married a Brahmin woman of the Rameswaramn family or a Brahmin of Rameswaram married a Jaffna princess, and the descendants assumed the Arya title by virtue of the Brahmin descent. That the tradition of Brahmin descent swayed different historians, is seen from the statements of De Queyroz, the historian of the Portuguese times and of Simon Casie Chetty of the Colonial days. Each speaks of matrimonial relations between a Jaffna king and a Brahmin woman of Rameswaram lineage. Casie Chetty bases his version on the traditions collected in the Yalpana Vaipava Malai by Mylvagana Pulavar, published in 1730. The first Arya king of Jaffna according to the latter was a Chola prince, and according to the Kailaya Malai, an earlier composition, a Pandyan prince.These traditions apart, is the contemporary evidence of the Tamil poet Puhalendi of 12th century, a court poet of the Chola king, that on a visit to Kataragama in Ceylon, the poet had an audience of the King Arya Chakravarti, Singai Arya Sekaran. The King received him graciously and gave him rich presents worthy of a king. Later at the news of the death of the King the poet sings his noble qualities in eloquent verse.The Brahminical status of the Arya Chakravarties indeed so much animated the Tamil poets that the sacred thread did not escape them, stressed in the line “Like unto the sacred thread on the breast of Sekaraja Sekaran.”

With the changing politics of the later ages and the ineffective hold of the kings of Jaffna over Rameswaram, a new institution came into being in the year 1604, with the chief of Ramnad as the new Sethupati during the reign of Muthu Krishnappa Naik of Maciura. The title Sethupati thus passed from the hands of the Jaffna king to the Raja of Ramnad.Reminiscent of the intimate ties that subsisted over long ages between Jaffna and Rameswaram, are these observations of Rasanayagam:


ஆரிய சக்கரவர்த்தியை முதன் முதலில் பிராமணர் என முன் மொழிந்தவர் தொண்டை மண்டலத்திலிருந்து யாழ்பாணத்தில் குடியேறிய மன்னாடு கண்ட முதலி வர்கத்தினரான இராஜநாயக முதலியார். தொண்டை மண்டல சைவ வேளாளர்கள் பிராமனர்களோடு நெருங்கிய தொடர்புடையவர்கள். எனவே முன்பு மையில்வாகனபுலவர் என்னும் வேளாள கவிஞர் பாடிய  பாடலை  வைத்து மொழிந்தவர் இராஜநாயக முதலியார்.

 

 

 “It would appear that a Pararaja Sekaran was reigning at Jaffna in 1414 A.D., for there were inscriptions on the base of the chief shrine of Rameswaram which recorded that the principle shrines there were built by Pararaja Sekaran in Saka 1336. The stones were hewn at Trincomalee, numbered on the spot ready to be put together and then transported to Rameswaram. Most of these inscriptions were either destroyed or removed and forged ones inserted during a suit between the priests and the Raja of Ramnad about 1866 A.D”

 

இதில் ஆரிய சக்கரவர்த்தியை பிராமனர் என்றும் இல்லை இல்லை பிராமணரில் திருமன்ம் செய்த ராஜ வம்சத்தினர் முதலில் சோழ இளவரசனான ஆரியசக்கரவர்த்தி இல்லை பாண்டிய இளவரசனான அரிய சக்கரவர்த்தி. என குழப்பி தள்ளியுள்ள்னர். உன்மை என்ன? இந்த ஆரிய சக்கரவர்த்தி என்னும் பெயர் யாரை குறிக்கும் என பின்பு பார்ப்போம்.

 

அதற்கு முன் சேதுபதிகளை பற்றி இதில் கூறியதாவது சேதுகாவலன் என்னும் பெயர் ஆரி சக்கரவர்த்திகளோடதே பின்னர் 1604 இல் தான் நாயக்க அரசால் சடையக்க தேவருக்கு வழங்கபட்டது என கூறுகின்றார்கள்.


16-ஆம் நூற்றாண்டுக்கு முன் சேதுபதிகள் பற்றிய குறிப்புகள் கிடையாதா?

According to the other statement, which has its source in Sinhalese records, the family took its rise from the appointment of Parakrama Bahu’s General Lankapura, who, according to a very trustworthy Sinhalese epitome of the Maha- wanso, after conquering Pandya, remained some time at Ramespuram, building a temple there, and, while on the island, struck kahapanas (coins similar to those of the Sinhalese series). Whichever of these statements we may accept, the facts seem to point to the rise of the family in the eleventh or twelfth century A.D., and inscriptions quoted from Dr. Burgess by Mr. Robert Sewell * show that grants were made by Sethupati princes in 1414, again in 1489, still again in 1500, and finally as late as 1540. These bring the line down to within two generations of the time when Muttu Krish- nappa Nayakka is said, in 1604, to have found affairs sadly disordered in the Marava country, and to have re-established the old family in the person of Sadaiyaka Tevar Udaiyar Sethupati. The coins of the Sethupatis divide themselves into an earlier and later series. The earlier series present specimens which are usually larger and better executed, and correspond in weight and appearance very nearly to the well-known coins of the Sinhalese series, together with which they are often found. ‘ These coins,’ Rhys Davids writes, t ‘ are prob- ably the very ones referred to as having been struck by Parakrama’s General Lankapura.’ The coins of the later series are very rude in device and execution. The one face shows only the Tamil legend of the word Sethupati, while the other side is taken up with various devices.” * Sketch of the Dynasties of South India, t Numismata Orient. Ancient Coins and Measures of Ceylon

இதற்க்கு ரைட் டேவிட்ஸ்  மற்றும் சேஷாத்திரியின் விளக்கம் கீழே:

தமிழக அறிஞரான கே. சேசாத்திரி (இராமேஸ்வரம் மகா கும்பாபிஷேகச் சிறப்பு மலர், பக் 186,க ) 1975 கைலாயமாலையின் காலம் 15 ஆம் நூற்றாண்டென்பர். முதலியார் இராசநாயகம் கி. பி. 1604 க்குப் பின் கோவில் கட்டப்பட்டதென்பதற்கு. சேது பதிக்குச் செழும்பா சுரமனுப்பி (கை. மா. கண்ணி 234)என்ற தொடர் ஆதாரமென்பர். இதில் வரும் சேதுபதி “இராமநாதபுரத்து மன்னராகிய சேதுபதி என்றே கொள்ளக் கிடக்கிறது. உடையான் சேதுபதியெனப் பெயர் பூண்ட சடையக்கதேவரே முதல் இராமநாத புரத்துக்குத் தலைவராக மதுரை நாயக்கரசனாகிய முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரால் கி. பி. 1604 இல் நியமிக்கப்பட்டனர். அச் சேதுபதியென்னும் பெயர் இந்நூல கத்துக் குறிக்கப்பட்டதென்பது தெளிவு” (கை. மா. பக். III) என்பர்.

ஆனால், சேசாத்திரி (~. சிறப்பு மலர் பக். 186 g.)பரராசசேகரன் கி. பி. 1414இல் சேதுபதி இராமேஸ்வரம் கோயிலைக் கட்டுவதற்குத் திருகோணமயிலிருந்து வெட்டிச் சீராக்கப்பட்ட கற்களை அனுப்பியதாகக்கூறி, சேதுபதிக்கும்15 ஆம் நூற்றாண்டுக் குரிய யாழ்ப்பாண அரசர்களுக்கும் இருந்த நெருங்கிய தொடர்பை விளக்குவார். கலாநிதி யேம்சு டேர்சஸ் (Indian Antiquary Vol. XII) கி. பி. 1434 இல் வாழ்ந்த உடையார் சேதுபதி பற்றிக் கூறுவார். சேதுபதிகள் பாண்டி மறவர்கள். அவர்கள் சேதுபதி என்ற விருதைத் தொடர்ந்தும் கொண்டிருந்தார்கள் என ஆய்வாளர் கூறுவர். (Rev. James Tracy, The Madras Journal of Literature and Science). எனவே, இராசநாயகம் அவர்கள் காட்டிய ஆதாரங்கள் வலுவிழக்கின்றன. “நல்லூர் கைலாச நாதர் கோவில் முதலாம் சிங்கையாரியன் காலத்தில் (கி. பி. 1260)கட்டப்பட்டது என்பதை மறுக்க எவ்வித ஆதாரமுமில்லை” என்பார் சி. பத்மநாதன் (The Kingdom of Jaffna, P. 194; 1978). எனினும்,நூலெழுந்த காலத்தை உறுதியாகக் கூறமுடியாதுள்ளது. வையாபாலிலும் (16 ஆம் நூ. ஆ.?) ‘சேதுபதி’ (செய். 38) வருவது நோக்கத்தக்கது.

 

இந்த கோயில் முதலில் கீற்றுகொட்டகைபோல் சிறு அமைப்பாக இருந்த கோயில் முதன் முதலில் வடிவம் பெற்றது சிங்கள மன்னனின் கர்ப்பகிருகம் விரிவாக்கம் இது 1200 ஆண்டுகளில் நடந்தது அதன் பின்பு தான் ஆரியசேகரன் 1300-களில் இக்கோயிலின் கர்ப்பகிருகம் சில விரிவாக்கம் செய்தான். சேதுகாவலன் என்னும் பெயரை தாங்கினான் யாழ்பாண சேகரன் என்னும் பெயர் கொண்டான்.

1414 இல் இருந்து இது முதல் பிரகாரத்திலிருந்து கடைசிபிரகாரம் வரை தீர்த்த மனடபம் வரை கட்டியது சேதுபதி மன்னர்கள் தான் என பிரகார கட்டிடங்களின் கல்வெட்டை முடிந்தால் சென்று பார்க்கவும். இன்று உலகத்தின் இரண்டாவது மிகப்பெரிய இந்து கோயிலாக மாறியிருக்கிறதென்றால் அது சேதுபதிகளால் தான் தவிர வேறு எவனும் இல்லை.

 

1414,1456லிருந்து பின்பு 1600 வரை பல வகையான கல்வெட்டுகள் சேதுமன்னர்களை குறிக்கின்றது இது ஆரியசேகரனை குறிக்காது.

 

 

ரைஸ் டேவிட்சின் சேதுகாத்த தேவர் பற்றிய குறிப்பு:

சேதுபதிகள் 1414,1489,1500,1540 ஆகிய இவ்வருஷங்களில் வழங்கி வந்தார்கள் சேது என்னும் பெயரில் சொந்த நாணயங்கள் அச்சிட்டு வந்திருக்கின்றனர். அவை இரண்டு பிரிவுகளாக காணப்படுகின்றது.முதல் பிரிவு லங்காபுரத்தாரால் அடிக்கப்பட்டது. இரண்டாவது பிரிவு சேது மன்னர்களால். கி.பி1414,1415 உடையான் சேதுபதி என்பவர் இருந்தார் என்றும் அவராலேயே இரமேஸ்வரம் உட்கோவிலில் தெய்வ பீடங்களால் அமைக்கபட்டன என்றும் இதற்கான திருநெல்வேலியில் உள்ள நாண்கு கிராமங்களை கொடையாக தந்தார் என கூறுகின்றார்.

 

இதில் ஒரு கல்வெட்டு:

 

 

என்.12(1910-11)

“சகாப்தம் ஜெயதுங்கராய வங்கிசாதிபதியான துகவூர் கூற்றத்தில் காத்தூரான குலோத்துங்க சோழநல்லூர் கீழ்பால் இருக்கும் விரையாதகண்டனிலிருக்கும் ராஜஸ்ரீ தளவாய சேது காத்த தேவர்கள் ராமநாதஸ்வாமி உடையவர் பூசைக்கு தனுக்கோடியில் ஆப்பனூர் நாட்டிற் கருக்குளம்,கள்ளிக்குளம்,கரிசைக்குளம்,வேலனகுளம் ……..ஆகிய எட்டு ஏந்தளும்.

 

இதில் சேது காத்த தேவர் புத்திரன் என சேதுபதியின் பேர் தான் உள்ளதே தவிர சிங்கை ஆரியன்,மதிதுங்கன் என ஆரிசக்கரவர்த்தியின் பெயர் இல்லை.



ஆரியசக்கரவர்த்தி பூர்வீகம் எது:

 

ஆரியசக்கரவர்த்தியின் பூர்வீகம் செவ்விருக்கை நாடு என்னும் கீழ் செம்பி நாடு என்று அழைக்கபட்ட திருப்புல்லானி என்னும் பதி தான் இது இராமநாதபுரத்திலிருந்து 6.கி.மி தொலைவில் இருக்கின்றது.

சேதுபதி இருந்த விரையாத கண்டன் “வடதலை செம்பி நாடு” என இராமநாதபுரத்தின் வடக்கே 4.கி.மி தொலைவில் உள்ளது. திருப்புல்லானியில் கோயில் கொண்ட பெருமாளான தர்ப்பசயன ஸ்ரீ ராமர் நாமம் தான் “தெய்வ சிலையான் இராம பெருமாள்” இதை வடமொழியில் “இரமன் ஆரியசக்கரவர்த்தி” என வழங்குவர். இந்த பெயரை தான்“அழகன் தெய்வசிலையான்” அல்லது “ஆரியசக்கரவர்த்தி” என சூட்டிக் கொண்டார் யாழ்பாண ஆரிய சேகரன். சேதுபதியின் பட்ட நாமமும் திருப்புல்லானி பெருமாள் பெயர் தான் “மனு இரகுநாதன்”. இந்த பெயர்களான “இராமன் ஆரியசக்கரவர்த்தி” என்பதும் “மனு இரகுநாதன்” என்னும் பெயரும் ஒரே அர்த்தத்தை கொண்டது அதாவது  சேதுவை ஸ்தாபித்த இராமன் என.

 

இலங்கை மன்னன் தன்னை இலங்கேஸ்வரன் என கூறிகொள்வார்கள் அதன் மீது படையெடுக்கும் அரசர்கள் தங்களை இராமனின் அவதாரமாக கூறிகொள்வர். இராமனின் படைவீரர்களாக குகன் வம்சத்தவர்கள் என படைவீரர்கள் கூறிகொள்வர்.

 

எனவே ஆரிய சக்கரவர்த்தியும்,இரகுநாதசேதுபதியும் தங்களை இராமனின் வடிவாகவும் உடன் வரும் வீரர்கள் குகசேனையாகவும் கூறுவது மரபு.


பூருவத்தி லயோத்தி யுரிமையீந்து

போன பின்னர் சிறிராமர் துணைவராகி

தீரரென்னுமரக்கர்குலம் வேரறுத்த

சிவமறவர்குலம் நானும் வரிசைகேட்டேன்–மட்டகிளப்பு மான்மியம்

 

கைலாயமாலையிலே கூறப்பெற்ற முதற் சிங்கையாரியனான செயவீரசிங்கை ஆரியன் என்ற பெயரே வையாபாடலிற் செயதுங்க வீரவரராஜசிங்கன் எனத் திரிபடைந்து வந்துள்ளதென ஊகிக்கலாம். சேதுபதி திறலரசு புரியும் வீரன் செருக்குற்ற ஆரிய வம்சத்தார் என்போரும் வன்னியர்களோடு வந்தார்களென்று வையாபாடல் கூறுவதால், சேது நாட்டிலிருந்து வந்த ஆரியச்சக்கரவர்த்திகளோடு இவ்வன்னியர் வந்தனர் எனக் கொள்வது சாலப்பொருந்தும் 

முற்குகர்களான மறவர்களும் சேதுகாவலர்களும் இலங்கை ஆண்டதால் வன்னியர் எனும் நாமம் பெற்றனர்.


சோழர்கள் காலத்திலும் பாண்டியர் கால்த்திலும் சேனைவீரகளாக வந்தவர்கள் மறவர்களே

 

 

ஆரியசக்கரவர்த்தி (எ) இராமனாகிய ஆரியசக்கரவர்த்தி:

 

ஆரியசக்கரவர்த்திகள் தமிழர் என கூறும் அவரை பிராமணர் என குழப்புகின்றது. சில இடங்களில் இல்லை பிராமனரில் திருமணம் செய்தவர் என கூறுகின்றது. இதற்க்கு அவர்களில் நடுநிலையாளர்கள் இல்லை சார்பாளர்களுக்கு எது ஏற்ற வாதமோ அந்த வாதத்தை எடுத்து வைக்கிறார்கள். நாமும் நமது கருத்தை வைப்போம்.

 

ஒண்ணலங்கொள் மேக்கறு}னென் றோதுபெயர்

பெற்றவிற லுலாந்தே சண்ணல்

பண்ணலங்கொள் யாழ்ப்பாணப் பதிவரலா

றுரைத்தமிழாற் பரிந்து கேட்கத்

திண்ணிலங்கு வேற்படையான் செகராச

சேகரன்றொல் லவைசேர் தொன்னு}ல்

மண்ணிலங்கு சீர்த்திவையா மரபில்மயில்

 

எந்நாளு மிம்முறையே யாவரையும் வாழ்வீரென் றிருத்தி யங்கண்

மன்னான விளவலெனுஞ் சங்கிலியை வாவெட்டி சாரச் செய்து

முன்னோர்க்குப் புரிபூசை நிதந்தெரிசித் தேமுள்ளி வளையா மூரில்

மன்னான விரவிகுலப் பரராச சேகரனும் வாழ்ந்தா னன்றே

(வையா 99)

 

 

கையிலாயமாலையின் முதல் வரியிலே சிங்கையாரியனை நல்லூர் ஆளும்  சேர்ப்பன் எண்கின்றது. சேர்ப்பன் வர்ணத்துக்கும் பிராமணவர்ணத்துக்கும் எவ்வளவு தூரம்.  சேதுபதிகளும் சரி யாழ்பாண ஆரியசெகரனும் சரி பட்டாபிசேக வைபவத்தன்று பூனூல் அனிந்து(அன்று ஒரு நாள் மட்டும்) வைபவம் செய்வர். நாம் பிதுர்கடன்,கருமம் செய்யும் காலத்தில் சடங்குகளில் பூனூல் அல்லது ஓலை பூனூல் அனிவது போல் அன்று ஒரு நாள் மட்டும் அனிவர்.

 

செகராஜசேகரனை பற்றி வையாபாடலிற் செயதுங்க வீரவரராஜசிங்கன் எனத் திரிபடைந்து வந்துள்ளதென ஊகிக்கலாம். சேதுபதி திறலரசு புரியும் வீரன் செருக்குற்ற ஆரிய வம்சத்தார் என வையாபாடல் கூறுவதால்

 

அவர் வீரர் குலத்தினரே ஆகும் மேலும் இன்னும் “1048ம் ஆண்டு நல்லூரை ஆண்ட கூழங்கைச் சிங்கை ஆரியனுக்கு மறவர்களே படைவீரர்களாக இருந்தனர். இவர்களும் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டவர் களேயாவர் இவர்கள் மறவகுலச் சத்திரியராவர். போரில்லாக்காலங்களில் கமஞ்செய்வதே இவர்களின் பிரதான தொழில். (கை:பக்கம்46).


ஆரியசக்கரவர்த்தி பிராமணரல்ல பிராமணரில் மனம் புரிந்த மறவர் தலைவனே:

 

சிலர் ஆரியசக்கரவர்த்தி பிராமனரல்ல பிராமனரில் மனம் புரிந்தவர் என கூறுகின்றது. இதற்க்கு அடிப்படையாக  ஆரியசக்கரவர்த்தியின் சொந்த ஊரான திருப்புலானி கோவிலின் அருகே ஒரு மறவர் குல சிறுவனுக்கும் பிராமனர்குல சிறுமிக்கும் திருமணம் நடத்தி “தெய்வசிலைபெருமாள் வைபவம்” என நடத்துகின்றனர். இந்த சம்பிரதாயம் தான் ஆரியசக்கரவர்த்தியின் பிரம்ம சம்ப்ரதாயம் என கருதபடுகின்றது.

 

எனவே ஆரியசக்கரவர்த்தி மறவரே என்று வேதிர் மரபில் வந்தவர் அல்ல.

The Maravar’s connections with Jaffna will be examined elsewhere in this study, especially in view of a recent attempt by a Jaffna historian to show that the early colonists of Jaffna were Maravar and that the rulers of Jaffna belonged to the Sethupathy clan of that caste. He has claimed that Vadamaradchi was in former days Vada Maravar Adchi [the domain of north Maravar]; ‘Yazh Kudi-etram’, K.Muthu Kumaraswamippillai, 1982, Chunnakam, Jaffna. Letter of Correspondent M.Raja Joganantham[Colombo 6]: Militarism and Caste [Lanka Guardian, July 15, 1992, p.16] With the reference to the above article in Lanka Guardian (1 July) 1992.

 

ஆரியசக்கரவர்த்தியும் சேதுபதியும் மறவர்களே:

 

 

சேதுபதி தன்னை “ஜெயதுங்கராய” வங்கிசாதிபதி என கூறுகின்றார். “ஈழமும் கொங்கும் யாழ்பாணமும் கெஜவேட்டை கண்டருளிவன்” என்னும் கீர்த்தி யுள்ளவன்.அதே போல் ஆரியசக்கரவர்த்திகளும் தன்னை “ஜெயதுங்க சிங்கன்” என பட்டம் சூடுகின்றார்.ஆரியசக்கரவர்த்தி,இரகுநாதன் இரு பெயர்களும் ஒரே அர்த்தத்தை தருகின்றது.

 

இந்த ஜெயதுங்கன் என்னும் பெயர் இவ்விருவருவருக்கும் முன் ஜெயங்கொண்ட சோழன் என ராஜேந்திர சோழனுக்கும் பிற்கால குலோத்துங்கனுக்கு இருந்துள்ளது. கலிங்கத்து பரனியில் “சேமனை வென்ற செயதுங்கன்” என குலோத்துங்கனுக்கும் இருந்துள்ளது. தமிழ் சோழ கங்கர்களான கலிங்கத்தின் மன்னர்களுக்கும் இந்த பெயர் உள்ளது.

 

இதைப்போல சோழமன்னர்கள் தங்களை இலங்கையை வென்ற கலியுக ராமன் என கூறுகின்றனர். தங்களை ரவிகுல மாணிக்கம் எனகூறுகின்றனர். சேதுபதியும் ஆரியசேகரனும். தங்களை “ரவிகுலம்” என கூறுகின்றனர். இவர்களின் மூதாதயனான சோழகங்கன் தான் இராமநான ராஜ ராஜ சோழனுடன் வந்த குகசேனை தளபதி என ஊகிக்க முடிகின்றது. அவனை சோழனால் முடிசூட்டபட்ட சேது காவலன்.

 

இந்த சோழகங்கன் யார்?

http://thevar-mukkulator.blogspot.in/2015/02/blog-post_23.html

 

 ஆரிய சேகரனையும் சேதுபதிகளையும் மறவர்கள் என நாம் சொல்ல வில்லை ஒரு ஆங்கில  வரலாற்று ஆய்வாளர் கூறியுள்ளார் “ஸ்ரீலங்கன் ரீடர்” என்னும் புத்தகத்தில் கூறியுள்ளார் ஜான் மோல்ட்


முற்குகர் மறவர்களே வன்னி பகுதியை ஆண்ட ஏழு வன்னியர்கள்:

 

இந்த முற்குகர் என்னும் காரண பெயர் மறவர்கள் அயோத்தி என்னும் பிரிவில் வருவதாக “மட்டகிளப்பு மான்மியம்” வருவதாகவும் குகசேனையாக வந்து வணப்பகுதியில் வன்னிபங்களை உருவாக்கி ஆண்டதால் வன்னியர் என்னும் காரணப்பெயர் கொண்டனர்.


சோழர்கள் காலத்தில் படைவீரர்களாக வந்தது இவர்கள் தான் பாண்டியர்கள் காலத்தில் வந்ததௌ இவர்கள் தான்.

 

மறவர்களுக்கு ஈழநாட்டுடனான தொடர்பு வரலாறுகள் கடந்தது. மகாவம்ச தொடக்க காலத்திலே ஏழு படைதலைவர்கள் எதிர் கரையிலிருந்து படையெடுத்து வந்தனர். அவர்கள் சோழ,பாண்டியரல்லாது வேறு பிரிவினர் என்றும்.

 

முற்குகர்கள் செம்பிநாட்டு மறவரில் பெருமளவு இருக்கின்றனர் என கருதலாம்.

 

அதற்க்கு முன்னே சிங்கள ஆதிக்கத்துக்கு முன் இலங்கையை ஆண்ட இருபெரும் குழுக்களில் ஒன்று மறவர்கள் தான் என வரலாறு கூறுகின்றது.

 

முற்குக படையாட்சியர்கள்:

 

படையாட்சி,நாயன்,நாயகன்,பணிக்கன்,சேர்வை,முதலி இவையாவும் படையாளர்களையும் இரானுவ சேவகர்களையும் குறிக்கும் விருது பெயர்களாம். முற்குகர் படையாட்சியர்கள் மறவர் தலைவர்களில் வரும் “மைலப்பன் சேர்வை” “நயினார் சேர்வை” போல மறவர்களின் படைதலைவர்களாக இருக்கலாம். அல்லது “சேர்வைக்காரர்கள் வம்சம்” எனும் அகமுடையர்களின் தலைவர்களின் இராணுவ சேவகர்களாக இருக்கலாம்.

 

 

கரையாளர்களும் மறவர் பூர்வீகம் தான்:

கரையாளரின் மூதாதயர்களான வீரமாணிக்கதேவனும் வல்லை தேவனும் நினைவு படுத்த ப்டுகின்றனர்.

Militarism and Caste [Lanka Guardian, July 15, 1992, p.16] With the reference to the above article in Lanka Guardian (1 July) 1992. In the article [by] the writer Mr. D.P.Sivaram, some facts are incorrectly stated. The statement a strong narrative is found in Myliddy is correct. The names of the chieftains are Veera Maniccathevan, Periya Nadduthevan & Narasinhathevan. The statement that the Marava chieftains and their castemen married among Karaiyar of the village is also correct. But the statement about Thuraiyar and Panivar is incorrect. The clans known as Thuraiyar and Panivar in this village are the descendants of the ancient families of Myliddy. The martial arts of Marava are popular among these two clans, though the Thuraiyar is considered as superior. Thuraiyar as well as Panivar were connected by marriage to Ramnad, the home country of the Maravar, for which evidence is available. I am one of the descendants of the ancient family of the village, and the writer of an article titled as, ‘Ancient Villages in Jaffna’, which appeared in Eelanadu on 13.07[July] 1986.

இவர்களை இன்றும் மறக்காமல் தங்கள் மூதாதயராக கூறிவருகின்றனர் கரையாளர்கள்.

கரையாளர் பிரிவில் வரும் மறவர்கள் யார்

தூத்துக்குடி பகுதியில் கரையாளன் என்றால் பரதவர் சிலரும் பட்டாங்கட்டி தேவர்களும் மறவரில் கொண்டையங்கோட்டை மறவர்களும் கரையாளன் என்னும் பட்டம் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

Konda Karavas

From Wikipedia, the free encyclopedia

Jump to:navigation, search

Although Konda brings to one’s mind hair, which is its modern meaning in the Sinhala language, Konda in medieval times signified a group of Karava nobles in Sri Lanka. Old timers referred to them as Konda Karáva another clan of the Karava similar to the Suriya clans Kurukulasuriya, Warnakulasuriya, Mihindukulasuriya, Bharathakulasuriya, Manukulasuriya, Arasakulasuriya and Kón Karávas. Konda came to mean hair in Sri Lanka only after the 15th century Kotte period. Prior to that hair was referred to in the Sinhala language as kes, varalasa, dhammilla(Tamil) or muhulasa.The name Konda has been preserved to date in Sri Lankan Tamil Karava family names such as Vira Konda Árachchige, Vadana Konda Árachchige, Vira Konda Patabendige and other such names. The Kurukula Charithaya (part I 235) reproduces a copper sannasa given by King Vijayabahu, probably Vijayabahu VI, to a Konda Perumal at a time when Perumal denoted a prince. It also lists the Konda Kaurava family names: Konda Perumal Árachchigé from Koggala and Kuru Vira Kaundan, Periya Kondan, Sina Kondan, Sella Kondan, Vira Kondan, Kuru VIra Kondan, Kondagé, Vira Kondagé, Maha Kondagé, Punchi Kondagé and Sella Kondagé from other parts of Sri Lanka. The prevalence of the name Konda in various parts of South India suggests that a significant group of Kondas of considerable importance lived in mediaeval South India. Similar to the other South Indian Kshatriya clans the Kondas too may have claimed descent ultimately from the Mahabharata Kauravas.

எனவே கரையாளர்களும் முற்குகர்களும் நம் மறவர்களிலிருந்து பிரிந்தவர்கள் தான்.

முற்குகர்(இராமசேனன்) என்பது இலங்கயின் மீது படையெடுக்க முற்பட்டதால் வந்த காரணபெயர்.

வன்னியன் என்பது வன்னிப மன்னன் என்னும் காரணபெயர்.

மறவர்களும் இலங்கையின் ஆளுமை சுவடிகள் அதிகம். அவை.

http://thevar-mukkulator.blogspot.com/2014/09/blog-post.html

http://thevar-mukkulator.blogspot.com/2014/09/the-chronicles-of-sethupathi-in.html

http://thevar-mukkulator.blogspot.com/2014/09/the-way-of-maravan.html

http://thevar-mukkulator.blogspot.com/2013/02/blog-post_2893.html

http://thevar-mukkulator.blogspot.com/2013/05/blog-post.html

சேதுக்கரையின் தலைவனும் யாழ்பாண மன்னனும்  மட்டகளப்பு முக்குவ வன்னியரும்,கரையாளர்களும் மறவரே.நாம் இப்பகுதியின் பூர்வ மன்னர்களே இது காலம் கடந்தது வரலாறு கடந்தது.யுகங்கள் க்டந்தது.

 

 

இந்த பதிவு யாரையும் புண்படுத்துவதற்கோ அல்லது வரலாறுகளை கோறுவதற்காக எழுதவில்லை நாம் கூறும் நம்பிக்கையின் சில ஆய்வுகளின் நிஜத்தை தெரிந்து கொள்வதற்காகவே. இது எம்முடைய தனிப்பட்ட கருத்தேயாகும்.

 

நன்றி:

மட்டகிளப்பு  மான்மியம் நூலகம்.காம்.

கையிலாயவைப மாலை

வன்னியர்-கலாநிதி பத்மநாபன்:

http://adhiyar.blogspot.in/

Srilankan Reader-John clifford molt

Mukkuvar vannimai:Tamil Caste and matriclan ideology

in battiacaloa Srilanka Dennis B.McGilvry

 

 

 

 

 

This entry was posted in சேதுபதிகள், தேவர், மறவர் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *