செம்பி நாட்டு மறவர்களே இலங்கையை ஆண்ட சோழரின் வழியினர்

 கங்கை கொண்ட இராஜேந்திர சோழ தேவரின் 1055- ஆம் ஆண்டில் எழுதபட்ட இராஜேந்திர சோழரின் மெய்கீர்த்தியில் சோழபாண்டியன்,சோழகங்கன்,சோழகேரளன்,சோழ அயோத்திராஜன்,சோழ கனகராஜன்,சோழ கன்னங்குச்சிராஜன்,சோழ வல்லபன் என சோழ மரபினர் பலரை பல்வேறு பகுதிகளில் ஆள நியமித்ததாக மெய்கீர்த்தி கூறுகின்றது.

 
இலங்கையிலும் தொடர்ந்த இப்பாரம்பர்யத்திலே சோழமரபினருக்கு வன்னிபங்கள் என்ற காடு சூழ்ந்த வவுனிய என்ற மட்டகளப்பு பிரதேசங்களை ஆள  கிடைத்துள்ளன என தோன்றுவதால் சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றோம்.

 
 
 
ஈழத்தை ஆண்ட குகன் வன்னியர்களும் ஆரிய சக்கரவர்த்தியும்
 
கவிராசர் பாடிய கோணேசர் கல்வெட்டினையும், திருமலைக் கோட்டையின் முன்பாக இருக்கும் கற்று}ணிலுள்ள மொழித் தொடர்களையும் அக்கோட்டையிலுள்ள வடமொழிக் கல்வெட்டினையும் ஆதாரமாகக் கொண்டு குளக் கோட்டனாகிய சோழ கங்கன் காலத்திலே திருமலையில் வன்னிமை இருந்தமையை ஆசிரியர் எடுத்துக்காட்டுகின்றார். கங்குவேலிக் கல்வெட்டு, திருமலை வன்னியனாரைக் குறிப்பிடுகின்றது. வெருகல் கல்வெட்டிலிருந்து கயிலை வன்னியனார் கோட்டியாரம்பத்தை ஆண்டமை புலனாகின்றது. பதினான்காம் நு}ற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகள் திருகோணமலை வன்னியர் மேல் ஆதிக்கம் செலுத்தியமையையும் பதினைந்தாம் பதினாறாம் நு}ற்றாண்டுகளில் இம் மன்னர்கள் திருமலை வன்னியரோடு திருமணத் தொடர்பு கொண்டமையையும் ஆசிரியர் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார்.

 
 
முக்குகர் வன்னிமை
 
சீர்தங்கு வில்லவரும் பணிக்கனாரும் சிறந்த சட்டிலான் தனஞ்சயன்றான்
கார்தங்கு மாளவன் சங்குபயத்தன கச்சிலாகுடி முற்குகரினமேழேகான்
வார்தங்குகுகன் வாளரசகண்டன் வளர்மாசுகரத்தவன் போர்வீர கண்டன்
பார்தங்கு தண்டவாணமுண்டன் பழமைசெறி
 
மறவர் குடி:
சங்குபத்தன் குடி, கோப்பிகுடி,கச்சிலாகுடி,சட்டிகுடி,மாளவண்குடி,முண்டன் குடி,முறண்டன் குடி.
 
மறவரில் முண்டன் குடி,முரண்டங்குடி,கச்சிலாங்குடி,மாளவன் குடி சட்டிகுடி,சங்குபயத்தங்குடி இருக்கும் முற்குகரில் முண்ட வன்னியன் முறண்ட வன்னியன், கிளைகாத்தவன்னியன் என மறவரின் தலைவர்கள் இருப்பார்கள்.

 அடிகள் என்ற மரியாதைக்குரிய கல்வெட்டு : சில கல்வெட்டுகளில் தமிழ் மன்னர்களும் மக்களும் தன வயதை பொறுத்து அடிகளார்,சிறுவன்,பெரியார் போன்று கல்வெட்டு பொறித்துள்ளனர். அம்பாசமுத்திரம் சுந்தர சோழ பாண்டியன் கல்வெட்டுகளில் பராந்தகன் மறவநடிகள் மதுராந்தகனான சோழ பாண்டிய மாராயன் ” என ஒரு கல்வெட்டு வந்துள்ளது. இதே போல் “மாதவன் மறவடிகள் மதுராந்தகனான சோழ பாண்டிய மகாராயர்” என ஒரு கல்வெட்டும் வந்துள்ளது. அதே ஊரில் வேறொரு இடத்த்தில் கிடைத்த கல்வெட்டுகளில் வீதி விடங்க வெள்ளாளன் அடிகள் தேவன் இத்தயவர்க்கு” என ஒரு கல்வெட்டு வந்துள்ளது பழுவூர் கல்வெட்டு “அடிகள் பழுவேட்டரையன் கண்டான் மறவனார் பெருந்தேவியார்” என அடிகள் என பழு வேட்டரையன் கல்வெட்டும் வந்துள்ளது பரிசை கிழான் செம்பியன் ஆற்காட்டு வேளாண் மறவன்

 

எனவே அடிகள்,சிறுவன்,பெரியார்,கிழவன் என்பது வயது முந்திரிச்சியும் அறிவையும் உணர்த்தும் கல்வெட்டுகளாகும் .

 

சேதுபதிகள் மகள் நீலகேசியை மணந்த வெடியரசன் விஷ்னுபுத்திரன்:

சேதுபதிகளுக்கும் நெடுந்தீவு நயினாத்தீவு முற்குக தேசத்தலைவர் விஷ்னுபுத்திர வெடியரசருக்கும் இடையே மண உறவுகள் இருந்துள்ளது. சேதுபதி மகளை மணந்த வெடியரசன் கதை பற்றிய கோட்டை கொத்தலங்கள் நெடுந்தீவில் காணலாம்.

 

 

சேதுபதி மகராஜவின் வழியில் வந்த குளக்கோட்டன்:

குளக்கோட்டன் என்னும் மகாராஜன் சேதுபதி ராசர் பரம்பரையில் வந்தவன் என வெடியரசன் கதை கூறுகிறது.

 

 

 
குகன் வன்னியர்கள் என்ற முற்குகர்கள் ஈழத்தை ஆண்ட மறவர்களே.
 
சேது நாட்டை ஆண்ட சேதுபதியு ஏழு கடல் கரையாளர்களும்:
 
தமிழகத்தில் நீண்ட நெடிய பாரம்பரிய ஆட்சியைப் புரிந்தவர்கள் இராமநாதபுரம் சேதுபதிகள். இராமபிரான் ராமேஸ்வரத்தில் சேதுவை நிறுவிய காலத்தில் இவர்களை அந்த சேதுவைக் காக்கும் அதிபர்களாக நியமித்ததன் காரணமாகத்தான் இவர்கள் சேதுபதி என்று அழைக்கப்பட்டார்கள். மறவர் இனம் ஏழு பிரிவுகளாக இருந்ததில், இவர்கள் அதில் ஒரு பிரிவினர். இவர்கள் மறவர் நாட்டின் அதிபதியாக பலகாலம் விளங்கி வந்தவர்கள். வீரத்துக்கும், விவேகத்துக்கும், பக்திக்கும், தமிழுக்கும், ஆன்மீகத்துக்கும் இவர்கள் ஆற்றியுள்ள பணி அற்புதமானது.
 இப்படிப்பட்ட பெருமைக்குரியவர்களெல்லாம் வாழ்ந்த குலம் ‘சேதுபதிகள்’ குலம்.
 
http://www.tamilhindu.com/2010/06/truth-behind-john-de-britto-history/
நன்றி:தமிழ் ஹிந்து
 Another supposition places the rise of the family in the second or third century B.C. It rests its case principally upon a state- ment in the Mahawanso, according to which the last of the three Tamil invasions of Ceylon, which took place in the second or third century B.C., was under the leadership of seven chieftains, who are supposed, owing to the silence of the Pandyan records on the subject of South Indian dealings with Ceylon, to have been neither Cheras, Cholas, or Pandyans, but mere local adventurers, whose territorial proximity and marauding ambition had tempted them to the undertaking …. Another supposition places the rise of the family in the eleventh or twelfth century A.D. There are two statements of this case, differing according to the source from which they come. According to the one, which has its source in South India, the rise of the family took place in or about 1059 A.D., when Raja Raja, the Chola king, upon his invasion of Ceylon, appointed princes whom he knew to be loyal to himself, and who, according to some, had aided him in his conquest of all Pandya, to act as guardians of the * F. Fawcett, loc, cit. f Madras Journ. Lit. Science, 1890. MARAVAN

அகளங்கன் என்னும் பெயர் விக்கிரம சோழனுக்கு உண்டு.

 

சேதுபதி கீர்த்தியில் “செம்பிவளநாடன் பகைமன்னர் சிங்கம் பராசகேசரி அகளங்கன் கருனை பொழிவான்.”

புறநானூறு பாடல்,

realsethupathi
கரிகாலன் தம்பி மாவளத்தான். மறவர் பெருமான் என்றால் மறவரில் பெரியோர் மகன் என அர்த்தம்.
43. பிறப்பும் சிறப்பும்!
பாடியவர்: தாமப்பல் கண்ணனார்,
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்.
திணை : வாகை. துறை: அரசவாகை.
குறிப்பு : புலவரும் அரச குமரனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப, வெகுண்டு, வட்டுக் கொண்டு எறிந்தானைச் , ‘சோழன் மகன்
அல்லை’ என, நாணியுருந்தானை அவர் பாடியது.
“தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி! வார் கோல்,
கொடுமர மறவர் பெரும! கடுமான்
கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:”
பொருள்:

 
சேதுபதியும் ஆரிய சக்கரவர்த்தியும் மறவர்களே
 
The Maravar’s connections with Jaffna will be examined elsewhere in this study, especially in view of a recent attempt by a Jaffna historian to show that the early colonists of Jaffna were Maravar and that the rulers of Jaffna belonged to the Sethupathy clan of that caste. He has claimed that Vadamaradchi was in former days Vada Maravar Adchi [the domain of north Maravar]; ‘Yazh Kudi-etram’, K.Muthu Kumaraswamippillai, 1982, Chunnakam, Jaffna. Letter of Correspondent M.Raja Joganantham[Colombo 6]: Militarism and Caste [Lanka Guardian, July 15, 1992, p.16] With the reference to the above article in Lanka Guardian (1 July) 1992.

 
சேதுபதிகளும்ல் ஆரிய சக்கரவர்த்தியும் குளகோட்டன் என்னும் சோழகங்கரின் பரம்பரையினர்.
இவர்கள் இலங்கை ஆண்ட சோழ இனத்தவர்கள்.

 
சேதுபதிகளும் ஆரியசக்கரவர்த்திகளை போலவே  குக வன்னியர்களும் செம்பி நாட்டு மறவர்களும் சோழரின் வழித்தோன்றல்கள். எப்படி?
 
ஈழத்தையும் கலிங்கத்தையும் ஆண்ட சோழர்களின் மறக்கபட்ட வரலாறு.
 
Ref:
http://thevar-mukkulator.blogspot.in/2015/02/blog-post.html
 
1)சோழபாண்டியன் 2)சோழகங்கன் 3)சோழகேரளன் 4)சோழ அயோத்திராஜன்
5)சோழ கனகராஜன் 6) சோழ கன்னங்குச்சிராஜன் 7)சோழ வல்லபன்
 
1.மரிக்கார் கிளை = சங்கு பயத்தன் குடி = சோழ பாண்டியன்
2.பிச்சையன் கிளை = சட்டி குடி= சோழ கங்கன் =  சோழ கலிங்க ராஜன்
3.தொண்டமான் கிளை = கச்சிலான் குடி= கத்திரியர்  = சோழ வல்லபன்
4.கட்ரா கிளை = முண்டன் குடி= சோழ கேரளன்  = வில்லவராயர் 
5.கருபுத்திரன் கிளை = மாளவன் குடி= சோழ கன்னங்குச்சியார்  = குச்சிராயர்(மாளவம்=குஜராத்)
6.சீற்றமன்(ஸ்ரீ ராமன்) கிளை = முறண்டன் குடி  = சோழ அயோத்திராஜன்
7.தனிச்சன் கிளை = தனஞ்சயன் குடி= கனகராயர்  = சோழ கனகராஜன்
.
 
மரிக்கார் கிளை (அ) உலகிப்போடி குலம் (அ) சோழ பாண்டியன்
 
இவர்கள் முதல் குலம் மற்றும் வன்னிச்சி மன்முனை என்னு உலகிப்போடி குலம் ஆகும்.
இவர்கள் இராஜேந்திர சோழனால் ஒரு காலத்தில்  மதுரையில் அமர்த்த பட்ட சோழ பாண்டியர்கள் ஆவர்.
இவர்கள் செம்பி நாட்டு மறவரில் வரும் மரிக்கார் கிளையினர் என்றும் ஈழத்தில் மறவரில் வரும் சங்கு பயத்தன் குடி என கூறலாம்.
 
பிச்சையன் கிளை (அ) சோழ கங்கர் (அ) காலிங்கராயர் 
 
இது சட்டிலான்  குடி என குறிக்கபெறுகின்றது.இது சோழ கங்கரான  கலிங்க மாகன் பரம்பரையின்  தாய்வழிக்குடியாகும். இந்த சோழ காலிங்கராயர் குடியே முற்குக வன்னியரிலும் மறவரில் உயர்ந்த குடியாகவும் முதன்மையான குடியாகவும் பார்க்க படுகின்றது காரனம் கலிங்கமாகன் குடி இது தான். காலிங்கராயர் என்ற சோழ கங்கர் என்னும் குடி முற்குகரில் காலிங்கா குடி என்றும் செம்பி நாட்டு மறவரில் வரும் பிச்சியயன் கிளை
 
தொண்டைமான் கிளை (அ) கத்திரியர்= சோழ வல்லபன்:
 
இது முற்குகரிலும் மறவரிலும் கச்சிலாகுடி என குறிக்க பெறுகின்றது.தொண்டைமான் மன்னனை பெரும்பாணாற்றுபடையில் “மறவர் மறவ தொண்டையோர் மருக” என கூறப்பட்டுள்ளது. மேலும் தொண்டைமான் மகன் என குண்டையங்கோட்டை மறவர் இருவர் கல்வெட்டு இளவேலங்காலில் உள்ளது. தொண்டைமான் பேரரையர் என்னும் பெயரில் மறவர் பற்றிய கல்வெட்டு உள்ளது. இதை விட முக்கியமாக ஆதாரப்பூர்வமான தொண்டைமான் வம்ச  மன்னன் ஒருவன் பற்றிய கல்வெட்டு உள்ளது அதை பற்றி விரைவில் ஒரு கட்டுரையுடுவோம். காரணம் மதுரை சுல்த்தானால் தாக்கபட்ட அந்த தொண்டைமான் மன்னர்கள் இடம் பெயர்ந்து உருவாக்கிய பாளையங்கள் தான் கொல்லங்கொண்டான் வாண்டாயதேவன், சேத்தூர் வணங்காமுடியர்,சிவகிரி வன்னியர்,ஏழாயிரம்பன்னை சிதம்பரனார்,அழகாபுரி இரட்டைகுடையார் இவர்களது பெயரிலும் தொண்டைமான் வம்ச பெயர் இருக்கும் இவர்கள் அனைவரும் ஒரே மன்னனின் வாரிசுகளே. அவர் பற்றி விரைவில் கட்டுரையிடுவோம்.
 
மேலும் வல்லபன் என்றால் அது தொண்டையோரை குறிக்கும்.
 
சிறுகுடி வெள்ளாளரின் செப்பு பட்டயம்  கூறும் தொண்டைமான் கீர்த்திகள்:
“ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்” என்றும், ” தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்” என்றும், “செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்” என்றும், “மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்” என்றும் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.
 
இதில்
1″ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்”:
இது அறந்தாங்கி தொண்டைமான் சேதுபதி மற்றும் ஆரியசக்கரவர்த்திகளுக்கு மட்டுமே உரியது
சேதுபதி செப்புபட்டயம்”
“ஈழமும் கொங்கும் யாழ்பாணமும் கஜவேட்டை கொண்டருளியவன்”
2.” தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்”
மட்டகளப்பு மறவர் குடி:
சங்குபத்தன் குடி, கோப்பிகுடி,கச்சிலாகுடி,சட்டிகுடி,மாளவண்குடி,முண்டன் குடி,முறண்டன் குடி.
இது  இலங்கை மன்னை வெட்டி சங்கனாக்கி இரட்டை சங்கு பிடித்தவன் என அத்னால் சங்குபயத்தன் குடி என பெயர் எடுத்தவர்கள்
3.”செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்”
கட்டாரிராயன் என ஈழத்தில் கத்திரியன் என வாளரசு வென்ற மறவர்களான வாள்கோட்டைராயர்களை குறிக்கிறது.இது ஈழத்தில் ஐநூற்றுவர் படையில் உள்ள கொற்றவாளர்,கத்திரியர்,முனைவீரர்,எறிவீரர் இவர்களில் பங்கெடுத்து அதற்க்கு தலைமை தாங்கிய பெருமாளான “ஐநூற்றுவ பேரரையன்”. செட்டிமார்களின் காவலன்.
காலம் 13 ஆம்நூற்றாண்டு(கி.பி.1266)
 I.P.S.(346)
மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் தென்புரம் சுவரில்
நம்பி ஐநூற்றுவ பெரியான்
ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடை பன்மரான திரியுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்………………….குடுத்த பரிசாவது….. முன்னால் குலசேகர தேவருக்கு இவ்வூர் மறவன் நம்பியான் ஐநூற்றுவ பெரியான் உள்ளிட்டார் பக்கல் விலை கொண்டு உடையார்…………… இவ்வூர் மறவரில் மாலையிட்டான் மக்கள் தற்குரியும்…………………………
4.”மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்”
தொண்டைமான் தமிழ் மன்னன் என்பதிலிருந்தே சேரனும்,பாண்டியனும் யாராக இருப்பர் என யோசிக்க தேவையில்லை.
 
கட்றா கிளை (அ) சோழ கேரளன் (அ) வில்லவராஜன் குடி:
 
இது முற்குகரிலும் மறவரிலும் முண்டன்குடி வில்லவராஜன்குடி என  குறிக்கபெறுகின்றது. வில்லவராயர் குடி என்னும் முற்குகரில் வரும் குடி சேரரின் வில்லவர்களை குறிக்கும் தொடராகும் மேலும் இது கட்றா க் கிளையினர் என குறிக்கபடுகின்றர். மேலும் மறவர்களை சங்க இலக்கியங்களில் வில்லுடைய மறவராக “வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் வில்லிட தொலைந்தோர்” என வில்லவராக ” சிலையுடை மறவர் சினந்தோர்  புக்க” என சிலை ஏந்தியவராக குறிக்கபடுகின்றனர்.
 
 
கருப்புத்திரன் கிளை (அ) சோழ கன்னங்குச்சிராயர் (அ) மாளவர் குடி:
 
 இது மறவரிலும் முற்குகர் வன்னியரிலும் மாளவன்குடி செம்பிநாட்டு மறவரில் கருப்புத்திரன் கிளை என குறிக்க பெறுகின்றனர். குச்சி என்றால் அது கூர்சரம் என்னும் குஜராத்தை குறிக்கும். இதற்கு பழைய பெயர் மாளவம். குஜராத் கருமன்  பூமி அதனால் கருப்புத்திம் எனவும் சோழ  பிராதானியான குச்சிராயர் என்பது குஜராத் வேந்தர் என மாளவர் குடியாகும்
 
 
சீற்றமன்(ஸ்ரீராமன்) கிளை (அ) சோழ அயோத்திராஜன்:
 
இது மறவரில் முறண்டன் குடியாகவும் அயோத்திராஜன் குடியாக செம்பி நாட்டு மறவரிலே வரும் சீற்றமன் அது ஸ்ரீராமன் என்பதி திரிபே. எனவே.முற்குகரில் வரும் குடியாக மறவரே அயோத்தி என்னும் பிரிவில் வருவதால் சோழ அயோத்திராஜனாக ஸ்ரீராமன் கிளையாக கூறப்படுகின்றது.
 
தனஞ்சயன்  கிளை (அ) சோழ கனகராஜன்:
 
இது மறவரில் கோப்பி குடியாகவும் முற்குகரில் தனஞ்சயன்(அர்ஜூனன்) எனவும் அர்த்தம்.செம்பி நாட்டு மறவரில் தனிச்சன்( தனஞ்சயன்) என்றால் பொன்வென்றோன் என குறிக்கபடுகின்றது. கனகராயர் என்றால் பொன் வென்ற தனஞ்சயன் கிளையாகவும் வருகின்றனர். சோழகனகராஜன் என்பது இந்த கிளையே குறிக்கும்.
 
சேதுபதிகளும்  செம்பி நாட்டு மறவர்களின் ஏழு கிளைகள் சேது நாட்டை ஆண்டது   போல ஆரியசேகரனும் ஏழு குகன்  வன்னியர்களும் யாழ்பாணத்தையும் மட்டகிளப்பையும் ஆண்டனர். சேதுபதிகளும் ஆரிய சேகரனுக்கும் இந்த ஏழு பிரிவுகளுள் திருமனம் செய்வர். தனஞ்சயர் கிளையில் திருமனம் செய்தால் அந்த வாரிசு கனக ஆரியசக்கரவர்த்தி,கனகசூரிய சேதுபதி என்றும் பிச்சையன் கிளை என்ற சட்டிலான் குடியில் திருமனம் செய்தால் கலிங்க ஆரியசக்கரவர்த்தி,காங்கேய சேதுபதி என  பெயர் பூனுவர்.

 
 
ஆகவே சோழர்கள் வாரிசுகள் சோழ கங்கரின் பரம்பரையான
 சேதுபதிகளும் ஆரிய சக்கரவர்த்தியுமாகும். எனவே  இவர்களே இராஜேந்திர சோழன் மெய்கீர்த்தி கூறிய சோழர்கள் ஆவர்.
This entry was posted in சேதுபதிகள், சோழன், மறவர், வரலாறு and tagged . Bookmark the permalink.

One Response to செம்பி நாட்டு மறவர்களே இலங்கையை ஆண்ட சோழரின் வழியினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *