ஆரிய சக்கரவர்த்தி யார்?

 

சேதுபதிகள் இராமநாதபுரத்தின் மன்னர் இல்லையாம் நிஜ சேதுக்காவலன் ஆரியசேகரணாம். ஆரியசேகரண் பிராமணனாம் அவர் சத்திரியராம் அதனால் சேதுபதிகள் சத்திரியர் கிடையாதாம் போலி சத்திரியன்கள் பல்லவன் பிராமணனா இல்லை சத்திரியனா? என்ற கேள்விக்கு எங்கள் இனத்தில் பிராமணரும் உள்ளனர் சத்திரியரும் உள்ளனர். இன்றைய பிராமணர் போலிகள் நாங்களே நிஜ பிராமணர் என கதைவிட்டு திரியும் கோமாளிகளுக்கு சந்தேகம் வேறு வந்துவிட்டது. தீர்ப்போம். 


சரி நாம் வைக்கும் கேள்விகள்:

ஆரியசக்கரவர்த்தி பிராமணன் என வைத்துகொள்வோம்.

1) இவர் பிராமணராக இருந்தால் இந்த பிராமணரின் படைகளில் எந்த பிராமனர்கள் போர் வீரர்களாக இருந்தனர்.
2)இராமேஸ்வரம் கோயில் அர்சகர்கள் மராத்திய பிராமணர். திருப்புல்லானி கோவில் அர்சகர்கள் தெலுங்கு பிராமன அய்யங்கார். இந்த இரு பிராமணர்களும் இடைக்காலத்தில் குடியேறியவர்கள் இவர்கள் தவிர அங்கு பூர்வீக ஆரிய பிராமணர் யார்?
3) சோழர் காலத்தில் அரையர் என்னும் அந்தஸ்து பிராமணர்களுக்கு வழங்கபட்டது.பிரம்மாதிராயன்,பிரம்மரைய என வந்துள்ள பட்டம் போல் ஆரிசேகரனுக்கு பிரம்மராயன் என எந்த பட்டம் வந்துள்ளது.
4)பிரம்மதேயங்களே இல்லாத யாழ்பாணத்தில் பிராமணர் குடியிருப்புகளே இல்லாத நிலையில் யாழ்பாணத்தில் மட்டும் ஒரு பிராமணன் அரசன் ஆனது எப்படி.
5)பிராமன சம்பந்து என பிராமன பென்களை மனந்து அவர்கள் பார்ப்பனத்தி என்ற பட்டத்தில் எத்தனை இரானிகள் ஆரிசேகரன் இராணிகள் வந்துள்ளனர்.
6)முக்குவர்களிடம் பென் எடுப்பதே அதிகமாக கொண்ட ஆரிசேகரன் பிராமணரா? 

 

ஒரு மன்னாங்கட்டியும் கிடையாது. ஒரு வெள்ளாள முதலி எழுதிய புத்தகத்தை வைத்து கொண்டு கேக்குது பாரு. இங்கே பிராமணர்க்ளும் கிடையாது பண்டாறங்கள் என்னும் வீரசைவ குருக்கள் தான் உள்ளனர். பிராமணனே கிடையாது. 

 

 

ஆரிய சக்கரவர்த்தி என்ற பெயரின் விளக்கம் தான் என்ன? 

 

இதே இராஜநாயகம் முதலியாரும் பின்னர் வந்த வெள்ளாள வரலாற்று ஆய்வாளர்களும் இந்த ஒரு பெயரை வைத்து தான் ஆரியசேகரனை பிராமணன் என முட்டாள் தனமாக கூறியுள்ளனர்.

 

ஆரிய சக்கரவர்த்தி பற்றி கம்பர்

 

ஐந்திலே ஒன்று பட்டான் ஐந்திலே ஒன்றை தாவி

ஐந்திலே ஒன்றாராக ஆரியர்க்காக ஏகி

ஐந்திலே ஒன்று பட்ட அனங்கை கண்டு அயலார் ஊரில்

ஐந்திலை ஒன்றை வைத்தா அவன் எம்மை அளித்து காப்பான்- அனுமன் துதி(கம்பராமாயனம்)

 

இங்கு ஆரியர் என்பது ஸ்ரீராமனை. அவன் ஆரியவேந்தன் தானே. இதனால் கம்பரே ஆரியர்க்காக் ஏகி என அனுமனின் பனியை கூறுகிறார்.

 

எத்தனை தடவை எழுதினாலும் முட்டாள்களுக்கு தெரிவதில்லை. திருப்புல்லானியில் கோவில் கொண்டன் (தெய்வ சிலையான் மன்னர் ஸ்ரீ ராமன்). இந்த தெய்வசிலை மன்னர் என்ற தமிழ் பெயரின் வடமொழியாக்கமே. ஆரியசக்கரவர்த்தி. இதேப்போல் இந்த திருப்புல்லானி கடவுளின் பெயரே இரகுநாதன்.

 

மன்னர்கள் தங்கள் ஆட்சிக்குட்பட்ட தெய்வத்தின் பெயரே தங்கள் நாமமாக சூடிக்கொள்வர். “திருமலை” நாயக்கர்.”தீர்த்தபதி” முருகதாஸ்.”ஏகாம்பரநாத” தொண்டைமான் பவானி”சரபோஜி”, “திருகூடபதி” குற்றால தேவன், “சடையவர்மன்” பாண்டியன் .”பெருவுடையார்” இராஜ இராஜ சோழன் என எல்லா மன்னர்கள் பட்டங்களுக்கு முன் இருப்பது தெய்வத்தின் பெயர் தான். அதே போலத்தான் ஆரியசக்கரவர்த்தி,இரகுநாதன் என்னும் பெயர்கள்

 

இந்த இருபெயர்களைத்தான் ஆரியசக்கரவர்த்தி செகராஜசேகரன். இரகுநாத சேதுபதி என வைத்து கொண்ட்ள்ளனர். இருவரும். சேதுக்கரை என்பது இராமேஸ்வரம் தான். இது தான் சேது இதை ஆள்பவன் தான் சேதுக்காவலனே தவிர யாழ்பாணத்தில் இருப்பவன் எப்படி பூர்வீகமானவன் ஆவான்.

சேதுபதிகள் பற்றிய கதைகளில் ஸ்ரீராமன் குகனுக்கு பட்டபிஷெகம் செய்து வைத்தால் போல் வருகிறது. ஆரியசெகரன் இலங்கையை வென்ற ஸ்ரீ ராமன் ஒரு பிராமனுக்கு பட்டபிசேகம் செய்து வைத்தாற்போல் இராஜநாயகம் முதலியார் எழுதியுள்ளார். குகன் கதாப்பாத்திரம் இராமயனத்தில் வருகிறது? இராமன் பட்டபிஷேகம் செய்த  பிராமன் கதாப்பத்திரம் வருகிறதா? அப்படியே சேதுபதிகலின் கதைகளை ஜோட்டித்த இராஜநாய்கம் முதலியாரின் சொந்த சரக்கு. 

 

மட்டகளப்பு மான்மியம் – இது கல்வெட்டு ஓலை சுவடி இரண்டும் கொண்டது. இதில் வந்த ஆதாரப்பூர்வமான் வரிகள்:

 

அயோத்தி நகரதற்குப் புகழேயோங்க வரிய திருச்சபையோர்கள் வரிசைகூற மெய்செழிக்க விச்சபையில் வந்திருங்கள் விருதுடனே குலங்கோத்திர மரசுரிமைவேந்தர் பேரும் வையத்தில் வந்தவாறுடனே யந்தமன்னனிருவரன் முறையும் வழுத்துவீராய் பொய்யுரைகள் கூறாமல் வரிசை பெறும் பொருள் தெரியாதாகிலிந்தச் சபையின் பின் போவீரே வீரனென்னும் பரதிகுல யிரகுமுன்னாள் வேட்டை சென்றெங்கள் குலமெல்லிதன்னை மாரனென்றணைத்தீன்ற சவலையர்க்கு வருஇரகு நாடனென நாமமிட்டு பூருவத்தி லயோத்தி யுரிமையீந்து போன பின்னர் சிறிராமர் துணைவராகி தீரரென்னுமரக்கர்குலம் வேரறுத்த சிவமறவர்குலம் நானும் வரிசைகேட்டேன் 

 

இரகுநாதன் என்னும் நாமமிட்டு அரசுரிமை ஈந்ததாக வரும் இந்த சேதுக்காவலன் யார்? சரி அதே வையாபாடலில் “சேதுபதிக்கு செழுமா சுரமனுப்பி” என ஆரிசேகரன் பாடலில் சேதுபதி என பெயர் வரும் அவர் யார்? போலியா? மூதேவிகள்!!!

 

இராஜநாயகம் ஆரியசேகரனை கீழைகங்கர் மற்றும் பாசுபத கோத்திரம்னு கதைவிட்டார் ஆதாரம் எங்கே? யாழ்பாண வைபவ மாலை கீர்த்திகளுக்கு மட்டு சேதுபதிகள் செப்பேட்டை காட்டிய முதலியார். ஆரியசக்கரவர்த்தியின் கீர்த்திகளை கண்டுபிடிக்க வேண்டியது தானே. ஆனால் குழம்பி சேதுபதிகளை பற்றியும் தீர்ப்பு கூற முடியாமல் தினறியுள்ளார்.

 

இராஜநாயகம் முதலியார் கூறுவதை பலரும் உடைத்து எரிந்துள்ளனர்.

 

இன்னும் சிங்கள எழுத்தாளர்கலுக்கு இன்னும் நன்கு தெரியும் எதிரிகளுக்கு கூட தெரியும் கோமாளிகளுக்கு தான் தெரியாது. சிங்கள் எழுத்தாளர்களே கலிங்க மாகன் வம்சத்தினரே சேதுபதி ஆரியசக்கரவர்த்தி என ஆதார்ப்பூர்வமாக பதிவிட்டுள்ளனர். ஜான் கிளிப்போர்ட் அண்ட் சார்லஸ் ஹூலி இருவரது ஆய்வு கலாநிதி பத்மானபன் மற்றும் ராஜநாயகம் முதலியாரின் குறிப்புகளுடன். 

ஆரிய சக்கரவர்த்தி மற்றும் சேதுபதிகளின் வரலாறுகள் பற்றி ஆய்வு

 

யாழ்ப்பாண மன்னர்களின் பெயர்கள் “ஆரிய சக்கரவர்த்திகள்” என அழைத்து கொள்கிறார்கள். இவர்களை பற்றிய குறிப்புகளில் பாண்டிய மன்னனால் அனுப்பபட்ட ஒரு தளபதி என்றும் “தமிழர்” என்றும் சிங்கள குல வம்சம் கூறுகின்றது. கைலாயமாலை இவனை செயவீரன் செயசிங்கன்(செயதுங்கன்) என்ற தமிழ் வீரனாக புகழ்கிறது.

 

இவரை ஈழ தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் இவரை பிராமணர் மற்றும் சத்திரியர் என்னும் வர்ணத்துடன் கதை அமைக்கின்றனர். பொதுவாக ஆய்வாளர்கள் பிராமணர் மற்றும் சத்திரிய வம்சத்துடன் இனைக்க குஜராத்,வங்காளம்,ஒரிஸா போன்ற குடும்பங்களுடன் திருமணம் கொண்டதாக கதையழப்புகள் செய்வர். குஜராத்,வங்காளம்,ஒரிஸா போன்ற அரசுகள் போன்ற அரசுகள் தங்களை பிராமனர் அல்லது சத்திரியர் என கூறுவர். 

 

இந்த ஆதாரங்கள் எதுவும் இங்கு பொருந்தவில்லை. உன்மையாகவும் தெரியவில்லை. ஏனெனில் ஆரியசக்கரவர்த்தியின் பூர்வீகம் இராமேஸ்வரத்துடனே தொடர்பு படுத்தபடுகிறது. ஆதாவது இந்தியாவில் உள்ள இராமநாதபுரம் மாவட்டம். இவர்கள் தங்களை “சேதுகாவலன்” என இராமநாதபுரத்து சேதுபதிகளுடனே தொடர்பு படுத்தபடுகின்றது. 

 

சேது என்பது ஒரு கரை. இந்த கரையின் காவலன் சேதுகாவலன் என அழைக்கபடுகின்றான். சேதுபதி என்னும் மறவர் தலைவன் ராமேஸ்வரத்தின் ஆளுகை கொண்டுள்ளான். மேலும் ஆரியசக்கரவர்த்தி சேதுபதிகள் தொடர்பு கொண்டிருந்தனர்.

 

இடைக்காலங்களில் சோழர் இலங்கையின் மீது படையெடுத்தபோது மறவர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்துள்ளனர். மறவர்களின் போர்தொழில் இலங்கை தர்ம சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுட்தி. சோழர்களின் அடைமொழியை பயன்படுத்தி மறவர் தலைவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளில் ஏராளம் வருகின்றது. சிலர் வேளாளர்கள் போன்று வாழ்க்கை நடத்தி அவர்கள் வாழ்க்கையை மேற்கொண்டனர். ஆங்கிலேயர்கள் காலம் வரை மறவர்களின் பேராதிக்கம் யாழ்பாணம் வரை நீண்டுள்ளது.

 

 

பாண்டியர்கள் ஆதிக்கத்திலும் மறவர்களின் போராதிக்கம் தொடர்ந்துள்ளது. இந்த காலகட்டத்திலே ஆரியசக்கரவர்த்தி பாண்டியரின் படைத்தளபதிகளாக வந்துள்ளனர். இந்த காலக்கட்டத்தில் பாண்டியர்களின் ராஜ்ஜியத்தில் மறவர்,கள்ளர் தலைவர்கள் பெரும் செல்வாக்காக இருந்துள்ளனர். சேதுபதிகள் மறவர்களின் தலைவரே. இவர் பாண்டிய மண்டலத்திலே பெரும் செல்வாக்கு பெற்றவர்.

 யாழ்ப்பானத்தை பொருத்தவரை சேதுபதிகள் ஆரியசக்கரவர்த்திகள் இருவரும் இராமநாதபுரத்தின் மறவர் தலைவர்களே.

 

வெள்ளாள மயமாக்கத்தில் யாழ்ப்பானம் பிராமணமயமானது. பிராமனர்களான அப்பரும் சம்பந்தரும் இங்கு பெரும் சமயகுரவர்கள் ஆனார்கள். இதனால் வெள்ளாளர் பலம் வாயந்த சமூகமாக யாழ்பாணத்தில் கால்பதித்தது.

யாழ்ப்பாணத்தில் கைலாயமாலை வையாபாடல் வெள்ளார்கள் மேலாதிக்கத்தில் இயற்றப்பட்டது. இந்த காலகட்டத்தில். நாட்டார்கள் என்பவர்கள் விவசாயத்தில் காலூன்றிய வெள்ளாளர்கள். இதே காலக்கட்டத்தில் சிங்களவர்களின் கோவியர்கள் விவசாயத்தில் காலூன்றினர். இதை வைத்தே யாழ்பாணத்தை ஆண்ட ஆரியசக்கரவர்த்தியை பிராமணர் என பாடியுள்ளனர். 


ஆனால் யாழ்பானத்தை பொருத்தவரையில் பிரம்மதேயங்களே இல்லை பிராமணர்களும் இல்லை. பிராமன கிராமங்களும் இல்லை. எனவே பிராமணனுக்கு இங்கு தேவையே இல்லை. 

பொதுவாக பிராமணர்களை பொருத்தவரை வெள்ளாளர்களின் செல்வாக்கு கிடையாது. இதனால் வெள்ளாளர்கள் பிராமணர்களை சார்ந்தே வாழ்ந்துள்ளனர்.பத்மநாபன் சோழர் கால்த்தில் வலங்கை-இடங்கை என இரு பிரிவுகள் இருந்துள்ளனர். இவர்களில் வெள்ளாளர்கள் பிராமனர்களை சார்ந்து இருந்துள்ளனர். இதனாலே வர்ணாசிரமங்கள் புகுத்தபட்டது. இதனால வெள்ளாளர் பிராமனர்களின் உதவியாக இருந்து செல்வாக்கை வளர்த்தனர். வெள்ளாளர்கள் ஆரியசக்கரவர்த்தியை சார்ந்து இருந்தனர். இதனாலே தங்கள் தலைவனை பிராமனர் என பாடியுள்ளனர்.

சத்திரியர் யாருகேளு? ஆனால் உன்மையில் ஆரியசக்கரவர்த்தி மறவர் இனத்தை சார்ந்தவர் ஏனெனில் மறவர்களே போர்(சத்திரிய) சாதியை சார்ந்தவர்கள். எனவே ஆரியசக்கரவர்த்தி மறவர் இனத்தை சார்ந்தவர். 

 இராஜநாயகம் முதலியாரின் தடுமாறல்:

இராஜநாயகம் முதலியார் வெள்ளாளர் இனத்தை சார்ந்தவர் இவரே மயில் வாகன புலவரின் வையாபாடல் இதை வைத்து வேதியன் என ஆரியசக்கரவர்த்தியை எழுதியுள்ளார் இவரே சேதுபதிகள் 16-ஆம் நூற்றாண்டில் நாயக்கர்களால் பட்டம் சூட்டப்பட்டவர் என்றும் அசல் சேதுக்காவலன் ஆரியசக்கரவர்த்தி தான் என எழுதியுள்ளார் ஏனெனில் தொண்டை மண்டல வேளாளர்கள் பிராமண பூர்வீகம் கொண்டவர் என்ற கருத்தின் அடிப்படையில். அதே நேரத்தில் சேதுபதிகளின் செப்பேட்டை போட்டுள்ளார். இன்னும் சேதுபதிகளுக்கும் ஆரிசேகரனுக்கும் உள்ள சிக்கல்களை இவரே விளக்க முடியாமல் தினறியுள்ளார் இதை யாழ்பான கும்பாபிசேக மலரில் இதனை விளக்கியுள்ளனர். 

யாழ்பாண வைபவமாலை ஒரு புரட்டு: 

 

யாழ்பாணத்தை பற்றிய பிற்காலத்தில் எழுதப்பட்டதில் ஒன்று யாழ்பாண வைபவமாலை என்னும் நூலில், இவை யாழ்பாணத்தில் ஏனைய சரித்திரத்தை பொய்யாக்கி தமக்கு தேவையான புது சரித்தரத்தை அவைக்கள புலவரை வைத்து எழுதி கொண்டுள்ளனர்.முதலிமார்கள் பலர் புலவர்கள் அமர்ந்தனர் என்பது குறிப்பிட தக்கது. 

 

ஆரியசேகரன் கட்டியதாக கோவில்கள் பலவும் புரட்டு(பழைய நாகர்வம்ச மன்னர்கள் ஆலயங்கள்) 

 

போர்த்துகேயரின் ஆளுகைக்கு பின் பல கோவில்களை புனரமைத்தது முற்குகரே இருந்தாலும் பல கோவில்களை குளக்கோட்டன் கட்டியதாகவும் ஆரியசேகரன் கட்டியதாகவும் கூறுவது சுத்த பொய்யாகும். அது பழைய நாகர் வம்சத்தின் சைவ தெய்வங்களாம். 

 

Some comments on Neville Jayaweera’s autobiographical Reflections

August 23, 2014, 6:16 pm 

 

N.Q. Dias

 

by R. M. B Senanayake

 

We may ask the question what it is that Neville Jayaweera wants to convey to the public and to posterity through his autobiographical reflections?

 

Direct or first hand experiences of events impart a special depth as opposed to the third hand reports of the same events. Those of us who were Jayaweera’s contemporaries in the CCS in the 1960s, such as I, can confirm that his narration of those experiences, in his Reflections, is generally a correct portrayal of the history of those times. One might not share all of his views, but his work is a sparkling revelation, full of spiritual substance, candour and intellectual depth.

What impressed me most in Neville Jayaweera’s (NJ hereafter) Reflections was his inherent sense of justice and fair play and, as Susil Sirivardena says in his Preface, his granite-hard commitment to conscience and humanistic values, He was influenced entirely by the Buddhist concepts of avijja (ignorance of things as they are) the yatharthaya and maya (illusions) and concludes that “within Buddha’s epistemology there is no room for ethnic divisions, for nationalisms or even for patriotism”

 

Clearly, as the GA of Jaffna , between 1963-1966, Jayaweera’s values were rooted in the Sutras and in the true Abhidhamma of the Buddha and in the Brahma Viharas, but were light years away from the distorted values of the Mahavamsa and the nationalisms of Anagarika Dharmapala and of N.Q. Dias.

 

Marauders from Kalinga

 

Jayaweera refers to the marauding Kalinga King, Kalinga Magha, who invaded Sri Lanka and laid it waste, desecrating temples and dagabos in the Rajarata not sparing even the Ruwanvelisaya or the irrigation systems on which the ancient Sinhala civilization of Anuradhapura and Polonnaruwa was built. He displayed callous brutality in blinding and executing the incumbent ruler Parakrama Pandya. Jayaweera says the memory of such brutality is deeply ingrained in the collective subconscious of the Sinhala people and probably accounts for the prejudice they feel to the Tamils even today.

 

The brutality of the Maravar invaders has bequeathed the word “maravara balaya” to the Sinhala language to denote the power of brutality, extreme cruelty and intimidation displayed first by the Maravar warriors of Kalinga Magha. NJ cites several comparable cases from diverse cultures across the globe. Without condoning it, Jayaweera says that the brutality of the modern LTTE is only a manifestation of this historical barbarism of the Maravars.

 

 

அதே நேரத்தில் கல்வெட்டு ஆய்வாளர் ஸ்வெல்ஸ் நிறை கல்வெட்டு பாண்டியர் கல்வெட்டு முதல் பலவற்றையும் ஆராய்ந்தவர் 14-ஆம் நூற்றாண்டிலே சேதுபதிகள் பற்றிய கல்வெட்டு இருந்ததை ஆதாரமாக்கியுள்ளார்.

 

முத்துகுமாரசுவாமியின் யாழ்குடியேற்றம் என்ற புத்தகத்திலும் ஆரியசக்கரவர்த்தி மறவர் என கூறுகிறார்.

 

The Maravar’s connections with Jaffna will be examined elsewhere in this study, especially in view of a recent attempt by a Jaffna historian to show that the early colonists of Jaffna were Maravar and that the rulers of Jaffna belonged to the Sethupathy clan of that caste. He has claimed that Vadamaradchi was in former days Vada Maravar Adchi [the domain of north Maravar]; ‘Yazh Kudi-etram’, K.Muthu Kumaraswamippillai, 1982, Chunnakam, Jaffna. Letter of Correspondent M.Raja Joganantham[Colombo 6]: Militarism and Caste [Lanka Guardian, July 15, 1992, p.16] With the reference to the above article in Lanka Guardian (1 July) 1992.

 

 

ரைட் டேவிட்ஸ் மற்றும் சேஷாத்திரியின் விளக்கம் கீழே: தமிழக அறிஞரான கே. சேசாத்திரி (இராமேஸ்வரம் மகா கும்பாபிஷேகச் சிறப்பு மலர், பக் 186,க ) 1975 கைலாயமாலையின் காலம் 15 ஆம் நூற்றாண்டென்பர். முதலியார் இராசநாயகம் கி. பி. 1604 க்குப் பின் கோவில் கட்டப்பட்டதென்பதற்கு. சேது பதிக்குச் செழும்பா சுரமனுப்பி (கை. மா. கண்ணி 234)என்ற தொடர் ஆதாரமென்பர். இதில் வரும் சேதுபதி “இராமநாதபுரத்து மன்னராகிய சேதுபதி என்றே கொள்ளக் கிடக்கிறது. உடையான் சேதுபதியெனப் பெயர் பூண்ட சடையக்கதேவரே முதல் இராமநாத புரத்துக்குத் தலைவராக மதுரை நாயக்கரசனாகிய முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரால் கி. பி. 1604 இல் நியமிக்கப்பட்டனர். அச் சேதுபதியென்னும் பெயர் இந்நூல கத்துக் குறிக்கப்பட்டதென்பது தெளிவு” (கை. மா. பக். III) என்பர். ஆனால், சேசாத்திரி (~. சிறப்பு மலர் பக். 186 g.)பரராசசேகரன் கி. பி. 1414இல் சேதுபதி இராமேஸ்வரம் கோயிலைக் கட்டுவதற்குத் திருகோணமயிலிருந்து வெட்டிச் சீராக்கப்பட்ட கற்களை அனுப்பியதாகக்கூறி, சேதுபதிக்கும்15 ஆம் நூற்றாண்டுக் குரிய யாழ்ப்பாண அரசர்களுக்கும் இருந்த நெருங்கிய தொடர்பை விளக்குவார். கலாநிதி யேம்சு டேர்சஸ் (Indian Antiquary Vol. XII) கி. பி. 1434 இல் வாழ்ந்த உடையார் சேதுபதி பற்றிக் கூறுவார். சேதுபதிகள் பாண்டி மறவர்கள். அவர்கள் சேதுபதி என்ற விருதைத் தொடர்ந்தும் கொண்டிருந்தார்கள் என ஆய்வாளர் கூறுவர். (Rev. James Tracy, The Madras Journal of Literature and Science). எனவே, இராசநாயகம் அவர்கள் காட்டிய ஆதாரங்கள் வலுவிழக்கின்றன. நல்லூர் கைலாச நாதர் கோவில் முதலாம் சிங்கையாரியன் காலத்தில் (கி. பி. 1260)கட்டப்பட்டது என்பதை மறுக்க எவ்வித ஆதாரமுமில்லை” என்பார் சி. பத்மநாதன் (The Kingdom of Jaffna, P. 194; 1978). எனினும்,நூலெழுந்த காலத்தை உறுதியாகக் கூறமுடியாதுள்ளது. வையாபாலிலும் (16 ஆம் நூ. ஆ.?) ‘சேதுபதி’ (செய். 38) வருவது நோக்கத்தக்கது.

 

 

According to the other statement, which has its source in Sinhalese records, the family took its rise from the appointment of Parakrama Bahu’s General Lankapura, who, according to a very trustworthy Sinhalese epitome of the Maha- wanso, after conquering Pandya, remained some time at Ramespuram, building a temple there, and, while on the island, struck kahapanas (coins similar to those of the Sinhalese series). Whichever of these statements we may accept, the facts seem to point to the rise of the family in the eleventh or twelfth century A.D., and inscriptions quoted from Dr. Burgess by Mr. Robert Sewell * show that grants were made by Sethupati princes in 1414, again in 1489, still again in 1500, and finally as late as 1540. These bring the line down to within two generations of the time when Muttu Krish- nappa Nayakka is said, in 1604, to have found affairs sadly disordered in the Marava country, and to have re-established the old family in the person of Sadaiyaka Tevar Udaiyar Sethupati. The coins of the Sethupatis divide themselves into an earlier and later series. The earlier series present specimens which are usually larger and better executed, and correspond in weight and appearance very nearly to the well-known coins of the Sinhalese series, together with which they are often found. ‘ These coins,’ Rhys Davids writes, t ‘ are prob- ably the very ones referred to as having been struck by Parakrama’s General Lankapura.’ The coins of the later series are very rude in device and execution. The one face shows only the Tamil legend of the word Sethupati, while the other side is taken up with various devices.” * Sketch of the Dynasties of South India, t Numismata Orient. Ancient Coins and Measures of Ceylon

 

ஆரியசேகரன் கீர்த்திகள் என்ன? 

 

செகராஜசேகரன் வையாபாடலில் மட்டும் ரவிகுலன் எனவந்துள்ளது ஆனால் சேதுபதிகளின் பட்டயத்தில் ஈழமும் கொங்கும் யாழ்பாணமும் கொண்ட் ரவிகுலசேகரன் என வந்துள்ளது. யாழ்பான ஆரியசேகரனுக்கு இந்த கீர்த்திகள் கொண்ட பட்டயம் கிடையாது. சிதம்பர பட்டத்தையும் போடுகின்றோம் சேதுபதிகளைப்பற்றி பல பட்டயம் கல்வெட்டுகளிலும் இது தான் வருகிறது. சேதுபதிகளின் மூதாதயராக “செயதுங்க ராய” வங்கிசாதிபதி என கூறுகிறார் அதே மூதாதயரை ஆரிய சேகரனும் கூறுகிறார். 

 

ஆரியசேகரன் என்னும் நல்லூர் அரனும் மறவர் குல கொழுந்து தான். சங்கிலியான்,பண்டாற வன்னியன்,இளஞ்சிங்க வாகு, வன்னிச்சிமார் அரசிகள்,சோழகங்க தேவன் இவர்கள் யாவரும் மறவர் குல மாணிக்கங்கள் தான்.


யாழ்பாண வன்னியர் யார்? 

 

நாங்கள் பூர்வீக வன்னியர் கிடையாது. வன்னியரை கண்டம் செய்த வன்னியர் கண்டர்கள். சேதுபதிகளின் செப்பேடுகளில்,தொண்டைமான் செப்பேடுகளில் ஆரியசேகரணின் செப்படுகளில் குறிப்பிடும் வன்னியர் கண்டன்,வன்னியர் கொட்டமடக்கி என்பவர்கள் யார்? ஈழத்தின் பூர்வீக வன்னியர் யார் இவர்களை கண்டம் செய்தது எப்போது? வன்னி வன்னியர் யாருக்குரிய பெயர்கள்.

யாழ்ப்பாணத்திலே முற்குகர் என்னும் முக்குவரின் வருகைக்கு முன் ஈழத்திலே வன்னி நாடுகள் இருந்துள்ளன. அவர்கள் இயக்கர் என்னும் வேடாக்கள். இவர்கள் தான் இலங்கையின் ஆதி வன்னியர். இவர்களை வீழ்த்தி தான் முற்குகர் என்னும் பாண்டிய,சேர நாட்டை சேர்ந்தவர்கள் அவர்களின் வன்னிநிலம்(காட்டை) அகப்படுத்தி தலைவர்கள்(வன்னியர்கள்) ஆனார்கள். 

 

இயக்கர்-வேடாக்கள் -வன்னியெத்தலோ: http://www.ethnologue.com/show_language.asp?code=ved நன்றி: இலங்கையின் வேடுர் தென்னிந்திய திராவிட மரபினர்

 

இவர்கள் தங்களை, இலங்கையில் வாழ்ந்த புதிய கற்காலச் சமுதாயத்தின் நேரடி வாரிசுகளாகக் கருதுகிறார்கள். நாட்டின் பழங்கால வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படும் இயக்கர், நாகர் என்னும் இரு இனங்களில் இவர்கள் இயக்கர் பழங்குடியினரின் மரபினர் என சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 இலங்கையின் பழம்பெரும் தொகுப்பு நூலான மகாவம்சத்தை மேற்கோள் காட்டி பௌத்தப் பிக்குகளும், இலங்கையின் பௌத்த மகாவம்சக் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்பவர்களும், இலங்கையின் முதல் மன்னனாக மகாவம்சம் கூறும் விஜயன் இலங்கை வந்தடைந்தப் போது அவனை வரவேற்று பின்னர் விஜயனுடன் இணைந்து வாழ்ந்த குவேனி எனும் இயக்கர் குலப்பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தது பற்றியும் சொல்லப்படுகிறது. விஜயன் அரசமைத்து தனது பட்டத்து இளவரசியாக தென்னிந்தியாவில் பாண்டிய குலத்து பெண்ணை திருமணம் முடித்து பட்டத்து அரசியாக்கினான் என்றும், அதன் பின்னர் குவேனி இயக்கர் இனத்தவர்களாலேயே கொல்லப்பட்டாள் என்றும், விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் தப்பியோடி காடுகளில் வாழத்தலைப்பட்டனர் என்றும், அவர்களின் வாரிசுகளே இன்றைய இலங்கை காடுகளில் வசிக்கும் வேடர்கள் என்றும் கூறிவருகின்றனர். இலங்கையில் வாழும் இனங்களுள் ஆதிக் குடிகளாகக் கருதப்படுபவர்கள் இவர்களாகும்.


சிங்களவர்கள் இவர்களை வேடுவர் என்னும் பொருள்பட “வெத்தா” எனப் பெயரிட்டு அழைத்தாலும், இவர்கள் தங்களை “வன்னியலா எத்தோ” (Wanniyala-Aetto) என்றே குறிப்பிட்டுகொள்கின்றனர். இதன் பொருள் “காட்டைச் சேர்ந்தவர்கள்” அல்லது “காட்டில் வாழ்பவர்கள்” அல்லது “காட்டிலுள்ள மக்கள்” என்பதாகும். நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளிலுள்ள காடுகளில் இவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் இன்றைய இலங்கையின் பெரும்பான்மை இனங்களான சிங்களவர், தமிழர் ஆகிய இன மக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். வன்னியலா எத்தோ மக்களின் வாழ்வியல் தனித்துவமானது, எனினும் இலங்கையின் பிற இன மக்களுடன் பின்னிபிணைந்தது. குறிப்பாக இலங்கை கிழக்கு கரையோர பகுதியில் வசிக்கும் இவ்வின மக்களின் சில குழுக்கள் தமிழ் போன்ற ஒரு மொழி பேசுகின்றார்கள். இவர்கள் பேசும் மொழி ஆரிய மொழிகள் அல்ல என்று கருத்து தெரிவிக்கும் வில்ஹெய்ம் கெய்கர், அதேவேளை ஆரிய மொழிகளின் சாயல் இவர்களது பேச்சில் இருக்கின்றன எனவும், அவை அன்மைக்காலங்களில் இவர்களது பேச்சில் கலந்தவைகள் என்றும் தெரிவித்துள்ளார்

இயக்க வன்னியரை வீழ்த்திய முற்குகர்கள் வன்னியரான வரலாறு:

இதற்க்கு பத்மநாபன்,டி.பி.சிவராம் மற்றும் மெக்லவொர்த்தி முக்குவர் ஆதிக்கம் என்ற நூலில் கூறியுள்ளதை இங்கு பதிவிடுகின்றோம்

 முக்குவர் அரசாங்கம்-மட்டகளப்பு மான்மியம்

முற்குகரின் குடியேற்றம் கலிங்க மாகன் காலத்திலிருந்து தொடங்குகின்றது. கலிங்க மாகன் ஈழப்படையெடுப்புக்கு முன்னர் சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் படைகளை திரட்டி தன்னை இராமனாகவும் துனைவருவது முற்குகர்கள் என குகசேனை உருவாக்கி ஈழத்தில் படையெடுத்தான். இவைபோக யாழ்பாணத்தில் இருந்த தமிழ் படைவீரர்களும் அடக்கம். ஆனால் பத்மாநாபன் கலாநிதி முற்குகரே வன்னியராக இருக்க முடியாது. முற்குகருக்கு முன்னரே வன்னி நாடுகள் இலங்கையில் இருந்தன என தெரிவிக்கின்றார்.

அந்த வன்னியரே வன்னி-எத்தலோ என்ற வேடாக்கள். இவர்களையே முற்குகர்கள் வீழ்த்தினர்.

இதற்க்கு மெக்லவொர்த்தி தன் புத்தகத்தில், முற்குகர்கள் மட்டகளப்பு மான்மியம் டச்சுக்குறிப்பு ஜாக்கப் பர்னார்ட் 1794 ல் எழுதி குறிப்பு முற்குகர்கள் இந்த தீவுக்கு ஏழு(7) மரக்கலங்களிலே வந்தனர். அவர்கள் இதற்க்குமுன் இங்கிருந்த “பழைய வன்னியர்களை” கொடூரமாக வீழ்த்தினர். முற்குகரிலே படையாண்ட குடி பற்றிய குறிப்பு இது.(10-12)

 வேட்டுவ வன்னிகள் பராக்கிரம பாகு காலத்திலே இருந்தன அதில் பனிக்கனான் என்பவன் அந்த வன்னிகளை உருவாக்கினான் என உள்ளது.

ஆறாம் பராக்கிரமபாகு கோட்டை அரசணாக இருந்த போது 18-வன்னிகளையும் அடக்கினான் என கூறுகிறது.

 

முற்குகருக்கு முன்னே வன்னியராக இருந்தது வேடாக்கள். இவர்களை வென்றே முற்குகர்கள் வன்னியர்கள் ஆனார்கள்

கலிங்க மாகன் “இயக்கர்” என்னும் ராட்சதர்களை கொலை செய்து குகன் குலம் என்னும் படைத்தலைவர்களை நியமித்தான் என வரலாறு கூறுகிறது(நடராஜன்1942-72)

 

முக்குவர்களுக்கு வன்னியர் என தலைமை பட்டம் இருந்தது. ஆதாவது வன்னி என்னும் பிரதேசத்தின் தலைமைக்கு உரியபெயர்.(ராகவன் 1918) வன்னிநிலம் என்பது காட்டு நிலம்.

 

நிலங்களில் நன்செய்,புன்செய்,நத்தம் ,கரடு,குடிகாடு,வன்னி,வேளான்  என பல வகைப்படும். இதில் வன்னிசெய் அல்லது வன்னி என்பது விவசாயத்துக்கு தகுதியற்ற காட்டு நிலம். புன்செய் என்றால் மழை பெய்தால் வரும் நிலம்,நன்செய் குளங்கள் மூலம் பாசானம் செய்யும் நிலம் . நத்தம் என்றால் மண் செம்மண் பிசையும் சேரி நிலம்  வன்னி நிலத்தின் தலைவன் வன்னியன்,குடிகாட்டின் தலைவன் குடியானவன்,குடும்பு நிலத்தின் தலைவன் குடும்பன் நல்லவேளை புன்செய் நிலத்தால் புன்னியன் என்ற ப்யர் வந்து நாங்கள் புன்னியம் செய்தவர்கள் என கிளம்பி வந்தா என்ன செய்வது ?????

 

காட்டு நிலம் உடையவன் ஆதலின் வன்னியன் என பெயர் அவனே காடு கொன்று நாடாக்கினால் நாட்டார் என பெயர் பெறுகிறான். வன்னியனுக்கும் நாட்டார் என்னும் பெயருக்கும் வித்தியாசம் தெரிகின்றதா?

 

இந்த ஈழ இயக்க வன்னியன் யாரிடமுன் கடன் வாங்கி இந்த பட்டட்தை போட்டுகொள்ளவில்லை.

 

இப்போது புரிகிறதா? சேதுபதிகளின் பட்டயத்தில் வரும் வன்னியர் கொட்டமடக்கி வன்னியர்கண்டன், அறந்தாங்கி தொண்டைமான் பட்டயத்தில் வரும் இளமீசுர வன்னியர் கண்டன்,முகில் வன்னியர் கண்டன் என்பது ஈழத்து ஏலு மொழி பேசு இயக்கர்களான் வன்னியெத்தலோவை தான் குறிக்கிறது. 

An inscription of the Vijayanagar king Dēva Rāya II (1419–44 A.D.) gives him the title of the lord who took the heads of the eighteen Vanniyas.6
East and West, VI, 70, 1907.
6 Madras Mail, 1904.
கிருஷ்ணதேவராயர் கல்வெட்டுகளில் பதினெட்டு வன்னியர் கண்டன் என்ற கல்வெட்டு யாரை குறிப்பிடுகின்றது என்றால் உன்மையில் 18-வன்னியர்கள் என்பது தமிழக வன்னியரையே குறிக்காது. இது இலங்கையில் உள்ள முற்குகர் என்னும் முக்குவர் அவர்களின் வன்னி(காடுதான்யா!) அந்த பிரதேசத்தின் தலைவனையே குறிக்கும். இதே தேவராயர்(1419-44)கி.பி
ஆண்டை ஒட்டியே ‘முக்கரஹட்டன’ என்னும் நூல் சிங்கள அரசன் பராக்கிரம பாகுவுக்கும் இலங்கையில் உள்ள தமிழ் முற்குக வன்னியருக்கும் பெரும்போர் மூண்ட்து. பராக்கிரம் பாகு காரைக்கால் காஞ்சிபுரம் இங்கிருந்த நாயக்கர் படைகளின் உதவியுடன். பெரும்போர் பெற்று முற்குக வன்னியரை வீழ்த்தினான்.
இதற்கு ஆதாரம் கலாநிதி பத்மனாபன் எழுதிய வன்னியர். 1419 என வ்ருடம் அச்சு அசலாக வருகிறது.
18 வன்னியர் யாருன்னு கேட்ட பதினெட்டையும் பள்ளி சொல்லுமா? சொல்லாது. 18 வன்னியர் என்பது 18 உறுப்பினர்கள் முற்குகரின் “முத்திரகூடம்” என்னும் சபையின் அங்கத்தினர். இவர்களை “இராஜவன்னியர்” எனவும் கூறுவர். இவர்களையே வீழ்த்தினர் வடுகர் உதவியுடன் சிங்களர்கள்.

இந்த பட்டத்தை நாயக்க மன்னர் மட்டுமல்ல, சேதுபதி,அறந்தாங்கி தொண்டைமான்,]சூரைக்குடி அரசன் 

புதுக்கோட்டை பல்லவராயர் பட்டய்த்தில் வரும் 18 வன்னியர் கண்டன் என்பது கூட இந்த இலங்கை வன்னியனை தான் குறிக்கிறது. வடதமிழக வன்னியருக்கும் இயக்க வன்னியருக்கும் சம்பந்த முண்டா என தெரியவில்லை.

 

ஆனால் முற்குகர்களான் அடங்காபற்று வன்னியருக்கும் பள்ளிகளுக்கும் சம்பந்தமே இல்லை.

சேதுபதிகள் மகள் நீலகேசியை மணந்த வெடியரசன் விஷ்னுபுத்திரன்:

சேதுபதிகளுக்கும் நெடுந்தீவு நயினாத்தீவு முற்குக தேசத்தலைவர் விஷ்னுபுத்திர வெடியரசருக்கும் இடையே மண உறவுகள் இருந்துள்ளது. சேதுபதி மகளை மணந்த வெடியரசன் கதை பற்றிய கோட்டை கொத்தலங்கள் நெடுந்தீவில் காணலாம்.

 

சேதுபதி மகராஜவின் வழியில் வந்த குளக்கோட்டன்:

குளக்கோட்டன் என்னும் மகாராஜன் சேதுபதி ராசர் பரம்பரையில் வந்தவன் என வெடியரசன் கதை கூறுகிறது.

 

 

 

முக்குகர் வன்னிமை

 

சீர்தங்கு வில்லவரும் பணிக்கனாரும் சிறந்த சட்டிலான்தனஞ்சயன்றான்

கார்தங்கு மாளவன் சங்குபயத்தன கச்சிலாகுடி முற்குகரினமேழேகான்

வார்தங்குகுகன் வாளரசகண்டன் வளர்மாசுகரத்தவன் போர்வீர கண்டன்

பார்தங்கு தண்டவாணமுண்டன் பழமைசெறி

 


மறவர் குடி:

சங்குபத்தன் குடி, கோப்பிகுடி,கச்சிலாகுடி,சட்டிகுடி,மாளவண்குடி,முண்டன் குடி,முரண்டன் குடி.


மறவரில் முண்டன் குடி,முரண்டங்குடி,கச்சிலாங்குடி,மாளவன் குடி சட்டிகுடி,சங்குபயத்தங்குடி இருக்கும் முற்குகரில் முண்ட வன்னியன் முறண்ட வன்னியன், கிளைகாத்தவன்னியன் என மறவரின் தலைவர்கள் இருப்பார்கள்.

மறவரில் இருப்பது பெருங்குடி வீரர்கள்முற்குகரில் இருப்பது தலைவன், அரையன்,பெருமாண்,அரசன் என  முற்குக வன்னிமைகள் மறவரே.

 

எதனால் மறவருக்கு வன்னியர் பட்டம் என்றால் காடு நிலத்தின் காவலன் என்னும் பிரதேசப் பெயரே தவிர முற்குகனோ அல்லது கள்ளனோ அல்லது பரவரோ வன்னியர் பட்டத்தை திருட வரவில்லை இவர்க்ளை கண்டம்பன்னியதாலே வன்னியர் கண்டன் என்னும் பெயர்.

 

முற்குகர்கள் தானை தலைவர்கள் பெயரும் அவர்களால் வீழ்த்தபட்ட வேடாக்களும் இவர்கள் அனைவரும் முற்குகர் தலைவர்களே:

 

 

செயதுங்க வீரவரராஜசிங்கனும் இளவரசியை மணம்முடித்து விட்டு அவளோடு வந்த வீரர்களை அடங்கா வன்னிப்பற்றுக்குச்சென்று அதைக் கைப்பற்றி ஆளுமாறும், ஆண்டுதோறும் யாழ்ப்பாண அரசனுக்குத் திறை செலுத்த வேண்டுமென்றும் பணித்தான். அடங்காப் பற்றை அடைந்ததும் அதைக் கைப்பற்றுவதற்குத் தம்மிடம் போதிய படையில்லை என்பதை உணர்ந்தார்கள். எனவே, இளஞ்சிங்க மாப்பாணன், நல்லவாகுதேவன், அத்திமாப்பாணன் என்போரிடம் து}துவர்களை அனுப்பி மதுரை, மருங்கூர், காரைக்கால், காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி, துளுவை நாடு, தொண்டைமண்டலம், வடகிரிநாடு என்னுமிடங்களிலிருந்து கூட்டிவரக் கூடியவர்கள் அனைவரையும் கொண்டு வருமாறு சொல்லி அனுப்பினார்கள். இதனை அறிந்ததும் தில்லைமூவாயிரவர், திடவீரசிங்கன், குடைகாத்தான், முடிகாத்தான், நல்லவாகு மலைநாடன், சிங்கவாகு, சோதயன், அங்கசிங்கன், கட்டைக்காலிங்கன், சொக்கநாதன், கங்கைமகன், கலைக்கோடமுடியோன், வீரகச்சமணி முடியரசன், காபாலிவீரன்,சேது எனும் பதியை ஆளுகின்ற வீரம் செறிந்த தலைவன், 

இளஞ்சிங்க மாப்பாணன் என்போரும் பெருமைமிக்க ஆரிய வம்சத்தாரும் படகுகளில் ஏறி யாழ்ப்பாணம் வந்தார்கள். இவர்களிலே திடவீரசிங்கன், கரிகட்டு மூலைப்பற்றுக்கு அதிபதியானான். இளஞ்சிங்க மாப்பாணன், இராஜசிங்க மாப்பாணன், நல்லவாக மெய்த்தேவன், கறுத்தவாகு, சிங்கமாப்பாணன் என்போர் சான்றாரையும் வலையரையும் துரத்தி விட்டு முள்ளியவளையைக் கைப்பற்றினார்கள். நீலையினார் திசையாண்டாரும் படையும் மேல் பற்றுக்கு வந்து சகரன் மகரன் என்ற வேட்டுவ தலைவர்களைக் கொன்று விட்டு நாட்டையாண்டனர்.

 

 

வன்னியர்கள்(முக்குவர்) இலங்கைக்கு வருமுன் அடங்காப்பதியில் வாழ்ந்த மக்களினங் காரணமாகவே அதற்கு அப்பெயரிட்டிருத்தல் வேண்டும். அப்பொழுது அம்மக்கள் யாருக்கு மடங்காதவர்களாய் வாழ்ந்தனர் என்பது இதனால் வெளிப்படையாகிறது. வன்னியர் வருவதற்கு முன், அடங்காப் பதியிலுள்ள ஊர்களாய முள்ளி மாநகரிற் சாண்டார்(சானார்) அரசாண்டனர் என்றும், கணுக்கேணியில் வில்லிகுலப்பறையர் அரசு செலுத்தினர் என்றும் தனிக்கல்லிற் சகரன் என்றும், கிழக்கு மூலையில் “இராமருக்குத் தோற்றேயகன்ற ராட்சதர்” ஆட்சி செலுத்தினர் என்றும், மேற்கு மூலையில் அவர்களுள் இழிந்தோராட்சி நடந்ததென்றும் வையாபாடல் கூறும். எனவே, அடங்காப்பதியில் வாழ்ந்த ஆதிக்குடிகள் இவர்களெனல் சாலும். இவர்கள் அப்பொழுது அப்பகுதியைத் தனிக்கல், கணுக்கேணி, முள்ளிமாநகர், கிழக்கு மூலை, மேற்கு மூலை எனவைந்து பகுதிகளாகப் பிரித்தரசாண்டனர் என்பதும் இவற்றாற் புலனாகும். இளஞ்சிங்கவாகு இராட்சதரோடு போர் செய்து வெற்றி கொண்ட போதும், அவர்களை அவனால் முற்றாக அடக்கிவிட முடியாதிருந்தது. அதனால் அவ்வசுரர்களை அடியோடு அழித்து விட வேண்டுமென்று ஐம்பத்துநாலு வன்னியர்கள்(முக்குவர்) ஒன்று சேர்ந்து அவர்களை எதிர்த்துப் போராடினர். அப்போரிலே அசுரர்கள் பெருஞ் சேதமடைந்து சிதைந்தனரெனினும் அவர்களுக்கெதிராய்ச் சமர்விளைத்த ஐம்பத்து நான்கு வன்னியரும் அப்போரிற் பட்டொழிந்தனர். அதன் பின் எஞ்சியிருந்த ஐந்து வன்னியரும் அடங்காப்பற்றை ஐந்து பற்றாகப் பிரித்தரசாண்டனர்

 

முற்குகர்களே வன்னியனார்கள்:

 

வன்னிபம் பெற்ற இருவர்கள் ஒருவர் வெள்ளாளர் இன்னோருவர் முற்குகர். முற்குகரே படைதலைவர்களாதலால் அவர்களே தங்களை வன்னியனார்கள் என்றும் வெள்ளாளர்கள் வெள்ளாளர் எனவே இருந்துள்ளனர். முற்குகர்களே வன்னி நிலத்தை வன்னியர்களிடம் கைப்பற்றி அதில் போடிகளாக எழுவர் ஆண்டன்ர். இவர்கள் மன்னர்களாகவு வெள்ளாளர்கள் குடிமக்களாகவும் இருந்தனர். தமிழ்நாட்டிலே கள்ளர் மறவர்களை போல.

 

 

மட்டகளப்பில் முக்குவர்களே உயர் ஜாதியாக இருந்தனர். இவர்களுக்கு வீர சைவ குருக்கள் இருந்தனர். கலிங்க மாகன் வெள்ளாளர்கள் பலரையும் கோவைசியரில் ஏழு குடிகளையும் இந்தியாவில் இருந்து தருவித்தான். இவர்கள் குடியேற்றப்பட்டனர். வெள்ளாளர் குடிகளே பிற்காலத்தில் கோவிலர்களாக மாறினர்.

 

 

போர்த்துகீசியரின் படையெடுப்பு டச்சு படையெடுப்பில் ஆரியசேகரன் பரம்பரையும் முக்குவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆரிசேகரன் வம்சத்தவர்கள் பிற்காலத்தில் முதலியார் என்ற பட்டத்தை கைக்கொண்டனர். முற்குவ வன்னியரும் முதலியார் பிள்ளை என்ற பட்டத்தை பின்பற்றினர்.

 

முக்குவர்கள் குக வேளாளர் என ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் பதிவு செய்தனர். ஏனெனில் போர்க்குடிகளுக்கு தக்க பாதுகாப்பு ஆளும் பரங்கியரிடம் இல்லை என்று குற்றப்பரம்பரை சட்டம் காரணமாக பலர் தங்கள் பட்டத்தையும் இனப்பெய்ரையும் மாற்றியது போல.

 

யாழ்ப்பாணத்தை பொருத்தவரை முக்குவர்கள்,வெள்ளாளர்கள் சைவ குருக்கள் மட்டுமே உயர் சாதி ஆதாவது தமிழ் மொழி பேசுபவர்கள்.தாழ்ந்த தமிழர் அல்லாதவர் தாழ்ந்த  சாதிகளாக சாணார் மற்றும் பறையரை கூறினர்.

 

ஒரு சிங்கள பெண் எழுத்தாளர் இதனாலே கோபம் கொண்டு தென்-இந்திய வன்னியர் வேறு முக்குவ வன்னியர் வேறு இயக்க வன்னியர் வேறு என கட்டுரை போட காரணம் இது தான். இவர் யாரிடமும் கடன் வாங்க வில்லை என எழுத காரணம் இது தான்.

 

 

The Vanniyas Of Sri Lanka Vs Vanniyas Of South India December 8, 2013 | Filed under: Colombo Telegraph,Opinion,Popular Columns | Posted by: COLOMBO_TELEGRAPH

 

வன்னியர் பட்டம் எங்களுக்கு சொந்தமில்லை என்பது உன்மை தான் ஏனெனில் எங்களுக்கு வன்னியர் என்பது பூர்வ பட்டம்ல்ல இலங்கையில் பெற்ற பட்டம் சேதுபதிகளின் வரலாறுகளையும் மற்றும் ஆரிசக்கரவர்த்திகளின் பூர்வீகத்தையும் அறிவதற்க்கு உதவிய நூல்களுக்கு நன்றி

 

நன்றி:யாழ்பான் வைபவ மாலை Ancient jaffana:rajanayagam mudhaliyar

Mukkuvar ideology:Mcgloworthy

Srilankan Reader:john clifford vanniyas “kalaanithi padhbhanaban”

இத்துடன் போலி சத்திரியர்களுக்கும் நன்றி.

This entry was posted in சேதுபதிகள், தேவர், மறவர் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *