அதிசய மனித சூரியன்..

அவதாரமும் அஸ்தமனமும் ஒரே தினத்தில் நிகழ்ந்த அதிசய மனித சூரியன்..

திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் ..T R மகாலிங்கம் பற்றி திரை உலகில் மட்டுமல்ல இந்திய முழுவதும் அவரை அறியாதவர்கள் இருந்ததில்லை…
அவரின் பெருமை அப்பொழுதைய பிரதமர் நேருவின் பெருமையை மிஞ்சியது,,,தமிழகத்திற்கு நேரு வரும் பொழுது கூடிய கூட்டத்தை விட இவருக்கு கூடிய கூட்டம் பன்மடங்கு அதிகம்…நேருவே இதை கண்டு அசந்து போனதாக தகவல் உண்டு..

.

அப்பொழுதைய கால கட்டத்தில் காங்கிரஸ் வலுவடைய நேரு காமராசரை அழைத்து .T R மகாலிங்கம் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த சொன்னார்,,காமராசர் அவரிடம் சென்று தம் கட்சியில் இணைந்து விடுமாறு வேண்டுகோள் விடுத்தார்..இணைந்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி அளிப்பதாக உறுதி அளித்தார்…அரசியலில் சிறிதும் விருப்பம் இல்லாத அவர் அரசியலையும் ,அரசியல்வாதிகளையும் நான் விரும்புவதில்லை என்று காமராசரின் வேண்டுகோளை நிராகரித்து விட்டார்…

இந்த அளவுக்கு பெருமை வாய்ந்த மகாலிங்கத்தின் மனதில் தீராத ஒரு ஆசையுண்டு..அவரின் ஆசை தெய்வீக திருமகனார் தேவரை எப்படியாவது நேரில் அவரை கண்டு சந்திக்க வேண்டும் என்பதே !!!
ஆனால் அய்யா தேவரோ சினிமா காரர்களை விரும்புவதில்லை..அவரின் ஆசையை தேவர் கருத்தில் கொள்ள வில்லை…

ஒரு கால கட்டத்தில் .T R மகாலிங்கம் தன் புகழை இழந்து கொலை பழி சாட்டபட்டு தன் வாழ்கையில் கடை நிலைக்கு தள்ள பட்டார்…அரசியல் சூழ்ச்சிக்கு இவர் பழி கடா ஆனார்..,,அச்சமயத்தில் கண் பார்வையும் இழந்து வாழ்க்கை நொந்து சமயபுரம் கோவிலில் அம்மன் புகழ் பாடி காலம் தள்ளி கொண்டிருந்தார்..
அப்பொழுது மனித சூரியன் .முதுரமலிங்க தேவர் அய்யா மதுரையிலிருந்து திருச்சி வழியாக புகைவண்டியில் பயணம் செய்து வருவதை கேள்வி பட்டு பாகவதர் அவர்கள் அவரை சந்திக்க திருச்சி புகைவண்டி நிலையத்தில் காத்து கொண்டிருந்தார்,,தேவரும் அவரை சந்திக்க சம்மதித்து நிலையத்தில் இறங்கினார்..

கண் பார்வை இழந்த பாகவதரோ அவரை காண இயலாமல் தவித்து தொட்டு பார்க்க வினவினார்..பின் தேவரை தழுவிய பாகவதரின் உடம்பு தன் நிலை இழந்து கண்களில் நீர் வழிந்து உணர்ச்சி வசப்பட்டார் ,,அப்பொழுது அவர் கூறிய தழுதழுத்த வார்த்தைகள்..
“நான் இப்பிறவி எடுத்த கடன் முடிந்து போனதாகவே கருதுகிறேன்,,அய்யா அவர்கள மனித பிறவி இல்லை ,,சாட்சாத் அந்த முருக பெருமானின் அவதாரமே !!
அவரை தழுவிய பொழுது என்னை நான் மறந்து அவரிடம் ஆட்பட்டு விட்டேன்..””

அய்யா முத்து ராமலிங்க தேவர் வாழும் வரை சித்தராகவும் ..வாழ்ந்த பின் தெய்வாமாகி போனார்..

…..

This entry was posted in முத்துராமலிங்க தேவர் and tagged , , . Bookmark the permalink.

One Response to அதிசய மனித சூரியன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *